ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் – கொளத்தூர் மணி
முன்னுரை தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லோருடைய உணர்வுகளும் ஈழத்துக்கும், ஈழ விடுதலைக்கும் ஆதரவானவைகளாக உள்ளன. ஆனால் செயல்தளத்தில், ஈழ ஆதரவு செயல்பாடுகளில் அவ்வாறு கூறிவிட முடியாது. மற்றொரு பக்கம், ஈழ ஆதரவு என்பதை, சொற்களால் பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் செயல்பாட்டுத் தளத்துக்கு வந்ததில்லை. ஈழத்தில் 2009 மே திங்களில் நடந்து முடிந்த கடைசிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்தின் அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்தும் வெறியாட்டம் ஆடிய இலங்கை அரசுக்கு, இந்திய காங்கிரசு அரசு ஆயுதம், ஆளணி, உளவு, தொழில்நுட்ப உதவிகள் என முழுமையாய்த் துணை நின்றது. அவ்வரசின் கூட்டாளியாக இருந்த தி.மு.க. தன்னல நோக்கில் அமைதி காத்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாய் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தந்திரமான பட்டினிப் போர், பகட்டுப் பேச்சுக்களாலும் – கூர்மழுங்கவும் செய்தது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் மீதான பகையுணர்வு அவ்வாறு வெளிப்பட்டது. அது அந்தக் கட்சியில் பெரும்பான்மையாக...
