நந்தினிக்கு நீதி கேட்டு மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 8.2.2017 புதன் அன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு அரியலூர் தலித் சிறுமி நந்தினி கூட்டுப் பாலியல் பலாத்காரப் படுகொலையை செய்த இந்து முன்னணியினரை கைது  செய்ய வலியுறுத்தி நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி. கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்டம் கழக செயலாளர்) தலைமையில், க. இராதாகிருட்டிணன் (ஆதித் தமிழர் பேரவை), க. ராஜாத்தி (அனைத்திந்திய மாதர் சங்கம்), செ. கருப்பண்ணன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி),

மா. சிவக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார். சு. குமரப்பா எழுச்சியாக முழக்கங்களை முழங்கினார். அ.சுரேசுகுமார் (நகர செயலாளர்) நன்றி கூறினார்.

கூட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், அ.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சு.சம்பத்குமார், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவை ஈசுவரன், ஆர்.எஸ். சக்திவேல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை பேருந்து நிலையத்திலிருந்து மாணவ, மாணவியர், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் கேட்டு அறிவு விளக்கம் பெற்றனர்.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

 

You may also like...