அமேசான் காடுகளுக்கு தீ வைத்த பிரேசில் அதிபர் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராம்
இந்தியாவின் 71ஆவது குடியரசுத்தின விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக, ஒரு தீவிர வலதுசாரியும், கடைந்தெடுத்த பிற்போக்காளருமான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை அழைத்து வந்தது மோடி அரசு . பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 11ஆவது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு இடையே பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுத்தான், 71ஆவது ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஜெய்ர் போல்சானரோ தில்லிக்கு வந்துள்ளார். பிரதமர் மோடி போகிற போக்கில், இந்த அழைப்பை விடுத்ததாக பார்க்க முடியாது. ஆர்எஸ்எஸ். பாஜகவின் சனாதன சித்தாந்தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போல்சானரோ. ஆர்எஸ்எஸ். – பாஜகவைப் போல, பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், விளிம்புநிலையினர், அகதிகள் என – இவர்கள் யாரையுமே பிரேசில் ஜனாதிபதி போல்சானரோவுக்கு ஆகாது. “உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன்....
