புல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!
ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன்தொகையில் திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திட்டப்பணிகளே இன்னும் துவங்கப்படாத சூழலில் கடன்மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ‘இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம்’ என்றும் இத்திட்டத்தை அவர் அழைத்தார். மேலும், குஜராத் தேர்தலையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியா போன்ற...
