கதிராமங்கலம் மக்களுக்காக மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24.7.2017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார்.

தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பாளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீ..பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர்), வெ.கனியமுதன் (துணைப் பொது செயலாளர்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன் (பொதுச் செயலாளர்), தமிழ் புலிகள் கட்சி பெரியார். சரவணன், (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்). தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு. நாகராசு. ஒருங்கிணைப்பாளர். பெரியார் திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி தலித் .ராஜா ஆதித்தமிழர் பேரவை , தாஹா. ளுனுஞஐ கட்சி மேலூர் தொகுதி தலைவர் இரணியன்,  பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பரமக்குடி கர்ணன், ரமேஷ் , சகாயராஜ் , கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். அழகர் பிரபாகரன் நன்றி உரை கூறினார்.

நெடுவாசல் கதிராமங்கலம் கிராம மக்கள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற கோரியும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரியும் திருமுருகன் காந்தி,  வளர்மதி உள்ளிட்ட தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க கோரியும் மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 10082017 இதழ்

You may also like...