திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம் தோழர் முத்துலட்சுமி அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

கூட்டத்தில் பள்ளிபாளையம் மாநாட்டு தீர்மானத்தின் படி புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கை கிழித்தெரியும் போராட்டத்தை மாவட்ட தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து அக் 2ஆம் தேதி சிறப்பாக நடத்துவது எனவும் அய்யா பெரியாரின் 141 வது பிறந்த நாள் விழாவை  நகரம் முழுவதும் கொடியேற்று விழாவாக அக் 9ஆம் தேதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தோழர்கள் முத்துலட்சுமி, முத்து, நீதிராசன், முகில்ராசு, துரைசாமி, அகிலன், அய்யப்பன், தனபால், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்

You may also like...