சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி
திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார். பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார். சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார். மேடை...