Category: திவிக

தோழர் பாரூக் குடும்ப நிதி

தோழர் பாரூக் குடும்ப நிதி

சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு பெருமாள்பிரபாகரன் அவர்கள் பாரூக் குடும்ப நிதியாக 10.000 பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்கள்

தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017

#செய்துவிட்டது_கேரளம் #அறிவித்து_விட்டது_கர்நாடகம் #தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா? ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி. அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத...

வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

திவிக தலைவர் தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் முன்னாள் உதவியாளர், அன்பிற்கினிய தோழர்.கோகுலின் வாழ்க்கை இணையேற்பு அழைப்பிதழ்

திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில்நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவும் 02/10/2017 அன்று காலை 10 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில்நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் பின் கழக கொடியசைத்து தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வாகன ஊர்வலத்தை தொடங்கி...

வடமாநிலத்துக்கு போகிறதாம்  கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

வடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது. சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி...

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ! ஈரோடு 18102017

ஆதித்தமிழர் பேரவை சார்பில்…. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தலைமை : தோழர் அதியமான், நிறுவனத்தலைவர்,ஆதித்தமிழர் பேரவை. நாள் : 18.10.2017 புதன்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : மாநகராட்சி மண்டபம், ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக  தோழர்களை சந்திக்கிறார்கள் !

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்டபயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’,‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம் : 26.10.2017 – காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு – கோபி 27.10.2017 – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017 – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017 – காலை 10.00 -நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர்...

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா சித்தோடு 01102017

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா மிக எழுச்சியாடு நடைபெற்றது.    இக்கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில், தோழர் யாழ் எழிலன் முன்னிலையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் கமலக் கண்ணன் நன்றியுரை கூறினார்.   கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்;   சித்தோடு தோழர்கள்  பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.            ...

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” 05102017

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு.. நாள் : 05.10.2017 வியாழக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : நயனார்பாளையம்,தந்தை பெரியார் பள்ளி முன்பு. சிறப்புரை ; தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்கள் கைது சென்னை 02102017

காந்தி தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது. “தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?” நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது. இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம். “காந்திக்கு ஜே” காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரை 04102017

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரையில் மதவெறி RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி தமிழ் புலிகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை ஆதித்தமிழர் கட்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளந்தமிழகம் புரட்சிகர இளைஞர் கழகம் சிபிஎம்எல் உள்ளிட்ட அமைப்பு தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட ஆனையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம். : மாலை 5.00 மணி. இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம். பொதுக் கூட்டம் : நேரம் : மாலை 6.00 மணி. இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். வே.மதிமாறன், எழுத்தாளர் கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று மனூ – திருச்செங்கோடு 28092017

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 28092017  நாமக்கல் மாவட்டம் சார்பாக, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மணு அளிக்கப்பட்டது  

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 26092017

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட திவிக கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைதுசெய்து சத்திரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர்.. கைதான தோழர்கள் ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்) குமார் (மாவட்ட அமைப்பாளர்) திருமுருகன் (மாநகரத் தலைவர்) சத்தியராஜ் சித்தோடு கிருஷ்ணன் ரங்கம்பாளையம் எழிலன் சித்தோடு.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை செய்ய வலியுறுத்தி கண்டன் ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27092017

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர். சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் தோழர் சி. கோவிந்தராஜ் தலைமை செயற்குழு உறுப்பின் தோழர் அ.சக்திவேல், தோழர் இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் , இந்நிகழ்வில் மேட்டூர் ,ஆர் எஸ் , கேவேரி கிராஸ் , நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் தோழர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார்.

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது கோவை 26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது.. குறிப்பு: அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு...

சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது. போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இரு சக்கர வாகன ஊர்வலம் / கொடியேற்றம் 02102017 திருப்பூர்

தந்தை பெரியார் 139வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா 02102017 காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடியசைத்து பெரியார் சிலை முன்பு துவக்கி வைக்கிறார்.

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வருகின்ற 01.10.2017 ஞாயிறு மாலை 7 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமை : கிருஷ்ண மூர்த்தி(ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்) சிறப்புரை: வீரா கார்த்தி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) கோபி வேலுச்சாமி (தலைமைக் கழக பேச்சாளர்) காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே எனும் மேஜிக் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது..

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

திருப்பூர் மாவட்டம் மாநகரம் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொடியேற்று விழா மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடத்துவது சம்மந்தமாக 24092017 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் நடந்தது. அதில் 02.10.2017 அன்று நடத்த முடிவு செய்து விழா ஏற்பாடுகளை கவனிக்க முடிவெடுக்கப் பட்டது.

கழகம் களமிறங்கியது – அரசு பள்ளியில் கணபதி ஹோமம் – ஈரோடு 25092017

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு “கணபதி ஹோமம்” .. திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிப்பு.. கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மங்கையர்க்கரசி கணபதி ஹோமம் நடத்துவதாக அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் அவர்கள் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.. நிகழ்வில், இரத்தினசாமி,ராம.இளங்கோவன்,சண்முகப்பிரியன்,சிவக்குமார்,வேணுகோபால்,குமார், சத்தியராசு, சி.என்.சி சிவக்குமார், விஜயசங்கர் ஆகியோர் கலந்து...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் 139 –வது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியை சார்ந்த அபிராமிக்கும், சாதிமறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியிட்டு செயலாளர் இராம.இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு நடந்த எளிமையான நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்காண ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக்கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கீழ்வானி இந்திராநகரில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அந்தியூர் ஒன்றியம் கீழ்வானி இந்திராநகரில் அமைக்கப்பட்டு இருந்த கழக கொடிகம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கழக துண்டறிக்கைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் ஆசிரியர் மற்றும் கிளை கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூக நீதி சமத்துவ தெரு முனைக் கூட்டம் சென்னை பரப்புரை பயணக்குழு

23/09/2017   காலை 10.00 மணி   பூந்தமல்லி காலை 11.30 மணி   போரூர் மாலை 03.00 மணி இராமபுரம் மாலை 05.00 மணி  ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை   24/09/2017    காலை 10.00 மணி மேடவாக்கம் காலை 11.30 மணி   பள்ளிக்கரனை மாலை 03.00 மணி   மடிப்பாக்கம் மாலை 05.00 மணி    வேளச்சேரி   25/09/2017  காலை 10.00 மணி    வெட்டுவாங்கேணி காலை 11.30 மணி   பாலவாக்கம் மாலை 03.00 மணி   திருவான்மியூர் குளம் மாலை 05.00 மணி லெட்சுமிபுரம், திருவான்மியூர் (காந்தி சிலை)   26/09/2017    காலை 10.00 மணி அடையாறு (பி.எஸ்.என்.எல் ) காலை 11.30 மணி        டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு மாலை 03.00 மணி    திருவல்லிக்கேணி     வாகன பதிவு எண் TN 48 R 9999  Swaraj Mastha...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 17092017 கடலூர்

இந்த சமுக விடுதலைக்கான ஒரே போராளி எங்கள் அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர்  தோழர் நட.பாரதிதாசன் தலைமையில், தோழர் நட. பாபு அம்பேத்கார் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் சே.சுரேந்தர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன், ஆகியோருடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், போனா, மற்றும் எழுதுபொருட்கள், மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.!!!!! நட.பாரதி தாசன் கடலூர் மாவட்ட செயலாளர்!

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது. தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம் முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க வாழ்த்துரை:வி.பாலு, தலைவர், நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம். நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம் கருத்துரையாளர்கள் : பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன் பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர். சிறப்புரை: தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக. நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம் பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள்,...

அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை 17092017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா…  17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில்  துவங்கியது மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்த தோழர்கள் மருத்துவர் அனிதா, மதவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோர் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தோழர்கள் கருத்துரை நிகழ்த்தினர் கே.எஸ்.கனகராஜ் dyfi மாவட்ட செயலாளர்  சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் ச.பாலமுருகன் பி. யூ. சி. எல் சிறப்புரையாக- தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தோழர் கொளத்தூர் மணி தொடர் மழையிலும் புதியவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் பெரியார் பிஞ்சுகள் திருப்பூர் சங்கீதா அவர்களின் குழந்தைகள் மற்றும் இசைமதி கிருஷ்ணன் சங்கீதா ஆகியோர் பாடல்கள் பாடினார் நிகழ்ச்சியில் திருப்பூர்துரைசாமி, முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜய், கனல்மதி, சூலூர்பன்னீர்செல்வம், விக்னேஷ், லோகு, கணேஷ் கோவை மாநகர தோழர்கள் கலந்துகொண்டனர் இறுதியாக  நன்றியுரை தோழர் நிர்மல் கூறி நிகழ்ச்சியை நிறைவுற்றது மேலும் படங்களுக்கு

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குருவரெட்டியூர்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் திவிக, திக தோழர்கள் இணைந்து பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு வடக்கு

தி.வி க ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக கோபி சத்தி அந்தியூர் நம்பியூர் ஆகிய ஒன்றியங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அய்யா தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாள் விழாவையொட்டி எதிர்வரும் 24.09.2017 அன்று கோபி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொண்டாடப்படவுள்ளது அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் இங்கனம் தி.வி.க ஈரோடு வடக்கு மாவட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்தியூர் ஓன்றியம் சார் பாக தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாள்வினை முன்னிட்டு செப்டம்பர் 17 ந் தேதி காலை கீழ்வானி இந்திரா நகர பகுதியில் கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர்  வேணுகோபால் ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் கழகத்தின் சார் பாக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் மற்றும் கிளை கழகத்...

தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் சேலம் கிழக்கு

சேலம் கிழக்கு மாவட்ட தி.வி.க சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தோழர்கள் இருசக்கர வாகன பேரணியாக சென்று சேலம் மாநகரை சுற்றி 8 இடங்களில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்களுக்கு துண்டறிக்கையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரும்பாலை, தோப்பூர், இளம்பிள்ளை என 8 இடங்களில் கழக கொடி ஏற்றப்பட்டது. அடாத மழையிலும் தோழர்கள் தோய்விற்றி பேரணியில் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். காலையில் அம்மாப்பேட்டை தோழர் செந்தில் தோழர்கள் அனைவருக்கும் அவரது இல்லத்தில் தேனீர், பிஸ்கட் வழங்கினார். தோழர் பிரபு நெத்திமேடு பகுதியில் தோழர்களுக்கு அவரது இல்லத்தில் தயாரித்த கேசரி மற்றும் வடை வழங்கினார். மதியம் இளம்பிள்ளை பகுதி தோழர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்கள்....

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலை 26092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதியின்… தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…. நாள் : 26.09.2017,செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, இடம் : சென்மேரீஸ் பாலம், மயிலாப்பூர் சிறப்புரை : #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர் திவிக #நீதியரசர்_அரிபரந்தாமன் முன்னாள் நீதிபதி, உயர்நீதிமன்றம் சென்னை #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக #தோழர்_தபசி_குமரன் தலைமை நிலையச் செயலாளர், திவிக #தோழர்_அன்பு_தனசேகரன் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக #வழக்கறிஞர்_திருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றம், திவிக #வழக்கறிஞர்_தோழர்_துரை_அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக #தோழர்_இரா_உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர், திவிக #தோழர்_வேழவேந்தன் தென்சென்னை மாவட்ட தலைவர், திவிக #விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் வீதி நாடகம் நடைபெறும். #வாருங்க_தோழர்களே.! #சமூகநீதி_காத்த_தந்தை_பெரியாரின் #கொள்கையை_சூளுரைப்போம்.! #மற்றும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால்பந்து போட்டி… நாள் : 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இடம் : குருபுரம் விளையாட்டு திடல், மயிலாப்பூர். கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பவர் : #மயிலை_த_வேலு மயிலை...

தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷ்அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு… திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக நேற்று (17.09.2017) மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் தோழர்.பெரியார் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தோழர். எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் தொடக்கமாக்க தோழர்.கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் எழுத்தாளர்.கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தை கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நினைவேந்தல் நிகழ்வில் தோழர்.ஜெயநேசன், மனிதி இயக்கத்தின் தோழர்.செல்வி, இளந்தமிழகத்தின் தோழர்.செந்தில், மே17 இயக்கத்தின் தோழர். பிரவீன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுத்தாளர். கவுரி லங்கேஷ் அவர்களின் சமூக நோக்கத்தை குறித்தும், சமூகநீதிக்கான அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத்தோடு மரியாதை செலுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார். அதை தொடர்ந்து இராயப்பேட்டை மற்றும் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி முழக்கத்தோடு மரியாதை செலுத்தப்பட்டது. தண்டையார்பேட்டை பகுதியில் கழக கொடி ஏற்றி, தோழர்.அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கடைசியாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி தோழர்.அனிதா மற்றும் எழுத்தாளர்.தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரை

கலகக்காரனின் 139 பிறந்த நாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இணைந்து பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலையிட்டு நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைகளை தொடங்கினர்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நாமக்கல்

கொட்டித்தீர்த்த மழையிலும் பெரியாரைக் கொண்டாடிய பள்ளிபாளையம் திவிக தோழர்கள் ஊர்வலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் குமாரபாளையத்தில் செய்தி – வைரவேல்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு தெற்கு

தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக,கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்று, தந்தை பெரியாரின் நினைவிடத்தை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.. அடுத்ததாக தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் கழக ஆட்டோவிலும் ஊர்வலமாகச் சென்று ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பங்களில் கொடியேற்றினர். மரப்பாலம் பகுதியில் சத்தியமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். லோகநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் அப்பகுதி தோழர் சித்ரா சுரேஷ் கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார். தோழர் சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார். தோழர் சித்ரா அவர்களின் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது....

பெரியார் பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் குமரி 17092017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு மூவோட்டுக் கோணம் சந்திப்பில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப் பெற்றது. மாவட்டப் பொருளாளர், தோழர்.மஞ்சுகுமார் தலைமைத் தாங்கினார். தோழர்கள்.நீதி அரசர்,தமிழ் மதி ஆகியோர் பெரியார் பற்றிய கருத்துரையாற்றினர். தோழர்கள்.இராஜேஸ் குமார்,அணில் குமார்,ஜெயன்,பெரியார் பிஞ்சு.ஆர்மல்,சஜிக்குமார்,றசல் ராஜ்,சிக்கு,சரத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.