தோழர் ஃபாரூக் நிதியளிப்பு புதுச்சேரி 08042017

08042017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர்.
நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்றவற்றை விளக்கிப் பேசினார்.
அந்நிகழ்வில் ரூ.1,84,100-00 வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900-00 அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000-00மாக முழுமைப் படுத்தினர்.
img_3928 img_3921 img_3908 img_3891 img_3880 img_3863

You may also like...