“ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும்- பணியும்” நூல் வெளியீடு

‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ள என். இராமகிருட்டிணன் எழுதிய “ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்” நூல் வெளியீட்டு நிகழ்வு 16.9.2015 அன்று மாலை 6.30 மணியளவில் தேனாம்பேட்டை ‘பாரதி புத்தகாலயா’ அரங்கில் நடைபெற்றது.

ஜி. செல்வா வரவேற்புரையாற்ற, ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் அ. குமரேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நூலை வெளியிட, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். உத்திரகுமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 24092015 இதழ்

You may also like...

Leave a Reply