மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

உலக காதலர் தின நாளில் இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக காதலர்களை கண்டால் நாங்கள் தாலி கட்ட சொல்லுவோம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.  அதனால்  14.02.2018 அன்று தோழர்கள் திராவிடன் பரத் (கொளத்தூர்), கண்ணன், சந்திரசேகர் (நங்கவள்ளி) ஆகியோர் ஒருங்கிணைப்பில் மேட்டூர் அணைப் பூங்காவில் காதலர்கள் வரவேற்பு பதாகையுடன் நின்று பூங்காவிக்கு வந்த காதலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மலர், இனிப்பு மற்றும்  விழிப்புணர்வு துண்டறிக்கை ஆகியவை விநியோகித்தனர். நிகழ்வில் வைரவேல் மாரியப்பன் (நாமக்கல்  மாவட்ட  அமைப்பாளர்), கிருட்டிணன் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்) உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 22022018 இதழ்

You may also like...