மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது.

2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது.

3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள்.

– என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள், மாணவர் கழக புதிய தோழர்கள் உட்பட 35 தோழர்களுக்கு மேல் பங்கேற்றனர். முத்துகுமார் நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 04072019 இதழ்

You may also like...