விநாயகர் சதுர்த்தி – திருப்பூர் திவிக மனு 23082017

திருப்பூர்மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23082017 அன்று, விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்ச்சியில், காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் ஆணைகளை நிறைவேற்றி அவர்களின் கடமைகளை தவறாமல் செய்திட வலியுறுத்தி, மனுக்களை ஆணை நகல்களுடன் இணைத்து (அரசு அதிகாரிகளிடம்)
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துணைக் கண்காணிப்பாளர்,  காவல்ஆய்வாளர்,  மாநகராட்சி ஆணையாளர், போக்குவரத்து துறைஅதிகாரிகள், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் ஆகியோரிடம் வழங்கி தங்களது கடமையை தவறாமல் செய்யவும் இவற்றை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தோழர் துரைசாமி மாநிலப்பொருளாளர், தோழர் முகில்இராசு, திருப்பூர்மாவட்டதலைவர், தோழர் நீதிராசன் மாவட்டச்செயலாளர், தோழர் வீ. தனபால் திவிக மாநகரத்தலைவர், தோழர் மாதவன் மாநகரச்செயலாளர், தோழர் முத்து மாநகர அமைப்பாளர் மற்றும் தோழர் இராமசாமி திருப்பூர் தெற்கு பகுதிசெயலாளர் ஆகியோர் சேர்ந்து மனு வழங்கப்பட்டுள்ளது.

whatsapp-image-2017-08-23-at-21-00-30

You may also like...