Category: பெரியார் முழக்கம் 2018

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில்  மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர்  மு.நாகராசன் தலைமையில்  குழந்தைகள் பழகு முகாம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இயக்கத் தோழர் அய்யனார் நிலத்தில் 23.05.2018  புதன்கிழமை அன்று  பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 5 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை (ஆண், பெண்) 90 மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளராக  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்  ஆசிரியர் சிவகாமி வருகை புரிந்து  பயிற்சி அளித்தார்.  சிவகாமி மகள் கனல், காலை முதல் மாலை வரை பேய், பிசாசு, கடவுள், மதம் போன்ற பொய்யானவைகளை  விளக்கியும் உலகம் எப்படி தோன்றியது உயிர் எப்படி தோன்றியது போன்ற அறிவியல் – விஞ்ஞானம் சார்ந்தவைகளை பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு கற்பித்தனர். பழகுமுகாமில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொய்யான சாதி, மதம், கடவுள் சார்ந்த சிறு நாடகங்களை மாணவர்கள் நடத்தியது சிறப்பாக இருந்தன....

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

கர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவனது மனைவி உலகமாதேவி ஆகியோரின் அய்ம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் கோயிலிலிருந்து திருட்டுப் போனது. இப்போது குஜராத்திலுள்ள தனியார் அருங்காட்சியகத்திலிருந்து (அகமதாபாத் – சாராபாய் பவுண்டேஷன் காலிகோ அருங்காட்சியகம்) மீட்கப்பட்டு தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளையெல்லாம் பத்திரமாக மீட்டுத் தரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார், சிலைக் கடத்தல் தடுப்புக் குழு தலைமை காவல் அதிகாரி (அய்.ஜி.) பொன். மாணிக்கவேல் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன்! கண்டுபிடித்து மீட்டுவரும் இவர்கள் ஆகமமுறைப்படி சிலைகளுக்கு அருகே நெருங்கக் கூடாதவர்கள்; “சூத்திரர்கள்”. இந்த சிலையை 60 ஆண்டுகளுக்கு முன் திருடுவதற்குத் திட்டம் தீட்டித் தந்து, அதை விற்பதற்கு தரகராக செயல்பட்டது யார் என்றால், சீனிவாச கோபாலாச்சாரி என்ற பார்ப்பனர். தஞ்சை கோயில் ‘ஆகம விதிப்பபடி’ பகவானுக்குரிய கடமைகளை செய்து வரும் “பிராமண அர்ச்சகர்” உதவியோடுதான்இந்த திருட்டு நடந்திருக்கிறது. ஆகமத்தில் அர்ச்சகர் சிலை...

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப்  பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து: ஜாதியை எப்படி...

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழரும் முன்னாள் சுங்கத்துறை கண்காணிப்பு அதிகாரியுமான குகானந்தம் (குகன்) தாயார் ஜெயம்மாள் (86) – மே 27 அன்று முடிவெய்தினார். நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து இறுதி மரியாதைச் செலுத்தினர். கழகத் தோழர்களின் இறுதி வணக்க முழக்கங்களோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டு மீனம்பாக்கம் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 31052018 இதழ்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

ஜனநாயகம் : அயர்லாந்தும் பார்ப்பன இந்தியாவும்

குழந்தைகள் பிறப்பது ‘கடவுளின் அருள்’ என்று மதங்கள் மக்களிடம் நம்பிக்கைகளைத் திணித்தன. ஆனால் மத நம்பிக்கைகளுக்கு மாறாக அரசுகளே குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின. கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட அயர்லாந்து நாட்டில் செல்வாக்கு செலுத்தி வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வராமல் அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அயர்லாந்தில் கருக்கலைப்புகள் கூடாது என்ற தடையைத் திணித்தது. 1973ஆம் ஆண்டு அயர்லாந்து உச்சநீதிமன்றம் இந்தத் தடை சட்டவிரோதம் என்று அறிவித்து கருக்கலைப்புக்கு அனுமதித்தது. 1983இல் அயர்லாந்தில் செல்வாக்குள்ள கத்தோலிக்க பழமைவாதிகள், ‘கருக்கலைப்பு உயிர்க்கொலை – உயிரைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மதவாதிகளின் கருத்தே வெற்றி பெற்றது. அரசியல் சட்டம் கருக்கலைப்புக்கு எதிராக திருத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு இந்திய மரபு வழியைச் சார்ந்த அயர்லாந்தில் குடியேறிய 31 வயதுள்ள சவீதா...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும். இதிலிருந்து...

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்...

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்: 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர். 15.7.1993 – இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். 1.8.1994 – தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. 16.1.1995 – மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது. 14.10.1996 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது. 20.8.1997 – ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட்...

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடாகி வருகின்றன. ஜூன் 23, 24 நாட்களில் பயிற்சி நடக்கும். (இடம் – பின்னர் அறிவிக்கப்படும்) சமூக நீதி – வரலாறு  – கல்வித் துறை சந்திக்கும் ஆபத்துகள் குறித்து கல்வியாளர்கள், வகுப்புகளை நடத்துவார்கள். நுழைவுக் கட்டணம் : ஒருவருக்கு இருநூறு ரூபாய். (ரூ.200) முன் பதிவுக்கு : 9688310621 பெரியார் முழக்கம் 24052018 இதழ்

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடும் பெட்ரோல் விலை உயர்வு: அரசின் பகல் கொள்ளை

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஞாயிறன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து 79.13 ஆகவும், டீசல் விலை 28 பைசா உயர்ந்து 71.32 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆனால் கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 14ந்தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை தீர்மானிப்பதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. சர்வதேச சந்தை விலைக்கேற்பவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன என்பது உண்மையானால், கடந்த 19 நாட்களாக விலை உயர்த்தப் படாதது ஏன்? தேர்தலுக்காக விலை உயர்வை தவிர்க்க முடியும் என்றால், பொது மக்களின்...

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திட சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை காவல்துறை கைது செய்தது. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தஇந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், ம.தி.மு.க., தமிழர் விடியல் கட்சி, எஸ்.டி.பி.அய்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், த.பெ.தி.க., தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இரவு விடுதலையாகும் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாண்டுபோன தமிழர்களுக்கும் விடுதலைப் புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். பேராவூரணியில் : பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழக  சித.திருவேங்கடம்,  சிபிஎம் பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தி.வி.க. தா.கலைச்செல்வன், மதிமுக குமார்,...

நீரவ் மோடி-அம்பானி-அதானி  கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

நீரவ் மோடி-அம்பானி-அதானி கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’

மோடியின் நண்பரும், மோசடிப் பேர் வழியும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி, சிங்கப்பூர் பாஸ்போட் மூலம் இலண்டனில் பதுங்கியுள்ளார் என்று அமுலாக்கப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன. சமீபத்தில் அவ்வாறு அடுத்தடுத்து உலுக்கிய ஊழல்கள் நீரவ் மோடியின் ரூ 11,700 கோடி வங்கி மோசடியும் ரோடோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் 800 கோடி ஊழலும் ஆகும்.இது வெளிப்பட்ட ஊழல்தான் இன்னும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ரோடோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, நீரவ் மோடிக்கு சளைத்தவர் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.கோத்தாரி அடித்த கொள்ளை ரூ.800 கோடியல்ல; ரூ.3695 கோடி என்பதும் அம்பலமாகி இருக்கிறது.இந்த இரு ‘கனவான்களும்’ வங்கிகளை எவ்வாறு “ஆட்டையை” போட்டார்கள் என்பது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் வெளிவராத செய்தி ஒன்று உண்டு. வங்கிகளின் பணத்தை அதாவது மக்களின் பணத்தை “ஆட்டையை”...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு...

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

ஊர்திப் பயணத் தில் முழுமையாகப் பங்கேற்றத் தோழர்கள் : இரண்யா, கனலி, பரத், விஜி, மாரி அண்ணன், கொளத்தூர் குமார், புகழேந்தி, பாலு துரை, சரஸ்வதி, சுதா, கிருஷ் ணன், பிரபாகரன், கனல் மதி, சாமிநாதன், சங்கர், செல்வேந்திரன், இராசேந்திரன், தம்பி துரை, பிரதாப், பென்னட், அண்ணா துரை, சிவகாமி, முத்துக் குமார், செல்வம், அம்ஜத் கான், மலர், சங்கீதா, யாழிசை, யாழினி, மீனா, முத்துப்பாண்டி, சஜினா, சௌந்தர், சுசீந்திரன், திலீபன், ஜென்னி, மதிவதனி, கதிரவன், இளமதி, யாழினி, சூலூர் பன்னீர் செல்வம், ஜோதி, தமிழ்ச் செல்வன், அறிவுமதி, இராமச்சந்திரன், யுவராஜ், சத்தியராஜ், வேணுகோபால், கதிர்வேல், இரத்தினசாமி, விக்னேஷ், குமரேசன், பால் பிரபாகரன், துரைசாமி, கண்ணன், அய்யப் பன், சக்திவேல், கார்த்திக், சந்திரசேகர், தினேஷ், விஜயகுமார், கோபி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், . பறைக்குழுத் தோழர்கள் (மேட்டூர் காவேரிகிராஸ் பகுதி) : சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ், ஆர்.எஸ். விவேக்,...

ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்

ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்

பா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து  ‘அவாளு’க்குள் மோதல் கோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது. ஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது.  அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப் பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம்...

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி….. சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தைத் தோழர்கள் முற்றுகையிடும் பேராட்டத்தை நடத்தி கைதானார்கள்.  கழகத் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சென்னை எழும்பூரில் 16.05.2018 அன்று மாலை 4 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி.சேகரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி.சேகரை போல் வேடமணிந்து, கை விலங்கு பூணூலுடன் தோழர்கள் வந்தனர். எஸ்.வி.சேகரின் உருவப்படம் எரிக்கப்பட்டது. தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்),  ந.அய்யனார்  (தலைமைக் குழு உறுப்பினர்),  வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்),  இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்),  ஏசுகுமார்(வடசென்னை மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள் 50 பேர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் நள்ளிரவில் ...

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

மாணவர்கள் யு.பி.எஸ்.சி. நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்… என பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தபிறகு அந்தந்த மாநிலங்களில் அந்தந்தத் துறைகளில் நியமிக்கப்படு கிறார்கள். அதாவது, தேர்வு எழுதிப் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் கிடைத்த உரிமையின் அடிப்படையில்  அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகிறார்கள். இந்த வழிமுறையின்படி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்வு முடிந்த பிறகு அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகலாம். இதன் மூலம்தான் அட்டவணை சாதியினரும், (மிக அரிதாக)  பழங்குடியினரும் இந்த உயர் பதவிகளை எட்ட முடிகிறது. மோடி அரசு இப்போது இதில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டு, அதை...

பாரதி ராஜா மீது ஏன் வழக்கு? விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா?

பாரதி ராஜா மீது ஏன் வழக்கு? விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா?

கடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி பிறகு உயர்நீதிமன்றத்திலும் மனு போட்டு உயர்நீதி மன்ற உத்தரவின்படி காவல்துறை பாரதி ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதி ராஜா பேசியது ‘இந்து’க்களைப் புண்படுத்துகிறதாம். வரலாற்றைக் கூறுவதே மதத்தைப் புண்படுத்துவதாகி விடுமா? கி.பி. 642ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் தமிழ் நாட்டிற்குள் விநாயகன் வழிபாடு நுழைந்தது. ‘வாதாபி’யை ஆண்ட சாளுக்கிய மன்னன் புலிகேசி மீது ‘வாதாபி’க்கு படை எடுத்துச் சென்ற பல்லவ மன்னர் படைத் தளபதி பரஞ்சோதியின் வெற்றிக்குப் பிறகு அவனால் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததுதான் ‘விநாயகன் சிலை’. ‘விநாயகனை’ வைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரசியல் ஊர்வலங்களை நடத்திய பாலகங்காதர திலகர்...

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

மே மாதம் தொடங்க இருந்த குழந்தைகள் பழகு முகாம் தவிர்க்க இயலாத காரணங்களால் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும். – ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 17052018 இதழ்

கழகத் தோழர் பழனி கொலை வழக்கு

கழகத் தோழர் பழனி கொலை வழக்கு

விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 5.7.2012இல் அவரது வீட்டில் இருந்த  போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் தூண்டுதலில் அவரது ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு அவரது தலையைத் துண்டித்தனர். தளி பகுதியில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் தளி. இராமச்சந்திரன், அப்பகுதியில் தங்களின் ‘சாம்ராஜ்யத்தை’க் கேள்விக்குள்ளாக்கும் துணிவோடு (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம் உருவாகி வளருவதை விரும்பவில்லை.  எனவே கழகத் தோழர்களைத் தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்தி வந்தவர்கள், இறுதியில் கழக அமைப்பாளர் பழனியையும் படுகொலை செய்தனர். தளி இராமச்சந்திரனும் அவரது குடும்பத்தாரும் நடத்திய தொழில் மோசடி, வன்முறைகளை பொதுக் கூட்டங்கள் வழியாகத் துணிவோடு அம்பலப்படுத்தி வந்தது (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம். அவர் மீதான நடவடிக்கையை கழகம் வலியுறுத்திய நிலையில் பழனி கொலைக்குப் பிறகு தளி. இராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்

‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்

ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டுமுறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம். மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் ஞாயிறன்று (மே 6) நடைபெற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும்தமிழகத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது மேலும் ஓர் இடியாகப் பல தமிழக மாணவர்களுக்கு, ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையத்திற்குச் சாலை வழியாகச் சென்றால் 2,232 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து வான் வழியாக செல்ல வேண்டும் என்றால், சேலத்தில் இருந்து சாலை வழியாக 339 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வர வேண்டும். பிறகு சென்னையில் இருந்து 1,606 கிலோ மீட்டர் வான்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் புனித பாண்டியன் சிறப்புரை

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் புனித பாண்டியன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் 4ஆவது சந்திப்பு ஏப்ரல் 30, 2018 அன்று மாலை 6 மணிக்கு விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் முடிவெய்திய ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் படத்தை விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வில் ‘நிமிர்வோம்’ ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளைக் குறித்து தங்களது பார்வைகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், மதன்குமார், துரை, அருண், கார்த்திக், இராசேந்திரன் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம் என்ற தலைப்பில் புனித பாண்டியன் (‘தலித் முரசு’ ஆசிரியர்) சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கட்டுரைகளைக் குறித்து தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறினார். இதில் 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10052018 இதழ்

கர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்

கர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக, பிரதமர் மோடி மற்றும் அக் கட்சியின் தலைவர் அமித்ஷா துவங்கி அத்தனை பேரும் பொய்யை விதைத்து வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவோம் என்பது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதி. ஆனால், இப்போது வரை அது நடக்கவில்லை. ஆனால், கர்நாடக தேர்தல் அறிக்கையில் மீண்டும் அதே வாக்குறுதி மீண்டும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் விவசாயிகள் சுபிட்சமாக இருக்கிறார்கள்; கர்நாடகத்தில் மட்டும்தான் விவசாயிகள் நிலை மோசமாக இருக்கிறது என்று மோடி பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகம் நடந்த மாநிலங்கள் என்றால், அது பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரம்தான். அடுத்தடுத்த இடங்களிலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய பா.ஜ.க. மாநிலங்கள்தான் இருக்கின்றன. முன்பு, கேரளத்திற்குச் சென்ற போதும் சுகாதாரத்துறையில் நாட்டி லேயே உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது என்று ஆதித்ய நாத்தும், அமித்ஷாவும் பச்சைப் பொய் சொல்லி மாட்டிக் கொண்டார்கள்....

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

கழகத் தோழர் ராஜி ஆங்கில பயிற்சிப் பள்ளி திறப்பு விழா

கழகத் தோழர் ராஜி ஆங்கில பயிற்சிப் பள்ளி திறப்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் ராஜி-சாரதி இணையர் களின் ‘கிருஷ்ணா அகாடெமி’ என்ற ஆங்கில வழி பயிற்சிப் பள்ளியை 3.5.2018 அன்று தொடங்கினார். (கிருஷ்ணா என்பது ராஜி அவர்களின் ஆசிரியர் பெயர்) திறப்பு விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழா நிகழ்வாக பத்ரி நாராயணன் நினைவுச் சுவடுகள்’ நூலை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் வழங்கினார்.  விழா மகிழ்வாக தோழர்கள்  ராஜி-சாரதி, கழக வார ஏட்டிற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கினர். பெரியார் முழக்கம் 10052018 இதழ்

நியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்

நியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்

நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதோடு, ‘இந்தத் திட்டத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தினமும் 3 இலட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றும் அனுமதி அளித்துள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையை நம்பி உள்ள விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல் உள்ளது. இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் என்பவரால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தமிழக-கேரள இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்துவதற்கான காரணமாகவும் இந்த அணைப் பிரச்சினை மாறி உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 1979ஆம் ஆண்டு 136 அடியாக குறைக்கப்பட்டது.  அணை பலவீனமாக இருப்பதாகவும், அணையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி நீர்மட்டம் குறைக்கப்பட்டது. பலப்படுத்தும் பணி முடிந்த பின்னர், கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த...

தலையங்கம் ‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!

தலையங்கம் ‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!

‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பன கல்வி அமைப்பு, தமிழ்நாட்டில் சமூக நீதியால் கல்வி பெற்று உயர்ந்து மேலே வரத் துடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவி யர்களை ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு தனக்குக் கிடைத்துள்ள உரிமையைப் பயன் படுத்தி அவர்களை அவமானப்படுத்தியிருக் கிறது; சொத்தடிமைகளாக நடத்தியிருக் கிறது. ‘சி.பி.எஸ்.ஈ.’க்கு தேர்வு நடத்தும் உரிமையே கிடையாது என்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ‘நீட்’ வழக்கு வந்தபோது, அப்போது தலைமை நீதிபதி யாக இருந்த அல்டாமஸ் கபீர் தலைமை யிலான நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும். ‘சி.பி.எஸ்.ஈ.’ 10ஆம் வகுப்பு கணித வினாத்தாளும் 12ஆம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும் முன்கூட்டியே ‘அவுட்’ ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து பல இலட்சம் மாணவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட் டனர். பெற்றோர்களையும் மாணவர்களை யும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யது ‘சி.பி.எஸ்.ஈ.’. அந்த...

‘சி.பி.எஸ்.ஈ.’யின் அடாவடி; அட்டூழியங்கள்!

‘சி.பி.எஸ்.ஈ.’யின் அடாவடி; அட்டூழியங்கள்!

‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பனிய அமைப்பு, ‘நீட்’ தேர்வை அலங்கோலமாக – தான்தோன்றித்தனமாக நடத்தி முடித்திருக்கிறது. தமிழக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கடும் அவமானத்துக்கும் சொல்லொண்ணா துயரத்துக்கும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு இரவு பகலாக கடுமையாக உழைத்துப் படித்த நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவ மாணவிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கிரிமினல் கைதிகள் சிறைச் சாலைகளில் அடைக்கப்படும்போது நடத்தப் படுவது போன்ற சோதனைகள் அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாடே இந்திய பார்ப்பனிய இந்துத்துவ  ஆட்சியால் தண்டிக்கப்படும் மாநிலமாக மாறியிருக்கிறது. நெஞ்சு பதறும் இந்தக் கொடுமைகள் குறித்து வந்த செய்திகளை இங்கே தொகுத்து தருகிறோம்: தமிழ்நாட்டைச் சார்ந்த 5000 மாணவ மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் என்ற வேறு மாநிலங்களில் போய் நீட் தேர்வை எழுத சி.பி.எஸ்.ஈ. உத்தரவிட்டது. நீட் தேர்வு குறித்த சி.பி.ஸ்.ஈ.யின் தகவல் அறிக்கை – பக்கம் 2 – முக்கிய குறிப்புகளின் கீழ் 6ஆவது அம்சம் மற்றும் 4ஆவது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர...

திருப்பூரில் எழுச்சியுடன் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூரில் எழுச்சியுடன் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22.04.2018 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில்ஜீவா நகர், ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. சு.பிரசாத் தலைமை தாங்கினார். தோழர்கள் சரத், பவித்ரா, ஜெயா, இந்துமதி, சரசம்மா,சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சின்னு வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக ‘கியோ குசின்’ தற்காப்புக்கலை தோழர்களால் தற்காப்பு கலை நிகழ்ச்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. பகுத்தறிவுப் பாடல்களை யாழினி, யாழிசை, இசைமதி ஆகியோர் பாடினர்.  காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கனல் மதி, தேன்மொழி, பிரசாந்த் உரையைத் தொடர்ந்து,  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி நகைச்சுவையாக பகுத்தறிவுக் கருத்துக்களுடன் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுக்கூட்டத்திற்கு உழைத்த தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து, புரட்சியாளர் அம்பேத்கர் பணி குறித்து சிறப்புரையாற்றினார். நகுலன்  நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத்திற்கு முன்...

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

21-4-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன் களான ச.ச.அனீசு குமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக் கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க நடந்தேறியது. விழாவின் சிறப்பாக – திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய  ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணி பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி மீ.த.பாண்டியன், கிருஷ்ணஜோதி ஆகியோர்  இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்து...

பொள்ளாச்சியில் சடங்குகள் இன்றி கழகத் தோழர் இல்லத் திறப்பு

பொள்ளாச்சியில் சடங்குகள் இன்றி கழகத் தோழர் இல்லத் திறப்பு

பொள்ளாச்சி ஆனைமலையில் 8.4.2018 அன்று கழகத் தோழர்கள் அனுசுயா-கணேசன் இணையரின் இல்லத் திறப்பு விழா எவ்வித சடங்குகளும் இல்லாமல் நடைபெற்றது. இல்லத்தினை கணவரை இழந்த கழகத் தோழரின் உறவுப் பெண் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அனைவரும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.  மணிமொழி வரவேற்றுப் பேசினார். கழகப் பொறுப்பாளர் பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, “புதுமனை புகு விழா வைதிக முறையில் ஏன் செய்யப்படுகிறது என்பதையும், அதில் நம்மை நாமே இழிவு செய்து கொள்வதையும், சடங்குகள், சாதி, கடவுள் மோசடிகள் குறித்தும் விளக்கினார். தோழர்கள் இசைமதி, வினோதினி, பெண் உரிமைப் பாடல்களைப் பாடினர். மடத்துக்குளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடத்தி, அறிவுக் கருத்துகளை பாமரருக்கும் புரியும் வகையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக கணேசன் நன்றி கூறினார். ஆனைமலை சட்ட எரிப்புப் போராளி ஆறுமுகம், ஆனைமலை கழகத் தோழர்கள் அரிதாசு, ஆனந்த், மணி, விவேக் சமரன், சிவா, முருகேசன் மற்றும் கோவை மாவட்டப்...

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை

அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.14 அன்று காலை 10 மணிக்கு திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் ஊர்வலமாகச் சென்று முழக்கமிட்டு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் கென்னடி, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மனோகரன் தலைமையில் வழக்கறிஞர் கென்னடி, மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

நாகர்கோயிலில் அம்பேத்கர்  நினைவு நாள் கூட்டம்

நாகர்கோயிலில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம்

அம்பேத்கர் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 14.4.2018 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாகர்கோவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் வழக்குரைஞர் வே. சதா (மாவட்ட தலைவர்) தலைமையில் நடைபெற்றது. விஷ்ணு வரவேற்புரை யாற்றினார். தோழர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சவகர், தமிழ் மதி, நீதி அரசர், ஜெயன், சூசையப்பா ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் மஞ்சுகுமார், சந்தோஸ், இராம சுப்ரமணியன், சுசீலா, சாந்தா உள்ளிட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர். அனீஸ் நன்றிகூற கூட்டம் முடிவுற்றது. பெரியார் முழக்கம் 03052018 இதழ்

திருமுடிவாக்கத்தில்  பெரியார் சிலை திறப்பு

திருமுடிவாக்கத்தில் பெரியார் சிலை திறப்பு

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனையொட்டி 19.4.2018 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திராவிடர் கழக குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல்

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல்

தருமபுரி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.4.2018 அன்று நடைபெற்றது. ஈரோடு புதிய கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பிரச்சாரச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் ஊர்தி பரப்புரைப் பேரணிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது,  பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்ப்பது; மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 25 தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்: பாப்பிரெட்டிப்பட்டி – சிவக்குமார், அரூர் – பெருமாள், தர்மபுரி – சுதந்திர குமார், பென்னாகரம் – நஞ்சப்பன், காரிமங்கலம் – செந்தில், நல்லம்பள்ளி – இராமதாசு, மாவட்ட மகளிரணி – பரிமளா, மாவட்ட அறிவியல் மன்றம் – வையாபுரி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு  நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சார்பில் இந்துத்துவ வெறியர்களால் வன்புணர்ந்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இந்துத்துவ பாஜக அரசைக் கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகம், தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பள்ளிப்பாளை யத்தில் 17.4.2018 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, பு.இ.மு. தோழர்கள் கண்டன  உரைக்குப் பிறகு கழக அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார். ஆசிபாவும் தேசத் துரோகியா? சென்னை-மயிலாடுதுறையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சிறுமி ஆசிபாவை இந்துத்துவா கும்பல், வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்ததைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 20.4.2018 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகார வெறியில் மனிதத்தைக் கொல்லாதே; ஆசிபாவும் தேசத்...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

n             மே 9 காலை ஈரோட்டில் தொடங்குகிறது n             மே 12 – சென்னை கூடுவாஞ்சேரியில் நிறைவடைகிறது n             சேலம் – காவேரிப்பட்டினம் – வேலூர் – கூடுவாஞ்சேரியில் பொதுக் கூட்டங்கள் n             காலை முதல் மாலை வரை –  பறி போகும் தமிழக உரிமைகள் பா.ஜ.க. மதவெறித் திணிப்புகளை எதிர்த்து – பரப்புரை பெரியார்-அம்பேத்கர்-காமராசர் – சமூகநீதி ரதம் பேரணியாக வலம் வருகிறது. தமிழர்களே! ஆதரவு தாரீர்! பெரியார் முழக்கம் 03052018 இதழ்

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

பெரியாரிய களப் போராளி பத்ரிநாராயணன் படுகொலை செய்யப்பட்ட ஏப்.30ஆம் நாளில்  தன்மான தன்னுரிமை மீட்பு மாநாட்டை  ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல மாநாடாக இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் நடத்தியது. ஏப்.30, 2018 காலை பத்ரி அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நூற்றுக்கணக்கான தோழர்களுடன் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தோழர்கள் எடுத்த உறுதி மொழி: “பெரியார் இலட்சியப் பணியில் உயிர்ப் பலியாகிய பத்ரியின் நினைவு நாள் எங்களின் கொள்கை உணர்வுகளை புதுப்பிக்கும் நாள். கொள்கைத் தோழன் பத்ரியே… இராயப்பேட்டை பகுதியில் நீ பெரியாரின் கொள்கையை வலிமையாகப் பரப்பினாய்; திசை மாறி குழம்பி நின்ற இளைஞர்களை இயக்கமாக்கி நல்வழிப்படுத்தினாய்; தோழர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று அரவணைத்தாய்; இயக்கத்தில் பதவி என்பது...

சென்னையில் கழக மாநாடு எச்சரிக்கை

சென்னையில் கழக மாநாடு எச்சரிக்கை

காவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! சென்னையில் 30.04.2018இல் நடந்த திராவிடர் விடுதலைக் கழக தன்மானம் – தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இராணுவமயமாக்காதே! – காவேரி பாசனப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாசனப் பகுதியை நஞ்சாக்கும் – மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து வருகிறது நடுவண் ஆட்சி; மக்கள் – வாழ்வுரிமைக்கான போராட்டத்தை துணி வுடன் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் – நடுவண் ஆட்சி  – போராடும் மக்களை மிரட்டவும் – ஒடுக்கவும் துணை இராணுவப் படையை இறக்கி – காவிரி பாசனப் பகுதியை இராணுவ மயமாக்கி வருவதை – இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது;  இராணுவத்தைக் கொண்டு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்க முயன்றால் – அது மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று – இம்மாநாடு எச்சரிக்கிறது. தமிழகக் கல்வி...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு வழக் கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, மருத்துவர் எழிலன், நீதியரசர் அரிபரந்தாமன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 26042018 இதழ்

தலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்!

தலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, ‘அவர்கள் ஒழுக்கமற்றவர்கள்’ என்று சுடுசொற்களால் முகநூலில் எழுதிய காமெடி நடிகர் எஸ்.வி. சேகர் தலை மறைவாகிவிட்டாராம். “இது நான் போடவில்லை; வேறு ஒருவர் அனுப்பிய பதிவை படிக்காமல் அப்படியே அனுப்பி விட்டேன்” என்கிறார் அந்த காமெடிப் பேர்வழி. வேதங்களையே கரைத்துக் குடித்து, தன்னை ‘பிராமணனாக்கி’க் கொண்டு,  அதன் குறியீடான ‘பூணூலை’ தொலைக்காட்சியில் தோன்றும்போதுகூட வெளியே தெரியும்படி காட்டிக் கொள்ளும் இந்தக் காமெடிப் பேர் வழி படிக்காமல் ஒரு செய்தியைப் பதிவிட்டு விட்டதாம்; நாம் நம்ப வேண்டுமாம்! ‘அட சேகரா? நீ ஒரு சந்தர்ப்பவாதி; செத்துப் போன சங்கராச்சாரிக்காக உளவு பார்த்தவன்; நீ தாவாத கட்சியில்லை; ஜெயலலிதா கட்சிக்குப் போனாய்; சட்டமன்ற உறுப்பினரானாய்; பிறகு அவரால் விரட்டி அடிக்கப்பட்டு, பா.ஜ.க.க.வுக்குத் தாவினாய்; அங்கிருந்து தி.மு.க.வுக்கு தாவினாய்; பிறகு ‘பிராமணருக்கு’ தனிக்கட்சி தொடங்கினாய்; எங்கே இருந்தாலும் ஒரு வெறி பிடித்த ‘பிராமணர்’ என்ற அடையாளத்தை மட்டும் மாற்றாமல் இருந்தாய்; இப்போது...

கல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் 22.4.18 அன்று சேலம் குரங்குசாவடியில் காலை 11 மணிக்கு துவங்கியது . மாணவர் கழக அமைப் பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு மாணவர்களின் பல்வேறு சிக்கல்கள் குறித்து விளக்கி யும், மாணவர் கழகம் வரும் நாட்களில் எடுக்க வேண்டிய செயல் திட்டம் குறித்தும் பேசினார்.  மேலும் தோழர்களின் பல்வேறு கேள்வி களுக்கு கழகத் தலைவர் பதில் கூறினார். நிகழ்வில்  சென்னை இளவரசன்,  சேலம் நாகராஜ், விக்னேஷ் அறிவுமதி, இலக்கியன், திருப்பூர்  கனல்மதி, தேன்மொழி,  பொள்ளாச்சி சபரி, ஈரோடு பிரதாப், கோவை வைத்தீஸ்வரி, பிரசாந்த், நாமக்கல் மனோஜ், சேலம் விக்னேஷ் கவுதம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: இந்தியாவுக்கே முன்மாதிரியாக சமூகநீதிக் கொள்கையை கடைப் பிடித்து வரும் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்  சேர்க்கை நடைபெற்று...

தூக்குத் தண்டனை தீர்வு அல்ல!

தூக்குத் தண்டனை தீர்வு அல்ல!

12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கட்டாய பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்குகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கிறார். ஜம்முவில் கத்துவா பகுதியில் முஸ்லிம் நாடோடி சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயதுப் பெண், ஜம்மு பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) காவல்துறை ஒத்துழைப்புடன் கூட்டுப் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்த நிகழ்ச்சி, சர்வதேச அளவில் மோடி ஆட்சியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டது. அதற்கு எதிர்வினையாக இந்த அவசர சட்டம் வெளி வந்திருக்கிறது. தூக்குத் தண்டனை என்ற தண்டனையே சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அய்.நா. உட்பட உலக நாடுகளிலிருந்து வலிமையான குரல் எழுப்பப்பட்டு வருகிறது. சட்டத்தில் தூக்குத் தண்டனை இருப்பதாலேயே குற்றங்கள் குறைந்து விடுவதில்லை என்பதையும் ஆய்வுகள் உணர்த்தி வருகின்றன. கத்துவாவில் ஆசிபா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதை  பாலுறவு வன்முறை சம்பவமாக மட்டுமே குறுக்குவதே தவறான பார்வை. பா.ஜ.க....

மருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்!

மருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்!

சுற்றுச் சூழலைப் பாதிக்கக் கூடிய ஆபத்தான திட்டங்களை உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிடம் கொண்டு வந்து திணிக்கின்றன. அன்னிய முதலீட்டு சுரண்டலுக்கு கதவு திறந்து வைத்திருக்கும், பார்ப்பன-பனியா நலன் காக்கும் இந்திய நடுவண் ஆட்சி, தொழில் வளர்ச்சி என்று கூறி, அத்தகைய ஆபத்தானத் திட்டங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர் லைட் ஆலை அப்படி வந்த ஒன்று தான். நச்சுக் கழிவுகளை உருவாக்க, சாயப் பட்டறை, தோல் பொருள் உற்பத்திகள், வெளிநாட்டு ஏற்றுமதி களுக்காக தமிழகத்தை நஞ்சாக்கி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் விதி முறைகளை கண்மூடித்தனமாக மீறி செயல்படும் உரிமைகளையும், மாநில அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இராஜஸ்தான் மாநிலத்தி லிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் பீடாசர் பகுதியில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று, அதுதயாரித்த மருந்துகளை எலிகளுக்குத் தந்து சோதனை செய்யும்...

மதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்

மதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத் தில்15.04.2018 ஞாயிறு அன்று ‘பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு’ மகளிர் தின மாவட்ட மாநாடு பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவை இசைமதி மற்றும் திருப்பூர் பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடந்து பெண்கள் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு அடிமைப்படுத்தப்படு கிறார்கள் என்பது பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பொதுக் கூட்டம் தொடங்கியது. நிகழ்விற்கு மணிமொழி தலைமை ஏற்க கோமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிவகாமி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார். ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி, தமிழ்நாடு அறிவியல் மன்ற  ஒருங்கிணைப்பாளர்  சிவகாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு...

களப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்’’ -விடுதலை இராசேந்திரன்

களப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்’’ -விடுதலை இராசேந்திரன்

  1996ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் சென்னையில் பெரியார் சிலை முன் 120 திராவிடர் கழக இளைஞர்கள் பழைய கருப்புச் சட்டையை கழற்றி புதிய கருஞ்சட்டை அணிந்து திராவிடர் கழகத்திலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட உறுதி ஏற்றனர். அந்த நிகழ்வுக்கு நான் தலைமை தாங்கினேன். அந்த 120 இளைஞர்களில் பெரும்பான்மை இளைஞர்கள் இராயப்பேட்டை யில் பெரியாரியலை முன்னெடுத்த களப்பணியாளர் தோழர் பத்ரி நாராயணனால் உருவாக்கப் பட்டவர்கள். இந்தப் புதிய அமைப்பு, திராவிடர் கழகம் நடைபோட்ட பாதையிலிருந்து விலகி புதிய திசையில் பயணித்து இயக்கப் போக்கில் பண்பு மாற்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். அதில் முதன்மையான கூறு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்போடு நின்றுவிடாமல் பார்ப்பனீயத்தை உள்வாங்கி ஜாதி வெறியோடு பட்டியலின மக்களுக்கு எதிராக நின்ற இடைநிலை ஜாதிகளின் பார்ப்பனீ யத்தையும் இணைத்து எதிர்க்க வேண்டும் என்பதாகும். பட்டியல் இனப்பிரிவு மக்களின் போராட்டங்களோடு கரம் கோர்த்த பெரியார் திராவிடர் கழகம்...