கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம், சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழாவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ. இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண் டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமகன் கோகுலக்கண்ணன் ரூ.10,000/- நன்கொடை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 23112017 இதழ்

You may also like...