புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா குமரி மந்தாரம் புதூர் 23042017

திராவிடர் விடுதலைக்கழகம், பெரியார் தொழிலாளர் கழகம், குமரி மாவட்டம் சார்பாக அம்பேத்கர், காரல் மார்க்சு பிறந்த நாள் விழா மற்றும் தொழிலாளர் தினவிழா மந்தாரம் புதூரில் நடைப்பெற்றது.

தோழர் பாரூக் வீரவணக்க கொடிக்கம்பம் நடப்பட்டு தோழர் பால்பிரபாகரன் கழகக்கொடியேற்றி வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினார். பொதுக்கூட்டத்தில் தோழர் நீதி அரசர், தலைமையுரையாற்றினார். தோழர் ஜாண் மதி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தமிழ் மதி, ஜாண் முறே ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தோழர் பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்) சாதி ஒழிப்பில் பெரியாரும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பால் பிரபாகன் பேசிய உரையிலிருந்து வினா விடைப் போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் பரிசு ரூ.1000-ம், பெரியார் கோப்பையும் ஆதிராவும், இரண்டாவது பரிசு ரூ.500-ம், பெரியார் கோப்பையும் அனுசிகாவும் பெற்றனர். கைப்பந்து போட்டிகளில் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிக்கொணரும் தோழர் சிவசங்கரி அவர்களைப் பாராட்டி பெரியார் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

பெரியார் புத்தகங்களும் பரிசாக வழங்ப்பட்டது. பள்ளிப்பிள்ளைகள் 10 பேருக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. தோழர் விஸ்ணு நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை தோழர் மணி மேகலை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் தோழர்கள் அன்பரசு, மாசிலா மணி, அனீஸ், சுனில் குமார், இராஜேஸ் குமார், இராஜன், வின்சென்ட், பால் ராசு, சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

img_20170423_174929 img_20170423_175207 img_20170423_175207_1 img_20170423_202307 img_20170423_203106_1 img_20170423_213146

You may also like...