வினா – விடை

  • காஞ்சி குரு விஜயேந்திரனை விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும்.                 – தமிழ்நாடு பிராமண சமாஜம்

கைது செய்வதோடு நிறுத்தக் கூடாது; விஜயேந்திரன் கொலை வழக்கில் எந்த சிறையில் இருந்தாரோ அதே அறையில் போட்டு பூட்ட வேண்டும்; அப்பத் தான் புத்தி வரும்.

  • ஆன்மீகப் பயணம் முடிந்தது; அடுத்து அரசியல் பயணம் தொடங்கு கிறேன். – சசிகலா

தொடக்க விழா – கொடநாடு ‘எஸ்டேட்டில்’; இரண்டாவது விழா – கருநாடகா நீதிமன்றத்தில்; தவறாது வருக!

  • சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலிருந்து முகலாயர் வரலாறு – ஜனநாயகம் பற்றிய பாடங்கள் நீக்கம்.. – செய்தி

அதுக்கு பதிலாக புல்டோசர் வைத்து இடிப்பது; ஜீப் ஏற்றி சாகடிப்பது போன்ற ‘அகிம்சை’ தத்துவங்களை சேர்க்கலாம்.

  • நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காட வேண்டும்; இல்லையேல் திருமண வீட்டில் மந்திரங்கள் ஓதுவதுபோல யாருக்கும் புரியாது.

– உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘ஆண்டி இந்தியன்’ எச்.ராஜா, எங்கே போயிட்டீங்க… இதுக்கு ‘ஹாட்டா’ ஒரு பதிலடி கொடுங்க…

  • ‘முரசொலி’ பற்றிய அவதூறு பேச்சு வழக்கில் ஆஜராக விலக்கு கோரி அமைச்சர் முருகன் மனு. – செய்தி

ஏன் மனு போடுறீங்க… வழக்கை அடுத்த தலைவர் அண்ணாமலை பெயருக்கு மாத்தச் சொல்லுங்க… பிரச்சினை ‘ஓவர்’.

  • பிராமணர் என்பதாலோ – பாரம்பர்ய அர்ச்சகர் என்பதாலோ கோயில் களில் தனிச் சலுகை ஏதும் கிடையாது. – அறநிலையத் துறை

இதுக்குப் பேருதான் சமுதாயப் புரட்சி!

பெரியார் முழக்கம் 28042022 இதழ்

You may also like...