Category: பெரியார் முழக்கம் 2015

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள் 0

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்களின் நலன் கருதி, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும் தந்தை பெரியார் பிறந்த மாதமான 2015 செப்டம்பர் மாதம் முழுவதும் 50ரூ சலுகை விலையில் கொடுக்கப்படும். அஞ்சல் செலவு தனி. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும். – வாலாஜா வல்லவன் தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் எண்.4/11, சி.என் .கே.சந்து, சேப்பாக்கம், சென்னை-5. பேசி : 9444321902, 72992 14554 மின்னஞ்சல் : vallavankuil@gmail.com பெரியார் முழக்கம் 17092015 இதழ்

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம் 0

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம்

தமிழ்த் தேசியம் பேசுவோரிட மிருந்து பெரியார் பேசிய சுயமரியாதைக்கான தேசியம் வேறுபடும் புள்ளிகளை விரிவாக அலசுகிறது இக்கட்டுரை. பெரியார் தோன்றி 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க.வின் ஆட்சி நடந்து கொண் டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப் படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப் பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது அன்றாடச் செய்தியாகிக் கொண் டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு பெரியாரின் கருத்துகள் மாபெரும் கருவியாக இருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 2009 இல் ஈழப் போரில் ஏற்பட்ட தமிழினப் பேரழிவும் அதை தடுக்க முடியாமல் தமிழ்நாடு கையறு நிலையில் இருந்ததும் அமுங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பிவிட்டது. புதிய புதிய இயக் கங்கள், பேரியக்கங்கள், கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. இளந்தலை முறையொன்றும்...

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன் 0

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன்

மறைந்த சுயமரியாதை சுடரொளி அணைக்கரை டேப் ஆ. தங்கராசன் அவர்கள் திராவிடர் கழக ஊர்வலங்களில் இராவணன் வேடமணிந்து, பெரியாரை வாழ்த்தி எழுப்பிய முழக்கங்கள் இவை. கழகத் தோழர்கள் ஊர்வலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு இதை வெளியிடுகிறோம். பார்ப்பன இன இறுமாப்பையும் அடக்கியே பார்த்தவ ரெமது பெரியார் – வாழ்க மடமையை நீக்கிநீ மனிதனாய் வாழதன் மானங்கொள் என்ற பெரியார் – வாழ்க மனிதனாய்ப் பிறந்தநீ மனிதர்க்கே உதவிடும் மார்க்கங்கா ணென்ற பெரியார் – வாழ்க அடிமையைப் போக்கிபொது உடமையைக் காணநீ ஆசைப்படு என்ற பெரியார் – வாழ்க நரகமும் மோட்சமும் தரகர்கள் பொய்க்கதை நம்பாதே என்ற பெரியார் – வாழ்க உடமையைப் பாழாக்கிக் கடவுளைக் காணநீ ஓடாதே என்ற பெரியார் – வாழ்க பெண்ணின விடுதலைக் கெண்ணியே உழைத்திட்ட பெரியாருக்கெல்லாம் பெரியார் – வாழ்க பிள்ளைபெறு மெந்திரம் இல்லையடா பெண்ணினம் பெருமையளி என்ற பெரியார் – வாழ்க விதவையெனுங் கொடுமையினால் பதறுதடா பெண்ணினம்...

“ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும்- பணியும்” நூல் வெளியீடு 0

“ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும்- பணியும்” நூல் வெளியீடு

‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ள என். இராமகிருட்டிணன் எழுதிய “ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்” நூல் வெளியீட்டு நிகழ்வு 16.9.2015 அன்று மாலை 6.30 மணியளவில் தேனாம்பேட்டை ‘பாரதி புத்தகாலயா’ அரங்கில் நடைபெற்றது. ஜி. செல்வா வரவேற்புரையாற்ற, ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் அ. குமரேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நூலை வெளியிட, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். உத்திரகுமார் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 24092015 இதழ்

சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய இடஒதுக்கீடு கருத்தரங்கம் 0

சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய இடஒதுக்கீடு கருத்தரங்கம்

2015, செப்.8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை ‘இக்ஷா’ அரங்கில் “இடஒதுக்கீடும்-பார்ப்பன சூழ்ச்சிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எல்.அய்.சி. முற்போக்கு ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் அய்யனார் தலைமையில் அன்பு தனசேகரன் உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இடஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் பட்டேல்கள் நடத்தும் போராட்டத்தின் சூழ்ச்சிகளை விளக்கியும் அதைத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைக்கும் திசை திருப்பும் வாதங்களுக்கு பதிலளித்தும் ஒரு மணி நேரம் பேசினார். தோழர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.  மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 24092015 இதழ்

கழகத்தினருடன் தொல்.திருமா 0

கழகத்தினருடன் தொல்.திருமா

சென்னை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தோழர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராயப்பேட்டை பெரியார் பயிலகத்தில் மாலை அணிவிக்கப் பட்டது. அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று அண்ணாசாலை – தியாகராயர் நகர் – ஆலந்தூர் – பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.  அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் தோழர்களோடு கலந்து கொண்டார்.  பெசன்ட் நகரில் புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். கழகக் கொடி ஏற்றி கழகப் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். அங்கிருந்து வாகனப் பேரணி மந்தைவெளியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கிருந்து வடசென்னை நோக்கி வாகனப்  பேரணி புறப்பட்டது. புதுவண்ணையில் கழகக்...

வடக்கு மாகாண சட்டமன்ற – தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை முழுமையாக ஏற்போம் பன்னாட்டு விசாரணை மட்டுமே வேண்டும் 0

வடக்கு மாகாண சட்டமன்ற – தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை முழுமையாக ஏற்போம் பன்னாட்டு விசாரணை மட்டுமே வேண்டும்

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, இளந்தமிழகம் இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை துருக்கி நாட்டின் கோஸ் தீவில் போட்றம் கடற்கரையில் மூன்று வயதுச் சிறுவன் அயலன் சடலமாக ஒதுங்கிய நிழற்படம் ‘கரையொதுங்கிய மானிடம்’ என்ற தலைப்புடன் இணையத்தில் உலவி ஐரோப்பியர்களை உலுக்கிப் போட்டுள்ளது. அம்மக்கள் குற்றஞ்சுமந்த இதயத்துடன் ஏதிலியர் களை இருகை நீட்டி வரவேற்று அரவணைக்க முன்வந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 முடிய நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற அமர்வில் நடைமுறையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும்படியான கூறுகளுடன் ஒரு தீர்மானம் அம்மன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை புலனாய்வுக் குழுவையும், மார்த்தி அத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூ சிலாந்து), அசுமா சகாங்கீர் (பாகிஸ்தான்) ஆகிய மூவரடங்கிய அறிவுரைஞர் குழுவையும் அமைத்தார்....

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு 0

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு

திருச்செங்கோட்டில்  கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களிடமும், இளைஞர் களிடமும் பெரியாரியலை சரியான புரிதலோடு எடுத்துச் செல்லும் நோக்குடன் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த மாதம்  06.08.2015 அன்று நடை பெற்ற நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருச்செங்கொடு பெரியார் மன்றத்தில் 13.09.2015, ஞாயிறன்று “தமிழ்நாடு-திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முன்பும் பின்பும்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் – திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலையையும், திராவிடர் இயக்க தோற்றத்தற்கு பின் தமிழகம் பெற்ற நலனையும் மிகவும் சிறப்பான முறையில் விளக்கி பயிற்சியளித்தார், இறுதியில் தோழர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட அமைப் பாளர் மா.வைரவேல், திருச்செங்கோடு நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

0

பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்!

செப்.17 – பெரியார் பிறந்த நாளில் விடுதலை இராசேந்திரன் எழுதி ‘தமிழ் இந்து’ வெளியிட்ட கட்டுரை. நாட்டின் விடுதலைக்கான போராட்டம். மக்களின் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும்; அதை காங்கிரஸ் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்குள்ளே போராடினார் பெரியார். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் துறைகளில் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதுதான் அவரது வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை. காங்கிரஸ் அதை மறுத்தபோது பெரியார் 1925இல் வெளியேறினார். 90 ஆண்டுகளுக்குப் பின் 2015 செப்டம்பரில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி – 50 சதவீத கட்சிப் பதவிகளை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு உறுதி செய்வதாக தீர்மானித்திருப்பது – வரலாற்றின் திருப்பம் மட்டுமல்ல. பெரியார், காலத்தே எவ்வளவு முந்தியிருந்தார் என்பதையும் காட்டுகிறது. சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான ஜாதி அமைப்புதான், அவரது முதன்மையான இலக்கு. ஜாதியமைப்புக்கு கருத்தியலை வழங்கி, அதை சாஸ்திரம், மதம், கடவுள் பெயரால்...

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் 0

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார். மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில்...

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு 0

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு

ஏற்காடு ஒன்றிய கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; வேலை வேண்டும் என்கின்ற பரப் புரை பயணம், ஏற்காட்டின் கிராமப் பகுதியான செம்மனத்தம் மற்றும் நாகலூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வு காலை 11 மணிக்கு அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் தொடங்கியது. பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து மா. தேவதாஸ், பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். அந்த கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்திருந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் நாம் இதுவரை கேட்டிராத பார்ப்பன எதிர்ப்புப் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நிகழ்வாக, நாகலூர் என்ற கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சந்தோஷ் தலைமையில் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியிலுள்ள சுய உதவிக் குழுவின் சுபம் அடார்னஸை சேர்ந்த நண்பர்கள் கழகத் தோழர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியும்,...

0

விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்

விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். “மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத்...

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது 0

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது

நாகை மாவட்டம் குத்தாலம், வழுவூர் ஊராட்சி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயில் குளத்தில் நீர் எடுத்து கோயில் விழா நடத்த முயன்ற திருநாள்கொண்டச்சேரி தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சில ஆதிக்கசாதியினர் மீது சட்ட நடவடிக்கையும், தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், அனைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் 14.9.2015 அன்று மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் அன்பரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, நாஞ்சில் சங்கர், தமிழ் வேலன், இராஜராஜன், நடராஜ், ரமேஷ், இயற்கை, ஜாகிர், விஜய ராகவன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைதாயினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் உரிமை இயக்கம், சி.பி.ஐ.எம்.எல். விடுதலை,...

பன்னாட்டு விசாரணையை நோக்கி… 0

பன்னாட்டு விசாரணையை நோக்கி…

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் போர்க் குற்றங்கள்; மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்ததை உறுதி செய்துவிட்டது அய்.நா. மனித உரிமை ஆணையம். மனித உரிமைக் குழு தலைவர் சையத் உசேன் செப்.16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சட்டவிரோத கொலைகள், பாலியல் வன்முறைகள், போரில்லா பகுதி என்று அறிவித்த பகுதியில் மக்களை குறி வைத்து நடத்திய தாக்குதல், காணாமல் போனவர்கள், கைது செய்யப் பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் போன்ற கொடும் குற்றங்கள் நிகழ்ந்ததை உறுதி செய்கிறது அறிக்கை. “இந்த கொடூரமான குற்றங்கள் திட்டமிடப்பட்டவை. இவைகள் நடத்தப்பட்ட ஒரே மாதிரியான முறைகளைப் பார்க்கும்போது, இந்தக் குற்றங்கள் ஆங்காங்கே தனித்தனியாக நடந்ததாகக் கருத முடியாது. அரச அமைப்பே நடத்திய குற்றங்கள் (யடட யீடிiவே வடிறயசனள ளலளவநஅ ஊசiஅநள) என்று அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. சிங்களர்கள், சர்வதேச சட்ட நிபுணர்கள் கொண்ட கலப்பு நீதிமன்ற (hலசெனை உடிரசவள) விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்...

0

மதக் கலவரத்தைத் தூண்டும் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலம்

செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை அய்ஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலிருந்து பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலம் புறப்படும். தலைமை : ஈரோடு இரத்தினசாமி (கழகப் பொருளாளர்) முன்னிலை: தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்)   ‘விநாயகன்’ ஊர்வலத்தை ஏன் எதிர்க்கிறோம்? ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா? விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் – மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் – மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா? ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி 0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி

கடந்த சூன் மாதம் 24 தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள தொட்டிபாளையம் இரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்நிலையில் கோகுல்ராஜுடன் கல்லூரியில் படித்த சுவாதி என்ற இளம்பெண்ணும், கோகுல்ராஜின் தாயாரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலையில் இருவரும் திருச் செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென் றுள்ளனர். அவர்கள் வழி பாடெல்லாம் முடித்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேறும் போது தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அவர்கள் இருவரையும் அழைத்து மிரட்டி சுவாதியை கீழே அனுப்பிவிட்டு கோகுல்ராஜை...

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் வரட்டும்! 0

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் வரட்டும்!

உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் உரிமை தமிழுக்கும் வேண்டும் என்று போராடும் வழக்கறிஞர்களின் போராட்ட நியாயங்களை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் தங்களுக்காக வழக்கறிஞர் என்ன வாதங்களை முன் வைக்கிறார் என்பதோ, நீதிபதி என்ன கூறுகிறார் என்பதோ அறியாத ‘தற்குறிகளாக்கப் படுவது’ அவமானகரமானதாகும். இராஜ°தான், உ.பி., மத்திய பிரதேசம், பீகார், மாநில உயர்நீதிமன்றங் களில் வழக்காடு மொழியாக இந்திக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 348(2) பிரிவு மாநில மொழிகளை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இதற்கு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும். 2002ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டார். ஆனால் நீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக்க மறுத்துவிட்டது. மீண்டும் 2006இல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வழக்காடு மொழியாக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. (அப்போது...

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்! 0

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்!

நாமக்கல் மாவட்டத்தை கடந்த சில மாதங்களாகவே ஜாதிவெறி சக்திகள் தங்களின் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஒரு காவல்துறை பெண் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வரை சென்றிருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து அதுவும் ஒரு பெண் டி.எஸ்.பி தேர்வு பெற்று காவல்துறையில் பணியாற்ற வருகிறார் என்றால், அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அவர்,எத்தனையோ தடைகளை தனது கடும் முயற்சியாலும் திறமையாலும் வென்று, கடந்து வந்திருப்பார் என்பதில் இருவித கருத்துக்கு இடமிருக்க முடியாது. கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியும், உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணும் சந்தித்தார்கள் என்ற ‘குற்ற’த்துக்காக ஜாதி வெறி கும்பல் ஒன்று கோகுல் ராஜ் தலையை துண்டித்து, தண்டவாளத்தில் வீசியது. இதில் தேடப்படும் முதன்மை குற்றவாளியான கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த யுவராஜ் என்ற நபர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நபர் தலைமறைவாக இருந்து கொண்டு ‘வாட்ஸ்அப்’ வழியாக காவல்துறைக்கு சவால்விட்டு ஜாதி வெறியைத் தூண்டி,...

மன்னையில் செங்கொடி நினைவு நாள் 0

மன்னையில் செங்கொடி நினைவு நாள்

திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மதிமுக நகர செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி ஆதவன், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் மருத செல்வராஜ், பாமக மாவட்ட தலைவர் சீனி தனபாலன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பௌத்தன், திக நிர்வாகிகள் சந்திரபோ°, இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர். திவிக நிர்வாகிகள் சசிகுமார், கவிஞர் கலைபாரதி, நெடுவை வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி...

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம் 0

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம்

23.8.2015 அன்று மாலை சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ‘சமகால வாழ்வியலும் ஜாதிய வன்கொடுமை களும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்சென்னை திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செல்வேந்திரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் இளையராஜா, தமிழ் இளைஞா மாணவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே. பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் ஜோ. பிரிட்டோ, மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சி மாலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிதம்பரம் மதன்குமார் வரவேற்புரை வழங்கினார். செயப்பிரகாசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாக...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மரணதண்டனையை எதிர்த்து, தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்ட ‘தழல் ஈகி’ செங்கொடியின் நினைவு நாள் செப். 28. செங்கொடியின் பொது வாழ்வகமாகிய காஞ்சி மக்கள் மன்றம், அன்று செங்கொடியின் நினைவுநாளை செங்கொடியின் இலட்சியத் திருநாளாக பின்பற்றியது. வெகு மக்களும் இயக்கங்களும் சாரை சாரையாக அணி வகுத்து, செங்கொடி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஈழத் தமிழர் விடுதலைக்கும், மரணதண்டனை ஒழிப்புக்கும் சூளுரைத்தனர். பிற்பகல் 4 மணியிலிருந்து மக்கள் மன்றத்தின் கலைக் குழுவினர், ஜாதி, மத எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு ஈழப் போராளிகளின் வீரங்களைப் பறை சாற்றும் எழுச்சி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ‘ஜாதி-பெண்ணடிமை’ ஒழித்த சமத்துவபுரியாக விளங்கும் காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அன்பைப் பரிமாறினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் அடுத்த இளைய தலைமுறை பறைகளை கையில் எடுத்தது; குழுக்களாக நடனமாடியது; பாடியது. மக்கள் தொண்டினை வாழ்க்கையாக்கிக் கொண்ட மன்றத்தின் செங்கொடி...

மதிப்பு என்பது.. 0

மதிப்பு என்பது..

ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோலதான் தன் தன் நலனுக்கு, தன் தன் பொறுப்புக்கு ஆக காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்ட தாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக் கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதக மடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம். அது, பொதுவாக மதிக்காததாகாது. பெரியார், ‘விடுதலை’ – 08.04.1950 பெரியார் முழக்கம் 10092015 இதழ்

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது 0

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் அமைப்பாளர் பாரி. சிவா தலைமையில் 4.9.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவர் பணியில் அமர்த்தவும், இடை நீக்கம் செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக பல்கலையில் அனுமதிக்கவும வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி நேப்பியர் பாலத்திலிருந்து முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 30 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு மாணவர் கழகம் பிரகாசு, விஜயகுமார், செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு, பிரதிப், அருண், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாரிமுத்து, பிரகாசு, விழுப்புரம் அய்யனார், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி உள்ளிட்ட தோழர்கள் கைதானார்கள். பெரியார் முழக்கம் 10092015 இதழ்

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்! 0

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்!

பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் படைப்பாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தான் பெற்ற அகாடமி விருதை மீண்டும் அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான இவர், தன்னுடைய முடிவை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் தனக்கு அளிக்கப்பட்ட விருதுடன், ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசையும் திருப்பி அளிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, “இந்த முடிவு பற்றி வேறு எந்த எழுத்தாளர்களுடனும் நான் விவாதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு. கல்புர்கியின் கொலைக்கு இந்துத்துவ சக்திகளே காரணம். இந்தச் சம்பவம் என்னை உலுக்கியிருக்கிறது. இப்போது நான் மவுனித்திருக்கக் கூடிய நேரம் கிடையாது. மவுனம் இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார். 2010-2011ஆம் ஆண்டு...

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!  இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!” 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!”

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? இதோ நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன், முப்பாட்டன் காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்? பார்ப்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உழைப்பு, அடிமை வேலை, குலத்தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமுதாயம் விதித்த கறாரானக் கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படித் தகர்த்தோம்? ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளைப் பெற்றதால் தகர்த்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமுல்படுத்துவதில் – காமராசர் ஆட்சியில் தொடங்கி, தமிழகத்தில் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின; அடைக்கப்பட்ட கல்விக் கதவுகள் திறந்தன; படித்தோம்; சுயமரியாதைப் பெற்றோம். ‘ஜாதி’யைக் காட்டி, ‘...

கோழைகளின் மிரட்டலுக்கு  அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி 0

கோழைகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி

“எங்கள் உயிரைப் பறித்தாலும், பகுத்தறிவு கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று பகுத்தறிவாளர்கள் உறுதியுடன் பதிலடி தந்தள்ளனர். கருநாடக மாநிலத்தின் தலைசிறந்த சிந்தனை யாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், முன்னாள் துணைவேந்தர் எம்.எம். கல்புர்கி, தார்வாரில் அவரது இல்லத்தில் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப் பட்டவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே புவித் ஷெட்டி என்ற பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஒரு மதவெறியன், “இந்து மதத்தை எதிர்த்தால் அதற்கு இதுதான் தண்டனை. இனி அடுத்த இலக்கு – மைசூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கே.எஸ்.பகவான்” என்று ‘டிவிட்டர்’ தளத்தில் பதிவேற்றினான். அந்த ஆசாமியை கைது செய்து, கருநாடக சிறையில் அடைத்த அதே நாளில், நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது. இந்த மிரட்டலுக்கு கே.எஸ். பகவான் அளித்த பேட்டி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுகளில் வெளி வந்திருக்கிறது. “அந்த இளைஞர் தவறாக வழி நடத்தப்படுகிறார். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அவரை சரியாக வழி நடத்தவில்லை....

அறிவியல் போர்வையில் புதிய மோசடி 0

அறிவியல் போர்வையில் புதிய மோசடி

நவீன மூடநம்பிக்கைகள் இப்போது அறிவியல் பெயரில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, ‘நடு மூளை செயலாக்கம்’  (மிட் பிரைன் ஆக்டிவேஷன்) என்ற பெயரில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி, பம்பாய் நகரங்களைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும் இது பரவி வருகிறது. மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டுக்கும் இடையில் உள்ள நடுமூளைப் பகுதியைத் தீவிரமாக இயக்கினால், அது செயல்படும்போது கண்களை மூடிக்கொண்டு கூட படிக்கலாம்; படித்தவை நன்றாக பதியும். தேர்வுகளில், போட்டிகளில் குழந்தைகள் சாதனை படைப்பாளர்கள் என்ற ஒரு நம்பிக்கை பரப்பப்பட்டு, இதற்காக 10 நாள் பயிற்சி, 15 நாள் பயிற்சி என்ற மய்யங்கள் உருவாகி வருகின்றன. குழந்தைகளின் படிப்புக்காக எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் ரூ.25000 வரை கட்டணம் செலுத்தி இந்த மய்யங்களில் சேர்க்கிறார்கள். சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் பேசிய பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக், ‘இந்த மய்யங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு...

0

எனக்கு ‘வீர சொர்க்கத்தில்’ நம்பிக்கையில்லை – பெரியார்

பெரியார் சமதர்மக் கொள்கைகளை கைவிட்டார் என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்த பொது வுடைமையாளர்கள், ஜீவா என்றழைக்கப்பட்ட ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோர் பெரியார் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட 5ஆவது சுயமரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாநாட்டில் ஜீவா, பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு பெரியாரை விமர்சித்ததற்கு பதிலளித்து பெரியார் நிகழ்த்திய உரை இது. தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடி யில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு, நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு, சௌகரியமில்லாது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு....

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே 0

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே

நிலவுடைமைக்கு எதிரான போராட்டத்தின் வழியாகவே ஜாதியமைப்பை தகர்க்க முடியும் என்று மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நில உரிமையை ஜாதியமைப்பே கட்டமைத்திருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலை பொருளியல் பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் கூறினார். தமிழகத்தில் ஜாதிக்கும் நிலவுரிமைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியவர் ஜெரோம். சென்னை திருவான்மியூரில் பனுவல் நூலக அரங்கில் ‘புதிய தமிழ் ஆய்வுகள்’ என்ற அமைப்பின் நிகழ்வில் ஆக°டு 21ஆம் தேதி மாலை அவர் இது குறித்து விரிவான ஆய்வுரையை முன் வைத்தார். ஒருவரிடம் நிலம் இல்லை என்பதற்கான காரணமாக அவரது வறுமை சொல்லப்படுகிறது. அது உண்மையானால், பார்ப்பனர், வேளாளர் ஜாதி சமூகம் மட்டுமே நிலவுடைமை யாளர்களாக எப்படி மாற முடிந்தது? உண்மையில் வறுமை காரணமாக நில உரிமை கிடைக்காமல் போக வில்லை. நிலஉரிமை மறுக்கப்பட்டதால்தான் பார்ப்பன-வெள்ளாளர் அல்லாத மக்கள் குறிப்பாக...

மாவட்டப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங் களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் கழகப் பொறுப்பாளர்கள். தருமபுரி மாவட்டம் தலைவர் – வெ. வேணு கோபால்; செயலாளர் – ம. பரம சிவம்; அமைப்பாளர் – அ. சந்தோஷ் குமார். தருமபுரி நகரம் : தலைவர் – கு. நாகராஜ்; செயலாளர் – அ. சுதந்திர குமார். அமைப்பாளர் : பெண்ணாகரம் ஒன்றியம் – எம்.பலராமன்; காரிமங்கலம் ஒன்றியம் – கோ. செந்தில்குமார்; நல்லம் பள்ளி ஒன்றியம் – எம். இராமதாசு. அறிவியல் மன்றம் : எஸ். வையாபுரி, சி. பிரியா. கிருட்டிணகிரி மாவட்டம் தலைவர் – தி. குமார், காவேரிப்பட்டினம்; செயலாளர்-கா. குமார், அலேசீபம்; அமைப்பாளர்-சிவ. மனோகரன்-காவேரிப் பட்டினம்; இராஜேஷ் – கிருட்டிணகிரி. மாவட்ட துணைத் தலைவர் : கிருஷ்ணன், நீலகிரி.  மாவட்ட துணைச் செயலாளர் : ப. வாஞ்சி நாதன். தமிழ்நாடு அறிவியல் மன்றம் : மூங்கப்பட்டி ஆசிரியர் சக்திவேல். காவேரிப்பட்டினம் ஒன்றியம்...

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம் 0

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்

சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப்...

0

பட்டேல்கள் நடத்தும் கலவரம்:  இடஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி!

தற்போது முன்னேறிய வகுப்பில் உள்ள பட்டேல் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 22 வயது இளைஞரான ஹார்த்திக் பட்டேல் தலைமையில் பல இலட்சக்கணக்கான பட்டேல் இன மக்கள் திரண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையே பாதிக்கும் வகையில் தீவிரமான  போராட்டத்தை நடத்தி வருவது குறித்து ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இந்த போராட்டம் குறித்த பல்வேறுவிதமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தை, அதன் போக்கை அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவரின் கருத்துக்களை கூர்ந்து நோக்குகையில் இந்த பட்டேல் இன மக்களின் போராட்டத்தின் நோக்கம் என்பது, இட ஒதுக்கீட்டு உரிமையை பெறுவதை விட இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக இரத்து செய்ய வைப்பதுதான் முதன்மையானதாக தெரிகிறது. போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் ஹார்த்திக் பட்டேல் தன்னுடைய பேட்டிகளில், “இட ஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும்,...

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

0

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...

0

கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர்  சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

சுப்பிரமணியசாமிக்காக பதவி பறிக்கப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குநர் 0

சுப்பிரமணியசாமிக்காக பதவி பறிக்கப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குநர்

சுப்ரமணிய சாமியின் கருத்து – தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்றும், அவர் கருத்துகள் பா.ஜ.க. வின் கருத்து அல்ல என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்னப்பர் போன்ற பா.ஜ.க.வின் ‘சூத்திர’ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் சுப்ரமணியசாமி செல்வாக்குள்ள நபராகவே உலவுகிறார் என்பதற்கு சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்துள்ளது. டெல்லி அய்.அய்.டி. (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் இரகுநாத். கே.செவ்கவோன்கர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அய்.அய்.டி. – குடி யரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட் டிலுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு. ஆனால், இவரது பதவி விலகல் கடிதம், மனித வளத் துறை அமைச்சரால் ஏற்கப்பட்டிருக்கிறது. கட்டாயப் படுத்தப்படுத்தி மோடி ஆட்சி இவரிடமிருந்து விலகல் கடிதத்தை வாங்கியுள்ளதாக தலைநகரில் செய்திகள் உலா வருவதாக ‘இந்து’ நாளேடு (டிச.29) கூறுகிறது. காரணம், சுப்ரமணிய சாமியின் பிரச்சினைதான் 1969ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி, இந்த நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்து, பிறகு இந்திரா...

கடவுள், மத அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் பகுத்தறிவுக் காவியம் 0

கடவுள், மத அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் பகுத்தறிவுக் காவியம்

அமீர்கான்-ராஜ்குமார் கூட்டணி யில் வெளி வந்திருக்கும் ‘பிகே’ இந்தி திரைப்படம் ஆங்கில உள் தலைப்பு களுடன் சென்னையில் திரையிடப்பட் டிருக்கிறது இந்தப் படம். திரைப்பட வரலாற்றில் புதிய திருப்புமுனையை உருவாக்கியிருப்பதை நம்மால் உரத்துச் சொல்ல முடியும். கடவுள், மதம் என்று மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகளை கூர்மையான பகுத்தறிவு வினாக்களால் தகர்த்து உடைக்கிறது. வேற்றுக்கிரக விண்வெளி வீரரான அமீர்கான், விண்வெளிக்கலம் ஒன்றில் பூமியில் வந்து இறங்கியவுடன் அவரிடமிருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ கருவியை இராஜ°தான் பாலைவனத்தில் ஒருவர் திருடிக் கொள்கிறார். மீண்டும் அந்த கருவி இருந்தால் மட்டுமே விண்வெளிக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் ரிமோட் கன்ட்ரோலைத் தேடித் திரியும்போது, அது கிடைக்காத நிலையில் ‘இனி கடவுளால் மட்டும்தான் தேடித் தர முடியும்’ என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள். கடவுளைத் தேடும் முயற்சியை தொடங்குகிறார். கடவுளும் கிடைக்காத நிலையில் ‘கடவுளைக் காணவில்லை’ என்று கடவுள் படத்தை அச்சிட்டு வீதி வீதியாக வழங்கி தேடத் தொடங்குகிறார்....

முற்போக்கு பேசினாலும் ஜாதிப் பெருமையை விடாதவர்கள் பார்ப்பனர்களில் ஏன் ஒரு ‘வால்டேர்’ உருவாகவில்லை? 0

முற்போக்கு பேசினாலும் ஜாதிப் பெருமையை விடாதவர்கள் பார்ப்பனர்களில் ஏன் ஒரு ‘வால்டேர்’ உருவாகவில்லை?

மதச்சார்பின்மை பேசிக் கொண்டு ‘இந்துத்துவா’ எதிர்ப்பாளர்களாக வலம் வரும் பார்ப்பனர்களிடமும் அவர்களின் பார்ப்பனியப் பிறவி பெருமிதம் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருப்பதை விவரிக்கிறது இக்கட்டுரை, ‘அவுட் லுக்’ இதழில் (டிச.1) எஸ்.ஆனந்த் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது. பார்ப்பனர்களிலேயே தங்களை மிகவும் மேலாகக் கருதிப் பெருமைப்படுவோர் “கவுத் சரஸ்வதி பிராமணர்” என்ற பார்ப்பனப் பிரிவினர். தங்களின் பிறவிப் பெருமைக்கு ஒரு ‘கற்பனை’யை வரலாறாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு ஓடிய காலத்திலேயே இவர்கள் ரிக் வேதத்தை ஓதியவர் களாம்! (இப்போது அப்படி ஒரு ஆறு கிடையாது. ஆனாலும் பூமிக்கடியில் அது ஓடிக் கொண்டிருப் பதாக பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.) விஷ்ணு ‘பரசு ராமனாக’ அவதாரம் எடுத்து வந்து சத்திரிய வம்சத்தையே 21 முறை தாக்கி பூண்டோடு அழித்து விட்டபோது, சத்திரியர்கள் இடத்துக்கு ‘சரசுவதி பிராமணர்கள்’ வருவார்கள் என்று அறிந்த ‘பரசு ராமன்’ அவர்களுக்கான ‘புண்ணிய பூமி’யை சகா...

‘பாரத ரத்னா’ விருது பெறும் மாளவியா-வாஜ்பாய் அரசியல் பின்னணி என்ன? 0

‘பாரத ரத்னா’ விருது பெறும் மாளவியா-வாஜ்பாய் அரசியல் பின்னணி என்ன?

மோடியின் ஆட்சி மதன் மோகன் மாளவியா-வாஜ்பாய் இருவருக்கும் நாட்டின் உயர் விருதாக கருதப்படுகிற ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்க முடிவு செய்திருக்கிறது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியவாதிகள் என்ற அடையாளத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு சாதனைகள் ஏதும் நிகழ்த்தாதவர்கள். மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கு இந்த அறிவிப்புகளும் ஒரு சான்று. வாஜ்பாய்- மதன் மோகன் மாளவியாவின் பின்னணிகள் என்ன? வாஜ்பாய் யார்? ‘ஜென்டில்மேன் வாஜ்பாய்’ என்று சில தமிழ் நாட்டு தலைவர்கள் அவரைப் புகழ்ந்தாலும் வாஜ்பாய் தீவிர மதவெறியர் என்பதே அவரது வரலாறு. சில சான்றுகள்: 1. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் இவ்வாறு பேசினார்: “நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘தில்லை நடராஜன்’ கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். – செய்தி கோயில் உரிமை ‘அவாளு’க்கு மட்டும்; தேர் இழுக்கும் உரிமை ‘சூத்திராளுக்கு’ மட்டும்! ‘இந்து ஒற்றுமை’ ஓங்குக… பிற மதத்திலிருந்து ‘தாய் மதத்துக்கு’ திருப்பும் இயக்கத்தை விசுவ இந்து பரிஷத் தீவிரமாக நடத்துகிறது. – செய்தி அமெரிக்கா, இலண்டன்னு ‘பிற தேசம்’ போன இந்துக்களை ‘தாய் தேசம்’ நோக்கித் திருப்பும் இயக்கத்தையும் நடத்துவேளா? ‘மிஸ்டு கால்’ போட்டால் பா.ஜ.க.வில் உறுப்பின ராக முடியும். – செய்தி 10 ‘மிஸ்டு கால்’ வந்தால் ‘டாக்டைம்’ சலுகை உண்டுன்னு அறிவிச்சுப் பாருங்க, இன்னும் ஆதரவு பெருகும்! ஸ்ரீரங்கம் ‘சொர்க்க வாசல்’ திறப்பின்போது பக்தர்களுக்கு உதவிட 108 ஆம்புலன்ஸ். – செய்தி நியாயம்தான். உண்மையாகவே எந்த பக்தராவது சொர்க்கத்துக்குப் போயிடாம தடுக்க வேண்டியது கோயிலின் கடமையாச்சே! கடமை தவறுவது, ‘கடவுளுக்கே’ ஆகாது. டெல்லி – தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி...

காந்தி கொலை வழக்கு விசாரணை : சில தகவல்கள் 0

காந்தி கொலை வழக்கு விசாரணை : சில தகவல்கள்

• காந்தியார் கொலை வழக்கு 1948 மே மாதம் இறுதியில் டெல்லி செங்கோட்டையில் தொடங்கி 7 மாதங்கள் நடந்தன. டிசம்பர் 30ஆம் தேதி நிறைவடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச் ஆத்ம சரண். • வழக்கு விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். • வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் சாவர்க்கருக்கு 8 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கோட்சே உட்பட ஏனையோருக்கு தலா ஒரு வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார். • வழக்கின் முதன்மைக் குற்றவாளியான கோட்சே, நாராயண் ஆப்தே இருவரும் சாவர்க்காரின் சீடர்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சாவர்க்கர் ஆதரவு இருந்ததை காவல்துறை தரப்பு நிரூபித்தது. ஆனால், சதித் திட்டத்தை சாவர்க்கார் தான் உருவாக்கித் தந்தார் என்பதை மட்டும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியாததால் அவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு சாவர்க்கார் நடுநாயகமாக அமர்ந்து எடுத்துக் கொண்ட...

காந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள் 0

காந்தி எழுதாத கட்டுரையை எழுதியதாகக் கூறிய பொய்யர்கள்

பாபர் மசூதிக்குள் நள்ளிரவில் ராமன் சிலைகளைப் போட்டு, அது ‘ராமஜென்ம பூமி’ என்று சங்பரிவாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை காந்தி ஆதரித்தார் என்று உண்மைக்கு மாறாக பொய்யான ஆதாரங்களை பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களே எழுதினார்கள். இந்தப் புரட்டுகளை அம்பலப்படுத்தி பிரபல எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங் பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள காந்திஜியின் பெயரையே பயன்படுத்திக் கொள்ளும் மோசடியை செய்து வருகிறது. பிரிட்டனில் செயல்படும் வி°வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்சினைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கக் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார். இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1927 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ளதாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார்....