Category: பெரியார் முழக்கம்

வர்ணாசிரம கல்விக் கொள்கை

வர்ணாசிரம கல்விக் கொள்கை

இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பின் அதிகாரம் பெற்றவர்களாக மாறினார்கள். வேதங்கள் உருவாக்கப்பட்டன. இந்துத்துவா கொள்கையை வேலையின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை உருவாக்கினார்கள். முதல் மூன்று வர்ணங்களும் சேர்ந்து மனித சமூகத்திற்கு உழைப்பாளிகளாக இருந்த மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  அக்காலக்கட்டத்தின் குருகுல கல்வி முறை உருவானது. வேதங்கள் கற்றுக் கொள்வதும் கொடுப்பதும் பிராமணர்கள், ஆட்சி புரிபவர் சத்திரியர், வியாபாரம் செய்பவர்கள் வைசியர்கள். இவர்களே கல்வி கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. சூத்திரர், பஞ்சமர் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் வேதங்களை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்று மனுதர்ம கோட்பாடு கூறுகிறது. அக்கால கட்டத்தில் மறைந்திருந்து வில்வித்தை கற்ற வேடர் சமூகத்தை சேர்ந்த ஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டது வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில் தான். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுக் கல்வி முறை 1968இல் கோத்தாரி கமிஷனால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி...

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா சிங். வாயைத் திறந்தாலே இஸ்லாமிய எதிர்ப்பும், வெறுப்புமாக கொட்டித் தீர்ப்பவர். அந்த வகையில், மீண்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தைக் காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்றில், “இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், “இது பாரம்பரியம் அல்ல, மிருகத்தனமான செயல்” என்றும் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, “2024ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்டு 100ஆண்டுகள் நிறைவடைகின்றது; அந்த ஆண்டில் இந்தியா இந்து இராஷ்ட்ராவாக அறிவிக்கப்படும்” என்றும் மற்றொரு வீடியோவில் குறிப்பிட்டுள்ள சுரேந்திரா சிங், “மேற்கு வங்க மாநிலம் இலங்கை போன்றது;  இராமரைப் போன்று தாங்கள் ஏற்கெனவே  பாதி மேற்கு வங்கத்தை சிதைத்து விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவின்போது மீதமுள்ள மேற்கு வங்கமும் சிதைக்கப்படும்” என்றும் ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை யும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

கழக ஆதரவாளர் சென்னை பொன். இராமச்சந்திரன், கழகக் கட்டமைப்பு நிதியாக தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரனிடம் ரூ.5000 நிதி வழங்கினார். பெரியார் முழக்கம் 11072019 இதழ்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில்கூட பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் தொடர்கிறது. அந்த ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டில் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சில தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள். இந்த பெற்றோர்-ஆசிரியர் கழக நியமன ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாத சூழல்தான் நிலவி வருகிறது. கல்விப் பணி மட்டுமல்லாமல் நிர்வாகப் பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறையோடு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள...

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

பா.ஜ.க. மீது நாம் நடத்துவது சித்தாந்தப் போராட்டம். இது ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். பா.ஜ.க.வினர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் இல்லை; அவர்கள் சித்தாந்தத்தை என்னுடைய ஒவ்வொரு இரத்த அணுவும் எதிர்க்கிறது. இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் ‘இந்துத்துவ’ கொள்கையால் நிறுவனப்படுத்தி முடித்து விட்டார்கள். இனி வரப்போகும் தேர்தல்கள் சடங்குகளாகவே இருக்கும். அதிகாரத்தைத் துறக்கும் மனநிலை கொண்டவர்களால்தான் இந்தத் தத்துவத்தைத் தோற்கடிக்க முடியும். – ராகுல் காந்தி டிவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 11072019 இதழ்

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம்.கல்புர்கி 2015 ஆகஸ்டிலும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவருமே இந்துத்துவா மதவெறிச் சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். பகுத்தறிவாளர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர்கள். எனினும், இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடை யாளம் காண்பதில் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகை யின் ஆசிரியர் கவுரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப் பட்டது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கவுரி லங்கேஷ் படு கொலை வழக்கில், பெரும் அக்கறை எடுத்துக் கொண்ட அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து,...

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

1956இல் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்தது. அப்போது தமிழார்வம் கொண்ட ஒரு நீதிபதி சிவில் வழக்கொன்றில் தமிழில் தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக அத்தீர்ப்பை ரத்துசெய்தது. பின்னர், 1976இல் 4பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ராஜஸ்தானி வழக்கறிஞர் ஒருவர் போட்ட வழக்கை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது (1995). அச்சட்டத்திலுள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதன் விளைவாக தலைமை நீதிபதி சுவாமி, நீதிபதிகள் விரும்பும் மொழியில் தீர்ப்பை எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை ஆட்சிமொழியான தமிழில் எழுதுவது அநேகமாக நிறுத்தப்பட்டது. வக்கீல்களும் தாழ்வுமனப்பான்மையில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வாதாடலாயினர். இதைத்தான் 140 வருடங்களுக்கு முன்னால்...

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதன் முதலாக கணிப்பொறி வந்தபோது தனது 86ஆம் வயதில் கிண்டிக்குச் சென்று அது குறித்த விவரங்களைக் கேட்டு அறிந்தார் பெரியார். அன்றைய சென்னை மாநிலத்தில், மாணவர்கள் முன்னின்று நடத்திய மொழிப் போர் உச்சத்தில் இருந்த 1965ஆம் ஆண்டு, அதே ஆண்டில் நடந்த இன்னும் ஓர் அரிய நிகழ்வு பிற்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது எனப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந் திருந்த அடிப்படைப் பொறியியல் ஆய்வு மையத் துக்கு ஓர் புதுமையான கருவி வந்து இறங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. இந்தியாவில் முதன் முதலில் கணினியின் பயன்பாடு தொடங்கப்பட்டது, வடக்கே கான்பூர் ஐஐடியிலும் தெற்கே கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான். அக்கணினி மையத்தின் இயக்குநராக வா.செ.குழந்தைசாமி, போர்ட்ரான் முதலான கணினி நிரல்மொழிகளைப் பயிற்றுவித்து வந்தார். ஐபிஎம் 1620 வகை கணினியில் தகவலை ‘பஞ்ச் கார்ட்’ எனப்படும் துளை யிடப்பட்ட அட்டைகள்...

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும்  27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவப் பட்டப் படிப்பு, மேல் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் ‘அகிலஇந்திய கோட்டா’ என்ற பிரிவில் நடுவண் ஆட்சி இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதவீதமும் மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீதமும் இவ்வாறு பறிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள், கடந்த பத்து ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றன. பட்டியல் இனப்பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் வழங்கும்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமைகளை மறுக்கக் கூடாது என்று சமூக நீதி மருத்துவர் சங்கத்துக்கான பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில பிரிவுகளைக் காட்டி இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த சட்டப் பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை செய்யவில்லை என்று வழக்கு  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 11072019 இதழ்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 65 ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஈழத்தில் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களின் தாயகத்தை உறுதி செய்யாமல் நாடற்ற மக்களாக வாழ்கிறார்கள், ஈழத் தமிழர்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை அகதிகளாகத் தமிழகம் வந்தவர்கள் 95,000 பேர். இவர்களில் 60,000 பேர் மாநில அரசு நடத்தும் 107 அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். மாநில அரசு நடத்தும் இந்த முகாம்களுக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. ஏனையோர் முகாம்களில் அல்லாமல் தங்கள் சொந்த செலவிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்கிறார்கள். உள்ளூர் காவல் நிலையங்களில் அவ்வப்போது அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலாளர் களாக அழைத்துச் செல்லப்பட்ட பலர் தமிழ் ஈழப் பகுதிகளிலேயே தங்கி விட்டனர். 1983ஆம்...

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

‘வைகோ’ இராஜதுரோகி என்று குற்றம்சாட்டியிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஈழத் தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் ஆட்சி செய்த துரோகங்களை அவ்வப்போது கடிதங்களாக எழுதி, பிறகு அதைத் தொகுத்து ‘ஐ யஉஉரளந’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதையே தமிழில் மொழி பெயர்த்து, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா, சென்னை இராணி சீதை அரங்கில் நடந்தது (அந்த விழாவில் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்). அப்போது ஈழத் தமிழருக்கு இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கே கேடு ஏற்பட்டு விடும் என்று எச்சரித்தார். அந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ)வுக்கு எதிரான இராஜ துரோகம் என்று அன்றைய தி.மு.க. ஆட்சி வழக்கு தொடர்ந் தது. வழக்கில் ‘ஆம் இராஜ துரோகம் தான்’ என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து, ஓராண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. ‘ஈழத் தமிழருக்கு, ...

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் முன் வைத்த கோரிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதிநிலையைப் பாராட்டி மகிழ்கிறார். நிதிநிலை அறிக்கைத் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தமிழகத்துக்காக ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அகற்றி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட கூடுதலாக ரூ.6000 கோடியை ஒதுக்க தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். (பிரதான் மந்திரி அவாஸ் – யோஜனா – கிராமின் என்ற திட்டத்தின்கீழ்) ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. இயற்கைப் பேரிடர்கள் நிகழும் இடங்களில் அந்தப் பேரழிவுகளின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுவிக்க “பேரிடர் தடுப்பு பல்நோக்கு மின் மய்யக் கட்டமைப்பு” (ஆரடவi-hயணயசன-சநளளைவயவே யீடிறநச வசயளேஅளைளiடிn iகேசயளவசரஉவரசந) அமைக்க, நிதி நிலை அறிக்கையில் ரூ.7077 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி...

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்த பார்ப்பனர்கள், ‘சங்கிகள்’ இப்போது மகாராஷ்டிராவில் அதைப் பின்பற்றுகிறார்கள். வேத மதத்தை ‘பிராமணரல்லாத’ வெகு மக்கள் மீது ‘இந்து’ மதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு திணித்த பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களாக்கியதோடு  ஜாதிக் குழுக்களையும் உருவாக்கி மக்கள் ஒற்றுமையை சிதைத்தனர். குலத் தொழில் அடிமைத் தொழில் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப் பட்டது. குல தர்மப்படி வேதம் படிக்க வேண்டிய பார்ப் பனர்கள் மட்டும் வழக்கறிஞர்களாக மருத்துவர் களாக நீதிபதிகளாக உயர் அதிகாரிகளாகி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அதிகார மய்யங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு உரிமைகளைத் தடுத்து வந்தனர். அக்காலக் கட்டத்தில்தான், ‘இந்து’ சமூகத்தில் அடக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும் பான்மை சமூகத்தினருக்கு கல்வி – வேலை -அரசியல் உரிமை களுக்காகப் பெரியார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். “அப்போது பெரியார் ஜாதிப் பிரிவினையைத் தூண்டுகிறார்; இந்த கோரிக்கை...

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஒப்படைத்து எதிர்நீச்சலில் வாழ்ந்து காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி குறித்த வாழ்க்கைச் சுருக்கம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில், தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி! இவரது பெயருக்கு முன்பு பட்டுக் கோட்டை என்று அடைமொழி இருந்தாலும், இவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காருகுறிச்சி ஆகும். இவரது பெற்றோர் வாசுதேவ நாயுடு – கண்ணம்மாள், தந்தையார் வாசுதேவ நாயுடு பட்டாளத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) வேலை பார்த்தவர். அழகர்சாமி பசுமலையில் நான்காவது படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தவர். அதன் பிறகு, பட்டுக்கோட்டையில் அந்நாளில் நீதிக்கட்சியில் புகழ்பெற்ற வழக்கறிஞராய் இருந்த வேணுகோபால் நாயுடு என்பவரின் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார். அந்த பாங்கியில் வேலை பார்த்த பார்ப்பன மேலாளர்க்கும் இவர்க்கும் ஏற்பட்ட...

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட...

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம். கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு...

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

‘காதல்’  – ‘பேய்’ – ‘சண்டை’ என்று மசாலாக்களைக் கொண்ட திரைப் படங்கள் புற்றீசல்களாக வந்து கொண் டிருக்கும் நிலையில் ‘தர்ம பிரபு’ போன்ற சமூகச் சிந்தனைகளைக் கொண்டு மக்களுக்கான அரசியலைப் பேசும் படங்கள் வெளி வருவது மிகவும் அபூர்வம். முத்துக்குமரன் எழுதி இயக்கி, யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளி வந்திருக்கும் ‘தர்மபிரபு’ – பார்ப்பனர்கள் சூழ்ச்சி, ஜாதிக் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலை சாட்டையால் அடித்து நொறுக்குகிறது. ‘துக்ளக்’ சோ, பார்ப்பனர் உருவத்தில் ஒரு பாத்திரமே உருவாக்கப்பட் டுள்ளது. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள்கூட வெள்ளை பெல்டுக்கு (பூணூல்) பயப்பட வேண்டும் என்று ‘சோ’ வடிவில் வரும் ‘கோ. அரங்கசாமி’ என்ற பாத்திரம் பேசுகிறது. பெரியாரின் ‘கடவுளை மற மனிதனை நினை’ என்ற கொள்கையின் நியாயத்தை எமதர்மனாக வரும் புராணப் பாத்திரம் புகழ்ந்து பேசுகிறது.  பெரியார், அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் இன்றைய தேவையையும் வலியுறுத்துகிறது....

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது. 2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. 3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள். – என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய,...

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

30.06.2019 காலை 10 மணியளவில் ஒன்றிய தி.வி.க சார்பாக, ஆனைமலையில் கலந்துரையாடல்  நடைபெற்றது. பரப்புரைப் பயணத்துக்கு தயார் ஆவது என முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடலில், ஒன்றிய தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய அமைப்பாளர் சபரிகிரி, தோழர்கள் சிவா, கணேசன், மணி, பாலன், காஜா, சந்தோசு மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் இரா. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். ஏ.ஆர்.வி. சாந்தலிங்கம் – ரூ. 10000/-         மருத்துவர் வசந்த ஆல்வா – ரூ. 3000/- பழ.முருகானந்தம் – ரூ. 2000 /-                      – ஆகியோர் கட்டமைப்பு நிதியை அளித்தனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? சென்ற இதழ் தொடர்ச்சி இராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து இராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக இராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  இராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை இராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான். பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக்...

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். 1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கார்த்தி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

இந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று! இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்ப வில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்து வதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின்...

கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்

கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்

கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு மணிப்பாலைச் சார்ந்த வனிதா ஷெட்டி என்ற பெண் உதவிப் பேராசிரியர் கடந்த ஏப்.15ஆம் தேதி சென்றிருக் கிறார். அப்போது மடத்தில் இலவச உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் அமரச் சென்ற பேராசிரியரை சிலர்  தடுத்து நிறுத்தி மேல் தளத்துக்குப் போய்ச் சாப்பிட கட்டளையிட் டுள்ளனர். கீழ்தளத்தில் நடக்கும் பந்தியில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள் என்று கூறியவுடன், வனிதா ஷெட்டி அவமானப் பட்டு சாப்பிடாமலேயே வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். உடுப்பி மடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ‘பிராமணர்-பிராமணரல்லாதார்’ என்ற பாகு பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதற்கான நேரம் நெருங்கி விட்டது என்று “கருநாடக சோமு சவுதார்தா வேதிகா சங்கம்” என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைகள் அம்பலமான நிலையில் உடுப்பி கிருஷ்ணா கோயில் மடாதிபதி ‘வல்லப தீர்த்த சாமிஜி’ என்ற பார்ப்பனர்,...

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் – எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்: பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார். “நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண்...

நன்கொடை

நன்கொடை

திருவிடை மருதூர் வட்டம், அனக்குடி (அஞ்சல்), அம்மன் பேட்டை கிராமம் இரா.ராஜ்குமார்- எழிலரசி இணையருக்கு 15.06.2019 அன்று ஆண் மகன் வெற்றிச்செல்வன் பிறந்துள்ள மகிழ்வுக்காக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ. 1000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 27062019 இதழ்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்த நிலையில், திராவிடர் விடுகலைக் கழகக் குன்னத்தூர் நகரப் பொறுப் பாளர் சின்னச்சாமி தலைமையில் தோழர்கள் 20.6.2019 அன்று குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். விநாயகர் சிலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கோயில் கட்ட எழுப்பிய சுவரும் அகற்றப்பட்டு, காவல் நிலைய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம் மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000 காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000 தளபதி –      ரூ.   5,000 அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000 நாக பாலன் – ரூ.   2,000 செயராமன் –      ரூ.   1000 விசு – ஆடிட்டர் –      ரூ.   1000 ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000 விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000 கருப்பையா –     ரூ.   1000 சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500 விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500 டேவிட் –      ரூ.   500 குமரேசன்...

ஜாதியை உறுதிப்படுத்தும்  குலதெய்வ வழிபாடு

ஜாதியை உறுதிப்படுத்தும் குலதெய்வ வழிபாடு

கிராமக் கோயில்கள் குலதெய்வங்கள் – பார்ப்பன ஆகமங்களுக்கு எதிரானவை என்றும் அவை பண்பாட்டு அடையாளங்கள் என்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளை சில ‘முற்போக்கு’ பேசும் சிந்தனையாளர்கள்கூட நியாயப்படுத்து கிறார்கள். ஆனால் இந்த நாட்டார் வழிபாடு, ஜாதியவாதிகளின் பிடிக்குள் சிக்கி ஜாதிக் கட்டமைப்பை உறுதிப் படுத்தி வருவதோடு, கிராமங்களில் ஜாதி மோதல் களுக்கும் காரணமாக இருக்கிறது. இவை பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்த்து வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் அருகே 65 கிராமங்களைக் கொண்ட ‘வெள்ளலூர் நாடு’ எனும் பகுதி, ஆதிக்க ஜாதியினரான கள்ளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மூன்று கோயில்களை கள்ளர் சமூகத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ‘அம்பலத் துக்காரர்கள்’ என்ற நாட்டாண்மைக்காரர்கள், கோயிலை நிர்வகிக்கிறார்கள். இந்தக் கோயில் சொத்துகளும் கோயில் பணமும் முறைகேடாக அம்பலத்துக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அம்பலத்துக்காரர் பதவிக்கு வர முயன்று தோற்றுப்பான ஒருவர் அறநிலையத் துறைக்கு புகார் தந்தார். விசாரணையில் முறைகேடுகள் நடப்பதைக்...

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

திருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம். ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம்...

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா- இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண்,...

குழந்தைகளை ‘சுமைதாங்கி’களாக்கும் கல்வித் திட்டம்

குழந்தைகளை ‘சுமைதாங்கி’களாக்கும் கல்வித் திட்டம்

கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016இல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை 2018 டிசம்பர் 15இல் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், மே 31 அன்று புதிய அரசு கொள்கை வரைவை  வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன் 30 வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை, கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப, அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கட்டாய இந்தி மட்டுமே பிரச்சினை அல்ல. கஸ்தூரிரங்கன் கல்விக் குழு முன்வைக்கும் அடிப்படைப் பரிந்துரைகள் மீது எழுகின்ற கேள்விகளில் சில… பள்ளிக் கல்வி அமைப்பு முறை : மூன்று வயது தொடங்கி ஏழு வயது வரை ஆரம்பக் கல்வி 5 ஆண்டுகள். அதாவது, பிரீ.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை ஆதாரக் கல்வி. பிறகு, 3 முதல் 5 வகுப்பு வரை மூன்றாண்டுகளுக்குத் தொடக்கநிலைக்...

சண்டே கார்டியன் ‘அபாயச் சங்கு’ மிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்

சண்டே கார்டியன் ‘அபாயச் சங்கு’ மிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டாவது தொகுதிகளில் (யூனிட்) அணு உலைகளின் உறுதித் தன்மையைக் கண்டறியக் கூடிய கண்காணிப்புக் கருவி (ளுவசயin ஆடிnவைடிசiபே நுளூரiயீஅநவே) முறையாக செயல்படாமல் முடங்கிப் போயிருக்கிறது என்று உலகப் புகழ் பெற்ற ‘சண்டே கார்டியன்’ பத்திரிகை (ஜூன் 22, 2019) அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. அணு உலையில் நிகழ இருக்கும் செயல்பாட்டுக் குறைவு மற்றும் பாதிப்புகளை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி இது. அணுஉலையின் இயங்கும் போக்கு அதில் நிகழும் மாற்றங்களை இந்தக் கருவிகள் வழியாக கண்டறிந்தால்தான் ஆபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்துக்கு இந்த ஆபத்தை சுட்டிக்காட்டி, சண்டே கார்டியன் 12 நாள்களுக்கு முன் மின்னஞ்சல் அனுப்பியது. உடனடியாக இந்தக் கருவிகளை முறையாக இயங்க வைக்குமாறு அதில் வலியுறுத்தப் பட்டிருந்தது. இதற்கு எந்த பதிலும் நிருவாகத்திடமிருந்து வரவில்லை. பிறகு ஆலையின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி சுனில் ஸ்ரீவத்சலாவின் கவனத்துக்கும்...

‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்….

‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்….

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. ‘பெரியார் வாழ்க; தமிழ் வாழ்க’ என்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கத்துக்கு எதிராக பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர்களே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். ‘இராவண-இராம’ யுத்தம் நடந்த காலத்தில் இராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி அயோத்தி மக்கள் வேண்டினார்கள் என்பது ஒரு செவி வழிக் கதை. இராமன் போரில் வென்று சீதையையும் இராவணனிடமிருந்து மீட்டான் என்று இராமாயணம் கதை கூறுகிறது. இராமன் வெற்றி பெற்ற பிறகும் இப்போதும் ‘ஜெய் ராம்’ என்று ஏன் முழங்குகிறார்கள்; இப்போது ‘ஸ்ரீராம பகவானுக்கு’ என்ன ஆபத்து நேர்ந்திருக்கிறது? சீதையை யார் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்? ஆனாலும், காலங்காலமாக இராமாயணம் – பாரதம் என்ற புராணக் கதைகள், பார்ப்பனரல்லாத மக்களை மூளைச் சலவை செய்து,  வேத மதப்...

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்....

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

நடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர். அம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட் டுள்ளார்....

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி...

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘ஹறயல குசடிஅ சுநயஉவடிச’ (ஹகுசு) என்று பெயர். இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல-னுழுசு) என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம்...

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச்சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட் டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன்...

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

ஜாதி + பணம் = ‘நீட்’ தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட்வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம். மருத்துவக் கவுன்சில் (ஆஊஐ) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835 இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (ஹயமயளா குடிரனேயவiடிளே) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649 அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்… ஓராண்டுக்கு கட்டணம்  – ரூ. 1,36,526 இரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு – ரூ. 3,33,350 குறுகிய கால பயிற்சி – ரூ. 32,804 நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள். +2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

மலேசியாவில் இயங்கும் ஜாதி சங்கங் களின் பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர் தன்மான இயக்கம், மலேசிய பிரதமரிடம் நேரில் மனு அளித்துள்ளது. இது குறித்து அமைப்பு சார்பில் செயலாளர் விந்தைக் குமரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழர்கள் சாதியெனும் கொடிய உணர்வால் பிரிந்து கிடக்கிறோம். சாதி அடையாளத்தை வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படும் இந்த காலத்தில்…. சாதியின் பெயரால் சங்கங்கள் அமைத்து செயல்படுவோரும் உண்டு. இது தமிழர்களை மேலும் பிரிப்பது மட்டுமல்லாது இழிவுப்படுத்தும் செயலே… சாதியற்ற தமிழராக ஒற்றுமை நிறைந்த இனமாக நாம் வாழ வேண்டும். அரசு வழியாக சாதியை ஒழிப்பதற்கு… இந்நாட்டில் இயங்குகின்ற சாதி சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு ஒன்று மலேசிய நாட்டுப் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் முன்னெடுப்பில், தமிழர் ஒற்றுமை பேணும் இயக்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த மனு அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 20062019 இதழ்

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

இராமன் பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று கிடையாது ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

“இராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி இராமாயணத்தை அல்லது வேறெந்த இராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வரலாற்றைத் திரித்திடக்கூடாது” என்று வரலாற்று அறிஞர் பேரா. ரொமிலா தாப்பர் கூறினார். “அயோத்தி: நம்பிக்கையாளர்களின் நகரம், நம்பிக்கையற்றவர்களின் நகரம்” (ஹலடினாலய:ஊவைல டிக குயiவா, ஊவைல டிக னுளைஉடிசன) என்ற தலைப்பில் அயோத்தி நகரத்தின் வரலாறு, வலைசிங் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, இந்தியக் கலாச்சார மன்றத்தின் (ஐனேயைn ஊரடவரசயட குடிசரஅ) சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழ மையன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேரா.ரொமிலா தாப்பர் பேசியதாவது: அயோத்தி கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் பலவிதமான கடவுள் நம்பிக்கையாளர்கள் வணங்கும் இடமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இடமாகவும் இருந்து வந்திருக்கிறது. வலைசிங் தன்னுடைய இந்நூலில் சுமார் 3,300 ஆண்டு கால அயோத்தியின் வரலாற்றை விவரித்திருக்கிறார். இந்த 3,300 ஆண்டுகளில் எண்ணற்ற...

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை. கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. ‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ –  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’...

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, 2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல்...