தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்
”தி.மு.க வின் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் கூட அது தமிழ் மக்களுக்கே பாதிப்பாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.” ”தி.மு.க.வை கட்சியாக பார்க்காமல் தமிழர் நலன்,தமிழ்நாட்டு நலன் என இணைத்து பார்க்கிறோம்.” ”அரசியலைப்பொறுத்த வரை சூழலைப்பார்த்துதான் முடிவெடுக்க முடியும்.” அழகிரியின் திடீர் பேட்டி குறித்து ”கழகத்தலைவர் கொளத்தூர் மணி” அவர்கள் நேற்று 13.08.2018 அன்று NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ‘காலத்தின் குரல்’ நிகழ்சியில் அளித்த பேட்டியின் சாரம் : ”அழகிரியின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.அவர் திமுகவில் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்.பொது வெளியில் இப்படி பேசியதை ஏற்க முடியாது.இதனை கண்டிகிறேன்.இவரால் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனினும் இதைக்கூட அனுமதிக்க கூடாத ஒன்று இப்படி அவர் நடந்திருக்க கூடாது. இதனை கட்சி விவகாரமாகவோ,குடும்ப சிக்கலாகவோ பார்க்கவில்லை.இது ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதலைப்போலத்தான் உணர்கிறேன். பா.ஜ.க. தமிழகத்திற்கு நுழைய பெரும்...
