நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

கழக செயல்பாட்டாளரும், சேலம் மாவட்ட அமைப்பாளருமான பொ.கிருட்டிணன்-கி.லலிதா இணையரின் மகள் கி.தமிழ்ச்செல்வி-ஏ.பிரபு ஆகியோரது இணையேற்பு விழா 13.07.2019 சனி பகல் 11 மணியளவில் வனவாசி ரங்கண்ணா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பழ. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மேச்சேரி தமிழரசன், நங்கவள்ளி அன்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவிற்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 01082019 இதழ்

You may also like...