மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக வழக்கறிஞர் துரை.அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட தலைவர் இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 19112015 இதழ்

You may also like...