Author: admin

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார். பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார்.  சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார்.  மேடை...

கோவை இராமகிருட்டிணனை வழக்கிலிருந்து விடுவிக்க சுயமரியாதைப் பிச்சார நிறுவனம் ஒப்புதல் ‘குடிஅரசு’ வழக்கு விசாரணை தொடங்கியது

கோவை இராமகிருட்டிணனை வழக்கிலிருந்து விடுவிக்க சுயமரியாதைப் பிச்சார நிறுவனம் ஒப்புதல் ‘குடிஅரசு’ வழக்கு விசாரணை தொடங்கியது

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக குடிஅரசு தொகுதிகள் வெளியிட்டதற்கு எதிராக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி வீரமணி அவர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் 03.01.2020 அன்று சாட்சி  விசாரணைப் பதிவு ஆயளவநச ஊடிரசவ இல் நடைபெற்றது. இவ்வழக்கில் ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் தான் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்தது. அதன் தலைவர்  என்ற அடிப்படையில்  கொளத்தூர் மணி மற்றொரு பிரதிவாதியாக கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் சேர்க்கப் பட்டிருந்தனர்.  இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்த கோவை. கு. இராமகிருட்டிணன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான வழக்கினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி திரும்பப் பெற ஒப்புக் கொண்டார். அதன் காரணமாக   கோவை இராமகிருட்டிணன் இந்த வழக்கிலிருந்து 20.10.2019 அன்று விடுவிக்கப்பட்டு விட்டார். எனவே தற்போது கொளத்தூர் மணி மட்டும் இவ்வழக்கில் பிரதிவாதியாக  இருக்கிறார். பெரியார்...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (2) குடியுரிமைச் சட்டங்கள்: மோடியின் பொய்யுரைகள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (2) குடியுரிமைச் சட்டங்கள்: மோடியின் பொய்யுரைகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) முதன் முதலாக இந்த குடியுரிமைச் சட்டம் எப்போது உருவானது? அரசியல் சட்டம் வந்த போது இந்த குடியுரிமை சட்டம் உருவாகவில்லை. குடியுரிமை சட்டங்கள் பற்றி விவாதங்கள் நடந்தன. அம்பேத்கர் அப்போது சொன்னார், ‘ எதிர்காலத்தில் நாடாளுமன்றம் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த அரசியல் நிர்ணய சபை அதிகாரத்தை வழங்குகிறது. நாடாளுமன்றம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். குடிமக்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என்று அம்பேத்கர் கூறினார். அதன் பிறகு 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வருகிறது....

காந்தி கொலையுண்ட படங்கள் நினைவிடத்திலிருந்து அகற்றம்

காந்தி கொலையுண்ட படங்கள் நினைவிடத்திலிருந்து அகற்றம்

காந்தி 1948ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு உடனடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அகற்றியதாக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்தார். தேசத் தந்தை குறித்த நினைவகமான காந்தி நினைவகத்திலிருந்து காந்தி சுடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டது குறித்து துஷார் காந்தி அரசைக் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் அவர், “அதிர்ச்சியடைந்தேன்! ஹென்றி கார்ட்டியர் பிரெஸானின் காந்தி கொலையுண்ட பிறகான புகைப்படங்கள் காந்தி நினைவகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பிரதான் சேவக்கின் உத்தரவின் பேரில் இந்த முக்கியப் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. காந்தியைக் கொன்றவர்கள் வரலாற்று ஆதாரத்தை அழிக்கின்றனர். ஹே ராம்!” என்று ட்வீட் செய்து வேதனை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி தன்னை ‘பிரதான் சேவக்’ என்று அழைத்துக் கொண்டதையே துஷார் காந்தி தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காந்தி ஸ்மிருதியின் தலைவர் பிரதமர்தான், இதுவும் தர்ஷன் சமிதியும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். இன்னொரு ட்வீட்டில் துஷார் காந்தி இந்தியில்...

நாட்டின் பொருளாதார மந்தம் சாதாரணமானது அல்ல… அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார மந்தம் சாதாரணமானது அல்ல… அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் எச்சரிக்கை

இன்று நாடு எதிர்கொள்ளும் நிலையானது, ‘ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல’என்று மத்திய அரசின்முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிர  மணியன் எச்சரிக்கை செய்துள்ளார்.அரவிந்த் சுப்பிரமணியன், பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய அலுவலக முன்னாள்தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து கட்டுரை ஒன்றை கடந்தவாரம் வெளியிட்டிருந்தார்.அதில், “வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கிறது” என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே, ‘இந்தியாவில் நிலவுவது சாதாரணமான பொருளாதார மந்த நிலை அல்ல!’ என்று மீண்டும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரவிந்த் சுப்பிரமணியன், பேட்டி அளித்துள்ளார். அதில், மேலும்அவர் கூறியிருப்பதாவது:2011 மற்றும் 2016-க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவிகித புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளன.ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களின் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள்- ஆகிய நாட்டு வளர்ச்சியின் வெளிப்பாட்டை குறிப்பிடும்...

38 சதவீத மக்களிடம் பிறப்புச் சான்றிதழே இல்லை

38 சதவீத மக்களிடம் பிறப்புச் சான்றிதழே இல்லை

நடுவண் அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டங்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. குடியுரிமை அற்றவர்கள் என மத சிறுபான்மை யினர்களை பிரித்து அவர்களை என்ன செய்யப்போகிறார்களோ என்ற அச்சமே இத்தகைய கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழுந்தைகளில் 38 சதவீத குழந்தைகளிடம் பிறப்புச் சான்றிதழே கிடையாது என்பது அரசு புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. கடைசியாக வெளியான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை-4இன் படி 2015-16ஆம் ஆண்டு கணக்கின் அடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட 62.3ரூ  குழந்தைகளிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பிறந்த இடம், பிறந்த தேதியை உறுதிசெய்யும் ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் இருக்காது, பள்ளிக்கல்வி சான்றுகளும் இருக்காது....

‘இந்து’ விரோதி யார்? : சங்பரிவாரங்கள் பதில் சொல்லட்டும்

‘இந்து’ விரோதி யார்? : சங்பரிவாரங்கள் பதில் சொல்லட்டும்

பெரியாரும் பெரியார் இயக்கமும் இந்துக் கடவுள்களை ‘புண்படுத்துகிறார்கள்’ என்று பார்ப்பனர்கள், சங் பரிவாரங்கள் ஓயாது கூக்குரலிடுவது வழக்கமாகி விட்டது. அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்கிறோம். “பாரத தேசம் இந்துக்கள் தேசம்; இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் குழந்தைகள்; நாம் துவக்கமே இல்லாதவர்கள்; நமது மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை” – இதுதான் சங்பரிவாரங் களின் ‘இலட்சியம்’; ‘கொள்கை’. இது உண்மை என்றால் நமது இந்துக் கடவுள்கள் ஏன் மண்ணின் குழந்தைகளான சக இந்துக்களைக் கொல்ல வேண்டும்? ‘இந்து’க்களை அவதாரம் எடுத்து வந்து ஏன் அழிக்க வேண்டும்? இராமன் – இராவணனை அழிக்கவே அவதாரம் எடுத்தான் என்கிறார்கள்! இராவணன் – சங்பரிவார் கொள்கைப்படி – இந்த மண்ணின் குழந்தையான இந்து தானே? இராமன் தன்னுடைய அரசாட்சியில் ‘சம்பூகன்’ என்ற ‘இந்து’ சூத்திரன், ‘பிராமணர்’களைப் புறக்கணித்து நேரடியாகவே கடவுளை வணங்கினான் என்பதற்காக ‘சம்பூகனை’ வெட்டி மரணதண்டனை வழங்கியதாக வால்மீகி...

ரஜினிகாந்த் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையங்களில் கழகம் புகார்

ரஜினிகாந்த் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையங்களில் கழகம் புகார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2020 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கழகத்தின் சார்பாக வழக்கு பதிய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அவை பின்வருமாறு: சேலம் மாவட்டத்தில், ஏற்காடு, ஆத்தூர், சேலம் டவுன் (அன்னதானப்பட்டி), சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காக்காபாளையம், சங்ககிரி, எடப்பாடி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், ஓமலூர் மேச்சேரி, நங்கவள்ளி, கருமலைக்கூடல், மேட்டூர், கொளத்தூர் உட்பட 15 காவல் நிலையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும், கோவையில் காட்டூர், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி, ஈரோடு, அம்மாபேட்டை, பவானி, திருச்சி, கும்பகோணம்,  உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பழனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காஞ்சிபுரம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மயிலாடுதுறை, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தென்காசி பாவூர் சத்திரம் ஆகிய 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் மனு...

‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ ரஜினியின் ஆணவப் பேட்டி

‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ ரஜினியின் ஆணவப் பேட்டி

பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று ஆணவத்துடன் பேட்டி அளித்துள்ளார். ஆன்மிக அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது. பார்ப் பனர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை மேடைகளில் உளறிக் கொண்டிருக்கிறார். ‘துக்ளக்’ பத்திரிகையை கையில் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றார். அது அக்கிரகாரத்துக்காரர்களுக்கான அடையாள அட்டையே தவிர, அறிவாளிகளுக்கான அடை யாளம் அல்ல. ஆனாலும் அக்கிரகாரவாசிகள் சொல்லித் தருவதை அப்படியே வாந்தி எடுக்கிறார். ‘துக்ளக்’ ஏட்டின் பெருமையைப் பறைசாற்ற சில சம்பவங்களைப் பட்டியலிட்டார் ரஜினி. 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், “ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி, சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு கொண்டு வரப் பட்டது; அந்தப் படத்தை சோ ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியிட்டார். அதனால் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்த பத்திரிகைக்குத் தடை போட்டார். இந்தியா முழுவதும் சோ...

மணமகள் தேவை

மணமகள் தேவை

பெயர் : ஆ.லட்சுமணன் படிப்பு : B.Sc (psychology) வேலை: Medical Representative (மருந்து விற்பனை பிரிவு) பிறந்த நாள்: 3.01.1985 ஊர் : கோபிசெட்டிபாளையம் வருமானம் : 27000/- ஜாதி மதம் தடையில்லை, +2 அல்லது ஒரு டிகிரி முடித்த பெண் தேவை… தொடர்புக்கு :  9788282126 பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மும்முனை சந்திப்பில்  08.01.2020 அன்று 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடந்தது. கார்மேகம்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கல்லை மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  குமார், அன்பு, துளசிராசா, வீரமணி, சங்கர், கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நாராயண குப்பம் இராசா உள்ளிட்ட முப்பதிற்கும் மேலான கழகத்  தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு…

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு…

பேரணிகளில் பிடித்துச்  செல்வதற்கு ஏதுவான திராவிடர் விடுதலைக் கழகக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9841653200 கொடி அளவு : 4 அடி உயரம் 1.5 அடி அகலம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஒரு கொடியின் விலை: ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்) பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

05.01.2020 அன்று காலை 11 மணியளவில்  கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில்  இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு  சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16012020 இதழ்

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு...

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரசினிகாந்த் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் . நீதிமன்ற படிக்கட்டுகள் சில நேரங்களில் மிக நீண்டதாகவும் நெடியதாகவும் இருக்கிறது . எவ்வளவு தூரமாக இருந்தாலும் இலக்கை அடையும் வரை நம்முடைய பயணம் தொடரும். மீண்டும் வழக்கு தொடர கழக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் ஆகவே நீதிக்கான போராட்டம் தொடரும் . துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார். “சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 12ஆவது சந்திப்பு 04.01.2020 அன்று  மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்’ நூலை ஆய்வு செய்து, இமானுவேல் துரையும், ‘ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வதந்திகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரனும் கருத்துரை வழங்கினர்.  CAA மற்றும் NRC குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  விரிவாக சிறப்புரையாற்றினார். இறுதியாக இசை இனியாழ் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்றார். சென்னையைச் சார்ந்த தோழர்கள் அறிவுமதி, ஆதவன், தமிழன்பன், வினோத் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

குடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

குடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை இந்திய நாட்டிற்கு தேவையற்ற வீணான முயிற்சிகள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 106 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வியாழக்கிழமை யன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில், இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்புக்கு உறுதியளித்த, அகில இந்திய மற்றும் மத்திய சேவைகளின் முன்னாள் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு நடத்தைக் குழுவான நாங்கள், ‘சிஏஏ-என்ஆர்சி- என்பிஆர்’ ஆகிய மூன்று பிரச்சனைகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை என்று உங்களுக்குத் தெரிவிப்பதை எங்களின் கடமையாக கருதுகிறோம். என்பிஆர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான விவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்த நடவடிக்கைகளை ஏன், உறுதியாக எதிர்க்க வேண்டும் என்பதையும் விளக்க விரும்புகிறோம். சிஏஏ விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடி தன்மை குறித்து, எங்களுக்குபெரும் அவநம்பிக்கை உள்ளது. அவை தார்மீக ரீதியாக மறுக்க முடியாதவை என்றும் நாங்கள் கருதுகிறோம்....

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

உ.பி. மாநிலத்தில் கோயில் ஒன்றில் ஒருவர் இராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் என்பதற்காக பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டது. ராமன் வேடம்போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்ற ‘தன்மான’ப் பிரச்சினைக்காக இவர்கள் எதிர்க்கவில்லை. வேடம் போட்டவர் ஒரு முஸ்லிம். நாடக நடிகர். நடிப்புத் தொழில் இல்லாதபோது குடும்பத்தைக் காப்பாற்ற ‘ராமன்’ வேடம் போட்டு பிச்சை எடுப்பது அவரது வழக்கமாம். ஒரு இஸ்லாமியர் பிச்சை எடுப்பதற்குக்கூட ராமன் வேடம் போடக் கூடாது என்கிறது ‘பஜ்ரங்தள். “கடவுள் வேடம் போட்டு பிச்சை எடுக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; இது இந்து நாடு; எங்கள் நாடு” என்று பொங்குகிறார்கள். ஆனால், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் ‘இந்து’க்கள்தான் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்...

கடவுளுக்கு மருத்துவ ‘செக்-அப்’

கடவுளுக்கு மருத்துவ ‘செக்-அப்’

உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கோயில்களிலுள்ள கடவுள்களுக்கு ‘ஷொட்டர்கள்’ போடப்பட்டுள்ளதாம். அர்ச்சனை மந்திரங்கள் ஷொட்டர்களுடன் உள்ள கடவுள்களுக்கு நடக்கிறதாம். கோடை காலத்தில் குளிர் சாதன வசதிகளை செய்ததாகவும், காற்று மாசுபாடு இருந்த காலத்தில் அதைத் தடுக்கும் கவசங்கள் அணிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடவுள் சிலைகளுக்கு உயிர் இருப்பதால் இந்த பாதுகாப்புகள் தேவைப்படுகிறது என்று ஒரு வேத பண்டிதர் சமாதானம் கூறுகிறார். கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அனைத்து உயிர்களையும் படைத்ததாக இவர்கள் கூறும் கடவுளின் உயிர், மனித உயிர்களைப் போன்றதுதானா என்று பகுத்தறிவாளர்கள் கேட்கவே செய்வார்கள். மனிதன் கடவுளை தன்னைப் போலவே கருதி தனது பண்புகளை கடவுள் மீது திணித்து விட்டான், ஜாதி உட்பட! எனவேதான் கடவுள் மனிதனின் கற்பனை என்று பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அச்சத்தின் காரணமாக கடவுள் என்ற கற்பனையை உருவாக்கிக் கொண் டான் என்பதால் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார்...

இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

பா.ஜ.க. நடுவண் ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டங்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கருத்தியல் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவத்தை உருவாக்கித் தந்தவரும் அந்த அமைப்புக்கு தலைமை யேற்று வழி நடத்தியவருமான சித்பவன் பார்ப்பனர் வலியுறுத்திய கருத்து தான் இந்த சட்டங் களுக்கான பின்னணி. “இந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; இந்து என்பது தான். இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அன்னியர்கள். அவர்கள் இந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் இந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு  அடிபணிய வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மத அன்னியர்கள் தங்களுக்கான தனித்த அடை யாளங்களை இழந்துவிட வேண்டும். இந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் இந்துக்கள் அல்லாத வர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது என்று கோல்வாக்கர் – “நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை (We...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: நாட்டில் இப்போது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிற பிரச்சனை, குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்சனை. இந்தப் பிரச்சனை குறித்து, இந்த திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்; இந்த சட்ட திருத்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே, இதனால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்று பாரதிய ஜனதா தரப்பில் வாதாடப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்த சட்டம் மதத்தின் அடிப்படை யில் நாட்டை பிளவுபடுத்துகிற மிகப்பெரிய ஆபத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது என்று வெகுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் என்று...

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் ! சேலம் மாவட்டம் கொளத்தூரில் 09.03.2020 அன்று நடைபெற்ற செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு) ( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய : https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ ) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான மணமகன்...

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!! இனமானப் பேராசிரியர் இன்று முடிவெய்திவிட்டார். நிறை வாழ்வு அவர் வாழ்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர், எழுத்தாளர். தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக தன் வாழ்நாள் முழுதும் தடம் பிறழாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உன்னதமான சுயமரியாதைக்காரர். நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் திராவிடர் இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கி, திராவிடர் இயக்கத்தின் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான சிந்தனையாளரை இழந்து நிற்கும் தமிழகத்தின் உணர்வுகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னுடைய உணர்வுகளை, இரங்களை, துயரத்தை பகிர்ந்து கொள்கிறது. #விடுதலை_இராசேந்திரன் #பொதுச்செயலாளர்_திராவிடர்_விடுதலைக்_கழகம்

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் !

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் !

கொளத்தூரில் (சேலம் மாவட்டம்) ஜாதி வெறி கும்பலின் வன்முறை வெறியாட்டம் ! ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்து,இணையர்களுக்கு பாதுகாப்பு அளித்த கழகத்தோழர் மீது நள்ளிரவில் 50 பேர் கொண்ட ஜாதி வெறி கும்பல் கொலை வெறித் தாக்குதல் ! இணையர்களை ஜாதி வெறி கும்பல் கடத்திச் சென்றது. இதில் மணமகன் மீட்கப்பட்டுள்ளார். மணமகள் நிலை தெரியவில்லை. காவல்துறை தேடி வருகிறது. வன்முறை வெறியாட்டம் நிகழ்த்திய ஜாதி வெறி கும்பலை கைது செய்து அவர்கள் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி நள்ளிரவு முதல் விடியவிடிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களால் கொளத்தூர் காவல் நிலையம் முற்றுகை ! தமிழக அரசே, கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஜாதி வெறிக் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய் ! அவர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உடன் PCR சட்டப்படி...

திருப்பூரில் மகளிர் தின விழா !  கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம் மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா 09.03.2020 திங்கள்கிழமை மாலை 7.00 மணியளவில் திருப்பூர் குமரன் சாலை,நளன் உணவக அரங்கில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரின் பகுத்தறிவுப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தோழர் பார்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். கவிஞர் கனல்மதி அவர்கள் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் குறித்த விமர்சனஉரையாற்றினார். அடுத்து தோழர் விஜயகுமார் தோழர் ஆசிட் தியாகராஜனின் வாழ்வும் பணியும் குறித்து உரையாற்றினார். இந் நிகழ்வில் தோழர் ஆசிட் தியாகராஜன் அவர்களின் படத்தை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தை தோழர் சுசீலா அவர்களும், இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில்...

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் சென்னையில ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : சிம்சன் பெரியார் சிலை அருகில், சென்னை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை_உடனடியாக_மீட்க_வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்… தலைமை : தோழர் உமாபதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு :7299230363

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் மதுரையில் ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம் அருகில், மதுரை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்…

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன?? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது ஆகவே ரஜினியின் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார் மனு அளித்தது. ஆனால் அந்த புகார் மனுக்களின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்ததை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9 – 2 – 2020) – அன்று வ.உ. சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:   வீரவணக்கத் தீர்மானங்கள்   சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதிஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது....

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் ! நாள் : 01.02.2020 சனிக்கிழமை. நேரம் : மாலை 7.00 மணி இடம் : வடக்கு வீதி,நாச்சியார்கோயில், #தஞ்சை_மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தஞ்சை மாவட்டம்.

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ “புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூட நம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா…’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை! ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி – சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது’...

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பேசி, பெரியார் மீது அவதூரை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார். அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் வீடு முற்றுகையிடப்படவுள்ளது.   சென்னை மாவட்ட கழகம்  

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா 16012020 திருப்பூர்

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா 16012020 திருப்பூர்

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் சார்பாக வீரபாண்டி பிரிவில் நடைபெறவிருக்கிறது… கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றவுள்ளார். நாள்: 16.01.2020 வியாழக் கிழமை நேரம்: மாலை 5 மணி பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடைபெறவிருக்கிறது… இயக்குனர் வெற்றிமாரன் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் பேராசிரியர் சுந்தரவள்ளி தமுஎகச திருநங்கை சாம்பவி சாதிக்கப் பிறந்தவர்களின் சமூக அமைப்பு.. ஆர்.என்.துரை திமுக சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.. நாள்: 13.01.2020 திங்கள் கிழமை நேரம்: மாலை 5 மணி

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

கோவை மாவட்டம் அன்னூர், நல்லி செட்டிப்பாளையத்தில் ஜன. 5, 2020 அன்று கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர்  வெள்ளிங்கிரி  தலைமையில்  திராவிடர் விடுதலைக் கழகக் கொடியை மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி திறந்து வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் மந்திரமா தந்திரமா செய்து விளக்கிக் காட்டினார். நல்லிசெட்டிபாளையம் மோகன் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் வழி மொழிந்தனர்.  அதனைத் தொடர்ந்து  விஷ்ணு, மோகன் குமார், பார்த்திபன், மனோ ரஞ்சினி, தேவ பிரகாஷ், வெற்றிவேல், கோகுல், நந்தகுமார், தினேஷ் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். மற்றும் மாவட்ட மாநில தோழமைக் கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் சாமியார்களின் பித்தலாட்டங்கள் குறித்து விளக்கியும், இந்த அமைப்பு ஏன்? எதற்காக? என்றும் விளக்கமாக கருத்துரையாற்றினர். புதிய தோழர்களை உருவாக்குதல் முதல் அனைத்து  நிகழ்ச்சிகளையும் களப்பணியாளர் விஷ்ணு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ...

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக 01.01.2020 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கை யாளர் சந்திப்பும் 02.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்த தோடு அதனைப் பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப் படையில் மக்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள் நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணனை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தைத் தூண்டும்...

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர். கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும் பெரியார்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

குடியுரிமை சட்ட திருத்தம் (CAA)/தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனை தாக்குதலுக்கு எதிராக  இயக்கங்கள் தொடர் கின்றன. எனினும் மோடி அரசாங்கம்  தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டு மல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது. CAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையும் பறிபோகாது என மோடி அர சாங்கம் கூறுகிறது. CAA  என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA  பயணிக்க ஆட்சி யாளர்கள் திட்டமிடுகின்றனர். NRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே! NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான்...

‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்

‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்

பா.ஜ.க.வை எதிர்த் தால் – பார்ப்பனர்களை விமர்சித்தால் – எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ‘இந்திய எதிர்ப்பாளர் (anti-Indian) என்று வசைப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். திமிரும், பார்ப்பன ஆணவமும் கொழுத்து திரிகிறது இந்தக் கூட்டம். அதிகார மமதையில் ஊறி நிற்கும் ‘சங்கி’ பார்ப் பனர்கள், ‘இந்தியா’ என்பதையே ஏற்றுக் கொள்ளாத ‘தேச பக்த’ கும்பல், பா.ஜ.க.விலிருந்து சங்பரிவார் துணை அமைப்புகள் வரை ‘இந்தியா’ என்பதை ஏற் பதே இல்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘அவாள்’ கண்ணோட் டத்தில் ‘இந்தியா’ என்பது ‘தீட்டு’. இந்த கும்பல் இப்போதும் தத்துவத் தந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் கோல்வாக்கர் இந்தியா என்ற சொல்லையே பயன் படுத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார். அந்த அடிப்படை யிலேயே ‘இந்தியா’ என்ற சொற்றொடரும் அரசி யல் சட்டமும் அவர் களுக்கு கசக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனத்திலும் ‘இந்தியா’ என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்துவது கிடையாது. ஆர்.எஸ்....

சீனாவும் ஈரானும் ‘இந்து  தேசம்’ என்று உரிமை கோருகிறது ஆர்.எஸ்.எஸ்.

சீனாவும் ஈரானும் ‘இந்து தேசம்’ என்று உரிமை கோருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்து புராணங்களை வரலாறுகள் என்று ‘சங்கி’கள் பேசி வருவதை வரலாற்று அறிஞர்கள் நகைக்கிறார்கள். சுப்ரமணிய சாமி பார்ப்பனர் இப்போது இராமன் கோயில் பிரச்சினையை முன் வைத்து எழுதியுள்ள நூலில் இந்தியாவின் வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சுப்ரமணியசாமி எழுதியுள்ள இந்த ‘மடத்தனமான’ கருத்துகளை அவரது மூளையில் ஏற்றி வைத்தது, கோல்வாக்கரின் சிந்தனைதான். பாகிஸ்தான், பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான், சீனாவும் இந்துக்களுக்கான நாடு என்று எழுதியதோடு அதற்கு சான்றாக புராணங் களையே வரலாறுகளாக்குகிறார், கோல்வாக்கர். அதையே சு. சாமியும் இப்போது பேசுகிறார். கோல்வாக்கர் எழுதுகிறார்: “நமது தாய்நாடு எவ்வளவு தூரம் பரந்து, விரிந்து கிடக்கிறது என்பதைத்தான் நமது புராணங்களும் இதிகாசங்களும் சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய ஆப்கானிஸ்தான், நமது பழைய உபகானஸ்தான்; மகாபாரதத்தில் வரும் சால்யா, ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்தவரே. நவீன காபூலும், காந்தாரமும் அன்றைக்கு ‘காந்தார தேசமாக’ இருந்ததுதான். அந்த நாட்டை (ஆப்கானிஸ்தான்)ச் சார்ந்தவர் தான், கவுரவர்களின் தாயாகிய காந்தாரி....

பா.ஜ.க. நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத் தான்

பா.ஜ.க. நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத் தான்

இந்துக்களுக்கான நாடு ஒற்றை நாடாக இருக்க வேண்டும்; மாநிலங்களாக பிரியக் கூடாது என்பதே “சங்கி”களின் கொள்கை. இந்த உண்மைகளை எல்லாம் வெளியே பேசாமல் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சி இந்தக் கொள்கை யின் அடிப்படையில்தான் ‘மாநிலங்களின்’ உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டு வருகிறது. ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே வரி விதிப்பு, ஒரே ரேஷன் கார்டு என்ற மாநில அதிகாரங் களைப் பறிக்கும் நடவடிக்கை களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கொள்கை இருக்கிறது. ட    மாநிலங்களின் மொழி வழிப் பிரிவினையை ஆதரித்து காங்கிரஸ் தீர்மானம் போட்டபோது பா.ஜ.க.வின் மூதாதையரான இந்து மகாசபை மாநிலங்கள் பிரிவினையை கடுமையாகக் கண்டித்து தீர்மானம் போட்டது. ட    “இதனால் மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்து விட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகி விடும். அதனால் இந்தப் பழமை...

‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம் : குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு

‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம் : குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு

குஜராத் சட்டப் பேரவைத் தலைவரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான இராஜேந்திர திரிவேதி எனும் பார்ப்பனர், ‘பிராமணர்களின் மரபணு, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது” என்று பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கும் உரிமை ‘பிராமணருக்கு’ மட்டுமே உண்டு என்றும், அது பிராமணர்களின் பிறப்புரிமை என்றும் பேசியிருக்கிறார்.  குஜராத் காந்தி நகரில் ‘பிராமண வணிக சம்மேளனம்’ நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற ஒன்பது பேரில் 8 பேர் ‘பிராமணர்கள்’ என்றும் பெருமையுடன் பேசினார். தலித் மக்களின் அடையாளமாகவும், அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவராகவும் இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்கியதே ஒரு ‘பிராமணர்’ தான். அவர்தான் அம்பேத்கருக்குப் பின்புலமாக நின்று, அவரை உயர்த்திவிட்டவர் என்றும், ‘பிராமணர்கள்’ எப்போதுமே அடுத்தவர்களை வளர்த்து விடுபவர்கள் என்றும் திரிவேதி கூறினார். பி.என். ராவ் தான் சட்டங்களை எழுதியவர் என்றும் இந்தப் பெருமை அவருக்கே உரியது என்றும் அம்பேத்கரே ஒப்புக் கொண்டதாக...