Category: திவிக

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை,காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்டம்.அம்மனா குப்பம், குடியேற்றம், மதுரா மஹாலில் தி.மு.க.மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி MP, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அவர்கள் வாழ்விணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினார். கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ச. விஜய்-அம்மு, ஜாதி மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழா 25.8.2019 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடத் தில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மணவிழாவை நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணவிழா மகிழ்வாக ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது....

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

இந்து முன்னணி அமைப்பாளர் கே. பக்தவத்சலம், சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்திலிருந்து அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம், அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார். “பக்தி இலக்கியத்தை பரப்புவோம்; போலி தமிழ் தேசியத்தை வீழ்த்துவோம்” – இதுதான் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள விநாயகன் சிலைகளின் ஊர்வலங்களுக்கான முழக்கமாம். (The theme for this year is ‘Promote divine Tamil and Crack down on fake Tamil identity. – The Hindu Aug.29, 2019) இவர்கள் வீழ்த்தப்போவது தமிழ் தேசியத்தையா அல்லது போலி தமிழ் தேசியத்தையா என்பது இங்கே பிரச்சினையல்ல. இந்த ஊர்வலம் மதத்துக்கான ஊர்வலம் அல்ல; அரசியல் ஊர்வலம். அதுவும் பா.ஜ.க.வின் அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக நடத்தப்படும் ஊர்வலம். ஏதோ ‘விநாயக சதுர்த்தி’க்கான மத ஊர்வலம் போலவும், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமைகளை சட்டப்படி மறுக்க முடியாது என்பது...

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு, தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே என்கிற பரப்புரைப் பயணத்திற்கான சென்னை மாவட்ட குழுவின் துவக்க விழா நிகழ்வு 25.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று இலாயிட்ஸ் சாலை பெரியார் சிலை அருகில் காலை 9 மணிக்கு துவங்கியது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் பயணத்தை துவக்கி வைத்தார். பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் உரையாற்றினார். மே 17 இயக்கத்தினர் பறையிசையோடு துவங்கிய சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் பரப்புரை பயணம் துவங்கியது. முதல் நாளின் இரண்டாம் இடமான பல்லாவரத்தில் தற்போது பரப்புரைப் பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழகத் தோழர் பெரியார் யுவராஜ் பயணத்தின் நோக்கத்தினை குறித்து உரையாற்றினார். தோழர் நாத்திகன் பாடல் மூலம் பிரச்சாரம் செய்தார். முதல் நாளின் மூன்றாவது இடமான அனகாப்புத்தூரில் பரப்புரை பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழக தோழர் எட்வின்_பிரபாகரன்அவர்கள் பிரச்சாரத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். அந்த பகுதியில் இருந்த சிறுவர், சிறுமியர்கள் ஆர்வமாக துண்டறிக்கையை படித்து கேள்வி எழுப்பியது கூடுதல்...

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாளான இன்று (ஆகஸ்டு 30) ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், இலங்கை அரசால் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட 20,000 க்கும் மேலான தமிழர்கள் எங்கே? போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அய்.நா பொதுச்செயலாளருக்கும், அய்.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் வழங்கப்பட்டது. இதில் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம். தபசி குமரன், திவிக தலைமைநிலையச் செயலாளர். உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர் திவிக செந்தில், இளந்தமிழகம் ஆகியோர் சென்று மனுவை அளித்தனர்.

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயணத்தின் திருப்பூர் கோவை அணியின் ஒரே நிகழ்வாக வேட்டை காரன்புதூரில் பொதுக் கூட்டம் 26-8-2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் அரிதாசு தலைமையும் ஒன்றிய தலைவர் அப்பாதுரையும் முன்னிலை வகித்தனர். விழாவில் கழக பொருளாளர் துரைசாமி அவர்களும் செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன் அவர்களும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி அவர்களும் சிறப்புரையாற்றினர் . விழாவில் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பேருரையாற்றினர்.விழாவில் தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழக தலைவர் பெயர் சூட்டினார்.விழாவிற்கு தோழர் சபாகிரி நன்றியுரையாற்றினார். விழாவில் செயற்குழ உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்களும் கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களும் கோவை மாநகரத் தலைவர் நேருதாசு அவர்களும் கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் அவர்களும் ஆனைமலை...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள் 1) பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2) தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3) பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4) 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5) ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். முன்பதிவுக்கு : தபசி குமரன் +919444025408 உமாபதி +917299230363

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு ! மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். – கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 29082019 இதழ்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார்

மூத்த பெரியார் தொண்டர் தா மு அர்த்தநாரி அவர்கள் முடிவெய்தினார் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த இலக்கம்பட்டியைச் சார்ந்த மூத்த பெரியார் தொண்டர் தா.மு.அர்த்தநாரி அவர்கள் இன்று 28.08.2019 காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 74. தந்தை பெரியாரை முதன் முதலில் சந்தித்த 1971 முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர்.அவரது துணைவியார் தோழர் சந்திராவும் அப்போதே பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றியவர். தன் குடும்பத்தையே பெரியாரின் கொள்கை வழியில் வழிகாட்டி நடத்தியவர். தன் குடும்பத்தில் ஜாதி மறுப்பு திருமணத்தை, இயக்கக் குடும்பத்தோடு நடத்தி முன்னுதாரணமாய் வாழ்ந்தவர். 1998-இல் இதயநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யும்வரை, பெரியார் இயக்க மாநாடுகள் எங்கு நடந்தாலும், டெல்லியில் நடந்த மண்டல் கமிஷன் மாநாடு உட்பட துணைவியார் மற்றும் குடும்பத்துடன் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தவர். அவரது மகன் இலக்கம்பட்டி குமார் அவர்களும் திராவிடர் கழகத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் ஆக பணியாற்றியவர்.தற்போது திராவிடர் விடுதலைக் கழகத்தில்...

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598, நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை  செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019  அன்று கோவை  மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம்...

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

தஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர். முதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார். இரண்டாம் நாள் அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா,...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

சென்னையில் சுவரெழுத்து

சென்னையில் சுவரெழுத்து

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம் வரும் ஆகஸ்டு 26 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 5 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில்,  “மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடு” என்று  இராயப்பேட்டை, மைலாப்பூர், எழும்பூர், அடையாறு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் எழுதப்பட்டது. பெரியார் முழக்கம் 22082019 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

பள்ளிப் பாளையம் நிறைவு விழா மாநாட்டில் கிடைக்கும்! நிமிர்வோம் 2018ஆம் ஆண்டு இதழ்களின் தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை: ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 2018ஆம் ஆண்டு தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை : ரூ. 500/- – நிர்வாகி பெரியார் முழக்கம் 22082019 இதழ்

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக்கல்வியா? என்ற தலைப்புடன் மத்திய பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், இரண்டாம் கட்டமாக சென்னையில் ஆகஸ்டு 13, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் ஜெயின், குருநானக், நியூ கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், பச்சையப்பன், எம்.ஜி.ஆர் ஜானகி ஆகிய 6 கல்லூரிகளில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 3000 துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டன.  எட்வின் பிரபாகரன், கார்த்திக் இராசேந்திரன், பிரகாசு, கனி செல்வன், பரத்குமார், தமிழ், பிரவீன், யுவராஜ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர்.  நிகழ்வை யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 22082019 இதழ்

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 17.8.2019 அன்று 105ஆம் அகவையில் முடிவெய்தினார். பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருங்கிய நண்பர் பெரியார் பெருந்தொண்டர் வைத்திலிங்கம், பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். சிங்கப்பூரில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என்று அவரே அடிக்கடி பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்டவர். கவிதைகளை கையெழுத்துப் பிரதிகளாகவே வைத்திருக்கிறார். பேராவூரணி திருக்குறள் பேரவை வைத்திலிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. கழக சார்பில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் மற்றும் ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் வெங்கடேசன், அ. கோவேந்தன்,...

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

புதுச்சேரி திவிக தலைவர் தோழர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

லோகுஅய்யப்பன் உள்ளிட்ட 91 பேர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாண்டிசேரி திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் உ ள்ளிட்ட 91 பேர் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு, போலீசாரை தாக்கியதான வழக்கினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று 22.08.2019 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் வை. இளங்கோவன், ராஜவேலாயுதம் ஆகியோர் ஆஜராயினர். வழக்கறிஞர் துரைசாமியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்திரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி ———– பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா ப.அ. வைத்திலிங்கம் அவர்களின் உடலுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம், ஆயர் த ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், அ.கோவேந்தன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம் ———– பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு  கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்றி ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் குடியேறியது. சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின்...

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே என்கிற முழக்கத்தோடு திராவிடர் விடுதலை கழகம் ஆறுமுனைகளில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு பள்ளிபாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடத்துகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் நகரமெங்கும் செய்யப்பட்டன. தொடர்புக்கு : 7299230363 / 9710301452.

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை விளக்கி இரண்டாம் கட்டமாக 3,000 துண்டறிக்கைகளை கல்லூரிகளில் வழங்கி சென்னை மாவட்ட தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் முதல் நாளான 13/08/2019 2 கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை மாணவர்களிடையே வழங்கி சென்னை மாவட்ட கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை விளக்கி இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் இரண்டாம் நாளான 14/08/2019  நியூ கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று 16/08/2019 கழக தோழர்கள் 1000 துண்டறிக்கையை பச்சையப்பன் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிகளில் வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். தொடர்புக்கு : 7299297825 / 9962190066.

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

மனிதர்களை நாயோடு ஒப்பிட்டு – மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உண்டு என்று அரசியலமைப்பு 14-க்கு எதிராக பேசிய  தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேங்கட கிருஷ்ணனை கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 3.8.2019 அன்று மாநகர  ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடன் தமிழ் புலிகள், மே 17, வனவேங்கைகள் பேரவை, அகில இந்திய மஜ்ஜித் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரை திவிக சார்பில் காமராசர் பிறந்த நாளையொட்டி புதூர் பேருந்து நிலையத்தில் 9.8.19 அன்று மாலை “கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்” மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முரளி (பி.யு.சி.எல்.), பேரறிவாளன் (பொதுச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி), கபீர்நகர் கார்த்தீ, (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), மெய்யப்பன் (மே 17), குமரன், (புரட்சிகர இளைஞர் முன்னணி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), ஆரோக்கிய மேரி, வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் சிறப்புரையாற்றினர்.  பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தானாக முன் வந்து நிதியளித்தனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

மாட்டிறைச்சி குறித்து முகநூல் பதிவிட்டதற்காக இந்து முன்னணியினர் தந்த புகார் அடிப்படையில் கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் குமார், ஜூலை 27இல் செய்து செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கான உயர் பாதுகாப்புப் பிரிவு என்ற கொட்டடியில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டதோடு உணவு பெறும் நேரத்துக்கு மட்டும் வெளியே திறந்து விடப்பட்டார். பெரியார், அம்பேத்கர் நூல்களை உள்ளே படிப்பதற்குக் கொடுத்தபோது, ‘இது ஜாதித் தலைவர்கள் நூல்’ என்று சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆகஸ்டு 7ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிர்மல் கைதானவுடன் வழக்கறிஞர்கள் மலரவன், வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து சட்ட உதவிகளை செய்தனர். பி.யு.சி.எஸ். அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் பால முருகன் பிணை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டார். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம்  திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர். சி. இலக்குவனார், கா....

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

நாத்திக சோதி குருவை, மாவட்ட தலைவர் ரூ. 20,000.00 வேல்முருகன், குருவை. ஒன்றிய செயலாளர் ரூ. 10,000.00 செல்வம், குருவை கிராம நிர்வாக அலுவலர் ரூ. 10,000.00 சரவணன், தரணி காட்டன் மில், காசிபாளையம் ரூ. 25,000.00 பழனிச்சாமி, மருந்தாளுநர், காசிபாளையம் ரூ. 25,000.00 இரா.காளியண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) ரூ. 25,000.00 மருத்துவர் நடராஜன், அசோக் கிருஷ்ணா மருத்துவமனை ரூ. 25,000.00 வேணுகோபால், மாவட்ட செயலாளர் ரூ. 25,000.00 வை. இராமன், குருவை ரூ. 25,000.00 குமார், கட்டிடப் பொறியாளர் ரூ. 25,000.00 கருப்புசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம், சத்தி ரூ. 25,000.00 பழனிச்சாமி, சித்தா மருந்தாளுநர் சத்தி ரூ. 25,000.00 பி.எல். சுந்தரம். முன்னாள் எம்.எல்.ஏ., சத்தி  ரூ. 23,000.00 இராமகிருஷ்ணன், தமிழன் ஸ்டிக்கர்ஸ், சத்தி ரூ. 22,500.00 பாலகிருஷ்ணன் குருசாமி நாயுடு சன்ஸ் ரூ. 22,500.00 இரவிக்குமார், வழக்குரைஞர் ரூ. 22,000.00 சத்தி முத்து தமிழ்நாடு...

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காமராசர் அரங்கில் ஆக. 12 அன்று திருக்குறள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஆரியத்துக்கு எதிரான தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று மாநாடு முரசறைந்தது. ‘தமிழர் மதம் குறள் மதம்; தமிழர் நெறி குறள் நெறி’ என்று பெரியார் முன் வைத்த பண்பாட்டு முழக்கத்தை முன்னெடுப்போம் என்று மாநாடு சூளுரைத்தது. மாநாடு காலை 9.30 மணியளவில் மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையோடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அருகே கூட்டமைப்பின் செயல்பாட் டாளர்கள் அறச்சுடரை ஏற்றினர். கோவை இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் பொழிலன், சோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், இரா. வினோத்குமார் உரையாற்றினர். முனைவர் இளங்குமரனார் மிகச் சிறப்பான தொடக்க உரையாற்றினார். பாவேந்தன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் – பெண்களும் ஆண்களும் பெரியார் சிந்தனைகளை முன் வைத்து உணர்ச்சிபூர்வமாகப்...

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

பா. சின்னமணி (பகுத்தறிவாளர்) ரூ.   2,000.00 க. மதியழகன்     ரூ.   2,000.00 க. இராமசாமி, செம்பாக்குறிச்சி  ரூ.   2,000.00 நாகராசன்   ரூ.   1,000.00 இராமச்சந்திரன், கீழ்க்குப்பம்     ரூ.   1,000.00 புலவர் கு. அண்டிரன்     ரூ.   500.00 கா. அசன்   ரூ.   500.00 ரமேசு (மளிகை)    ரூ.   500.00 அங்கமுத்து ஆசிரியர்    ரூ.   500.00 இரா. சரவணன்    ரூ.   500.00 சு. குழந்தைவேல்  ரூ.   500.00 தேனப்பன் (இரவி)  ரூ.   500.00 சி. நெடுஞ்செழியன் ரூ.   500.00 மைக்கேல் அலம்பளம்    ரூ.   250.00 தண்டபாணி ரூ.   100.00 கருங்குழி தோழர் வெற்றிவேல் வழியாக ந. வெற்றிவேல்    ரூ.   2,600.00 ந. அய்யம்பெருமாள்     ரூ.   2,500.00 சி. ஆசைத்தம்பி, கல்லக்குறிச்சி  ரூ.   2,000.00 மு. அல்லிமுத்து   ரூ.   1,000.00 த. செந்தில்குமார், நகைக்கடை   ரூ.   1,000.00 தகடூர் சம்பத் ரூ.   1,000.00 வி. திருமால் ரூ.   500.00 புலவர் சிலம்பூர்கிழான்   ரூ.   500.00 சி....

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக் கல்வி” என்கிற தலைப்புடன் மத்திய பாஜக வின் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் துண்டறிக்கைகள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டது. 29.07.2019 அன்று சென்னையில், இராணி மேரி, விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் மாணவர் கழகத் தோழர்கள் அருண், பிரவீன், தமிழ்தாசன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மாணவர் கழகத் தோழர்கள், ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கைகளை வழங்கினர். முதல் நாள் 30.07.2019 அன்று, மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பும், பேருந்து நிலையம் முன்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான 31.07.2019, நங்கவள்ளி பேருந்து நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும்...

காமராசர் பிறந்த நாள்:  மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

காமராசர் பிறந்த நாள்: மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த தெருமுனை கூட்டங்களின் நிறைவு நிகழ்வாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பரப்புரை இயக்கங்கள் நடைபெற்றது. 28 .07.2019 அன்று காலை எல்லம்மாள் தங்கும் விடுதி அருகில் நடந்த பரப்புரை நிகழ்விற்கு, மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமை ஏற்று நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோழர்கள் முகில் ராசு மற்றும் யாழ் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்விற்கு அமுல்ராஜ் நன்றி கூறினார். மதியம்  மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வீட்டில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த பரப்புரை கூட்டத்திற்கு  இராமசந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உரையாற்றினார்.  மடத்துக்குளம் மோகன், பொருளாளர் துரைசாமி மற்றும் யாழ் வெள்ளியங்கிரி சிறப்புரையாற்றினர்.  விஷ்ணுபிரசாத் நன்றியுரையாற்றினார். மாலை நிகழ்வில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த, சாலை...

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

இந்த காலத்தில லெ bசைவா-ன்றது எதையுமே சொல்லக் கூடாது மனுசன்ல எல்லாருமே சமம்னு ஒரு வார்த்த  சொல் லிட்டு போயிட்ரா. உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு கெடையாது. அப்டின்னு சொன்னா அதை ஒப்புக் கொள்ள முடியாது. சாஸ்திரம் அதை அங்கீகரிக்கவில்லை. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு உhயசயஉவநசளைவiஉள உண்டு. அப்டின்ரதை சாஸ்திரம், வேதம் சொல்லுகிறது. இதை நான் வெளிப்படையா சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டின்ரா! நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கோ, எனக்கு தெரியாது இது நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்த வெச்சிண்டு  ஒரு விசயத்த சொல்றேன்! நாம் உபயோகப்படுத்துகிற எல்லா பொருட்களிலும் பிறப்பு குணாதிசயத்தை (bசைவா உhயசயஉவநசளைவiஉள) நாம எதிர்பாக்ரோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், நம்முடைய மனிதனில் மட்டும் தான் எல்லாரும் சமம்னு வெளிய வாயால சொல்லிட்டு போயிட்ரோம். இப்ப நான் கேட்கிறேன்? எல்லாரும் சமம், ஒருவனுக்கு பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினாலே எல்லாரும் சமம்னு சொல்பவர்களிடம்...

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.அய்.ஏ.) வரம்பற்ற அதிகாரம் வழங்கி, சிறுபான்மையினர், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஜூலை 27, 2019 மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். “இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பார்ப்பன இந்துத்துவாவை எதிர்த்து களமாடும் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, மீ.த. பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் 08082019 இதழ்

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. “மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி  விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும். அதன் பிறகு ஜாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும்...

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

கழக செயல்பாட்டாளரும், சேலம் மாவட்ட அமைப்பாளருமான பொ.கிருட்டிணன்-கி.லலிதா இணையரின் மகள் கி.தமிழ்ச்செல்வி-ஏ.பிரபு ஆகியோரது இணையேற்பு விழா 13.07.2019 சனி பகல் 11 மணியளவில் வனவாசி ரங்கண்ணா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பழ. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மேச்சேரி தமிழரசன், நங்கவள்ளி அன்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவிற்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 01082019 இதழ்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் – இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் – 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி – பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக்  கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார். பெரியார் முழக்கம் 25072019 இதழ்

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

இதுதான் பெரியார் மண்

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால்...

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி. சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார். இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம்...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர். கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் – கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

ஈரோடு மாவட்டம் (தெற்கு) ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் ரூ. 25,000/- ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு   ரூ. 20,000/- வேணுமெஸ், மேட்டூர்    ரூ. 20,000/- தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்     ரூ. 15,000/- பவானிடெக்ஸ் பெரியார் தொழிற்சங்க உறுப்பினர்கள்     ரூ. 15,000/- காசிபாளையம் வேலுச்சாமி வழியாக  ரூ. 15,000/- டாக்டர் சக்திவேல் (சக்தி மருத்துவமனை)    ரூ. 10,000/- டாக்டர் சுதாகரன் (சுதா மருத்துவமனை)     ரூ. 10,000/- மா. சீனிவாசன் (தமிழ்நாடு பேக்கர்ஸ்) ரூ. 10,000/- பெரியசாமி, குன்னத்தூர்  ரூ. 10,000/- கொடிவேரி ஜெயக்குமார்  ரூ. 10,000/- பெரியார் முழக்கம் 18072019 இதழ்