விஜயபாரதி – சங்கீதா இணை ஏற்பு நிகழ்வு

20-8-2017 காலை 11-00 மணியளவில் சிவ.விஜய பாரதி – பேரா. சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யேற்றார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலன் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம், நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம், கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 31082017 இதழ்

You may also like...