புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்
‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...