7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார்.

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...