பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் அமைப்பாளர் பாரி. சிவா தலைமையில் 4.9.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவர் பணியில் அமர்த்தவும், இடை நீக்கம் செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக பல்கலையில் அனுமதிக்கவும வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி நேப்பியர் பாலத்திலிருந்து முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை
6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
30 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாணவர் கழகம் பிரகாசு, விஜயகுமார், செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு, பிரதிப், அருண், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாரிமுத்து, பிரகாசு, விழுப்புரம் அய்யனார், மாவட்ட செயலாளர்
இரா. உமாபதி உள்ளிட்ட தோழர்கள் கைதானார்கள்.

பெரியார் முழக்கம் 10092015 இதழ்

You may also like...

Leave a Reply