பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்
தோழர் ஈ.வெ. ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள், உண்மை நண்பர்கள் ஆகியவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிரிகளே தவிர, தங்கள் செல்வம், உழைப்பு, ஊக்கம் உணர்ச்சி ஆகியவை களைப் பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தி பார்ப்பனீயத்தை ஒழித்து அதன் மூலம் மக்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே ஒழிய இன்று தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரிடமும் விரோதமோ குரோதமோ கொண்டு எந்த தனிப்பட்ட பார்ப்பனரின் எவ்வித காரியத்திலும் பிரவேசித்து எவ்வித இடையூறோ இடஞ்சலோ செய்ததில்லை. மற்றும் அநேக பார்ப்பனர்களுக்கு தனிப்பட்ட முறையில் உத்தியோக முதலிய சிபார்சுகளும் செய்து சராசரி சமூக வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட இயற்கையின் பரஸ்பர உதவி முதலிய காரியங்கள் வகுப்பு உணர்ச்சி இல்லாமல் மனித உணர்ச்சி கொண்டு கூடுமான அளவு உதவியே வருகிறார்கள். தனிப்பட்ட மனிதர்களிடத்தில் காட்டும் மரியாதை, அன்பு முதலிய காரியங்களில் சிறிதும் பிறழாமல் எப்பொழுதும் போலவே நடந்து வருகிறார்கள். ஆனால்...