கிராமம் கிராமமாய் சுழன்று வீசுகிறது பிரச்சார அலை! சேலம் (மேற்கு) மாவட்டத்தின் தீவிர களப் பணிகள்!
சேலம் மேற்கு மாவட்டக் கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. புயலாய்ச் சுழன்று வீசும் மாவட்டக் கழகப் பரப்புரை இயக்கம் பற்றிய தொகுப்பு. கொங்கனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை, முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசின் தமிழின வாழ்வுரிமை விரோதப் போக்கைக் கண்டித்து 26.1.2012 சனிக் கிழமை மாலை 4 மணிக்கு கொங்கனாபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத் திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நங்கவள்ளி கிருட்டிணன், கோகுலக் கண்ணன் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்களும்,பொறுப்பாளர்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். இளம்பிள்ளை வெ....