இணையதள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி ஈரோடு 20082017

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் தோழர் இரத்தினசாமி ஈரோடு அவர்களின் ஒருங்கிணைப்பில் 20082017 அன்று சூரம்பட்டிவலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோழர் இரத்தினசாமி அவர்கள் இணையத்தில் செயல்படவேண்டிய முறைகள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

தோழர் பரிமளராசன் அவர்கள் தற்போதைய சூழலில் பெரியாரியியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளிடம் இருந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் முகநூலில் கழக தோழர்கள் எங்ஙணம் தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார்

தோழர் விஜய்குமார் கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் திருச்செங்கோடு தோழர் பூபதி மீம்ஸ் பற்றியும் விளக்கினர்

20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தோழர் வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த பயிற்சி வகுப்பு 27082017 அன்று திருப்பூரில் நடைபெறும்

20915246_1804712242887370_5083336640717914638_n 20992611_1804716942886900_4733938828521205691_n

You may also like...