பழனியில் பெரியார் படிப்பகம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அ.கலையம்புத்தூர் திராவிடர் விடுதலை கழகத்தின் தந்தை பெரியார் படிப்பகத் துவக்க விழா 28.02.2017 அன்று காலை 10.00 மணிக்கு வண்டிவாய்க்கால் பகுதியில் சிறப்பாக நடைப்பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி படிப்பகத்தை திறந்து வைத்தார். திவிக சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வி. ஜான்சன் கிறிஸ்டோபர் (மாவட்ட செயலாளர் விசிக), பாஸ்கர் (மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி), து. சுரேஷ், மள்ளர் (சிறைவாசிகள் மீட்பு இயக்கம்), கரு. இரணியன் (தமிழ்ப் புலிகள்) மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் சிறப்புரை யாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் படிப்பகத்தைப் பயன்படுத்துதல் பற்றியும், அதன் பலன் பற்றியும் கருத்துரை வழங்கி நிறைவு செய்தார். படிப்பகம் உருவாக ஒத்துழைத்த பகுதி கழகத் தோழர்கள் பா.ராஜசேகரன், ஆ.திருச் செல்வம், ஜான்குட்டி, மா.கார்த்திக், வே.ஆனந்தன், ஆ.மாரியப்பன் (எ) துரையன், சு.சங்கிலிபாலன், மு.கார்த்திக்ராஜா, மு.அரங்கநாதன், க.மாரிமுத்து, த.சபரி நாதன் அனைவருக்கும் சு.மருதமூர்த்தி நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...