Category: திவிக

நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை – திருப்பூர் அணியின் பயண தொகுப்பு

08.08.16 திங்கள்  பல்லடம் அனுப்பட்டியில் 3.30மணிக்கு தலைமை; தோழர்.சீனி.செந்தேவன் அவர்கள் முன்னிலை;தோழர்.சண்முகம் தி,வி.க.ஒன்றியச்செயலாள்ர்அவர்கள் மந்திரமா?தந்திரமா?; தோழர்.காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை; தோழர்.முகில் ராசு அவர்கள் திருப்பூர் மாவட்டச்செயலாளர் அவர்கள், தோழர் திருப்பூர்.சு.துரைசாமி .மாநில பொருளாளர்.தி.வி க. அவர்கள் நன்றியுரை; தோழர்; அனுப்பட்டி.சுந்தரராசன் தி.விக.அவர்கள். மதியம் உணவு வழங்கி சிறப்பு செய்தவர்கள்  பல்லடம் நகர திவிக தலைவர் மற்றும் இயக்க தோழர்கள்  காரணம் பேட்டை நால் ரோடு  மாலை; 05, 30 மணிக்கு    தலைமை; தோழர்; நீதி ராசன் திருப்பூர்.மாநகரதலைவர் தி.விக  தொடக்கவுரை; தோழர். மணிமொழிஅவர்கள்   மந்திரமா? தந்திரமா? தோழர்.காவை இளவரசன் அவர்கள்  சிறப்புரை; தோழர்; கோபி வேலுச்சமி அவர்கள் தலைமைக்கழகபேச்சாளர்  நன்றியுரை; தோழர். மாப்பிள்ளை சாமி அவர்கள் சூலூர் ஊர்வேலாங்குட்டை ,கலைஞர் நகர்  இரவு பொதுக்கூட்டம்  தலைமை தோழர் சூ.அ. முருகேசன் .தி.மு.க.அவர்கள், முன்னால் பேருராட்சி துனைத்தலைவர். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் தோழர் காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை தோழர்; திருப்பூர்...

மத்தியரசின் புதிய கல்விகொள்கையை எதிர்த்து கருத்தரங்கம் ப.வேலூர் 14082016

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பேரரசுவின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம். நடுவண் அரசே, மாநில உரிமையை பறிக்காதே என்ற முழக்கத்தோடு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி 14082016 அன்று மாலை 5 மணிக்கு நகர வர்த்தகர் சங்கம், ப.வேலூரில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் திரு நாகநாதன், மேலான் திட்டக்குழு துணைத்தலைவர் மற்றும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தோழர் முகிலன் கலந்து கொண்டனர்.  

காவிரி ஆறு எங்கள் ஆறு!! மணல் கொள்ளையனே வெளியேறு!! – மாபெரும் கையெழுத்து இயக்கம்

கரூர் மாவட்டம் புகழூரில் 14082016 அன்று காவிரிப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மணல் கொள்ளைக்கெதிராக கண்டன உரையாற்றி முதல் கையெழுத்திட்டு ,கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்..  

பாமர மக்களை பற்றிப்படரும் பெரியாரியம்….

நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அறிவியல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. புகைப்படம் தோழர் வைரம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம் தூத்துக்குடி 27082016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 27ம் தேதி, “கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” பார்ப்பன- இந்துத்துவ போக்கை கண்டித்து நம் உரிமையை வென்றெடுப்போம், வாருங்கள்..

சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை  ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின்  பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி...

மன்னார்குடி பரப்புரை பயண காட்சிகள் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

மூன்றாம் நாள் அச்சம் போக்கும் அறிவியல் பயண பரப்புரை தொகுப்பு சத்தியமங்கலம் அணி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு  மேட்டூர் கோவிந்தராஜ்  குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும்  பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும்  தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த...

சத்தி அணியின் இரண்டாம் நாள் பயண பொதுக்கூட்ட நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் இரண்டாம் நாள் நிறைவு பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் 8.8.2016 மாலை 7 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை இசை முழக்கத்தோடு தொடங்கியது.தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் பாடியபின் பொது கூட்ட நிகழ்வுகள் தொடங்கியது.தோழர் நாத்திகசோதி தலைமை ஏற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை ஆற்ற தோழர்  இராம.இளங்கோவன், தோழர் இரத்தினசாமி,தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் திலிபன் நன்றியுரை ஆற்றினார்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர்  பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர்  பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு  இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி  அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...

மயிலாடுதுறை பரப்புரை வாகனம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா மயிலாடுதுறை 07082016

மயிலாடுதுறையில் தொடக்க விழா 07082016 அன்று! கழக தலைவர் தலைமையில். திராவிடர் விடுதலைக்கழகத்தின் ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்’ ‘நம்புங்க-அறிவியல; நம்பாதீங்க-சாமியார்கள’ எனும் முழக்கத்தோடு தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது. நிறைவு விழா ஆகஸ்ட்12 . மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கும் பிரச்சார பயணம்  

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா திருப்பூர் 07082016

திருப்பூர் அணி வேலம்பாளையத்தில் துவக்க விழா பொதுக் கூட்டம் பறை இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. தலைமை தனபால் வரவேற்புரை தோழர் முத்து பறை முழக்கம் நிமிர்வு கலைக்குழு விளக்க உரை: தோழர் சு. துரைசாமி மாநில பொருளாளர் தோழர் வீ.சிவகாமி அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நிர்மல்குமார் கோவை மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு மாவட்டக் செயலாளர் தோழர் நீதிராசன் மாநகர தலைவர் திருப் பூர்

சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். செய்தி குகநந்தன்

பரிசளிப்பு விழா – கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்தநாள் போட்டி

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் கட்டுரை போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 06082016 அன்று அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் துவக்க விழாவின் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி வணங்கினார் நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பரப்புரை பயணத்தின் துவக்க விழா சென்னை திவிக சார்பில் 08082016 மாலை 6 மணிக்கு லாயிட்ஸ் சாலையில் நடைபெற்றது அவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்

“நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை …துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை 06082016

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது. சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள் தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது செய்தி தோழர் குகநந்தன்

திருப்பூரில் அறிவியல் பரப்புரை பயண சுவர் விளம்பரங்கள்

திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.

அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை … நம்பாதீங்க சாமியர்களை … அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை … மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது … அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை….பொதுக்கூட்டம் மன்னார்குடி 08082016

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!!  அனைவரும் வாரீர்!

வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம்.

பேராவூரணி ஜூலை 26. பேராவூரணி அருகில் ரெட்டவயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வீரக்குடி ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் மாணவர்களின் கல்விக் கடனை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும், வங்கிகள் அளித்த கடனை வசூலிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும், வியாபார நோக்கில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவயமாகக் கல்வியை வழங்க வேண்டும், கல்விக் கடன் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வேளாண் வாகனங்களை விற்பனை செய்திட வேளாண் கடன்களைக் கொடுத்துவிட்டு உழவர்களைக் கடனாளியாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்துச் செலவினங்களையும் அரசே மானியமாக வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பயணத்துக்கு தயாராகிறது சத்தியமங்கலம் அணி

17.07.2016 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோபி மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி மற்றும்  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையிலும், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பவானி வேணு கோபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 07.08.2016 அன்று சத்திய மங்கலத்தில் துவங்க உள்ள “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்கள!” என்ற அறிவியல் பரப்புரை அணியை சிறப்பாக வழிநடத்தி ஆத்தூரில் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் நிவாசு, சதுமுகை பழனிச்சாமி, இரகுநாதன், கிருட்டிணமூர்த்தி, தங்கம், அறிவு, அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்டவாறு சத்தியமங்கலம் அணியின் பரப்புரைப் பயண அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. “நம்புங்க அறிவியலை! நம்பாதீங்க சாமியாரை!” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் திட்டஅட்டவணை பின்வருமாறு. 07.08.2016 (ஞாயிறு) : காலை : 10 மணி சத்தியமங்கலம் துவக்கம்; முற்பகல் :...

சுற்றுச்சூழல் போராளி பியூஸ் மானுஸ் ஆதரவாக கழகம் சுவரொட்டி

தமிழக அரசே சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மற்றும் இருவர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெறு பியூஸ் மானுஸ் அவர்களை சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய் சம்மந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய் இயற்கையை நாசப்படுத்தும் லாப வெளி பெருமுதலாளிகள், துணை நிற்கும் அரசு, அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம், இயற்கையை பாதுகாப்போம் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம்

கல்வி வள்ளல் காமராசர் 114 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருட்டிணகிரி 24072016

24-7-2016 அன்று மாலை 6-30 மணியளவில், கிருட்டிணகிரி, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பழனி நினைவுமேடையில், கிருட்டிணகிரி நுகர்வோர் சேவை சங்கத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின் 114ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நுகர்வோர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளருமாகிய இராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். நுகர்வோர் சேவை சங்கத்தின் தலைவர் தட்டக்கல் கோவிந்தசாமி, செய்தியாளர் கிருஷ்ணமூர்த்திராவ், சக்தி மனோகரன் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் காமராசரின் கல்வி சேவைகளை, தனது முதல் அமைச்சரவையை பார்ப்பனர் பங்கேற்காத அமைச்சரவையாய் அமைத்த பாங்கினை, அறநிலைய பாதுகாப்பு அமைச்சராகவும்ம், உள்துறை அமைச்சராகவும் தாழ்த்தப்பட்டோரை நியமித்த சமூகநீதி சிந்தனையையும், இந்த்துத்துவ மதவாத வன்முறையாளர்கள் தனது வீட்டுக்குத் தீ வைத்து சூறையாடியபோதும் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றுவதை அனுமதிக்காத துணிச்சலையும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்குரைஞர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்புரையாற்றார்....

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் பெற்றோருக்கு ஆறுதல்

23-7-2016 அன்று இரவு 7-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருலாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செய்லாளர் முகில் ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் மருத்துவர் சரவணின் இல்லம் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்களோடு உரையாடி வந்தனர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின்...

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016

கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே!  காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம் ஈரோடு 24072016

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம். நாள் : 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை. இடம் : பெரியார் JCP சர்வீஸ் சென்டர், சூரம்பட்டி வலசு,ஈரோடு. தலைமை : தோழர் பால்.பிரபாகரன்,பரப்புரை செயலாளர். முன்னிலை : தோழர் ரத்தினசாமி,அமைப்புச் செயலாளர். தோழர் திருப்பூர் துரைசாமி,பொருளாளர். பொருள் : 1) பரப்புரை பயணத்தில் பேசுவதற்கான செய்திகளை திட்டமிடல். 2) மந்திரமா?தந்திரமா? செயல் விளக்கம் குறித்து அறிதல். 3) பயணத்திட்டங்களை வகுத்தல். பரப்புரை பயண திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கழக தோழர்கள் அவசியம் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : பரப்புரை பயணத்தில் பேசுபவர்கள் தாங்கள் பேசவிருக்கும் செய்திகளை தயார் செய்து கொண்டு வரவும். தொடர்புக்கு : 98650113393 – 9842712444

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 23072016 திருப்பூர்

நாளை 23.07.2016 அன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். நாள் : 23.07.2016 சனிக்கிழமை மாலை 4 மணி. இடம் : மாநராட்சி அலுவலகம் முன்பு,திருப்பூர். கண்டன உரை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் துரை.வளவன், மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் கனகசபை, வழக்கறிஞர் அணிச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை. தோழர் சு.மூர்த்தி. ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக்குழு. தோழர் மா.பிரகாசு, மாவட்ட செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை. நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் கழகம்.

எழுச்சியுடன் உருவாகும் விருதுநகர் மாவட்ட திவிக

விருதுநகர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக அறிமுக பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றோடு மாவட்ட பொறுப்பாளர்கள்  நியமித்தல் என்பதற்கேற்ப கழக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி ஆர்வமுடன் மக்களை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்னெடுத்தார்கள். எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம் இந்த தலைமுறைக்கு வேலை வேண்டும் என்ற பரப்புரை துண்டறிக்கையை வைத்து இன்று நிதி திரட்டினார்கள். மேலும் அடுத்த கட்டமாக “நம்பங்க அறிவியல, நம்பாதிங்க சாமியார்கள” என்ற அறிவியல் பரப்புரை பயண துண்டறிக்கையை கொண்டு அடுத்த கட்ட பரப்புரை நிதி சேர்த்து எழச்சியுடன் மாவட்ட திவிக கட்டமைக்க உறுதியேற்றுள்ளார்கள். தோழர்கள்  செயக்குமார், செந்தில், சுந்தர் மற்றும் கணேசமூர்த்தி அனைவருக்கும் வாழ்த்துக்கள்  

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...

சூழலியல் போராளி பியூஷ் கைதுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, ஏஎலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை நிறையில் தாக்கி சித்திரவதை நெய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர செயலாளர் பரமேஸ் உள்ளிட்டோர் சுமார் 300 பேர் கூடியிருந்தனர். சிறையில் பியூஷைச் சந்தித்துவந்திருந்த வழக்குரைஞர்...

திருப்பூரில் பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு 24072016 அழைப்பிதழ்

காலை 10 மணிக்கு பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு மதியம் 2.30 மணிக்கு கௌதம் கோஷ் இன் அந்தர் ஜாலி ஜாத்ரா வங்காள படம் திரையிடல் மாலை 5.30 மணிக்கு நூல்கள் அறிமுகம்  

மாட்டுக் கறி உண்ணும் 3000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள்

  கேட்ச்நியூஸ் என்னும் இணையதள செய்தி சுட்டிக்கு    திசம்பர் 13, 2015 மூன்று நாள் பயணமாக அருணாச்சல பிரதேசம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் அனைத்திந்திய பிரச்சார செயலர் மன்மோகன் வித்யா டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ் பீப் உ உண்ணுவதற்கு எதிராக இருக்கும் தோற்றத்தை போக்குவதற்காக செய்யப்படும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராவதற்கு பீப் உண்ணுவது ஒரு தடையாக இருக்க கூடாது. இங்கே 3000 சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பீப் உணவை எடுத்துகொள்வோர். மேலும் ஆர்.எஸ்.எஸ் பீப் தடைக்கு எவ்விதத்திலும் காரணமில்லையென்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரான இயக்கமென்றும் கூறினார். முத்தாய்ப்பாக மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என்றார். (இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி ஆள்சேர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது நிரூபணமாகிறது)

இந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீரை விட்டு வெளியேறு!

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை. 2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி...