Category: பெரியார் முழக்கம்

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

பா.ஜ.க.வின் பொய் வழக்கு: கழகத் தோழர் இராசன் விடுதலை

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பா.ஜ.க.வினர் அத்வானி பிறந்த நாள் சுவரொட் டிகளை சேத்துப்பட்டு பகுதியில் ஒட்டியிருந்தனர். அதில் இரண்டு சுவரொட்டியில் நீல மையினால் கோடிட்டு அத்வானி முகத்தை அசிங்கப்படுத்திவிட்டதாகவும் (?), இதைக் கேட்ட பா.ஜ.க.வினரை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டிய தாகவும், கொலை மிரட்டல் விடுத்த தாகவும், தென்சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் பா.இராசன் மற்றும் ம.க.இ.க.வை சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவுகள் 427, 294 (பி), 506 (ii) கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எழும்பூரில் வழக்கு நடந்தது. 6 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப் பட்டனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக நடந்த சம்பவத்தைப் பற்றி முழுமையான அளவில் சாட்சிகளால் கூற முடியவில்லை. அடையாளமும் காண முடியவில்லை. கடந்த 26.4.2012 அன்று குற்றவியல் நடுவர் திருமதி கீதாராணி,...

நன்கொடை

நன்கொடை

25.5.2012 மாலை 6 மணிக்கு பவானியில் நடந்தேறிய பவானி வழக்குரைஞர் ப.பா.மோகன் அவரது மகள் ஆர்த்தி-விஜயகுமார் ஆகியோரின் மணவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினார். ஈரோடு கருமாண்டப்பாளையம் சிவக்குமார்-கோகிலா, சாதி மறுப்புத் திருமண இணையர் தங்களது முதலாமாண்டு திருமண நாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளனர். மேட்டூர் அணை ஆர்.எஸ். கழகத் தோழர் அ.சக்திவேல் – அ. அனிதா இணையரின் மகள் அ.ச.அறிவுமதியின் 9 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்காக ரூ.1000/- வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆ-ர்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கருத்துரிமையை மறுக்கும் காவல்துறை சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருப்பதையும் அதற்கு எதிராக வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் விளக்கிடும் நூல். வெளியீடு: மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை, 95, அய்.ஆர்.எம்.பி. வளாகம், ஆட்சியர் அலுவலகம் எதிரில், பெருந்துறை சாலை, ஈரோடு. தொகுப்பு : நிழல் வண்ணன். விலை : ரூ. 20. தொடர்புக்கு: 98940 13138  

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார்-மணியம்மை பெயர் நீக்கமா? கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு பெயரை மாவட்ட நிர்வாகம் திடீரென அகற்றியதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் திருச்சி தொடர் வண்டி சந்திப்பு – காதி விற்பனையகம் அருகே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பெரியார் பெருந்தொண்டரும் சட்ட எரிப்பு வீரருமான இளந்தாடி துரைராசன், மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் புதியவன், புதிய தமிழகம் மாநகர செயலாளர் கோ.சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு, ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி துணை செயலாளர் கு. சோழன், மாவட்ட தலைவர் திராவிடன், மாவட்ட செயலாளர் இரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். குணா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொரு ளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலாளர் அசோக், முருகானந்தம், பழனி, பொன்னுசாமி...

கந்தர்வன் கோட்டையில்  அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கந்தர்வன் கோட்டையில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்

கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரியும், கல்பாக்கம் அணு உலையை இழுத்து மூடக் கோரியும், போராடுகிற மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பாக 14.6.2012 மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வன் கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் மீ.த. பாண்டியன், இப்பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் சைவப் பேரவை கலையரசி அம்மையார் உட்பட பலர் உரையாற்றினர். தோழர் பாரி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 28062012 இதழ்

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

போர் குற்றம்: முன்னாள் லைபீரிய அதிபருக்கு 50 ஆண்டு சிறை

நெதர்லாந்து நாhட்டின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றம் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் கேங்கே டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. லைபீரியாவுக்கு அருகே உள்ள சியாரா லியோன் பகுதி மக்கள் மீது, 2002 ஆம் ஆண்டில் அவர் நடத்திய உள்நாட்டு யுத்தத்தில் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், பயங்கரவாதம், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை அவர் செய்துள்ளதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 6 ஆண்டுகாலம் இந்த விசாரணை நடந்தது. 80 நாட்கள் அதிபர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்திருந்தார். விசாரணையை தள்ளிப் போடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் டெய்லர் செய்து பார்த்தார். ஆனாலும் குற்றத்தி லிருந்து தப்ப முடியவில்லை. இரண்டாவது உலகப் போரின் இறுதியில் போர்க் குற்றவாளிகள் நூரம்பர்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு  முதன்முதலாக சர்வதேச நீதிமன்றத் தில் தண்டனைக்குள்ளாகும் – ஒரு நாட்டின் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு முள்ளிவாய்க்கால்...

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு

‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கு ‘தமிழர்’ அடையாளத்தைப் பெற்றுத் தந்ததே திராவிடர் இயக்கம் தான்! 4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். இக் கூட்டத்திற்கு மன்னை நகர செயலாளர் காளிதாசு தலைமை உரையாற்றினார். திருச்சி புதியவன், சோலை மாரியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோரை தொடர்ந்து, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர்...

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிறது. சென்னையைச் சேர்ந்த இனியன் இளங்கோ என்ற வாசகர் இது குறித்து எழுதியுள்ள ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை ‘இந்து’ நாளேடு  ஜூன் 22 இதழில் வெளியிட்டுள்ளது. (அதாவது இந்த விளம்பரம் வெளி வந்த சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு) “சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல்...

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப் பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப் பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட் டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது. ‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக்...

கழக மாநில  செயற்குழு கூடுகிறது

கழக மாநில செயற்குழு கூடுகிறது

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் 7.7.2012 சனி காலை 10 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடுகிறது. செயற்குழு உறுப் பினர்கள் வருகை தர வேண்டு கிறோம். இடம்: முருகேசன்  திருமண மண்டபம்  (சென்னை இராயப்பேட்டை கழக  பெரியார் படிப்பகம் அருகில்) பொருள் : எதிர்காலத் திட்டங்கள் – கோவை இராமகிருட்டிணன், – விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்கள்) பெரியார் முழக்கம் 28062012 இதழ்

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

மக்கள் ஆதரவுடன் பரப்பரைப் பயணம் வெற்றி நடை

ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு – மனுதர்ம எரிப்புப் போராட்டம் விளக்கப் பரப்புரைப் பயணம் 23.6.2012 முதல் திருவள்ளூர் – வேலூர் – திரு வண்ணாமலை – விழுப்புரம்  காஞ்சி புரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 10 நாட்கள் எழுச்சி நடைபோட்டு வருகிறது. சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் இந்த பரப்புரையை ஒழுங்கு செய்துள்ளது. பயணத்தின் துவக்கப் பொதுக் கூட்டம் 22.6.2012 அன்று சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இரா சேந்திரன், பயணத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். சிற்பி ராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியும், சமர்பா எழுச்சி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக் கூட்டத்தை மயிலைப் பகுதி கழகத் தோழர்கள்   பா.ஜான், இராவணன், சுகுமாறன், மனோகரன், மாரிமுத்து, முருகன், வாகனராஜ், பார்த்திபன், நாத்திகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் 23.6.2012 அன்று காலை 10 மணியளவில் கு.அன்புதனசேகர், வழக்கறிஞர் சு.குமாரதேவன் ஆகி...

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

களமிறங்கினர் ஈரோடு கழகத் தோழர்கள்! சட்டவிரோத கொடுமுடி விநாயகன் குடமுழுக்கு நிறுத்தம்

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கி, கொடுமுடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விநாயகன் கோயில் குடமுழுக்கை தடுத்து நிறுத்தினர். 14.6.2012 அன்று காலை 6 மணிக்கு கொடுமுடி சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் விநாயக னுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்துவதாக இருந்தது. இந்தச் செய்தி கழகத் தோழர்களுக்கு 13.6.2012 மதியம் கிடைத்தது. உடனே களமிறங்கிய தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தின சாமி தலைமையிலான தோழர்கள் சசிக்குமார், மோகன் மற்றும் பாண்டியன் ஆகியோர் அன்று மாலையே கொடுமுடி காவல் நிலையத்தில், அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிடும் சின்னங்களோ, கோவில்களோ, கடவுளர் பொம்மை களோ இருக்கக் கூடாது என்ற அரசாணையை சுட்டிக்காட்டி இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தக் கோரி புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்க மறுத்த காவல் துறையினர் இந்த மனுவை மாவட்ட காவல்துறைக்குத்தான் அனுப்ப வேண்டும். மேலும், இவ்வாறு கடைசி நேரத்தில் வந்து புகார் தருகிறீர்களே என்றனர்....

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

சென்னிமலையில் நாத்திகர் விழா எழுச்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யில் மே 5 ஆம் தேதியன்று நாத்திகர் விழா நடைபெற்றது. விழாவானது கொடியேற்று விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொதுக் கூட்டம் என மூன்று பெரும் விழாக்களாக மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவிற்கான சுவரெழுத்துப் பிரச் சாரம் மற்றும் விளம்பரப் பலகை களை மாவட்டம் முழுக்க பெரும் பாலான இடங்களில் அன்பு நாட்டுக் கோழி வளர்ச்சி மைய நிறுவனத்தார் செய்திருந்தனர். விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் இரவு வரை மோகன், பகுத்தறிவாளர் பேரவை சிவக்குமார் மற்றும் சென்னிமலை மாணவர் அணி இசைக்கதிர், கார்த்திகேயன், இனிய வன் ஆகியோர் வாகனப் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். செல்லுமிடங்களி லெல்லாம் பெரியார் தொண்டர் களுக்கு கிடைக்கும் வரவேற்பாகிய எதிர்ப்பும், ஆதரவும் கலந்த நிலை இருந்தது. விழாவன்று சென்னிமலை பேருந்து நிலையத்தில் இயக்கக் கொடியினை பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் வி.சு. விசு ஏற்றி...

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

கடத்தூரில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16.6.2012 சனிக் கிழமை மாலை 7 மணிக்கு மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் கழகத்தின் சார்பில் “திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா”ப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் நா.ப.கதிரவன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். புலவர் கடவுள் இல்லை அவர்கள் சாமியார்களின் மோசடிகளை விளக்கி, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் கலந்து கொண்டு, திராவிடர் இயக்கத்தின் தோற்றம், திராவிடர் இயக்கம் நடத்திய போராட்டங்கள், அதனால் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த நன்மைகள், இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தின் தேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர். உடுமலையில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14.6.2012 வியாழனன்று மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி...

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரை: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய இந்திய வரலாற்று நூலில் சொல்லுகிறார்: 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளை நிறமுள்ள ஆரியர்கள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் நுழைந்து, காஷ்மீர் முதல் ராஜபுத்னா வரை ஆக்ரமித்துக் கொண்டனர். கருப்பு நிற திராவிடர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வம்சா வழியினர். ஆரிய திராவிட கலப்பில் ஏற்பட்டது வங்காளி மற்றும் ஒரியா இனம். மங்கோலியர் திராவிடர் இனக் கலப்பில் ஏற்பட்டது. பூட்டான், சிக்கிம் மற்றும் நேப்பாள் இனம் ஆரியர் மொழியான சமஸ்கிருதம் மேற்கத்திய மொழிகளோடு ஒத்துப் போவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திராவிட இனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சிந்துவெளி கலாச்சாரத்திற்கு முற்பட்டவர்கள். திராவிட  இனத்தைப் பற்றிய முழு ஆய்வு தனியாக...

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! சிற்பி இராசன்

18.5.2012 அன்று ‘சன்’ தொலைக்காட்சியில் ஒரு செய்தி – நித்தியானந்தாவை மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நியமித்திருப்பது பற்றி சங்கரமட ஜெயேந்திரரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது. அது சைவ மடம். அங்கு மடாதிபதிகள் மொட்டையடித்து தலையில் ருத்ராட்சம் அணிய வேண்டும். அதுவே நியதி. ஆனால், நித்தியானந்தா தலையில் முடி வைத்துக் கொண்டு, ரஞ்சிதாவுடன் சுற்றி வருகிறார். எனவே இது முறையற்ற செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டார். இந்தச் செய்தியை மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதரிடம் எடுத்துச் சொல்லி கருத்து கேட்டபோது, அருணகிரிநாதர், “கடந்த 1987 ஆம் ஆண்டு இந்த ஜெயேந்திரர் பெண்களுடன் ஓடிப் போன சமயத்தில், செத்துப் போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த ஆளை இழுத்து வரும்படி கூறினார். நானும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த ஜெயேந்திரனை திரும்ப மடத்துக்குள்...

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

அரியனாவில் ஹிகார் மாவட்டத்திலுள்ள இராக்கி ஷா, இராக்கி ஹாஸ் எனும் இரட்டை கிராமங்கள், வரலாற்று முக்கியத்துவமானவை. காரணம், இக்கிராமப் பகுதி சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கிய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கண்டறியப்பட்டவை. 12 ஆண்டுகளுக்குமுன் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது, ஏடுகளில் தலைப்பு செய்திகளாகவும் வந்தன.  சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவிலேயே கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த மிகப் பெரிய பகுதி. அமரேந்திரநாத் என்ற அகழ்வாராய்ச்சியாளர் தலைமையிலான குழு, 1997-1999 ஆண்டுகளில் 3 கோடை விடுமுறைகளில் இந்த ஆய்வுகளை மேற் கொண்டது. ஒரு சமூகததின் நாகரிகத்தைக் கண்டறிய முக்கிய ஆவணமாகக் கருதப்படும், இறந்தவர் உடல்கள் புதைக்கப்பட்ட குழிகளும் இங்கே கண்டறியப்பட்டது. தொண்மை மிக்க திராவிடர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட இந்தப் பகுதி, இப்போது மலைமலையாக மாட்டுச் சாணங்களை யும் குப்பைகளையும் கொட்டிக் கிடக்கும்...

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

மதுரை ஆதினம், நித்யானந்தாவை தனது வாரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்து மத கட்சிகளே நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும், தாக்குதல்களை யும் நடத்தி வருகின்றன. கருநாடக பா.ஜ.க. ஆட்சி நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் சைவ மடங்கள் 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. புத்த மதம், சமண மதம் வேகமாகப் பரவியதால் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்ளவே இந்த மடங்கள் உருவாயின. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சைவத் ‘திருமேனிகள்’ ஊர் தோறும் கோயில் கோயிலாகச் சென்று பதிகம் பாடினர். சைவத்திலும் மனுதர்மமான பார்ப்பனியம் புகுந்து சைவக் கடவுள்களை பார்ப்பனமாக்கியது. சைவக் கடவுளான சிவன், பார்ப்பன ஊடுருவலால் ‘உருத்திரன்’ ஆனான். பார்ப்பன யாகங்களை நடத்தி, ‘உருத்திரனை’ப் போற்றி ‘மகாதேவன்’ என்று மாற்றினார்கள். தமிழ்க் கடவுள் என்று கூறப்பட்ட முருகன், பார்ப்பன ‘மனுதர்ம’ ஊடுருவலால் கந்தனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றப்பட்டான். வீரத்தின் கடவுளாக...

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி தீண்டாமை எதிர்ப்பு; மனு சாஸ்திர எரிப்பு விளக்க 10 நாள் பரப்புரைப் பயணத்தில் பல்லா யிரக்கணக்கில் மக்களை சந்தித்து, ‘மனுதர்மம்’ இப் போதும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமைகளை தோழர்கள் விளக்கினர். கடந்த வாரம் முதல் மூன்று நாள் பயணம் குறித்த செய்திகள் வெளி வந்துள்ளன. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு: 26.6.2012 அன்று காலை 9 மணியளவில் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. காலை 10.30 மணியளவில் சேத்துப்பட்டு நான்கு முனை ரோட்டிலும், காலை 11.15 மணியளவில் தேவிகாபுரத்திலும், மதியம் 12.30 மணியளவில் போளூர் பேருந்து நிறுத்தத்திலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் நாயுடு மங்களம், மாலை 4.45 மணி வேங்கிக்கால், மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையம், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை பெரியார் சிலை...

சாதி மத மறுப்பு மண விழா

சாதி மத மறுப்பு மண விழா

சேலம் மாவட்டம் ஆவத்திப் பாளையம் முரு கேசன்-சின்னப்பா இணை யரின் மகன் கழகத் தோழர் சரவணன்; ஆவத்திப்பாளை யம் ஷாஜ கான்-மைதிலின் பீபி இணையரின் மகள் ஷஜீனா ஆகியோரின் மத மறுப்பு, தாலி சடங்குகள் தவிர்ப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 28.6.2012 அன்று பகல் 11 மணிக்கு பள்ளி பாளையத்தில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி, மாநில செயற்குழு  உறுப்பினர் இரத்தினசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி  மாணிக்கம், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். மணமக்கள் விழாவின் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.2000 அளித்தனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

275.2012 அன்று கொமாரபாளையம் கழகம் நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழா மனு சாஸ்திர எரிப்பு விளக்கக் கூட்டம் கொமாரபாளையம் நகரப் பகுதியில் நடைபெற்றது. அதையொட்டி புதிய கழகக் கொடிக் கம்பங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. காவேரி நகர் புதுப்பாலம் அருகில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நகராட்சி அலுவலகம் அருகில்  பொதுச் செய லாளர் இராமகிருட்டிணனும், மெயின்ரோடிலுள்ள ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகில் நகர தலைவர் இரா. திராவிடமணியும், பேருந்து நிலையம் அருகில் கேப்டன் அண்ணாதுரையும் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

22.6.2012 அன்று மாலை 6மணிக்கு மந்தைவெளி மார்க்கெட் அருகில் திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம், பரப்புரை பயணத் தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி.இராவணன் தலைமை வகிக்க, சு.அம்பிகா, இரா.குமார் முன்னிலை யில் ஜா.ஜெயந்தி வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சமர்பா இசை நிகழ்ச்சி நடந்தது. நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல்களை பாடினார். இரவு 7.30 மணிக்கு சிற்பி இராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் இரா. மாரி நன்றியுரையாற்றினார். கூட்டத்துக்குப் பிறகு, கழகத்தின் கொள்கை எழுத்துப் பலகையை மந்தைவெளியில் கழகத் தலைவர் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே...

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும்  படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு, ‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர். ‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது...

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் புரியாத மொழியான ‘சமஸ்கிருத மந்திரங் களால்’ – அதை நம்புவோர், ஏமாற்றப்படும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்: எனக்கு இளமையிலிருந்தே “இவ் வடமொழிச் சடங்கு முறை தமிழ் மக்களுக்கு எவ்வளவு புறம் பானது?” என்பது உள்ளத்தினை உறுத்தி வந்தது; “கண்ணற்ற கபோதிகளாய்த் தமிழ் மக்கள் ஏமாந்து, இச் சடங்குகளுக்கு அடிமைகளாகி  விட்டிருக் கின்றனரே!” என வருந்தலானேன். ஓசூரில் நான் குடியிருந்த வீட்டிற்கெதிரே புரோகிதர் ஒருவர் குடியிருந்தார்.  அவர் மனைவியின் தம்பி பன்னிரண்டு அகவைச் சிறுவன். கோடை விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அப்போதே தனியே சென்று, தமிழர் வீட்டுச் சடங்குகளை நடத்தி வைத்துவிட்டு, அரிசி, காய்கறி முதலியவற்றைச் சுமந்து வருவான். ஒருநாள் அவனை “எங்கிருந்து இவற்றைக் கொண்டு...

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

7.7.2012 அன்று காலை கழக மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 5.7.2012 அன்று காலை சமூக விரோதிகளால் சுடப்பட்டும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி (எ) மு. பழனிசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தில் நிலவும் கழகப் பணிகளிலுள்ள சுணக்கம், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தைப் பரப்புதல், தமிழக அரசியல் சூழல், கழகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், கழகத்தின் அமைப்பு முறையை...

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற  தோழர்  பழனி  கொடூரமாகக் கொல்லப்பட்டார்

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற தோழர் பழனி கொடூரமாகக் கொல்லப்பட்டார்

தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான கிருட்டிண கிரி மாவட்டத்தில் “தளி” சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தளி தொகுதியின் எல்லை ஓரமாக இருக்கும் கெலமங்களம் (வேப்பினப்பள்ளி தொகுதியின் எல்லையோரம்). கெலமங்களத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் இவர் சார்ந்திருக்கும் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இயங்கக் கூடாது என்ற கருத்துள்ள அராஜவாதியாக இருந்து வருகிறார். தி.மு.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், இந்தப் பகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வந்தபோது, இவரது ஆட்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கவும் பட்டார். தன்னை பொது வுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டிருந் தாலும், கடந்த பதினைந்து...

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளிப்படையாக விளம்பரங்களே வருவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அதை வெளியிட்ட ‘இந்து’ஏட்டின் மீது, பத்திரிகைக் குழுவுக்கு சென்னை மருத்துவர் இனியன் இளங்கோ புகார் கூறியதன் அடிப்படையில், ‘இந்து’ அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்து’ நாளேடு (ஜூலை8, 2012) டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாடகைக்கு வீடுகளை விடுவதில் ‘இனப் பாகுபாடு’ காட்டப்படுகிறது என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான டெல்லியில் முஸ்லீம்கள் என்றாலே, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரப்படுவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் முஸ்லீம்கள் வாழும் நெருக்கடியான பகுதிகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சென்னையில் முஸ்லீம்களுக்கும், ‘தலித்’களுக்கும் இதே நிலைதான். ‘சைவமா? அசைவமா?’, அசைவக்காரர்களுக்கு வீடு இல்லை என்று கூறிவிடுகிறார்கள். மாமிச உணவு சமைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாடகைக்கு விடப்படும் நிலையும் உண்டு. உணவு முறையில் புகுத்தப்பட்ட ‘மனுதர்மம்’ வாழ்க்கையில் மட்டுமல்ல; வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட விட்டு வைக்காமல், துரத்தி...

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: 1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன. கல்வி 1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம். கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர்...

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!  தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே! தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

வீரமரணம் அடைந்த பழனிச்சாமி வீர வணக்கப் பேரணி சென்னையில் 14.7.2012 மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் புறப்பட்டது.   கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் முன்னிலை வகித்தார். வீர வணக்க முழக்கங்களுடன் பேரணி மயிலாப்பூர் டாக்டர் நடேசன் சாலை – அய்ஸ் அவுஸ் – வி.எம். சாலை வழியாக இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை வீதியின் இருபுறமும் மக்கள் திரண்டு பார்த்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேரணியில் பங்கேற்றார். இராயப்பேட்டை கழக அலுவலகமான பெரியார் படிப்பகம் அருகில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ‘சேவ் தமிழ்’ அமைப்பைச் சார்ந்த செந்தில், திருமுருகன் (மே 17 இயக்கம்), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்...

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது. அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக...

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை அலுவலகம் தேடி வந்தார். தற்போது தமிழகம் வந்து, முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கியுள்ள தோழர் இராசா, தம்முடைய உயர்கல்வி பெறும் நிலை உயர்வுக்குக் காரணமான பெரியார் தொண்டினை நன்றியுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் நினைவு கூர்ந்தார். விரைவில் சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பதிவு செய்ய விருப்பதையும் தெரிவித்தார். தான் பொருளாதார நிலையில் இன்னும் வளரவில்லை. ஆனாலும் இந்த கழகத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறி, ரூ.1000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 26072012 இதழ்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சி கராத்தே கழகம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டி பொள்ளாச்சியில் பல்லடம் ரோடிலுள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் வந்தனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த 2 கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதை அறிந்த பொள்ளாச்சி நகர பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க.வினர் கராத்தே போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எக்காரணம் கொண்டும் இலங்கை வீரர்கள் இங்கு வரக்கூடாது. எங்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பொள்ளாச்சி வந்தால் மீண்டும் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள், ‘நீங்கள் பொள்ளாச்சி சென்று கராத்தே போட்டியில் பங்கேற்கக் கடும் எதிர்ப்புள்ளது. எனவே இங்கிருந்து திரும்பி விடுங்கள்’...

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையிலும் திருவரங்க நகர செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்றது. மா.பெ.பொ.கட்சி மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஆதித் தமிழர் பேரவை உறந்தை ரமணா, பெரியார் பாசறை அமைப்பாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாதன், சட்ட எரிப்புப் போராளி முத்துச் செழியன் (பெ.தி.க.),  பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்  ஆரோக்கியசாமி மற்றும் அகில இந்திய இளைஞர் இயக்கம் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட இணை செயலாளர் த. புதியவன் மற்றும் குணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட பொருளாளர் மு.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார் நன்றியுரையாற்றினார்....

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை கட்டாயமாக்கும் இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரிவைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெங்களூரிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. பெங்களூரில், ‘நந்தினி லே அவுட்’ பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளனர். வகுப்பறையிலும் அவர்களுக்கு கடைசி இடத்தில்தான் இடம். அவர்கள் கொண்டு வரப்படுகிற உணவு டப்பாக்கள், பள்ளி நுழைவு வாயிலில் சோதனையிடப்படுகின்றன. பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே இவர்களின் பெயர்கள்...

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஆதி திராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற பாராட்டத்தக்க ஆணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலித் பழங்குடி மாணவர்கள் நலன் கருதி அரசு ஆணையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே வெளியிடுகிறது. பெரியார் முழக்கம் 26072012 இதழ்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக பா.ஜ.க. – குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால்...

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

‘இந்து முன்னணி’ இராமகோபாலன் அய்யர் அவ்வப்போது அறநிலையத்துறைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். இந்து கோயில்களை அரசின் அறநிலையத் துறை கட்டுப் படுத்தக் கூடாதாம். ‘இந்து’க்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, அவர்களின் முழுக் கட்டுப் பாட்டிலேயே விட்டுவிட வேண்டுமாம். இதே போன்ற அறிக்கையை இப்போது மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இந்துக் கடவுளர்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கக் கூடாது என்றால் அது பார்ப் பானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதே ‘இவாளின்’ துடிப்பு! அப்படித் தான் 1927 வரை இருந்தது. கோயிலில் குவிந்து கிடந்த நிலங்களும், தங்கம், வைரம், வெள்ளி, வைடூரியங் களும் பார்ப்பனர்களால் சுருட்டப்பட்டன. இந்த பெருச்சாளிகளிடமிருந்து மீட்பதற்கு முதல் கடிவாளம் போட்டது, நீதிக்கட்சி ஆட்சி தான். பனகல் அரசர்  முதலமைச்சராக இருந்தபோது, அவர்தான் மக்கள் வழங்கிய சொத்துக்களை பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து தடுக்க அறங்காவலர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை உருவாக்கினார்.  இராமகோபாலய்யர் கதறிக் கொண்டிருக்கும்...

மார்க்சிய லெனினிய  தோழர் தொப்பி குமாரின் படுகொலை

மார்க்சிய லெனினிய தோழர் தொப்பி குமாரின் படுகொலை

சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களின் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து  28.4.2012 அன்று கெலமங்கலத்தில் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்தில் பங்கேற்று, தளி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இக்கூட்டத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிய-லெனினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.  அடுத்த நாள் 29.4. 2012 அன்று லெனின் பிறந்த நாளுக்காக மார்க்சிய லெனினியக் கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்துக்கு காவல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு ராமச்சந்திரன் வற்புறத்தவே ஏப்.28 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, 29 ஆம் தேதி நிகழ இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பெரியார் திராவிடர் கழகத்தை, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக இக்கட்சி தூண்டிவிடுவதாக ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் கருதினார்கள். கூட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து...

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட் டுள்ளன. இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர்...

சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது. பாராட்டுப் பெற்ற  ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்;...

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் 90 ஆவது பிறந்தநாள் விழா 15.02.2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன், கழக வளர்ச்சிக்கு ரூ. 1000  வழங்கினார். பெரியார் முழக்கம் 23022017 இதழ்

ஹிட்லர் – முசோலினியை ஆதரித்த-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத் திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது  நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார். ஹிட்லரின்...

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

12.2.2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந் திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக் கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப் பட்டன. இல்ல உரிமையாளர் கீதாவின் அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சிக்கு ரூ.2000/- நிதி பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அரியலூர் தலித் சிறுமி நந்தினி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு  மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் தலைமை ஏற்க,  நங்கவள்ளி அன்பு கண்டன உரையாற்றினார். அவரை தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர்களான சக்திவேல்,  விழுப்புரம் அய்யனார் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். கண்ணன் நகர செயலாளர் நன்றியுரை கூறினார் .அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . பேருந்து நிலையத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கவனிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி, மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கத் தலைவர் கா.சு. நாகராசன் தாக்கப் பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3 மணி வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ. அபுகசிர், சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர் செல்வம், சமத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர் முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார்...

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு. கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால்   வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். – ‘விடுதலை’ 12.1.1956 சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்...

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம்  தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுது மிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசு தேவுக்கு ஆட்சி...