ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம்

23.8.2015 அன்று மாலை சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ‘சமகால வாழ்வியலும் ஜாதிய வன்கொடுமை களும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்சென்னை திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செல்வேந்திரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் இளையராஜா, தமிழ் இளைஞா மாணவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே. பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் ஜோ. பிரிட்டோ, மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சி மாலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிதம்பரம் மதன்குமார் வரவேற்புரை வழங்கினார். செயப்பிரகாசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை கழகத் தோழர்களுக்கும் பாரி சிவா நன்றி தெரிவித்தார்.

பெரியார் முழக்கம் 10092015 இதழ்

You may also like...

Leave a Reply