Author: admin

ஜாதி ஒழிப்பாளர்கள் ஓர் ஆயுதமாக்கிப் போராட என்னை, நான் ஒப்படைத்துவிட்டேன் உடுமலை கவுசல்யா போர் முழக்கம்

ஜாதிய ஆதிக்கக் குடும்பத்தில் வளர்த் தெடுக்கப்பட்ட நான், அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புப் போராளியாகி விட்டேன் என்றார், ஜாதி வெறிக்கு தன் துணைவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா. ஆக.20ஆம் தேதி சிதம்பரத்தில்; விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய ‘திருமா-55’ நிகழ்வில் பங்கேற்று அவர் நிகழ்த்திய உரை. நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்த மில்லாதது; சுமக்கமுடியாத கனம் பொருந்தியது. திருமாவளவன் என்கிற ஒரு அரசியல் ஆளுமை குறித்து சிறியவளான நான் பேசுவதற்கு இனிமேல் தான் என்னை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், நான் இந்த நிகழ்விற்கு வந்தமைக்குக் காரணம் நான் உங்களில் ஒருத்தி, உங்கள் குடும்பத்தில் ஒருத்தி என்பதைப் பறைசாற்றுவதற்குத்தான். என் குடும்பம், என் பெற்றோர் முத்துராமலிங்கத் தேவரின் வம்சம் எனச் சொல்லிக் கொள்பவர்கள். அவர் குறித்து பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அந்த உருவம் சாதிவெறியைத் தூக்கிப் பிடிக்கிறவர்களின்...

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்களில் பெரியார் இயக்கம் உருவாக்கிய பண்பாட்டுப் புரட்சி – வாழ்க்கை நெறியாகியிருப்பதைக் காண முடிகிறது. புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமணங்களை மாலை நேரத்தில் நடத்துவது பல கிராமங் களில் வழக்கமாக மாறியிருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்த, வாழும் பெரியார் தொண்டர்கள் இதை வாழ்க்கை நடைமுறையாக மாற்றி யிருக்கிறார்கள். இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேடு (ஜூலை 19) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை. ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடக்கும் 99 சதவிகித திருமணங்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30-க்குள் தான் நேரம் குறிக்கிறார்கள். நாம் போயிருந்த போதும் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் தனது அண்ணன் மகளின் (மாலை நேர) திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சநதிக்குளம் கிழக்கைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கட். “காலையில் திருமணம் செய்யுறது தானே உலக வழக்கம், நீங்க மட்டும் ஏன் உல்டாவா மாலையில் திருமணம் செய்கிறீர்கள்?” என்று...

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

20-8-2017 காலை 11-00 மணியளவில் சிவ.விஜய பாரதி – பேரா. சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யேற்றார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலன் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம், நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம், கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

கடற்கரையில் நடந்த கழகத் தோழர்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட திருவான்மியூர் பகுதி கலந்துரையாடல் கூட்டம் நா.விவேக் (தென் சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்) தலைமையில் 20.08.2017 மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கழகத்தில் புதிதாக இணைத்துக் கொள்ள முன் வந்த இளைஞர்களுக்கு இயக்கக் கொள்கை, நடைமுறைகள் குறித்து விளக்கிட பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த சந்திப்பை தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.  முதல் முறையாக திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுதி சார்ந்த தோழர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தோழர்களிடம்  பெரியாரிய கொள்கைகளை எடுத்துரைத்து தோழர்களின் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கமளித்தனர். செயற்பாடுகள், களப்பணிகள் போன்றவைகளை குறித்தும் கலந்துரையாடினார்கள். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

பிறந்த நாள் அன்பளிப்பு

பிறந்த நாள் அன்பளிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் இரா. சண்முகசுந்தரம் – பேராசிரியர் ருக்மணி ஆகியோர் மகன் ச. இராமலிங்கம் வால்டர்ஸ் – நி. சியாமணி இணையரின் மகன்கள் கவின் 18.6.2017 அன்று 5ஆவது பிறந்த நாளும், நவின் 6.3.2017 அன்று முதல் பிறந்த நாளும் ஆஸ்திரேலியா சிட்னியில் வைத்து கொண்டாடினர். பேரன்கள் பிறந்த நாள் மகிழ்வாக பேராசிரியர் சண்முக சுந்தரம் – பேரா. ருக்மணி ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.2500/- கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 31082017 இதழ்

பெரியார் கைத்தடி ஊர்வலம் சென்னை 31082017

திராவடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் கைத்தடி ஊர்வலம் இன்று உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்காத இந்து முண்ணனி இராமகோபாலனே விநாயகர் அரசியலுக்கு அழைக்காதே, எங்கள் நாடு தமிழ்நாடு இங்கு ஏதடா இந்து நாடு என்ற முழக்கத்துடன் சென்னை ஐஸ்அவுஸில் 31.8.17 மாலை 4.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஊர்வலம நடைப்பெற்றது. கழக தோழர்கள் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டு110 பேர் கைதானார்கள். அனைவரும் இராயப்பேட்டை பேகம்சாகிப் தெருவில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் காவலில் உள்ளனர். செய்தி குகநந்தன்

இணையேற்பு விழாவும் ! முற்போக்காளர்கள் கருத்துரைகளும் ! ஈரோடு 03092017

கழகத்தின் ஈரோடு மாவட்டச்செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் இல்ல இணையேற்பு விழா ! இணையர்கள் : தமிழ்ப்ரியன் ராஜநந்தினி நாள் : 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் 10 மணி வரை இடம் : கே.கே.எஸ்.கே.மஹால் திருமண மண்டபம், அசோக புரம்,ஈரோடு. கழகத்தலைவர்,கழகப் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கழக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும் – கருத்தரங்கம் மதுரை 01092017

நாளை (01.09.2017) மதுரையில், “கருத்தங்கம்” ‘நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும்’ ‘பறிபோகும் சமூக நீதி’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 01.09.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 5 மணி இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கழகம்.

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! சென்னை 31082017

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! நாள் : 31.08.2017 வியாழக்கிழமை, மாலை 3.00 மணிக்கு. இடம் : ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை-05. மக்கள் வாழ்வுரிமைகளை பறித்தவர்கள் நடத்தும்… விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. தலைமை : தோழர்.விடுதலை க.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். #வாழ்வுரிமைக்கான_போராட்டத்துக்கு_குரல்_கொடுப்போம். #வாருங்கள்_தோழர்களே.! #மதவெறியை_மாய்போம்.! #மனிதநேயம்_காப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இணையதள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி ஈரோடு 20082017

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் தோழர் இரத்தினசாமி ஈரோடு அவர்களின் ஒருங்கிணைப்பில் 20082017 அன்று சூரம்பட்டிவலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோழர் இரத்தினசாமி அவர்கள் இணையத்தில் செயல்படவேண்டிய முறைகள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பரிமளராசன் அவர்கள் தற்போதைய சூழலில் பெரியாரியியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளிடம் இருந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் முகநூலில் கழக தோழர்கள் எங்ஙணம் தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார் தோழர் விஜய்குமார் கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் திருச்செங்கோடு தோழர் பூபதி மீம்ஸ் பற்றியும் விளக்கினர் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தோழர் வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த பயிற்சி வகுப்பு...

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம்...

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 24082017 இதழ்

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் சதுரங்காடி பெரியார் திடலில் 22.7.2017 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாரூக் நினைவு மேடையில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘மாற்றம்’ நாடகக் குழுவினர் நாடகம், தற்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியது. அதனைத் தொடர்ந்து மழலையர்களின் நடனம் நடைபெற்றது. அவர்களுக்கு மேடையில் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மேட்டூர் நகர செயலாளர் அ.சுரேசு குமார் தலைமை தாங்க, நங்கவள்ளி அன்பு உரைக்குப் பின் வே மதிமாறன், காமராசரைப் பற்றி சிறப்புரையாற்றினார். காவேரிகிராஸ் பகுதி காளியப்பன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது. மேட்டூரின் முக்கியப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கழகக் கொடிகள் நகரமெங்கும் நடப்பட்டிருந்தன. கூட்டத்தில் அதிகளவு மக்கள் உரைக் கேட்டு...

வாஞ்சிநாதன் மனைவிக்கு முத்துராமலிங்க தேவர் அடைக்கலம் தந்தாரா?

பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தீவிர ஆதரவாளரான முத்து ராமலிங்க தேவர், தென் மாவட்டங் களில் தலித் மக்களின் உரிமை களுக்காகப் போராடிய இமானுவேல் சேகர், படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர். ‘தேசியம் – தெய்வீகம்’ என்பதே தனது இரு கண்கள் – என்று கூறி செயல்பட்டவர்.  தென் மாவட்டங்களில் ஜாதியக் கட்டமைப்பும் ஜாதிய உணர்வும் ஆழமாக புரையோடியிருப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். அவர் வரலாறு குறித்து செவி வழி செய்திகள் ஆதாரங்களின்றி ஏராளமாக பரப்பப் பட்டு வருகின்றன. அண்மையில் ‘தமிழ் இந்து’ நாளேடு (ஆக. 16) இதே போல் ஒரு ‘கற்பனை’யை வரலாறாக பதிவு செய்தது. நெல்லை மாவட்டம் மணி யாச்சியில் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான் வாஞ்சிநாதன் அய்யர். ஆஷ் ‘சனாதன தர்மத்துக்கு’ எதிராக செயல்படுவதால் அவரை சுட்டுக் கொன்றதாக ஒரு...

வினாயகன் கதை அன்றும், இன்றும்! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள்...

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

ஜெயராணி – திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது

திராவிடர் கழகத்தில் துடிப்புடன் பணியாற்றியவரும் அந்தக் கழகம் நடத்தும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்ட பெரியார் குடும்பத்தைச் சார்ந்த ‘பெரியார் சாக்ரடீஸ்’ விபத்தில் இளம் வயதில் மரணமடைந்தார். அவரது பெயரால் நினைவு விருதுகளை அவரது நெருக்கமான தோழர்கள் அஜயன் பாலா, நாச்சிமுத்து மற்றும் தோழர்கள் வழங்கி வருகின்றனர். இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்டு 6ஆம் தேதி மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. ‘மஞ்சள்’ நாடகத்துக்கு சிறப்பாக உரையாடல் எழுதியவரும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியருமான ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன. ஜாதி வெறியர்களின் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் காரணமாக தலை மறைவாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட் டிருந்த திவ்ய பாரதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. இந்த இரு இளம் தோழியர்களின் ஜாதி ஒழிப்பு செயல்பாடு களையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,...

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

மருத்துவ முதுகலைப் படிப்புக்கான நீட் தேர்வில் ஊழல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியுள்ளது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங் களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி களுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது. கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy Admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில்...

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது. அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை. பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள். இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட்...

விநாயகர்  சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

14.10.1956 அன்று நாக்பூரில் புத்தமார்க்கம் தழுவிய அம்பேத்கர், மதமாற்றத்துக்குத் திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களிடம் 22 உறுதி மொழிகளைக் கூறி ஏற்கச் செய்தார். விநாயகன்,  இலட்சுமி, இராமன், கிருஷ்ணன் மற்றும் இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் என்பதே அந்த உறுதி! புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்த அம்பேத்கரிஸ்டும் ஒருபோதும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டார்கள்; பங்கேற்கவும் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பது அம்பேத்கர் உழைத்த இலட்சியத்துக்கு செய்யும் துரோகம். அம்பேத்கர் – நாக்பூரில் எடுத்த உறுதிமொழிகளை இங்கு வெளியிடுகிறோம்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்க மாட்டேன். இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்க மாட்டேன். விநாயகன், லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்க மாட்டேன். கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்ப மாட்டேன். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான...

காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழகம் மனு விநாயகன் ஊர்வல சட்ட மீறல்களை தடுத்து நிறுத்துக!

மதவாத சக்திகள் விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஊர்வலங்கள் நாட்டில் பதட்டத்தை யும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றன. மத அரசியலை மதங்களுக்கான பண்டிகைபோல மாற்றிக் காட்டி ஊர்வலம் நடத்துவதும்; அடிப்படை மத உரிமை என்றும் இந்து முன்னணியைச் சார்ந்த இராம கோபாலனும் மதவாத அமைப்புகளும் கூறி வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் இந்த ஊர்வலங்களில் நடக்கும் விதி மீறல்களைத் தடுக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்ற பார்ப்பனரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பதட்டம் நிறைந்த பகுதிகளில் விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை இதற்கான இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும் என்று வரையறுத்தாலும் அவைகள் மீறப்படுகின்றன. காவல்துறை அனுமதித்த சிலைகளைவிட கூடுதலாக சிலைகள் வைக்கப்படுகின்றன. கடல் நீரை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்தி சிலைகளை செய்யக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சித்...

502 விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து அமைப்புகளுக்கு ஒரு கேள்வி”  22082017

502 விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து அமைப்புகளுக்கு ஒரு கேள்வி” 22082017

  தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா, சிவசேனா என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் சிறு சிறு குழுக்கள் அத்தனையும் பாரதீய ஜனதா கட்சியின் தூசிப்படைகள். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைவதற்காக அடித்தளம் அமைத்து கொடுப்பதற்காக செயல்படும் இயக்கங்கள். இந்த அமைப்புகள் தான் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றன. அவர்களை பார்த்து நாம் கேட்கிற கேள்வி ஒன்று உண்டு. இப்போது, “மோடியின் பாரதீய ஜனதா கட்சி கொண்டு வந்திருக்கிற நீட் தேர்வானலும், போராடுகிற விவசாயிகளை அடிமைப்படுத்துகிற பிரச்சனையாக இருந்தாலும், சிறுகுறு தொழிலாளர்களை ஒடுக்குகிற ஜி.எஸ்.டி வரி திட்டத்தை கொண்டு வந்திருக்கிற திட்டமாக இருந்தாலும், மண் வளத்தை பாதிக்கிற ஓ.என்.சி யின் எரிவாயு எடுக்கின்ற திட்டமாக இருந்தாலும், இத்தனை திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை இந்துக்கள் தான்”. இந்த இந்துக்கள் உரிமைகளை மோடி ஆட்சி பறிக்கிறதே என்பதை எதிர்த்து குரல் கொடுக்காத...

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

மனிதன் கையால் மலம் அள்ளும் அவலம்; விழிப்புணர்வை ஏற்படுத்திய “மஞ்சள்” நாடக நிகழ்வு! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார் ! கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான...

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. கழகத்தலைவர் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினார் ! கழகப்பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் இந்தய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது...

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

  ஆதித்தமிழர் கட்சியின் “நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா 30.06.17 அன்று AICUF இல்லத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , மனுஷபுத்திரன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், மற்றும் ஜெபமாலை ராஜாஆகியோர் கலந்துகொண்டனர். நடுகல் மாத இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட தோழர் ஜெபமாலை ராஜா அவர்கள் பெற்றுக்​கொண்டார் புகைப்படங்களுக்கு

மணப்பாறையில் கழகப் பொதுக்கூட்டம் ! 10082017

கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, சமூகநீதி சமத்துவப் பரப்புரைப் பயணத்தின் மதுரை அணி சார்பாக, மணப்பாறையில் பெரியார் சிலை அருகில் 10.08.2017 மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காவை. இளவரசுவின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்வில் தோழர்.தனபால் தலைமை வகித்தார். தோழர்கள் அறிவுச்செல்வன்,விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் தோழர்.சீ.ரா ஆனந்தன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் தோழர். பாவலர் பசுலுதீன், ஆதிதிராவிடர் நலப்பேரவையின் தலைவர் தோழர்.மணிவண்ணன், மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் 90 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர்.தோழர் திருமால், CPI யின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன், திராவிடர் கழக நகரச் செயலாளர் CMS ரமேஷ், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர்.துரை.காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.. 90 வயது கடந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர் அய்யா திருமால் அவர்களுக்கு கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி நினைவுப்பரிசு...

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017. கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இழந்து வரும் உரிமைகளை மீட்போம் !தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் ! எனும் முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக 11.08.2017 அன்று மாலை 6 மணிக்கு சேலம் முருங்கப் பட்டி சந்தை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அமுதவர்சினி – சிவகுமார் இல்லற ஏற்பு விழா! சூலூர் 25082017

சூலூரில் 25082017 இல்லற ஏற்பு விழா ! ”அமுதவர்சினி – சிவகுமார்.”ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது . நாளை 25.8.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி, சூலூர், கே.எஸ்.வி.திருமண அரங்கில் கழகத்தலைவர் தலைமையிலும், பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரையுடன் நடைபெற உள்ளது.

கழகத் தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்   மே 17 தோழர்களுக்காக அறிவுரைக் குழுமம் சென்னை 29062017 மஞ்சள் நாடகம் சென்னை 30062017 ஆதி தமிழர் கட்சியின் ‘நடுகல்’ ஏடு வெளியீடு சென்னை 30062017   காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை 15072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017 பேரா. ஜெயராமன் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை 18072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 21072017 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம் சென்னை 29072017   பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது சென்னை 06082017 தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017   நாகராஜ் – அசுவிதா இணையேற்பு திருப்பூர் 10092017 தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா 16092017 கணியூர்,...

விநாயகர் சதுர்த்தி – திருப்பூர் திவிக மனு 23082017

திருப்பூர்மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23082017 அன்று, விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்ச்சியில், காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் ஆணைகளை நிறைவேற்றி அவர்களின் கடமைகளை தவறாமல் செய்திட வலியுறுத்தி, மனுக்களை ஆணை நகல்களுடன் இணைத்து (அரசு அதிகாரிகளிடம்) திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துணைக் கண்காணிப்பாளர்,  காவல்ஆய்வாளர்,  மாநகராட்சி ஆணையாளர், போக்குவரத்து துறைஅதிகாரிகள், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் ஆகியோரிடம் வழங்கி தங்களது கடமையை தவறாமல் செய்யவும் இவற்றை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தோழர் துரைசாமி மாநிலப்பொருளாளர், தோழர் முகில்இராசு, திருப்பூர்மாவட்டதலைவர், தோழர் நீதிராசன் மாவட்டச்செயலாளர், தோழர் வீ. தனபால் திவிக மாநகரத்தலைவர், தோழர் மாதவன் மாநகரச்செயலாளர், தோழர் முத்து மாநகர அமைப்பாளர் மற்றும் தோழர் இராமசாமி திருப்பூர் தெற்கு பகுதிசெயலாளர் ஆகியோர் சேர்ந்து மனு வழங்கப்பட்டுள்ளது.

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

20082017 அன்று காலை 11-00 மணியளவில் தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ’நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது.. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம்,நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம் , கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர் புகைப்படங்களுக்கு

விநாயகர் சதுர்த்து நிகழ்ச்சியில் நீதிமன்ற,அரசு ஆணைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட கழகம் சார்பில் மனு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்.தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்) அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களுடன் இன்று (18.08.2017) காலை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில்… வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வினாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.வினாயகர் சிலை தயாரிக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பிளாஸ்டிக் ஆப் போரிஸ், இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வினாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சில மதவாத கும்பல்கள் வினாயகர் ஊர்வலங்களின் மூலம் மதநல்லொழுக்கத்திற்கு எதிராக செயல்படும் செயல்பாடுகளை தடுக்க காவல் ஆணையரை சந்தித்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை அலுவலகத்திலும், சென்னை மாசுகாட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் மனுவை அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

மாநாட்டின் தீர்மானங்கள் ‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: காவல்துறையில் தனிப் பிரிவு :  தீர்மானம் : 1 – ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும்...

தலையங்கம் திருச்செங்கோடு தீர்மானங்கள்

2012 ஆகஸ்டு 12ஆம் தேதி ஈரோட்டில் உருவானது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. தடம் மாறாத பெரியாரியல் பயணத்தை முன்னெடுக்க உறுதி ஏற்று இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து  களமாட முன் வந்தனர். மாறி வரும் அரசியல் சமூக சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். பொய்யான வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பலவீனங் களையும் மூலதனமாக்கி இந்தியாவின் அதிகாரத்தைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரம் தங்களிடம் வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையுடன் ‘பார்ப்பனிய–மதவாதத்’ திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்கள் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்காக எத்தகைய ‘ஜனநாயக’ படுகொலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறை அரசியலுக்கும் நேர் முரணாக மக்கள் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கும் வலிமையான கருத்தியல் பெரியாரியம்; அம்பேத்கரியம். இந்த உண்மை,...

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

ஒற்றைக் கலாச்சாரத்தை வலிந்து திணிப்பது இந்தியாவை அழித்து விடும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி.ஷா). ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு (ஆக.9, 2017) அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார். ‘தேசியம்’ என்பது குறித்து அவர் கூறுகையில், ‘தேச பக்தி, தேசியம்’ என்பவை வரையறைகளுக் குட்பட்டதே ஆகும். நைஜிரிய நாட்டின் எழுத்தாளர் சிம்மானந்தா நாகோசி அடிச்சே தேசியம் – தேசபக்தியை “ஒற்றைக் கதையாடலின் ஆபத்து” என்று கூறுகிறார். ஒரே கண்ணோட்டத்தில் தேசியத்தைப் பார்க்க முடியாது. ‘தேசியம்’ என்பது பன்முகத் தன்மையானது என்ற புரிதல் அவசியம். பல்வேறு இனங்கள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதே ‘தேசியம்’ என்ற புரிதலுக்கு வராமல் ஒற்றைப் பண்பாடு கொண்டதே  தேசியம் என்று செயல்பட்டால் அது ‘பாசிசம் –நாசிசம்’ என்ற இட்லர், முசோலினியின் கோர முகமாகிவிடும். தேசியத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைப்பது ஆபத்தானது. சட்டத்தின் அதிகார முனையில் திணிக்கப்படும் கலாச்சார தேசியம் வெறுப்பையும்...

பரப்புரைக்குப் புறப்பட்டார்கள் கழகத் தோழர்கள் கருத்துகளுக்கு மக்கள் பேராதரவு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழ் நாட்டில் தனித்தன்மை காப்போம்; பரப்புரைக்கு பொது மக்கள் பேராதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத் தின் தனிச் சிறப்பைக் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 நாள் பரப்பரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து புறப்படும் பரப்புரைக் குழு  மட்டும் 7 நாட்கள் பரப்புரை நடத்துகிறது. சென்னை பரப்புரைக் குழுவின் தொடக்கப் பொதுக் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி மாலை சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோயில் அருகே சிறப்புடன் நடந்தது. ‘விரட்டு’ பண்பாட்டுக் கலைக் குழுவினர் கலை நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தன. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், இந்தித் திணிப்பு, கதிராமங்கலம், புதுக்கோட்டை மக்கள் பாசனப் பகுதியை மலடாக்கும் ஓ.என்.ஜி.க்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட பயணத்தின் நோக்கங்களை விளக்கும் நிகழ்வுகளை இசையாக வும் வீதிநாடகங்களாகவும் நடத்தினர்....

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது. அதன் முக்கிய பகுதிகள் : மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக்...

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

மோடியின் நடுவண் ஆட்சி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சி முறையாக மாற்றியமைத்திடும் சட்டபூர்வ முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. மொழி வழியிலமைக்கப்பட்ட மாநிலங்களும் மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இறையாண்மையும் இந்தியாவை ‘இந்துத்துவா’ நாடாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலோடு இந்த ஆபத்தான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர். பொதுப் பட்டியலில் கல்வி உரிமை இருப்பதைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையும் நீட் தேர்வுகளும் வந்து விட்டன. உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் உணவு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டம் திணிக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் கீழ் வரும் கால்நடைத் துறையிலும் தலையிட்டு மாட்டு விற்பனையை ஒழுங்குப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்.  மருத்துவ சுகாதார சேவைகளையும் முடக்குகிறார்கள். இப்போது மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனையின் சில பகுதிகளை தனியே பிரித்து, தனியாருக்கு குத்தகைக்கு விடும் ஒரு ஆபத்தான யோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். ‘நிதி அயோக்’...

அர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்

அர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி அதற்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்காதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவெற்றியூரை சேர்ந்த சபரி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. இதன்படிஅனைத்துபிரிவினருக்கும்அர்ச்சகர்பயிற்சிஅளிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் நான்கு மையங்கள் சைவத்திற்கும், இரண்டு வைணவத்திற்கும் ஒதுக்கப்பட்டன. இந்த மையங்களில் 2007- 2008 ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்தனர். அதில் நானும் ஒருவன். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு எனக்கு ஜூனியர் சைவ அர்ச்சகருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை கோவில்களில் பணியமர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 208 பேரில் ஒருவருக்குக் கூட இதுவரை பணி வழங்கப் படவில்லை....

மலேசிய மாநாடு எதிர்ப்பாளர்களுக்கு பதில் சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்

மலேசிய மாநாடு எதிர்ப்பாளர்களுக்கு பதில் சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்

“சேரசோழபாண்டியர்கள்தங்களுக்குள்சண்டைபோட்டுக்கொண்டதைவிட பார்ப்பனியத்தைவளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்” இனத்தால் “திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” என்ற தலைப்பில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஜூன் 24, 25 தேதிகளில் உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதையொட்டி “இனியும் வேண்டுமா திராவிடம்?” என்ற தலைப்பில் மலேசியாவின் ‘தமிழ் மலர்’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. எழுத்து வித்தகர் விவேகானந்தன் என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து அந்நாளேட்டுக்கு மறுப்புக் கட்டுரை ஒன்று அனுப்பப்பட்டது. மறுப்பை அந்த ஏடு வெளியிடவில்லை. அக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது. ‘தமிழ்மலர்’ நாளேட்டில் (02.07.2017) ‘இனியும் வேண்டுமா திராவிடம்?’ என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்களை வரச்செய்வதற்காக ‘தமிழ் உணர்வாளர்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு ஏமாற்று வேலை செய்துள்ளனர்...

கதிராமங்கலம் மக்களுக்காக மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலம் மக்களுக்காக மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24.7.2017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பாளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீ.த.பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர்), வெ.கனியமுதன் (துணைப் பொது செயலாளர்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன் (பொதுச் செயலாளர்), தமிழ் புலிகள் கட்சி பெரியார். சரவணன், (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்). தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு. நாகராசு. ஒருங்கிணைப்பாளர். பெரியார் திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி தலித் .ராஜா ஆதித்தமிழர் பேரவை , தாஹா. ளுனுஞஐ கட்சி மேலூர் தொகுதி தலைவர் இரணியன்,  பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பரமக்குடி கர்ணன், ரமேஷ் , சகாயராஜ் , கோபால் உள்ளிட்ட...

பெரியார் பிஞ்சு இளம்பரிதி இயக்கத்திற்கு நன்கொடை

பெரியார் பிஞ்சு இளம்பரிதி இயக்கத்திற்கு நன்கொடை

30.07.2017 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் மகன் இளம்பரிதிக்கு நான்கு வயது நிறைவடைந்து அய்ந்தாவது வயதில் அடி எடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா ரூ.1000 மற்றும் கோவை அணி சமூக நீதி சமத்துவ பயண பரப்புரை நிதியாக ரூ. 1000 ஆகிய இரண்டையும் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் இராசுவிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 10082017 இதழ்

மழை கொட்டிய நிலையிலும் இடம் மாற்றி நடந்தது கழகக் கூட்டம்

மழை கொட்டிய நிலையிலும் இடம் மாற்றி நடந்தது கழகக் கூட்டம்

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 28 அன்று திருவேற்காடு வேலப்பன் சாவடியில் ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒருவார காலமாகவே வடசென்னை கழகத் தோழர்கள் ஏசுகுமார், செந்தில், சங்கீதா, ராஜி மற்றும் தென்சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கடை கடையாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி நிதி திரட்டினர். ஏ. தினேஷ் குமார் தலைமையில் கூட்டம் தொடங்கி காவை இளவரசு ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தி முடிக்கும்போது மழை கொட்டத் தொடங்கிவிட்டது. உடனே கழகத் தோழர்கள் மேடைக்கு அருகே இருந்த வர்த்தக நிறுவனங்களின் மேற்கூரையிடப்பட்ட வராண்டாவில் இருக்கைகள் ஒலிபெருக்கிகளை மாற்றி கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். ஒரு கருத்தரங்கம்போல் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். தோழியர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். ரமேஷ் பிரசாந்த் முன்னிலை வகித்தார்....

இந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா!

இந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா!

மனிதகுல முன்னேற்றத்தின் வரலாறு என்பது மாற்றுக் கருத்துகளின் வரலாறு என்பதில் தீவிர நம்பிக்கை கொண் டிருந்தவர் விஞ்ஞானி புஷ்ப பார்கவா (1928- 2017). அறிவியல் சிந்தனைக்கு (சைன்டிஃபிக் டெம்பர்) எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வந்த இந்தப் புரட்சிக் குரல், கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி ஓய்ந்து விட்டது. உயிரி வேதியியலாளராகப் பணியைத் தொடங்கிய பார்கவா, இந்தியாவில் உலகத் தரத்திலான உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பினார். அவரின் முயற்சியால்தான் 1977ஆம் ஆண்டு ஹைதராபாதில் ‘உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்’ தொடங்கப்பட்டது. ‘ஆர்ட்டிஸ்ட் இன் ரெஸிடென்ஸ்’ எனும் திட்டத்தைத் தொடங்கிய முதல் அறிவியல் மையம் இதுவாகத்தான் இருக்கும். மேலும், ஓவியர் எம்.எஃப்.ஹுசைனை அழைத்து, இந்த மையத்தில் சுவர் சித்திரத்தை வரையச் செய்தார். அதேபோல 1986ஆம் ஆண்டு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பத் துறை ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்த அமைப்புகள் மூலம், மக்களுக்குப் பயன்படும்...

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

கழகத் தோழர்களின் கவனத்திற்கு, (விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை ஒட்டி கழகத் தோழர்கள் அரசு துறைகளுக்கு வழங்க வேண்டிய விண்ணப்ப படிவ மாதிரிகள், நீதிமன்ற ஆணை ஆகியவை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.) விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு (25082017 வெள்ளி) இந்துத்துவ அமைப்புகள் நீதி மன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வதும் என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள்,தமிழக அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்யத் தவறுவது நீதி மன்ற அவமதிப்பாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே,...

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்