‘உரிமை மீட்பு கூட்டியக்கம்’ நடத்திய ‘மனித உரிமை நாளில்’ விடுதலை இராசேந்திரன் பேச்சு ‘சித்திரவதைகளைத்’ தடை செய்ய மறுக்கும் இந்திய அரசு
டிசம்பர் 10, அய்.நா. மனித உரிமை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட 40 அமைப்புகளைக் கொண்ட உரிமை மீட்பு கூட்டியக்கம் சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் ஒன்றை சிறப்பாக நடத்தியது. மாற்றுக் கலை ஊடகம், காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளோடு நடந்த இந்த நிகழ்வுக்கு சென்னை தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.நடராசன் தலைமை தாங்கினார். பி.யு.சி.எல். அமைப்பைச் சார்ந்த டி.எஸ்.எஸ்.மணி, பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்தார். வெள்ளையன் (வணிகர் சங்கப் பேரவை), ஹாஜா கனி (த.முமு.க) அமீர் (திரைப்பட இயக்குநர்), ஓவியா (புதிய குரல்), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), எஸ்.எம்.பாக்கர் (இந்திய தவ்ஹீத்), பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வினோத் (ஆதித் தமிழர் விடுலை இயக்கம்), கிரேஸ் பானு (திருநங்கை அமைப்பு) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர்...