பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு  ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை  முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர்.

பெரியார் முழக்கம் 28062018 இதழ்

You may also like...