மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார்.

தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...