வினா… விடை…!

வெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இ°லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள். – செய்தி
அதெப்படி சுத்தமாகும்? ‘தர்ப்பை’யுடன் வேத மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தால்தான் உண்மையான சுத்தம் வரும்!

பம்பாயில் அகமதா நகரில் பிளாட்பாரத்தி லிருந்த ஷானி சிலையை ஒரு இளம் பெண் தடையை மீறி வழி பட்டதால் கோயிலில் பூஜை நடத்தி தூய்மைச் சடங்குகள் நடந்தன. – ‘இந்து செய்தி
இந்துப் பெண்களை புண்படுத்துறாங்கப்பா… இந்து முன்னணிக்காரங்களே, ஓடி வாங்க….

சீரிரங்கம், நாமக்கல், திருப்பூரில் தீமைகள் நடப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி இந்துக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்ட தொல்பொருள் துறை ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். – செய்தி
இந்த ஆய்வாளருக்கு ‘பாரத ரத்னா’ விருதே தரலாம்!

மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட முதியவர் முகம்மது அதிலாக் வாழ்ந்த பிஷாகா கிராமத்தில், கிராமம் தீட்டாகிவிட்டதை சுத்தப்படுத்த மாட்டு மூத்திரத்தைக் கொண்டு வீடுகளைக் கழுவினர். – ‘இந்து’ செய்தி
மாட்டு சாணத்தையும் அதோட சேர்த்துக்குங்க. ஊர் இன்னும் சுத்தமாகும்!

பெரியார் முழக்கம் 17122015 இதழ்

You may also like...