Category: தலைமை கழகம்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

”தி.மு.க வின் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் கூட அது தமிழ் மக்களுக்கே பாதிப்பாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.” ”தி.மு.க.வை கட்சியாக பார்க்காமல் தமிழர் நலன்,தமிழ்நாட்டு நலன் என இணைத்து பார்க்கிறோம்.” ”அரசியலைப்பொறுத்த வரை சூழலைப்பார்த்துதான் முடிவெடுக்க முடியும்.” அழகிரியின் திடீர் பேட்டி குறித்து ”கழகத்தலைவர் கொளத்தூர் மணி” அவர்கள் நேற்று 13.08.2018 அன்று NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ‘காலத்தின் குரல்’ நிகழ்சியில் அளித்த பேட்டியின் சாரம் : ”அழகிரியின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.அவர் திமுகவில் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்.பொது வெளியில் இப்படி பேசியதை ஏற்க முடியாது.இதனை கண்டிகிறேன்.இவரால் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனினும் இதைக்கூட அனுமதிக்க கூடாத ஒன்று இப்படி அவர் நடந்திருக்க கூடாது. இதனை கட்சி விவகாரமாகவோ,குடும்ப சிக்கலாகவோ பார்க்கவில்லை.இது ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதலைப்போலத்தான் உணர்கிறேன். பா.ஜ.க. தமிழகத்திற்கு நுழைய பெரும்...

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி !  பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/ கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! (காணொளி) பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை ! 08.08.2018 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/  

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் ! மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர் செய்த குற்றம் ஜெனிவாவில் நடந்த அய்.நா. கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துப் பேசியதுதான்.” இது வன்மையான கண்டனத்துக்குரியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தினார்கள். உயிர்ப்பலி தந்து அரசைப் பணியவைத்து ஆலையை மூடினார்கள்.இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “பசுமைத் தீர்ப்பாயம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாகப் பணிகளை தொடங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. உற்பத்தியைத் தொடங்க கூடாதாம்; ஆனால் நிர்வாகப் பணியைத் தொடங்கலாமாம். உற்பத்தி தொடங்காமல் என்ன நிர்வாகப் பணி இருக்கப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை.” பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது திடீரென்று எதனால் அதன் நிலையில்...

கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி

50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர், 18 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், 80 ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தின் கடைக்கோடி சமூக பிரிவிலிருந்து அதிகாரத்தின் உச்சிற்கு உயர்ந்த ஒரு மனிதர் கலைஞர் இன்றைக்கு விடைபெற்றுக்கொண்டுவிட்டார். 95 வயது வாழ்க்கை என்பது ஒரு முழுமையான நிறை வாழ்வுதான். அவர் விட்டுச்சென்ற கொள்கைகளை எப்படி அவர் கட்டி எழுப்பிய இயக்கம் பாதுகாக்க போகிறது என்பதுதான் கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்கக் கூடும். திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் கொள்கைகளை ஒழிப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் இன்றைக்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த தடைகளை கடந்து இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல போகிறோம் என்பது தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்னிருக்க கூடிய மிகப்பெரிய சவால். அந்த சவாலை கடந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட இயக்க அரசியலை தீவிரமாக முன்னெடுத்து செல்வது ஒன்று தான் கலைஞருக்கு...

விடை பெற்றார் கலைஞர் !

விடை பெற்றார்  ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் கழக சார்பில் புகார்

சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சைப் பதறச் செய்யும் கொடுமையை செய்த அனைவரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு கொடூர சம்பவம் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில் வதந்திகளை பரப்பி அதன் மூலம் இலாபம் அடைவதையே  தங்கள் வேலைத் திட்டமாக வைத்துள்ள காவி வெறி கும்பல் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இந்த குற்றத்தை செய்துள்ள கும்பவில் ஒருவர் என  “பால சுப்ரமணியன்” எனும் பெயர் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்கள். இந்தப் படத்தில் உள்ள நபருக்கும் எமது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் கழகத் தோழருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை. இவர் கருப்புச்சட்டை அணிந்திருப்பது போன்று காட்டி...

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

ஆக. 20 முதல் 26 வரை “தமிழர் கல்வி உரிமை” பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 17.7.2018 அன்று சென்னையில் தலைமைக் கழகத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தலைமைக் குழு உறுப்பினர்கள் ஈரோடு இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, பால் பிரபாகரன், கோபி. இளங்கோவன், தபசி குமரன், இரா. உமாபதி, அன்பு தனசேகரன், மேட்டூர் சக்தி, அய்யனார், சூலூர் பன்னீர் செல்வம், பாரி சிவக்குமார், பரிமளராசன் ஆகியோர் கலந்து  கொண்டனர். கழக செயல்பாடுகள், கட்டமைப்பு நிதி, கழக அமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. ‘தமிழர் கல்வி உரிமைப் பயணம்’, பரப்புரை இயக்கத்தை ஆகஸ்டு 20 தொடங்கி 26இல் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. குடியாத்தம், கீழப்பாவூர், மேட்டூர், திருப்பூர், சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு பெரம்பலூர் நோக்கிப் புறப்படும். பெரம்பலூரில் ஆக.26இல் மாநாடு நிறைவு விழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 26072018 இதழ்

தவறான செய்தியை யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் திவிக எச்சரிக்கை

தவறான செய்தியை யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் திவிக எச்சரிக்கை

20.07.2018 மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது. குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பிய வீரமணியையும், அவருக்கு உடந்தையாக செய்தியினை வெளியிட்டு பரப்பிய பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ போன்றோரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது திராவிடர் விடுதலைக் கழகத்தின் மீது மீண்டும் தவறான செய்தியை மேலும் யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறோம் – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலி DVK Periyar அறிமுகம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலி DVK Periyar அறிமுகம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்திகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவரையும் சென்றடைய இணையதளம் dvkperiyar.com மற்றும் முகநூல் பக்கம் facebook.com/dvk12 ஆகியவற்றோடு புதியதாக செயலி DVK Periyar என்ற பெயரில் இன்று திருப்பூர் கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவில் அறிமுகப்படுத்தப் பட்டது கழக தலைவர் வெளியிட்டு கழக பொதுச்செயலாளர் பெற்றுக்கொண்டார் இதை கூகுள் ப்ளெ ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இயங்கும் இந்த செயலி (Application) திவிகவின் செய்திகளை உடனுக்குடன் அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தரவிறக்க உரலி https://play.google.com/store/apps/details?id=com.dvkperiyar.app  

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல;  இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத் தமிழர் களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்...

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் !

“முக்கிய வேண்டுகோள் !” – கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி. வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் ! Pபட்டியல் இன பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க...

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

கழக தலைவரின் நிகழ்ச்சிகள் புகைப்பட தொகுப்பு

மதுரை முருகேசன் – வாசுகி இல்லத் திறப்பு – 27052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  28052018 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது – ஆர்ப்பாட்டம்  சென்னை 29052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்  30052018 மணப்பாறை பொதுக்கூட்டம் பெரியார் சிலை திறப்பு வெங்கடசமுத்திரம் 02062018 ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016 கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018  

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் ! தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை விடுதலை செய் ! தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை கைவிடு ! நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை இழிவு படுத்திய பார்ப்பான் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் காவல் துறை, நீதிமன்றம் உத்தரவிட்டும் சோடா பாட்டில் வீச்சு சமூக விரோதி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசின் காவல்துறை, வழக்குகளை கண்டு அஞ்சாமல், தலைமறைவாகாமல் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் பொது வெளியில் மக்களுக்காக இயங்கி வரும் தலைவர் ஆவார். எப்போதோ போடப்பட்ட வழக்கில் இப்போது அதுவும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நேரத்தில் தடுத்து கைது செய்வதற்கு என்ன அவசர அவசியம் வந்துள்ளது? மக்களுக்காக போராடுபவர்களையே குறிவைத்து இந்த காவல்துறை கைது செய்கிறது...

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர்,திரு, பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை (24-05-2018) வியாழன், மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது,...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

n             மே 9 காலை ஈரோட்டில் தொடங்குகிறது n             மே 12 – சென்னை கூடுவாஞ்சேரியில் நிறைவடைகிறது n             சேலம் – காவேரிப்பட்டினம் – வேலூர் – கூடுவாஞ்சேரியில் பொதுக் கூட்டங்கள் n             காலை முதல் மாலை வரை –  பறி போகும் தமிழக உரிமைகள் பா.ஜ.க. மதவெறித் திணிப்புகளை எதிர்த்து – பரப்புரை பெரியார்-அம்பேத்கர்-காமராசர் – சமூகநீதி ரதம் பேரணியாக வலம் வருகிறது. தமிழர்களே! ஆதரவு தாரீர்! பெரியார் முழக்கம் 03052018 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனையொட்டி 19-4-2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திரவிடர்க் கழகத்தின் தோழர் குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

திராவிடர் விடுதலைக் கழகக் கொடி தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 – கொடி அளவு : 3 ஒ 2    விலை: ரூ.80/= (ரூபாய் எண்பது மட்டும்) பெரியார் முழக்கம் 19042018 இதழ்

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி” தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 கொடி அளவு : 3×2 விலை : ₹ 80/= (ரூபாய் எண்பது மட்டும்)

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது ! பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி. திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக….. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து…. இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. காணொளிக்கு

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“5 நாட்கள் ” ‘முன் பதிவு ஆரம்பம்.’ வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் “தமிழ்நாடு அறிவியல் மன்றம்” நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் ‘தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்’ கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : தோழர் ஆசிரியர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175

செங்கோட்டை போராட்டம் வெற்றி

செங்கோட்டை போராட்டம் வெற்றி

தோழர்களே! வணக்கம். கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது. நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது. #செங்கோட்டை_போராட்டம்_வெற்றி மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் கே.எம்.சரீப் – த.ம.ஜ.க தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக்...

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் வை.கோ – ம.தி.மு.க தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் சீமான் – நாம் தமிழர் தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி தோழர் சரீப் – த.ம.ஜ.க தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம் தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி தோழர் அதியமான் – ஆ.த.பேரவை தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி தோழர் பொழிலன் – த.ம.மு தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி தோழர் தமிழ்நேயன் –...

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நேற்று 17.3.2018. மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கை வீரர் தோழர் ஃ பாரூக் அவர்கட்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய சான்றோர்கள். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர். மானமிகு ஐயா. எப்.காந்தராசு. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர். எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி. மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் மாநில தலைவர். மானமிகு தோழர். அன்பு இதயன். மருத்துவர். ஐயா. பாரி சுந்தரம். தோழர். ரபீக். மருத்துவர். விஜயப்பிரியா. மானமிகு தோழர். மக்கள் பிரதிநிதி சரவணன். மானமிகு தோழர். காஞ்சி அசோக். மலேசிய மேனாள் காவல்துறை துணை ஆய்வாளர். மானமிகு ஐயா. மதியழகன். மற்றும், தோழர்கள் .   படங்களுக்கு https://www.facebook.com/dvk12/posts/2096859697264586

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் 20 அன்று இராஜபாளையம் வழியாக மதுரை வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – (சென்னை_06_03_2018) முடிவுகள். 1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது 4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது 5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட ஒருங்கிணைப்பு – தலைமை தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி பங்கேற்றோர்: தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்...

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’ திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 26.02.2018 பகல் 12 மணிக்கு சென்னையை சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நிவேதா ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலி மறுத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தோழர்.தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்), தோழர்.இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள், இணையர்களின் நட்புறவுகள் வந்திருந்து வாழ்த்துகளை கூறினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்களை பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் “திராவிடம் தமிழ்தேசியம்” என்ற தலைப்பில் விரிவான ஒரு விளக்கத்தையும், ஆய்வுகளையும் தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும் “ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம். இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்) நாள்: 03022018 மாலை 6 மணி ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ? கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார். ” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் . இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...

திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் தீர்மானம் 1 சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி...

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! கோவை 27122017

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! இன்று 27.12.2017 காலை கோவை வந்த தோழர் ஆ.ராசா அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி,த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….டிசம்பர் 2017

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “டிசம்பர் 2017” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📝 திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்க கூடாது…. கவிக்கொண்டல் “மா.செங்குட்டுவன்” 🗿 கற்பிதங்களை கட்டுடைத்த “அவ்வை” 📚 பெரியார் எதிர்த்த “ஆண்மை”யும்” “கேட்டர்” பில்லர் நாயகியும்… 📑 பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு… 📃 “வருணமும் – சாதியும்”… இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

தந்தை பெரியார் 44வது நினைவு நாள் சென்னை 24122017

தந்தை பெரியாரின் 44வது நினைவு நாளான இன்று 24.12.2017 சென்னை சிம்சன் பெரியார் பாலம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன்அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திவிக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். உடன் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் தோழர் உமாபதி, வடசென்னை மாவட்ட தலைவர் யேசுகுமார், செயலாளர் செந்தில் FDL மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராய் உறுதியேற்றனர் பின்னர் தோழர்கள் 10.00 மணிக்கு தியாகராய நகரிலும், 10:30 மணிக்கு ஆலந்தூர், 11மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம்.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்! மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் – – இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது. மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்… மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள். கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம். மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும்...

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் புரட்சியாளரின் சிலைக்கு 06.12.2017, புதன் கிழமை காலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்றிய உரை. உரை பார்க்க    

TNPSC முழக்கங்கள்

TNPSC முழக்கங்கள்

தமிழக அரசே.! தமிழக அரசே.! தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே ! தமிழக வேலை வாய்ப்புகளை வெளி மாநில இளைஞர்களுக்கு தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே !   உறுதி செய் .! உறுதி செய் .! அரசு வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்க்கு உறுதி செய்!   ரத்து செய் .! ரத்து செய் .! வெளிமாநிலத்தோர்க்கும் வாய்ப்பளிக்கும் தேர்வாணைய விதி திருத்தத்தை தமிழக அரசே ! ரத்து செய் .!   பறிக்காதே !பறிக்காதே ! தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தமிழக அரசே பறிக்காதே !   தேர்தல் அரசியல் கட்சிகளே ! வீதிக்கு வந்து போராடுங்கள் ! தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு வீதியில் இறங்கிப் போராடுங்கள் !   தமிழக அரசே .! தமிழக அரசே .! மண்ணின் மைந்தர்க்கு வேலைவழங்க மராட்டிய, கர்நாடக மாநிலம் போல் சட்டம் இயற்று ! சட்டம் இயற்று !   தமிழக அரசே ! தமிழக அரசே ! வேலை தராதே ! வேலை தராதே ! வெளிமாநில இளைஞர்களுக்கு தமிழக அரசே வேலை வழங்காதே !   தமிழக அரசே .! தமிழக அரசே ! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கு...

நீடாமங்கலம் – நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் *ரிவோல்ட்* நடத்தும் *நீடாமங்கலம்*நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் தோழர் பசு கவுதமன் அவர்கள் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி அவர்கள் இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நீடாமங்கலம் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் அவர்கள் தன்னுரையில் திவிக தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும் தான்...

சட்ட எரிப்பு மாவீரர்கள் நினைவை போற்றும் பொதுக்கூட்டம் சூலூர் 26112017

கோவை மாவட்டம் சூலூரில் 26112017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவை போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வு தோழர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ கே ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முதலில் மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியாக பறையிசை தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் அனைவரையும் சிந்தையும் கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் பாடினார்கள் சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, பொள்ளாச்சி தோழர் வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மந்திரமா தந்திரமா தோழர் மோகன், கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் பின்னர் தோழர் கௌசல்யா சங்கர் அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு...

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !” நாள் : 27.11.2017 திங்கட்கிழமை. நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி பன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். சுடர் ஏற்றி வீரவணக்க உரை : பேராசிரியர் சரஸ்வதி, நாடாளுமன்ற உறுப்பினர்,நாடு கடந்த தமிழீழ அரசு. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அணி திரள்வோம் ! நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு, கொளத்தூர்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 9443519234, 9443565503, 9003677717, 9842445964.