Author: admin

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா

இலங்கையில் ‘அய்.எஸ்.’ பயங்கரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு எதிர் வினையாக இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் எழுதிய கட்டுரை. வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடை பெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தது. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம், காபிர் என்ற பிரிவினைப் போக்கை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்திவிட்டது. அன்று நாம் சாப்பிட்ட நாரிசா சோறு, பராத் ரொட்டி போன்ற எல்லாவற்றையும் ஹராம் என்ற...

இஸ்லாம் அறிவியல் மதமா? ஃபாரூக் நினைவு நாள் சிந்தனை

மதவெறிக்கு உயிர்ப் பலியான கழகத் தோழர் ஃபாரூக் நினைவு நாளில் நிகழ்த்தப்பட்ட உரை இது: மறைந்த தோழர் பற்றி சில தகவல்களை கூற வேண்டும். எனக்கு முன்னால் பேசியவர்கள் ஃபாருக் கொல்லப்படது மற்றும் குற்றவாளிகளினுடைய மனநிலை பற்றியெல்லாம் கூறினார்கள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது, ஃபாருக்கை வெறும் நான்கு அல்லது பத்து நபர்கள் மட்டும் கொன்றிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் தொடர்பு இருந்திருக்கவேண்டும்  என்ற சந்தேகத்தை நான் ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு பின் தான் அது உண்மை எனத்  தெரிந்தது. எனக்கு கிடைத்த தகவல்படி அதற்கு பின்னால் எந்த அமைப்பு இருந்தது என்பதை கண்டுபிடித்து விட்டோம். காரணம் ஊழல் செய்தவனை தகுந்த ஆதாரத்துடன் சொன்னால்தான் உண்மை வெளியே வரும் இல்லாவிட்டால் ஊழல் செய்தவன், செய்யாதவன் என்றாகிவிடுவான் அது போல வெளிப்படையான ரகசியம் என்ற அடிப்படையில்தான் இன்றைக்கு இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. சமீபத்தில்...

பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? செ. கார்க்கி

தமிழருடைய இனமானம் காக்கப்படவேண்டும் என்று போராடிய பெரியார், நவீன கருத்துகளுடைய ஒரு சிந்தனைத் தொகுப்பாக விளங்கினார். அவர் பழம் பெருமைக்குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலே ஒரு உரையாடல் தொடங்கியிருக் கிறது. பெரியார் தமிழுக்கு எதிரி, தமிழருக்கு எதிரி, தமிழ் நாட்டுக்கு எதிரி போன்ற கருத்துகள் பேசு பொருளாகி இருக்கின்றன. அதாவது ஒரு நாடு என்றால் என்ன? தேச மென்றால் என்ன? அந்த தேசத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற பொது மொழி என்றால் என்ன? இவையெல் லாம் தமிழர்களுடைய சங்க இலக்கியங்களிலிருந்து தேடிப் பிடிக்கக் கூடியவை அல்ல. அல்லது தமிழர்களுடைய பழையப் புராணங்களிலிருந்தும் பழைய இலக்கியங்களிலிருந்தும் பெறக்கூடிய செய்திகள் அல்ல. அவை மனிதர்களுடைய நவீன கால போராட்டங்களிலிருந்து, கடந்த முன்னூறு ஆண்டுகளில் நடந்தேறிய போராட்டங்களி லிருந்து பெறப்பட்ட கருத்து களும் நடைமுறைகளும் சனநாயக பொறிமுறைகளு மாகும். அந்த வகையிலே இவற்றுக்கெல்லாம் எந்த பொருளும் தெரியாதவர்கள் தான் பெரியாரைத் தமிழ்நாட் டுக்கு எதிரியென்று சொல்லிக்...

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

#சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் ஜுலை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தியாகராயர் நகரில் நடைபெறுகிறது. சிறப்புரையாற்றுவோர் : தோழர்.#கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#விடுதலை_ராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#ஆளூர்_ஷாநவாஸ் துனைபொதுச்செயலாளர் விசிக. தோழர்.#மருத்துவர்_எழிலன். அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : இரா.உமாபதி தென்சென்னை மாவட்ட செயலாளர் 72992 30363  

Test

Test

This is test message for developer

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட...

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம். கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு...

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

‘காதல்’  – ‘பேய்’ – ‘சண்டை’ என்று மசாலாக்களைக் கொண்ட திரைப் படங்கள் புற்றீசல்களாக வந்து கொண் டிருக்கும் நிலையில் ‘தர்ம பிரபு’ போன்ற சமூகச் சிந்தனைகளைக் கொண்டு மக்களுக்கான அரசியலைப் பேசும் படங்கள் வெளி வருவது மிகவும் அபூர்வம். முத்துக்குமரன் எழுதி இயக்கி, யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளி வந்திருக்கும் ‘தர்மபிரபு’ – பார்ப்பனர்கள் சூழ்ச்சி, ஜாதிக் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலை சாட்டையால் அடித்து நொறுக்குகிறது. ‘துக்ளக்’ சோ, பார்ப்பனர் உருவத்தில் ஒரு பாத்திரமே உருவாக்கப்பட் டுள்ளது. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள்கூட வெள்ளை பெல்டுக்கு (பூணூல்) பயப்பட வேண்டும் என்று ‘சோ’ வடிவில் வரும் ‘கோ. அரங்கசாமி’ என்ற பாத்திரம் பேசுகிறது. பெரியாரின் ‘கடவுளை மற மனிதனை நினை’ என்ற கொள்கையின் நியாயத்தை எமதர்மனாக வரும் புராணப் பாத்திரம் புகழ்ந்து பேசுகிறது.  பெரியார், அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் இன்றைய தேவையையும் வலியுறுத்துகிறது....

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது. 2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. 3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள். – என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய,...

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

30.06.2019 காலை 10 மணியளவில் ஒன்றிய தி.வி.க சார்பாக, ஆனைமலையில் கலந்துரையாடல்  நடைபெற்றது. பரப்புரைப் பயணத்துக்கு தயார் ஆவது என முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடலில், ஒன்றிய தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய அமைப்பாளர் சபரிகிரி, தோழர்கள் சிவா, கணேசன், மணி, பாலன், காஜா, சந்தோசு மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் இரா. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். ஏ.ஆர்.வி. சாந்தலிங்கம் – ரூ. 10000/-         மருத்துவர் வசந்த ஆல்வா – ரூ. 3000/- பழ.முருகானந்தம் – ரூ. 2000 /-                      – ஆகியோர் கட்டமைப்பு நிதியை அளித்தனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? சென்ற இதழ் தொடர்ச்சி இராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து இராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக இராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  இராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை இராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான். பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக்...

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். 1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கார்த்தி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

இந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று! இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்ப வில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்து வதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின்...

கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்

கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்

கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு மணிப்பாலைச் சார்ந்த வனிதா ஷெட்டி என்ற பெண் உதவிப் பேராசிரியர் கடந்த ஏப்.15ஆம் தேதி சென்றிருக் கிறார். அப்போது மடத்தில் இலவச உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் அமரச் சென்ற பேராசிரியரை சிலர்  தடுத்து நிறுத்தி மேல் தளத்துக்குப் போய்ச் சாப்பிட கட்டளையிட் டுள்ளனர். கீழ்தளத்தில் நடக்கும் பந்தியில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள் என்று கூறியவுடன், வனிதா ஷெட்டி அவமானப் பட்டு சாப்பிடாமலேயே வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். உடுப்பி மடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ‘பிராமணர்-பிராமணரல்லாதார்’ என்ற பாகு பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதற்கான நேரம் நெருங்கி விட்டது என்று “கருநாடக சோமு சவுதார்தா வேதிகா சங்கம்” என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைகள் அம்பலமான நிலையில் உடுப்பி கிருஷ்ணா கோயில் மடாதிபதி ‘வல்லப தீர்த்த சாமிஜி’ என்ற பார்ப்பனர்,...

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் – எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்: பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார். “நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண்...

நன்கொடை

நன்கொடை

திருவிடை மருதூர் வட்டம், அனக்குடி (அஞ்சல்), அம்மன் பேட்டை கிராமம் இரா.ராஜ்குமார்- எழிலரசி இணையருக்கு 15.06.2019 அன்று ஆண் மகன் வெற்றிச்செல்வன் பிறந்துள்ள மகிழ்வுக்காக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ. 1000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 27062019 இதழ்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்த நிலையில், திராவிடர் விடுகலைக் கழகக் குன்னத்தூர் நகரப் பொறுப் பாளர் சின்னச்சாமி தலைமையில் தோழர்கள் 20.6.2019 அன்று குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். விநாயகர் சிலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கோயில் கட்ட எழுப்பிய சுவரும் அகற்றப்பட்டு, காவல் நிலைய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம் மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000 காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000 தளபதி –      ரூ.   5,000 அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000 நாக பாலன் – ரூ.   2,000 செயராமன் –      ரூ.   1000 விசு – ஆடிட்டர் –      ரூ.   1000 ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000 விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000 கருப்பையா –     ரூ.   1000 சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500 விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500 டேவிட் –      ரூ.   500 குமரேசன்...

ஜாதியை உறுதிப்படுத்தும்  குலதெய்வ வழிபாடு

ஜாதியை உறுதிப்படுத்தும் குலதெய்வ வழிபாடு

கிராமக் கோயில்கள் குலதெய்வங்கள் – பார்ப்பன ஆகமங்களுக்கு எதிரானவை என்றும் அவை பண்பாட்டு அடையாளங்கள் என்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளை சில ‘முற்போக்கு’ பேசும் சிந்தனையாளர்கள்கூட நியாயப்படுத்து கிறார்கள். ஆனால் இந்த நாட்டார் வழிபாடு, ஜாதியவாதிகளின் பிடிக்குள் சிக்கி ஜாதிக் கட்டமைப்பை உறுதிப் படுத்தி வருவதோடு, கிராமங்களில் ஜாதி மோதல் களுக்கும் காரணமாக இருக்கிறது. இவை பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்த்து வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் அருகே 65 கிராமங்களைக் கொண்ட ‘வெள்ளலூர் நாடு’ எனும் பகுதி, ஆதிக்க ஜாதியினரான கள்ளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மூன்று கோயில்களை கள்ளர் சமூகத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ‘அம்பலத் துக்காரர்கள்’ என்ற நாட்டாண்மைக்காரர்கள், கோயிலை நிர்வகிக்கிறார்கள். இந்தக் கோயில் சொத்துகளும் கோயில் பணமும் முறைகேடாக அம்பலத்துக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அம்பலத்துக்காரர் பதவிக்கு வர முயன்று தோற்றுப்பான ஒருவர் அறநிலையத் துறைக்கு புகார் தந்தார். விசாரணையில் முறைகேடுகள் நடப்பதைக்...

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

திருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம். ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம்...

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா- இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண்,...

இராஜராஜசோழனின் கதை என்ன? (2) சேரிகள்-அடிமைகள்-விபச்சாரம் செழித்தது

இராஜராஜசோழனின் கதை என்ன? (2) சேரிகள்-அடிமைகள்-விபச்சாரம் செழித்தது

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? சென்ற இதழ் தொடர்ச்சி பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள...

குழந்தைகளை ‘சுமைதாங்கி’களாக்கும் கல்வித் திட்டம்

குழந்தைகளை ‘சுமைதாங்கி’களாக்கும் கல்வித் திட்டம்

கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016இல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை 2018 டிசம்பர் 15இல் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், மே 31 அன்று புதிய அரசு கொள்கை வரைவை  வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன் 30 வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை, கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப, அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கட்டாய இந்தி மட்டுமே பிரச்சினை அல்ல. கஸ்தூரிரங்கன் கல்விக் குழு முன்வைக்கும் அடிப்படைப் பரிந்துரைகள் மீது எழுகின்ற கேள்விகளில் சில… பள்ளிக் கல்வி அமைப்பு முறை : மூன்று வயது தொடங்கி ஏழு வயது வரை ஆரம்பக் கல்வி 5 ஆண்டுகள். அதாவது, பிரீ.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை ஆதாரக் கல்வி. பிறகு, 3 முதல் 5 வகுப்பு வரை மூன்றாண்டுகளுக்குத் தொடக்கநிலைக்...

“வெற்றி; வெற்றி; யாகம் வெற்றி!”

“வெற்றி; வெற்றி; யாகம் வெற்றி!”

ஆர்.எஸ்.எஸ்.சில்கூட கடவுள் மறுப்பாளர் இருக்கலாம் என்றால் நம்புவீர்களா? சாவர்க்கர் என்ற ஆர்.எஸ்.எஸ். கொண்டாடும் தலைவர் ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று கூறியவர். ஆனால், அ.இ.அ.தி.மு.க. என்ற வேத பக்த ஜன சபாவில் உறுப்பினராவதற்குக் கட்டாயம் கடவுள் பக்தி தேவை. நெற்றியில் குங்குமம், விபூதி கட்டாயம்; முழங்கை வரை வண்ண வண்ண ‘மந்திரக்’ கயிறுகள். எல்லாவற்றையும்விட வேத சடங்குகள். யாகங்களை ‘பிராமண’ புரோகிதர்களைக் கொண்டு நடத்த வேண்டும். உலகத்திலேயே இப்படி ஒரு அரசியல் கட்சியை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. கட்சி சட்டத் திட்டத்தில் எழுதி வைக்கப்படாத கட்டாயமான விதிமுறைகள் இவை. ‘வேத ஜன சபா’வின் இரட்டைத் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி ஜி, ஓ. பன்னீர்செல்வம் ஜி, பாகவத சுவாமிகள் கட்சியின் 55 மாவட்ட செயலாளர் களுக்கும் மழை  வேண்டி வருண பகவானுக்கு ‘யாகம்’ நடத்த உத்தரவிடவே யாகங்களும் வேத மந்திரங்களோடு நடந்து முடிந்திருக்கிறது. யாகம் நடத்தாத...

சண்டே கார்டியன் ‘அபாயச் சங்கு’ மிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்

சண்டே கார்டியன் ‘அபாயச் சங்கு’ மிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டாவது தொகுதிகளில் (யூனிட்) அணு உலைகளின் உறுதித் தன்மையைக் கண்டறியக் கூடிய கண்காணிப்புக் கருவி (ளுவசயin ஆடிnவைடிசiபே நுளூரiயீஅநவே) முறையாக செயல்படாமல் முடங்கிப் போயிருக்கிறது என்று உலகப் புகழ் பெற்ற ‘சண்டே கார்டியன்’ பத்திரிகை (ஜூன் 22, 2019) அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அணு உலையில் நிகழ இருக்கும் செயல்பாட்டுக் குறைவு மற்றும் பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி இது. அணுஉலையின் இயங்கும் போக்கு அதில் நிகழும் மாற்றங்களை இந்தக் கருவிகள் வழியாக கண்டறிந்தால்தான் ஆபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்துக்கு இந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, சண்டே கார்டியன் 12 நாள்களுக்கு முன் மின்னஞ்சல் அனுப்பியது. உடனடியாக இந்தக் கருவிகளை முறையாக இயங்க வைக்குமாறு அதில் வலியுறுத்தப் பட்டிருந்தது. இதற்கு எந்த பதிலும் நிருவாகத்திடமிருந்து வரவில்லை. பிறகு ஆலையின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி சுனில் ஸ்ரீவத்சலாவின் கவனத்துக்கும்...

‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்….

‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்….

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. ‘பெரியார் வாழ்க; தமிழ் வாழ்க’ என்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கத்துக்கு எதிராக பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர்களே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். ‘இராவண-இராம’ யுத்தம் நடந்த காலத்தில் இராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி அயோத்தி மக்கள் வேண்டினார்கள் என்பது ஒரு செவி வழிக் கதை. இராமன் போரில் வென்று சீதையையும் இராவணனிடமிருந்து மீட்டான் என்று இராமாயணம் கதை கூறுகிறது. இராமன் வெற்றி பெற்ற பிறகும் இப்போதும் ‘ஜெய் ராம்’ என்று ஏன் முழங்குகிறார்கள்; இப்போது ‘ஸ்ரீராம பகவானுக்கு’ என்ன ஆபத்து நேர்ந்திருக்கிறது? சீதையை யார் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்? ஆனாலும், காலங்காலமாக இராமாயணம் – பாரதம் என்ற புராணக் கதைகள், பார்ப்பனரல்லாத மக்களை மூளைச் சலவை செய்து,  வேத மதப்...

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்....

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

நடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர். அம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட் டுள்ளார்....

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி...

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘ஹறயல குசடிஅ சுநயஉவடிச’ (ஹகுசு) என்று பெயர். இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல-னுழுசு) என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம்...

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச்சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட் டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன்...

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம். மருத்துவக் கவுன்சில் (ஆஊஐ) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835 இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (ஹயமயளா குடிரனேயவiடிளே) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649 அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்… ஓராண்டுக்கு கட்டணம்  – ரூ. 1,36,526 இரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு – ரூ. 3,33,350 குறுகிய கால பயிற்சி – ரூ. 32,804 நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள். +2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

மலேசியாவில் இயங்கும் ஜாதி சங்கங் களின் பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர் தன்மான இயக்கம், மலேசிய பிரதமரிடம் நேரில் மனு அளித்துள்ளது. இது குறித்து அமைப்பு சார்பில் செயலாளர் விந்தைக் குமரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழர்கள் சாதியெனும் கொடிய உணர்வால் பிரிந்து கிடக்கிறோம். சாதி அடையாளத்தை வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படும் இந்த காலத்தில்…. சாதியின் பெயரால் சங்கங்கள் அமைத்து செயல்படுவோரும் உண்டு. இது தமிழர்களை மேலும் பிரிப்பது மட்டுமல்லாது இழிவுப்படுத்தும் செயலே… சாதியற்ற தமிழராக ஒற்றுமை நிறைந்த இனமாக நாம் வாழ வேண்டும். அரசு வழியாக சாதியை ஒழிப்பதற்கு… இந்நாட்டில் இயங்குகின்ற சாதி சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு ஒன்று மலேசிய நாட்டுப் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் முன்னெடுப்பில், தமிழர் ஒற்றுமை பேணும் இயக்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த மனு அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

“இராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி இராமாயணத்தை அல்லது வேறெந்த இராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வரலாற்றைத் திரித்திடக்கூடாது” என்று வரலாற்று அறிஞர் பேரா. ரொமிலா தாப்பர் கூறினார். “அயோத்தி: நம்பிக்கையாளர்களின் நகரம், நம்பிக்கையற்றவர்களின் நகரம்” (ஹலடினாலய:ஊவைல டிக குயiவா, ஊவைல டிக னுளைஉடிசன) என்ற தலைப்பில் அயோத்தி நகரத்தின் வரலாறு, வலைசிங் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, இந்தியக் கலாச்சார மன்றத்தின் (ஐனேயைn ஊரடவரசயட குடிசரஅ) சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழ மையன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேரா.ரொமிலா தாப்பர் பேசியதாவது: அயோத்தி கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் பலவிதமான கடவுள் நம்பிக்கையாளர்கள் வணங்கும் இடமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இடமாகவும் இருந்து வந்திருக்கிறது. வலைசிங் தன்னுடைய இந்நூலில் சுமார் 3,300 ஆண்டு கால அயோத்தியின் வரலாற்றை விவரித்திருக்கிறார். இந்த 3,300 ஆண்டுகளில் எண்ணற்ற...

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை. கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. ‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ –  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’...

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, 2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல்...

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு  ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது. நீட் தகுதியை உயர்த்துகிறதா? மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது. இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது. வேதியல்,...

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள். பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த்  தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை...

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள்...

மேட்டூர் படிப்பகத்தில்  தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் செந்தில்

மேட்டூர் படிப்பகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில், எம்.பி., கழகத் தலைவர் கொளத்தூர் மணியை 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார். பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-   பெரியார் முழக்கம் 13062019 இதழ்

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

“நடுவண் ஆட்சியின் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி வரைவுக் கொள்கை” 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அபாரமாக இருக்கிறது என்றும் பல்வேறு ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறது. (அறிக்கை பகுதி 4.5) உண்மையில் உலக நாடுகளில் குழந்தைகளுக்கானக் கல்வி முறை – கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்கள் மூளை வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது. மேலை நாட்டுக் குழந்தைகளோடு இந்தியா போன்ற வறுமையின் பிடியில் கல்வி கற்க வரும் கிராமத்துக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் கூடாது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கைகளின் அறிவிப்புகள் அவ்வப்போது வந்தாலும் அது வெற்றுக் காகிதங்களாகி விடுகிறதே தவிர, கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. இது தொடர்பாக ‘இந்து’ ஆங்கில நாளேடு ஜூன் 7ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது: மத்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையை வெளியிட்டு ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது....

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...