புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 30042017

30042017 அன்று மாலை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டன்பாளையத்தில், பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலைசெய்யப்பட்ட தோழர் கோவை ஃபாரூக்கின் படத்தை தோழர்கள் சஜீனா,மீனாட்சி ஆகியோர் திறந்துவைத்தனர்.

தோழர்கள் முத்துபாண்டி, திருச்செங்கோடு வைரவேல், மாவட்டத் தலைவர் சாமிநாதன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோரைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி நகைச்சுவை பொங்க ஒரு மணி நேரம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் காட்டிய வழியில் பணியாற்றி சமூக விடுதலை பெறுவோம் என்றார்.

இளைஞரணித் தோழர் கா.யுவராசு நன்றி கூற கூடம் நிறைவுற்றது.

img_5437 img_5443 img_5444 img_5449 img_5452 img_5455 img_5458 img_5470 img_5502 img_5504

You may also like...