குடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை இந்திய நாட்டிற்கு தேவையற்ற வீணான முயிற்சிகள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 106 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வியாழக்கிழமை யன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில், இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்திய அரசியலமைப்புக்கு உறுதியளித்த, அகில இந்திய மற்றும் மத்திய சேவைகளின் முன்னாள் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு நடத்தைக் குழுவான நாங்கள், ‘சிஏஏ-என்ஆர்சி- என்பிஆர்’ ஆகிய மூன்று பிரச்சனைகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை என்று உங்களுக்குத் தெரிவிப்பதை எங்களின் கடமையாக கருதுகிறோம். என்பிஆர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான விவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்த நடவடிக்கைகளை ஏன், உறுதியாக எதிர்க்க வேண்டும் என்பதையும் விளக்க விரும்புகிறோம். சிஏஏ விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடி தன்மை குறித்து, எங்களுக்குபெரும் அவநம்பிக்கை உள்ளது. அவை தார்மீக ரீதியாக மறுக்க முடியாதவை என்றும் நாங்கள் கருதுகிறோம்.

முஸ்லிம் மதத்தை அதன் நோக்கத்திலிருந்து உணர்வுப் பூர்வமாக விலக்கும்ஒரு சட்டம், இந்தியாவின் மக்கள்தொகையிலுள்ள மிகப்பெரிய பிரிவினருக்கு அச்சங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். பிறப்புப் பதிவுகளை பராமரிப்பதே மோசமாக உள்ள ஒரு நாட்டில், சிஏஏ, என்ஆர்சி போன்றவை சிக்கலை ஏற்படுத்தும். சிஏஏ சட்ட விதிகள், இந்த அரசாங்கத் தின் மிக உயர்ந்த மட்டங்களில் இருந்து, கடந்த சில ஆண்டுகளில் மிகவும் ஆக்ரோஷமான அறிக்கை களுடன், இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தில் ஆழ்ந்த அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதார நிலைமை அரசாங்கத்தின் மிக நெருக்கமான கவனத்தை ஈர்க்கும் ஒரு நேரத்தில், குடிமக்களும் அரசாங்கமும் சாலைகளில் மோதலுக்குள் நுழையும் ஒரு சூழ்நிலையை இந்தியா தாங்க முடியாது.இது ஏற்கெனவே ‘லவ் ஜிகாத்’, கால்நடை கடத்தல் மற்றும் மாட்டிறைச்சி நுகர்வு போன்ற பிரச்சனைகளின் மீதான பாகுபாடு மற்றும் குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக உள்ளது.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியால், உள்ளூர் காவல்துறை கட்டுப்படுத்தப்படும் மாநிலங் களில் மட்டுமே முஸ்லிம் சமூகம், சமீபத்திய நாட்களில் போலீஸ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டது என்பது, என்பிஆர், என்ஆர்சி பயன்பாட்டைக் குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் தனிநபர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட லாம் என்ற பரவலான உணர்வுக்கு நம்பகத் தன்மையைச் சேர்க்கிறது. பெரும்பான்மையான மாநில அரசுகள் என்பிஆர் – என்ஆர்சி-யை செயல்படுத்த விரும்பாத ஒரு சூழ்நிலை இருப்பது விரும்பத்தக்கது அல்ல. இது மத்திய-மாநில உறவுகளில் ஒரு முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கிறது. இது இந்தியா போன்ற ஒரு கூட்டாட்சி அமைப்பில் மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.

எல்லா வற்றிற்கும் மேலாக, இந்தியா சர்வதேச நல்லெண்ணத்தை இழந்து அதன் உடனடி அண்டை நாடுகளை அந்நியப்படுத்தும் அபாயத்தில் இருக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். துணைக் கண்டத்தில் பாது காப்பு விஷயங்களிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.”இவ்வாறு அவர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...