கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா-

இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண், சு. வெங்கடேசன், தியாக முருகன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். இரா.எ. இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 27062019 இதழ்

You may also like...