Category: பெரியார் முழக்கம்

பெரியார் தாசன் முடிவெய்தினார்

பெரியார் தாசன் முடிவெய்தினார்

பெரியார்-அம்பேத்கர் கருத்துக்களை பல நூறு மேடைகளில் முழங்கிய பெரியாh தாசன், ஆகஸ்டு 18 அன்று இரவு திருவேற்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது வாழக்கையின் பிற்பகுதியில் கொள்கைத் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவரது ‘பெரியாரியல் பரப்பும்’ பணி மகத்தானது. கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு உரித்தாக்குகிறோம்.               – ஆசிரியர் பெரியார் முழக்கம் 22082013 இதழ்

கழக நிர்வாகக் குழு ஈரோட்டில் கூடியது

கழக நிர்வாகக் குழு ஈரோட்டில் கூடியது

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மண்டல அமைப்புச் செயலாளர்களைக் கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் 18.8.2013 அன்று ஈரோட்டில் கூடியது. சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மாவட்டங்களை மய்யமாக வைத்து கிராமம் கிராமமாக நடத்தவிருக்கும் பரப்புரைக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள் பரிசீலிக்கப்பட்டன. எதிர்வரும் செப்டம்பர் 11 முதல் 20 வரை நடக்கும் இந்த கிராமப் பரப்புரை இயக்கம் பழனியில் தொடங்கி திண்டுக்கல்லில் நிறைவடைகிறது. பரப்புரையில் – ஜாதி-தீண்டாமை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழக கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோர் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் உரிமை,  தலைதூக்கி வரும் ஜாதி வெறி சக்திகளை முறியடிக்க – சுயஜாதி எதிர்ப்பாளர்களின் ஒருங்கிணைப்பு, பறிபோகும் தமிழக இயற்கை வளங்கள், பன்னாட்டு சுரண்டல் ஆகிய கருத்துகளை முன் வைத்து பரப்புரை நடத்த முடிவு செய்யப்பட்டது.  பரப்புரையில் மக்களிடையே முன் வைக்கப்படும் முழக்கங்கள்: ஜாதி மறுப்புத்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           14 வயது சிறுமியை சீரழித்த போலி சித்தர் கைது. – செய்தி குற்றச் செயல் புரிந்த சித்தர் – சாமியார்களை போலி என்று செய்தி போடும் பத்திரிகைகள் – குற்றச் செயல் புரிந்த  காஞ்சி ஜெயேந்திரனை மட்டும் போலி சங்கராச்சாரி என்று செய்தி போடாதது ஏன்? ட ‘தலைவா’ திரைப்படம் வெளியிட முடிவு; தலைப் புக்கு கீழே இடம் பெற் றுள்ள ‘தலைமை தாங்கும் நேரம் வந்துவிட்டது’ என்ற பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடர் நீக்கப்படு கிறது!  – செய்தி மகிழ்ச்சி! “தலைமையை பறி கொடுத்த தலைவா! வருக! வருக!” என்று ரசிகர்கள் சுவரொட்டி போட்டுக் கொண்டாடலாம்! ட           எனது மகள் காதலிக்கும் காதலன் நம்பத் தகுந்தவன் அல்ல. – இயக்குநர் சேரன்! நீங்கள் இப்படிக் கூறு கிறீர்கள்; 20 ஆண்டுகள் நீங்கள் வளர்த்த மகளே எனது அப்பா நம்பத் தகுந்தவர் அல்ல என் கிறாரே! ட          ...

திருச்சியில் மன்மோகன் சிங்குக்கு  கழகத்தினர் கறுப்புக் கொடி

திருச்சியில் மன்மோகன் சிங்குக்கு கழகத்தினர் கறுப்புக் கொடி

2.8.2013 அன்று காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செய லாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், திருவாரூர் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நல்லிக்கோட்டை முருகன், நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன், தோழர்கள் பழனி, பொன்னுசாமி, முருகாநந்தம், மணி, குமரேசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து  கொண்டு கைதா யினர். 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.   பெரியார் முழக்கம் 22082013 இதழ்

பெரியாரும்-காமராசரும் பங்கேற்ற விழா

பெரியாரும்-காமராசரும் பங்கேற்ற விழா

காங்கிரசில் பெரியாரோடு இணைந்து பார்ப்பன ரல்லாதார் உரிமைக்குப் போராடியவர் டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு). அவரது பிறந்த நாள் விழா 27.11.1955இல் சென்னை ராஜாஜி ஆலில் நடந்தபோது பெரியார் ஆற்றிய உரை இது. அதே விழாவில் காமராசரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. “நான் அரசியல் தொண்டனல்ல. சமுதாய நலத் தொண்டனாவேன். அதிலும் பெரிதும் தமிழ் மக்கள் நலனுக்கென்றே பாடுபடுபவன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் துணிவேன். காமராசருக்கும் எனக்கும் அரசியல் கருத்துகளில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும், தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய மற்றபடி எனது சுயநலத்தை முன்னிட்டோ, அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது. குடியாத்தம் சட்டசபை தேர்தலில் நான் அவரை ஆதரித்தேன் என்றால், அப்பொழுதும் அவரிடம் சொல்லிவிட்டு அவரை...

சென்னையில் செப். 1 இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நாத்திகர் விழா”

சென்னையில் செப். 1 இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நாத்திகர் விழா”

“சென்னையில் சித்தர்கள், சாமியார்கள் குறி சொல்லும் ஆசாமிகள் யார் யார் என்று காவல்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.” – இப்படி ஒரு செய்தி ‘தினத்தந்தி’ ஏட்டில் (ஆக.19) வெளி வந்துள்ளது. சாமியார்கள் – குறி சொல்வோர் – மந்திரவாதிகள் – சோதிடம் பார்ப்போர் என்பவர்களில் ‘போலி’ என்று எவரும் கிடையாது. அனைவருமே மக்களை ஏமாற்றுகிறவர்கள்தான். மக்கள் இந்த மூடத்தனத்தை நம்பாமல் தடுக்க அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பகுத்தறிவுக் கருத்துகளை, அறிவியல் சிந்தனைகளை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அப்படி அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் பரப்புவது பெரியார் இயக்கங்கள் மட்டும்தான். அரசியல் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையிலும் இந்தக் கருத்துகளைப் பரப்புவதற்கு கடும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறது. காவல்துறை அனுமதி மறுக்கிறது. சாமியார்களிடம், குறி சொல்வோரிடம், ஏமாற வேண்டாம் என்று கூறும்...

பயணத் தொடக்க விழாவில் கொளத்தூர் மணி உரை இடஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதி ஒழிப்பே!

பயணத் தொடக்க விழாவில் கொளத்தூர் மணி உரை இடஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதி ஒழிப்பே!

மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்ம பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை : இப்படி ஒரு பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது இது முதல் முறை அல்ல, தொடர்ச்சியான பல பரப்புரை பயணங்களை நாம் நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இதுவரை நாம் நடத்தியிருக்கிற, நடத்திய பயணங்கள் அனைத்தும் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக என்ற மையப்புள்ளியில் இருந்து தான் இயங்கி கொண்டு இருந்தது. அதையொட்டிதான் பல்வேறு கருத்துக்களை மக்கள் முன்னால் எடுத்துச் சென்று கொண்டு இருந்தோம். மனுசாஸ்திர எரிப்புப் போராட் டத்தின் வழியாக இப்படி பல்வேறு தளங்களில் விளக்கிக் கொண்டிருக்கிறோம். பார்ப்பனியம் நேரடியாய் இல்லை என்றாலும், அதுதான் கருத்தியலை வழங்கி நியாயப்படுத்தி கொண் டிருக்கிற அமைப்பு என்பதால் அது பார்ப் பனீயமாக இருந்தாலும், பார்ப்பனீயத்தின் அரசியல் வடிவமாக இருக்கிற இந்தியா என்கிற அமைப்பாக இருந்தாலும், இந்த பார்ப்பனீயத்தையும்...

தாமினி காதல் வழக்கு: நீதிமன்றம் திரண்டு வந்த கழகத் தோழர்கள்

தாமினி காதல் வழக்கு: நீதிமன்றம் திரண்டு வந்த கழகத் தோழர்கள்

இயக்குனர் சேரன் மகள் தாமினி-சந்துரு காதல் இணையர்களை மிரட்டிப் பிரிக்க இயக்குனர் சேரனுக்குப் பின்னால் திரையுலகமே திரண்டு வந்தது. நீதிமன்ற வளாகத்துக்குள் குவிந்த திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் , மனித சங்கிலி போல் அணி வகுத்து நின்றனர். நீதிமன்ற வளாகத்துக்குள் பின்பற்றப்பட வேண்டிய சட்ட விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இந்த சூழ்நிலையில் சேரன் அணியினரால் அவமானத் துக்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்ட சந்துரு குடும்பத்துக்கும், காதலர்களைப் பிரிக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 50 பேர் ஆகஸ்டு 21 ஆம் தேதி நீதிமன்றம் திரண்டு வந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். பெரியார் முழக்கம் 29082013 இதழ்

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் உயர்நீதிமன்ற நீதிபதியா?

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் உயர்நீதிமன்ற நீதிபதியா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்க பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள 6 பேர் அடங்கிய முதல் பட்டியலில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை இல்லை என்றாலும், பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சதாசிவம் அவர்களும், இந்தக் கருத்தை ஆதரித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்றும் நுழையாத பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். இந்த நிலையில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 6 பேர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளதோடு, இரண்டு பேர் பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். நீதிபதிகள் நியமனங்களை எதிர்த்து வழக்குகள் தொடருவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனர் ஒருவரும் விசுவ இந்து பரிஷத் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று வரும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உயர்நீதிமன்ற...

ஒரு காதல்  திரைக்கதை

ஒரு காதல் திரைக்கதை

காதல் உணர்வுகளை ஊட்டி ஊட்டி, திரைப்படங்களை எடுத்த இயக்குனரின் ‘குடும்ப காதல் காவியம்’ அண்மையில் தமிழகத்தில் மக்கள் மன்றத்தில் நடித்துக் காட்டப்பட்டது. விறுவிறுப்புகள், சோகம், காதல் உணர்வு, திடீர் திருப்பம் என்று அத்தனை அம்சங்களோடும் இதற்கான திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. முதல் காட்சி இயக்குனரின் பேட்டியோடு தொடங்குகிறது. இது ஒரு வித்தியாசமான பேட்டி.  பேட்டி தரும் இயக்குனர் பேச மாட்டார். ஒலி பெருக்கி முன் குமுறி குமுறி அழுது கொண்டே இருப்பார். பத்திரிகை யாளர்கள் கண்களில் கண்ணீரை துடைத்துக்  கொண்டே கேள்வி கேட்பார்கள். இயக்குநர் : அய்யோ, என் மகள் ஒருவனை காதலிக்கிறாள். அந்தக் காதலன் நல்லவனே அல்ல. பத்திரிகையாளர் : அப்படியா? இயக்குனர் : ஆமாம்! ஆமாம். அந்த காதலன் குடும்பமே மோசடிக் குடும்பம். காதலித்து ஏமாற்றும் குடும்பம்! பத்திரிகையாளர் : அதற்கு ஆதாரங்கள் உண்டா? இயக்குனர் : இனிமேல் தான் சேகரிக்கப் போகிறேன். பத்திரிகையாளர் : இது உங்கள்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று கூறியதற்காக சிலரின் மனம் புண்பட்டிருப்பதால், மன்னிப்புக் கோருகிறேன்.                                                       – நீதிபதி கட்ஜு இந்தியாவில் 10 சதவீதம் பேர் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தால் கைதட்டி பாராட்டிருப்பார்கள். ட           தமிழகத்தில் 35 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மணியாச்சி காவல்துறை அதிகாரிக்கு இலங்கையி லிருந்து ‘மர்ம நபர்’ தமிழில் பேசினார்.                – போலீசார் எச்சரிக்கை தொலைபேசியில் பேசிய மர்ம நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்க காவல் துறை எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? அந்த மர்மத்தை காவல் துறை விளக்குமா? ட           தர்மபுரியில் அதிக மதிப் பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த விழாவுக்கு 144 தடை உத்தரவை காரணம் காட்டி, காவல் துறை அனுமதி மறுத்து, மாணவ மாணவிகளை வெளியேற்றியது.                 – செய்தி திருமண மண்டபங்களில் திருமணங் களாவது நடத்தலாமா? ட          ...

கழகத் தலைவர் கொளத்தூர்மணி கேள்வி

கழகத் தலைவர் கொளத்தூர்மணி கேள்வி

சோஷலிசமோ, மதச்சார்பின்மையோ நாட்டில் இருக்கிறதா? மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்ம பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி : இந்த நாட்டை சோஷலிச நாடு என்று இன்றைக்கும் அரசியல் சட்டத்தில் வைத்திருக் கிறார்கள். பேர் என்னவோ பெரிய பேரு ‘சாவரின் செக்யூலர் சோஷலிஸ்ட் டெமாக்டரிக் ரிபப்ளிக்’ (ளுடிஎநசநபைn ளுடிஉயைடளைவ ளுநஉரடயச னுநஅடிஉசயவiஉ சுநயீரடெiஉ) தான் நம்முடையது, இதுல ஒன்று கூட இங்கே இல்லை என்பது வேறு.  உலக வங்கித்தான் ஆணையிடு கிறது. சேவை துறைகளுக்கு செலவு செய்யாதே, மருத்துவம் வேண்டாம், கல்வி வேண்டாம், அதுக்கு எல்லாம் செலவு செய்யாதே, சாவரின் எங்கு இருக்கு? எவனோ முடிவு செய்கிறான். மதச் சார்பின்மை பற்றி பேசவேண்டியதே இல்லை. செக்யூலர் நாடா இது?சேது சமுத்திர திட்டத்தில் ஒரு வழக்கு வந்தது, வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து கேட்கிறது. ஏதோ ராமர்,...

தபோல்கர் மசோதா சட்டமானது

தபோல்கர் மசோதா சட்டமானது

நரபலி, மாயமந்திரம், பேய், பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தடை செய்யவும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் மகாராஷ்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு தபோல்கர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் தயாரித்து அனுப்பிய மசோதா, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பா.ஜ.க., சிவசேனா போன்ற அமைப்புகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்தன. இந்த மசோதாவை தாக்கல்  செய்யாமல் காலம் கடத்தும் மராட்டிய முதல்வர் பிரித்திவிராஜ் சவானை இரண்டு வாரங்கள் முன் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தபோல்கர் கடுமையாக விமர்சித்தார். அவர் உருவாக்கித் தந்த மசோதாவை அவரது வீரமரணத்தின் நினைவாக மராட்டிய அரசு இப்போது சட்டமாக்கியுள்ளது. தபோல்கர் உருவாக்கிய மசேதாவை சட்டாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21 ஆம் நாள் மராட்டிய அமைச்சரவை கூடி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. அவசர சட்டத்தின்...

புனே முடங்கியது

புனே முடங்கியது

தபேல்கர் வீரமரணத்தைத் தொடர்ந்து, புனேயில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைமை பீடம் செயல்படும் பார்ப்பனக் கோட்டையான புனேயில் தபோல்கருக்கு இரங்கல் தெரிவித்து முழு அடைப்பு வெற்றி பெற்றது. அரசுப் பேருந்து ஓடியதைத் தவிர, புனே நகரமே முடங்கிப் போய், பகுத்தறிவாளருக்கு வீரவணக்கம் செலுத்தியது. பார்ப்பனர் எதிர்ப்பு 1972இல் சோஷலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், கிராமங்களில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் ஜாதி வெறிக்கு எதிராக ‘ஒரு கிராமம், ஒரு கிணறு’ இயக்கத்தைத் தொடங்கியது. அதில் தபோல்கர் தீவிரமாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள், உயர்சாதியினர், மதவெறி சக்திகள் கலவரத்தில் இறங்கினர். அதற்கு எதிர்வினையாக மகாராஷ்டிரா முழுதும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் வீறு பெற்றன. இயக்கத்தில் முதல் நபராக களமிறங்கிய தபோல்கர், சதாரா மாவட்டத்தில் ‘இரட்டைக் கிணறு’ தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ‘அம்பேத்கர் நடத்திய மகர் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டமே இதற்கு உந்து...

சாக்கடைக் குழிக்குள் சாவு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சாக்கடைக் குழிக்குள் சாவு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாப்பூரில் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் ஜனார்த் (மாநகராட்சி ஊழியர்). இவர் 27.8.2013 அன்று காலை 10.30 மணியளவில் மயிலாப்பூரில் சாய்பாபா கோவில் அருகே உள்ள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பு எடுக்கும்போது விஷவாயு தாக்கி உயிர் இழந்தார். “மனிதனை மரணக் குழிக்குள் தள்ளும் இந்த இழி தொழிலை நிறுத்த வேண்டும்; எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று மாநகராட்சியை வலியுறுத்தி 28.8.2013 அன்று காலை 10.30 மணிக்கு நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பா.ஜான் (மாவட்டகழகத் தலைவர்) தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மயிலைப் பகுதி செயலாளர் மாரிமுத்து, அமைப்பாளர் மனோகரன், திருவல்லிக்கேணி செயலாளர் அருண்குமார், அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து, அருகிலுள்ள சமூகநலக் கூடத்தில் வைத்தது. பின்னர் மாலை 4 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 05092013 இதழ்

செங்கொடி நினைவு நாளில் மரணதண்டனைக்கு எதிராக கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

செங்கொடி நினைவு நாளில் மரணதண்டனைக்கு எதிராக கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தோழர்  செங்கொடி நினைவு நாளான ஆகஸ்டு 28 அன்று தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசன் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், மாநகர தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கழகப் பொறுப்பாளர்கள் து. ஜெய்ந்த் கிருஷ்ணன், பாலமுரளி, ஆன்ட்ரூஸ், நாகராஜ், பிரதாப், சிலம்பரசன், நேரு தாஸ், பிரசன்னா, சதீஸ், இராஜாமணி, இரத்னபுரி சதீஸ், விக்கி, மகேசு, பிரசாந்த், திருப்பூர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 05092013 இதழ்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தக் கோரி செப்.13 இல் கழகம் ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு முடிவுகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தக் கோரி செப்.13 இல் கழகம் ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழுக் கூட்டம், செப். 2 ஆம் தேதி பகல் 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சங்க கருத்தரங்க மண்டபத்தில் செய லவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் அடுத்த செயல் திட்டங்கள், பரப்புரைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மராட்டியத்தில் மத வெறியர் களால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் வீரமரணத்துக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நாத்திகர் விழா, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொ டர்ந்து தெளி வான தீர்ப்பு கிடைக்காத நிலை யில் அதே நாளில் மேல் முறையீடு செய்து விடுமுறை நாள் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கான முயற்சிகளில் இறங்கி அதில் வெற்றி பெற்று...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           திருநாவலூர் காவல் நிலைய போலீஸ்காரர் ரமேஷ் பாபு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேகுவேரா படத்தை ஒட்டி வைத்ததற்காக காவல் நிலைய ஆய்வாளரால் தண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.          – செய்தி சேகுவேரா படத்துக்கு பதிலாக இவர் ஏதாவது கடவுள் படத்தை ஒட்டியிருந்தால் எந்த நடவடிக்கையும் வந்திருக்காது. அந்தக் கடவுள் படத்தை அகற்றச் சொன்ன ஆய்வாளர் மீது தான் நடவடிக்கை பாய்ந்திருக்கும். இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற நாடாம்! ட           சமூக சீர்திருத்தமும் அறிவியல் விழிப்புணர்வும் சமூகத் தில் நடந்தால் தான் மராட்டியத்தில் நிறைவேற்றப் பட்ட மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் வெற்றி பெற முடியும்.                – ‘இந்து’ ஏடு தலையங்கம் மிக்க மகிழ்ச்சி. இதே கருத்தை தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களுக்கு அரசு தடை போடும்போது ‘இந்து’ ஏடு எழுதாமல் மவுனம் காப்பது தான் நமது பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருக்கிறது! ட           தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான...

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும் உரிமை, நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு உண்டு என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணி சமூகப் பதட்டத்தையும் மத மோதல்களையும் உருவாக்கும் என்று அரசு முன் வைத்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. திராவிடர் விடுதலைக் கழகம் செப்டம்பர் முதல் தேதி மாலை மயிலை அம்பேத்கர் பாலத்திலிருந்து வி.எம். சாலை வரை நாத்திகர் விழாவையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்த காவல்துறையிடம் கேட்டது. மாநகர காவல்துறை ஆணையர் மறுத்து விட்டார். கழக சார்பில் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.கே. சசீதரன் முன் ஆகஸ்டு 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதாடினார். அரசியல் சட்டத்தில் ஒரு குடிமகனுக்கு அடிப்படை கடமையாக அறிவியல் மனப் பான்மையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக்...

தலையங்கம் கோயிலில் முடங்கும்  ‘கல் முதலாளி’களின் தங்கம்!

தலையங்கம் கோயிலில் முடங்கும் ‘கல் முதலாளி’களின் தங்கம்!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிகட்டுவதற்கு கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன் வைப்பதற்கே பலரும் அஞ்சுகிறார்கள். பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணக்கார ‘கல் முதலாளி’களின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தில் கை வைத்தால் பார்ப்பன ஆதிக்கத்தில் கை வைத்ததாகவே பார்ப்பனர்கள் மிரட்டுகிறார்கள். பெட்ரோலியப் பொருட்களுக்கும் தங்கத்துக்கும் இறக்குமதி செய்ய பெருமளவில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் டாலர் பற்றாக்குறையை சமாளிக்க கோயில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை முன் வைக்கப்படுகிறது. முடங்கிக் கிடக்கும் தங்க நகைகளை ரிசர்வ் வங்கி வாங்கி, தங்கக் கட்டிகளாக உருக்கி, இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த யோசனை. உலகிலேயே அதிகமான தங்கக் கட்டிகளை வைத்துள்ள நாடு அமெரிக்கா. இரண்டாவது இந்தியா. அமெரிக்காவின் தங்கம் அரசுக் காப்பகத்தில் அரசு சொத்தாக உள்ளது....

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

திராவிடர் விடுதலை கழக நாத்திகர் விழா- மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணி எழுச்சியோடு பறை இசை முழங்க, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து செப். 1, மாலை 4.30 மணியளவில் பகுத்தறிவு முழக்கங்களுடன் புறப் பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையேற்க, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரணியின் நோக்கத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார். “பகுத்தறிவுப் பரப்புரை நடத்துவதற்கும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்துவதற்கும் சட்டப்படியே உரிமை உண்டு என்பதை நிலை நாட்டி நடத்தப்படுகிறது  இப்பேரணி. மராட்டிய அரசு கொண்டு வந்ததைப்போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கோயிலில் குவிந்து கிடக்கும் தங்கத்தை அரசு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். 500க்கும் மேற்பட்ட பெண், ஆண், இளைஞர்கள்  பகுத்தறிவு...

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

செப்.1 அன்று நடந்த சென்னை நாத்திகர்  பேரணியில் எழுப்பிய முழக்கங்கள். நம்பாதீங்க! நம்பாதீங்க! சாமியார்  கூட்டத்தை நம்பாதீங்க! நாட்டு நடப்ப பாருங்க! ஏமாத்துறான் பாருங்க! நம்பி வந்த பெண்களை கெடுக்கிறானுக பாருங்க! ஏமாத்துறதைப் பாருங்க! ஜெயிலுக்குள்ளே பெயில் கேட்டு கம்பி எண்ணுறான் பாருங்க! நம்பாதீங்க! நம்பாதீங்க! சோதிடத்தை நம்பாதீங்க! நல்ல நேரம் பார்த்து சோதிடத்தை பார்த்து நடத்தி வச்ச கல்லாணம் ரத்து கேட்குது பாருங்க! பொய்யுங்க! பொய்யுங்க! சோதிடம் எல்லாம்  பொய்யுங்க! நல்ல நேரம் கெட்ட நேரம் நல்லவனுக்கு வேணாங்க! ராகு காலம், எமகண்டம் எந்த நாட்டில் இருக்குங்க! பொய்யப்பா! பொய்யப்பா! வாஸ்து சாஸ்திரம் பொய்யப்பா! புயலடிச்சி பூகம்பம் வந்தா வாஸ்து வீடு இடியாதா? வங்கிக் கடன் கட்டாட்டி வாஸ்து வீடு ஏலம் போகாதா? தமிழக அரசே! தமிழக அரசே! தடை செய்! தடை செய்! மூடநம்பிக்கைகளை தடை செய்! சட்டமியற்று சட்டமியற்று! மூடதனத்தை ஒழித்திடவே! சட்டம் இயற்று! சட்டம் இயற்று!...

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.  அதன்படி இனி வரும் காலங்களில் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கோயிலை சுற்றி யுள்ள வளாகத்தில் நாத்திகர்களுக்கும், இந்து சமய வளர்ச்சிக்கு தொடர்பில்லாத கொள்கை உடையவர்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும், மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும், கோயில் மண்ட பங்கள், பக்தி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறதாம். வேதத்தை எதிர்ப்பவர்கள்தான் நாத்தி கர்களே தவிர, கடவுளை எதிர்ப்பவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார், இறந்து போன மூத்த காஞ்சி சங்கராச்சாரி. சார் வாகம், சமணம் என்கிற கடவுள் மறுப்பு சிந்தனைகளும் இந்து மரபில் இருந்திருக் கிறது. வேதத்தை யும் வடமொழியையும் மறுத்த மறைமலையடிகள் போன்ற சைவர்களும் சங்கராச்சாரி கூற்றுப்படி நாத்திகர்கள் தான். அதேபோல் ‘இந்து’க்களில் பெரும் பாலோர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள். பல கிராமக்...

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம்: பகுத்தறிவு கொள்கைகளுக்காக மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர், மதத் தீவிரவாதி களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த இரண்டு வாரங் களுக்குள்ளேயே அசாம் மாநிலத்தில் கோச்ராஜ்கர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் அக்கிராம மக்கள் பேய், பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகித்து இரண்டு பேரை கொலை செய்து விட்டனர். தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டதால், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரும் கட்டா யத்துக்கு மகாராஷ்டிர அரசு உள்ளானது. அதுபோலவே அசாம் முதல்வர் தருண் கோகோயும் பேய்-பில்லி சூன்யத்தை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும், இதுபோன்ற குற்றம் அசாம் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை. சமு தாயத்தில் பரவியுள்ள இந்த மூடநம்பிக்கை நோயை ஒழிக்க, மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசே, ஒரு மாதிரி சட்டத்தை தயாரிக்க வேண்டும். ‘பேய் பில்லி சூன்யம்’ வைத்தவர்கள் என்று முத்திரை குத்தி,...

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும்  பார்ப்பன அலறலும்!

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும் பார்ப்பன அலறலும்!

கேரளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன், பத்மநாபசாமி உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான தங்கம் முடங்கிக் கிடக்கிறது. நாட்டின் அன்னிய செலாவணிக்கு பதிலாக தங்கத்தின் கையிருப்பைக் காட்டினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீறும் வாய்ப்புகள் உண்டு என்ற நிலையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கியின் கணக்கில்  கொண்டு வர முடியும். அந்தத் தங்கத்தை ஒரு சில வருடங்களில் மீண்டும் கோயிலுக்கு எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தைவிட கோயில்களில் ‘கடவுள்களிடம்’ முடங்கிக் கிடக்கும் தங்கத்தில் கை வைக்கக் கூடாது என்று பார்ப்பன சக்திகள் அலறுகின்றன. அண்மையில் இந்தியன் ரிசர்வ் வங்கி கேரளாவிலுள்ள கோயில்களில் தங்கத்தின் இருப்பு குறித்த விவரத்தைக் கேட்டு கடிதம் எழுதியது. உடனே பார்ப்பன அமைப்புகள் அலறத் தொடங்கிவிட்டன. ஒரு கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கும் உரிமைகூட இல்லை என்கிறார்கள்.  கடிதத்துக்கு பதிலே எழுதக் கூடாது என்று குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தை சில இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாம். திருவாங்கூர் தேவஸ்தானமும்,...

செப். 17 – தமிழினத்தின்  மான மீட்பு நாள்!

செப். 17 – தமிழினத்தின் மான மீட்பு நாள்!

நாடாளுமன்றத்துக்கே போகாமல் அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்த வைத்து, கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்த தலைவர் – பெரியார் 10 வயது பார்ப்பன சிறுவன் – 60 வயது, 70 வயது பார்ப்பனரல்லாத மக்களை ‘அவன்’, ‘இவன்’, ‘அவள்-இவள்’ என்று நாக் கூசாமல் அழைத்து வந்த அவமானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் – பெரியார் தமிழ்நாட்டில் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதில்லை. வேறு மாநிலங்களில் ஜாதி ஒழிப்புப் பேசும் புரட்சி இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் போடுவதையே வழக்கமாக்கியிருந்த தமிழகத்தில் ஜாதிப் பெயரை வெட்டி எறிய வைத்தது – பெரியார் பார்ப்பான் மந்திரம் ஓதி, பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தி வந்த புரோகித திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி அதை சட்டமாக்கச் செய்தவர் – பெரியார் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எழுத்து...

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திவாலாகிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதார சீர்கேடுகளைக் கண்டித்தும் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி யும் திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டங்களை செப்.13 ஆம் தேதி நடத்துகிறது. இது குறித்து கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கை: நோயைப் பரப்பியவர்களே, இப்போது நோய்க்கு சிகிச்சை தேடுகிறார்கள்! உலகமயமாக்கல் – புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்தது யார்? நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளின் நிலைக்கு உயர்த்தப் போகிறோம் என்று ‘டமாரம்’ அடித்தது யார்? காங்கிரஸ் ஆட்சிதான். ஆமாம்; ஆமாம்; நாங்களும் அதைத்தான் ஆதரிக்கிறோம் என்று பின் தொடர்ந்ததும் பா.ஜ.க. ஆட்சிதான்! என்ன நடந்தது? உள்நாட்டு தொழில் வளர்ச்சி முடங்கியது. விவசாயம் நசிந்துப் போனது. பெட்ரோல், டீசல் விலை – வாரந்தோறும் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. அரசுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அடி மாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவச்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான். வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!  குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?  குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது...

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

மக்கள் பிரதிகளின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டு பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கம் கொள்கைகளை நிர்ணயித்து அமுல்படுத்தி வருகிறது என்று மயிலாடுதுறையில் ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்மப் பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். அவரது உரை: சுயமரியாதை, அந்த சொற்களுக்குள் அடங்கி இருக்கிற பொருள் ஒரு சமூகம், அந்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதன் தன்மானம் உள்ள மனிதனாக, சுயமரியாதை உள்ள மனிதனாக, வாழ்ந்தால் அவன் ஒரு மனிதன் என்பதற்கான அடையாளம். அந்த சுயமரியாதை அடையாளத்தை இந்த சமூகத்திற்கு குறிப்பாக இந்த பார்ப்பனர் அல்லாத சமூகத்திற்கு மீட்டு தருவதற்காக வந்த இயக்கம் தான் பெரியார் இயக்கம்.  1932ம் ஆண்டு பெரியார் தன்னுடைய சுயமரியாதை கொள்கைகளோடு சமதர்ம கொள்கை களையும், இணைத்து சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை ஈரோடு நகரத்திலே வகுத்தார்கள். அதாவது சுயமரியாதை கொள்கை களோடு பொதுவுடமை கொள்கைகளையும், இணைக்கின்ற சமூக அரசியல்...

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

15.9.2013 ஞாயிறு அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சுற்றுச் சூழலை நதி நீரை மாசுபடுத்தும், இரசாயன வினாயகன் சிலை ஊர்வலங்களை தடை செய், கோயிலில் இருக்க வேண்டிய சிலையை வீதிகளில் அனுமதிக்காதே, தமிழகத்தை மதக்கலவர பூமியாக்காதே என்ற முழக்கங்களுடன் வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் காவல் நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட பொருப்பாளர்கள் பா.ஜான், வேழவேந்தன், ஆ.வேலு, ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, சுனில், அருள்தாசு, காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் டேவிட் பெரியார், தினேஷ், சேகர், திருவல்லிக்கேணி பொருப்பாளர்கள் பிரகாசு, அருண், செந்தில், விழுப்புரம் அய்யனார், தமிழ்ச் செல்வி, ஜெயந்தி, அம்பிகா, புனிதா, உஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி திருவல்லிக்கேணி சமுக நலக்...

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

“கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்; உள்நாட்டு தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஈரோட்டில் கைது ஈரோடு மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பு 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங் கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஏற்கனவே காவல்துறையினரிடம் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் விநாயகன் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின் பரிசீலிப்பதாக காவல்துறையினர் கூறி யிருந்தனர். ஆனால், விநாயகன் ஊர்வலம் முடிந்த பின்பும் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “கோவில்...

இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

திருப்பதி லட்டும் பார்ப்பனியமும்

நாளொன்றுக்கு இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் ஏழுமலையான் ‘சமையலறையில்’ நுழைந்து லட்டு தயாரிக்கும் உரிமை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் உரிமை கோருகிறார்கள். ஏனைய பார்ப்பனரல்லாத ஜாதி – அவர் தேவஸ்தான தலைவராகவோ அமைச்சராகவோ இருந்தால்கூட, ‘மடப்பள்ளி’க்குள் (சமையலறை) நுழைய முடியாது. அண்மையில் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம்’ என்ற மத்திய அரசு நிறுவனம், சென்னையில் உள்ள உணவு தயாரிப்புக்கான உரிமம் வழங்கும் ஆணையகத்துக்கு ஒரு தாக்கீது அனுப்பியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாகிய ‘லட்டு’ ஒரு உணவுப் பொருள் என்பதால் அது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த உணவுப் பொருளை தயாரிக்கும் சமையலறை உணவுப் பாதுகாப்புக்கான விதிகளின் கீழ் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது சட்டப்படியான நடைமுறை. எனவே பொது சமையலறைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளதா? உணவுப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியது. ஆனால், திருப்பதி...

கவுசல்யா – திவ்யாவின் உருக்கமான சந்திப்பு

தர்மபுரியில் திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண், இளவரசன் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து, இளவரசனின் குடும்பத்தோடு வாழ்ந்தபோது, ஜாதி வெறி சக்திகள் கலவரம் செய்து கட்டாயப்படுத்தி இந்த இணையர்களைப் பிரித்தனர். இறுதியில் தலித் இளைஞர் இளவரசன், இரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண், வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்துவிட்டு கடும் மன அழுத்தத்தில் சமுக – ஜாதியப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார். இதே கொடுமைதான் உடுமலை சவுசல்யா என்ற பொறியியல் பட்டத்தாரிப் பெண்ணுக்கும் நிகழ்ந்தது. தன்னுடன் படித்த சங்கர் என்ற தலித் பொறியாளர் மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதால், சங்கரை உடுமலைப்பேட்டையில் கவுசல்யா கண் முன்பே வெட்டி சாய்த்தார்கள். கவுசல்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்ணின் பெற்றோர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஜாதி வெறி பிடித்த தனது பெற்றோர்களை...

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து பயிலரங்கம்: பகுதி மக்கள் பேராதரவு 15.4.2017 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மந்தைவெளி செயின்ட்மேரீஸ் சாலையில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமுதாய நலக் கூடத்தில் மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முயற்சியால் சுயமரியாதைக் கல்விக் கழகம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கி, 10, ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பு களுக்கான  பயிலரங்கம் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் மாணவ மாணவியர் 70 பேர், அவர்களுடைய பெற்றோர் மற்றும் கழகத் தோழர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் வகுப்புகள் நடத்த ம. வீரபாகு, (வருமான வரித் துறை அதிகாரி, தலைவர், கூட்டுறவு சங்கம்), கோ. குணவதி (தலைவர், வருமானவரி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்கம்), கு. தனசேகர் (வருமானவரி ஆய்வாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர் ஆ. சிவக்குமார் தலைமை தாங்கினார். கோ. குணவதி,...

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை  மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது. காவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை...

ஃபாரூக் நினைவேந்தல்: உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்

மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளர் என்பதற்காக மார்ச் 16 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக். ஃபாரூக் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 16.4.2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் திரண் டிருந்தனர். 4.30 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பிய நிலையில் பலரும் நின்றுகொண்டே கருத்துகளைக் கேட்டனர். நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் செய்தி யாளர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார். பேட்டியில் – “இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நாங்கள் போராடினோம். இப்போது அந்தக் கோரிக்கையை காவல் துறை ஏற்று காவல்துறை இயக்குனர் ‘சி.பி.சி.ஐ.டி.’ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற் கிறோம். அதே  நேரத்தில் இந்த வழக்கின் பின்னணி –...

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

ஆத்தூரில் அம்பேத்கர் 126 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார்-அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில்  பெரியார் – அம்பேத்கர்  வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப் பட்டது. படிப்பகத்தை (வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரி யர் முருகேசன், பேராசிரியர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர். அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் விழா காலை 8 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை...

‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்

4.4.2017 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தோழர் பாரூக் படுகொலை கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும், இஸ்லாமிய...

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

இளம்பிள்ளையில் கழகப் பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 07.04.2017 வெள்ளிக்கிழமை அன்று இரவு 6-00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக்குழுவின் பறை ஜாதிக்கான இசை அல்ல பறை தமிழரின் இசை என்ற முழக்கத்தோடு பறை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நிமிர்வு கலைக்குழுவினர் பறைக்கேற்றவாறு பரதம் ஆடி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து நகர தலைவர் சி.தனசேகரன் தலைமையேற்க,  முருங்கப்பட்டி ரமேசு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. நகர செய்தி தொடர்பாளர்  சி.மோகன்ராஜ் பெரியார் தொண்டர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி குறித்தும் அதை விளக்கியும் உரையாற்ற அவரைத் தொடர்ந்து கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். சக்தி பெரியாரியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் உரையாற்றினார். இவர்களைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் சாக்கோட்டை மு.இளங்கோவன், இம்மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  இழிவையும், அடிமைத்தனத்தை யும் ஒழிக்க...

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் – ஜாதி உணர்வுதான்!

இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர். நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து...

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது...

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் முனைவர் சு. சேதுராமன்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா? இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சுக் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்....

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

கழக உறுப்பினர்களிடம் மாதக் கட்டணம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ஏப்.2ஆம் தேதி மாலை 7 மணியளவில் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி கலந்துரையாடலை ஒருங்கிணைத் தார். தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் சென்னை மாவட்டக் கழக செயல்பாடுகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களை பரப்பும் இயக்கம், பரப்புரைக் கூட்டங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் – இந்து மத எதிர்ப்பு – ஜாதி ஒழிப்புக்காக நடத்திய விவாதங்கள் குறித்து வடசென்னையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவெய்திய கழகத் தோழர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு மாவட்ட கழக சார்பில் ரூ.20,000/- நிதி வழங்கப்பட்டது.  40க்கும் மேற்பட்ட தோழர்கள்...

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானா லும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன...

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.