இனமானப் பேராசிரியர் பெருந்தகை மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் இன்று முடிவெய்திவிட்டார். நிறை வாழ்வு அவர் வாழ்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர், எழுத்தாளர்.

தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக தன் வாழ்நாள் முழுதும் தடம் பிறழாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உன்னதமான சுயமரியாதைக்காரர். நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

தமிழகத்தில் திராவிடர் இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது.

மாணவப் பருவத்திலிருந்து தொடங்கி, திராவிடர் இயக்கத்தின் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான சிந்தனையாளரை இழந்து நிற்கும் தமிழகத்தின் உணர்வுகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னுடைய உணர்வுகளை, இரங்களை, துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

#விடுதலை_இராசேந்திரன்
#பொதுச்செயலாளர்_திராவிடர்_விடுதலைக்_கழகம்

You may also like...