தலைநகரம் நோக்கி தமிழினம் குவியட்டும்
பிப். 26 இல் சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு. மக்களுக்கு எதிராக அணுஉலைத் திட்டத்தை திணிக்க துடிக்கிறது மத்திய காங்கிரஸ் ஆட்சியும் பார்ப்பன இந்துத்துவ சக்திகளும். போராட்டக் குழுவினர் தாக்கப்படுகின்றனர். துக்ளக், தினமலர், ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க., பார்ப்பன சக்திகள், அணு உலைக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் – மக்கள் குரலை ஒலிக்க அதிகார மிரட்டலுக்கு அடிபணியோம் என்பதை அறிவித்திட – தலைநகரில் திரளுவோம்! அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்தும் மாநாட்டுக்கு – தமிழர்களே, திரண்டு வாரீர்! கூடங்குளம் எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் பகுத்தறிவுப் போராளி அப்பாவின் பகுத்தறிவு கொள்கையும் அம்மாவின் காந்திய சிந்தனையும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட் டத்துக்கு தலைமையேற்று கடும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது உறுதியாகப் போராடி வரும் சுப. உதயகுமார், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். போராட்டத்தின் வழியாக தனது தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வந்துள்ள இந்தப்...