டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர்.

பெரியார் முழக்கம் 04072019 இதழ்

You may also like...