“நிமிர்வோம்” வாசிப்பு வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக கழக மாத இதழான “நிமிர்வோம்” வாசிப்பு வட்டம் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் 19.11.2017 மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். வாசிப்பு வட்டத்தில் ‘நிமிர்வோம்’ ஜனவரி இதழ் குறித்து தோழர்கள் கார்த்திக் இராசேந்திரன், மதன்குமார், ராஜு, பிரகாஷ் குமார்ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். கட்டுரை மீது விவாதங்களையும் முன் வைத்துப் பேசினர். கவிஞர் இராமசாமி மற்றும் ‘நிமிர்வோம்’ நிர்வாக பொறுப்பாளர் இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) இதழின் வளர்ச்சிக்கு கருத்துகளை கூறினர். இறுதியாக, திருவல்லிக்கேணி பகுதி தலைவர் இலட்சுமணன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...