Category: பெரியார் முழக்கம் 2013

‘கணித மேதை’யின் கதை

‘கணித மேதை’யின் கதை

‘கணித மேதை’ என்று அழைக்கப்படும் ராமானுஜம் (அய்யங்கார்) வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார், பெரியார் படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரன். இந்திய சமூகம், சிறந்த அறிவாளிகளை அங்கீகரிப்பது  இல்லை என்பதே இந்தப் படத்தின் மய்யமான கருத்து என்றும், வேதகாலத்திலிருந்தே இதுதான் நிலை என்றும்  அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிற்காலத்தில் கணிதத்தில் மேதையாக விளங்கிய இராமானுஜம், ‘இன்டர்மீடியட்’ படிப்பில் தோல்வி அடைந்தவர் என்பது, ஒரு முக்கிய செய்தி. மதிப்பெண் – ஒருவருடைய அறிவாற்றலுக்கான மதிப்பீடு இல்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் தான்! குடும்பத்துக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடி விட்டார். அவரது தந்தை 1905 ஆம் ஆண்டு மகனைக் காணவில்லை என்று ‘இந்து’ ஏட்டில் படத்துடன் விளம்பரம் செய்து மகனைக் கண்டுபிடித்தார். ஜி.எச்.ஹார்டி என்ற வெளிநாட்டுக்காரர்தான் – இராமானுஜத்தின் அறிவைக் கண்டறிந்து, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். சென்னை திரும்பிய இராமானுஜர், இறுதி காலத்தில் அவரது பார்ப்பன...

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்கள் – பிறவியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்  உச்சநீதிமன்றம் வரை போகிறார்கள். ஆனால், கேரளாவில் அர்ச்சகர் நியமனம் அப்படி அல்ல. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி விட்டார்கள். ‘கேரள தேவஸ் வம் போர்டு’ என்ற மாநில அரசின் கோயில் நிர்வாக அமைப்பு அர்ச்சகர்களாக பணிபுரிவோருக்கு பூஜை சடங்கு ‘தாந்திரீகம்’ மந்திரம் ஒதுதல் போன்ற சடங்குகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிறகு தேர்வு நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பயிற்சியில் சேராமலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், அவர்கள் திறமையை சோதிக்க நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு பேர் மட்டுமே சரியான விடை தந்தார்கள். 95 பேருக்கு அர்ச்சகருக்குரிய பயிற்சி இல்லை. எனவே அவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்று தேவஸ் வம் போர்டு அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக...

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளை சோதிடம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற என்.ஆர்.கிருஷ்ணன், ‘இந்து’ ஆங்கில ஏட்டில் (அக்.6) எழுதியுள்ளார். பெயர்களை குறிப்பிடாமல் பல சுவையான சம்பவங்களை அவர் பதிவு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் முதல்வர் அமைச்சர் களோடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பதற்கு சோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார். நாள், நேரம் குறித்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப் பட்டன. காலை 10 மணிக்கு பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்கும் நாளில் சோதிடர்கள் முதல்வரை அணுகி 10.02க்கு முதல்வர் பதவி ஏற்காவிட்டால், 5 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறவே, எல்லா நிகழ்ச்சிநிரல்களும் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டு, சோதிடர்கள் குறித்த சரியான நேரத்தில் முதல்வர் பதவி ஏற்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து போய் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள்...

‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை

‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை

சுஷில் சர்மா – டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. தனது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி தந்தூரி ரொட்டி சுடும் அடுப்பு நெருப்பில் போட்டு எரித்தார் என்பது குற்றச்சாட்டு. அரிதினும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கொடூரமான கொலைகள் தான் அரிதிலும் அரிதாக கருதப்பட வேண்டும் என்று இதற்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி திருந்தி வாழவே முடியாது என்ற உறுதியான முடிவுக்கு வரும் நிலைக்கு குற்றம் புரிந்தால் மட்டுமே அரிதிலும் அரிதான வழக்கு என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கருத்தை சுஷில் சர்மா வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுஷில் சர்மா, எதிர்காலத்தில் திருந்தி வாழவே மாட்டார் என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு...

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அறிவியலுக்கு எதிராகவே அனைத்து மதங்களும் இருக்கின்றன என்றார், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ் துவ நாடே – எவ்வாறு? என்ற தலைப்பில் மூன்று நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மகாபலிபுரம் அரசினர் சிற்பக் கல்லூரி அருகிலுள்ள Scripture Union Centre இல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் நாளான 27.08.2013 செவ்வாய் கிழமை அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்க உரையாற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் ஆய்வு கருத்துரை வழங்கி, மறுப்புக் கேள்விகளுக்கான பதில் அளித்தார். ஆய்வரங்க முடிவின் தீர்ப்பினை வழங்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்: சமயம் தொடர்பான இந்த ஆய்வரங்கில், சமயத்...

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...

தோழர் தமிழருவி மணியனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்

தோழர் தமிழருவி மணியனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்

ஆர்.எஸ் .எஸ் . கருத்துகள் சமூகத்தைச் சீர்குலைத்துவிடும். தோழர் தமிழருவி மணியனுக்கு இரண்டாவது முறையாக பதிலளித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரை. ஜூ.வி.யில் சில திருத்தங்களுடன் வெளி வந்துள்ளது. கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. ‘நம்மிடம் கேட்பதற்கு சில நியாயமான சந்தேகங்கள் உண்டு’ என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்திருக்கிறார் தமிழருவி மணியன். தேர்தல் களத்தில் மூன்றாவது அணிக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது என்பதே அவரது ஆவேசமான கேள்விகள். இது நம்மிடம் தொடுக்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல என்பதே நமது பணிவான பதில். நாம் மூன்றாவது அணிக்கான அமைப்பாளராக நம்மை நியமித்துக் கொள்ள வில்லை. எது முதல் அணி, எது இரண்டாவது அணி என்பதும் நமக்குத் தெரியாது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆர்.எஸ் .எஸ் . நேரடியாக களமிறக்கியிருக்கும் மோடிக்கு – தமிழகத்தில் ஆதரவுத் தளத்தை வலிமைப்படுத்தும் முயற்சிகள் தந்த கவலைதான் – தமிழருவி மணியனுக்கு எதிர்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

உ.பி.யில் பழங்கால கோட்டையின் கீழ், 1000 டன் தங்கம் புதைத்திருப்பதாக தனது கனவில் கிடைத்த செய்தியை ஒரு சாமியார் மத்திய அமைச்சரிடம் கூற, உடனே தொல்பொருள் துறை புதையலைத் தேடி தோண்டி வருகிறது. – செய்தி நல்ல சேதி. ஆனாலும், அமைச்சரிடம் சாமியார் நேரில் வந்து சொன்னாரா? அல்லது சாமியார் சொல்வதுபோல் அமைச்சர் கனவு கண்டாரா என்பதை உறுதி கொள்ளுங்கள். வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும். – கான்பூரில் மோடி அப்படி எல்லாம் செய்யாதீங்க. அப்புறம் எவராவது கனவு கண்டு பூமிக்கடியில் வாக்குகள் புதைந்து கிடக்கிறது என்றால், அதிகாரிகள் குழிதோண்ட ஆரம்பித்து விடுவார்கள். கான்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடை வா°துப்படி சோதிடர்கள் ஆலோசனை பெற்று அமைக்கப்பட்டது. – செய்தி ஒலி பெருக்கி, மின் விளக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வா°து உண்டா? அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மட்டுமே ஒரிசா நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்று...

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறப்பு: தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறப்பு: தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி

திறப்பு நிகழ்ச்சி : 8.11.13 வெள்ளி மாலை 5 மணி – தஞ்சாவூர் 9, 10.11.2013 சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கருத்தரங்குகள் – இசையரங்குகள் தமிழகத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், உலகத் தமிழர்கள், திரையுலகக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். உலகத் தமிழர் பேரமைப்பு அழைக்கிறது! தமிழர்களே திரண்டு வருக! பெரியார் முழக்கம் 30102013 இதழ்

சுயமரியாதைப் பேரவை எடுத்த பெரியார் பிறந்த நாள் விழா

சுயமரியாதைப் பேரவை எடுத்த பெரியார் பிறந்த நாள் விழா

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, சென்னை திருவான்மியூரில் குத்தூசி சா. குருசாமி, குருவிக்கரம்பி சு. வேலு, சுயமரியாதைப் பேரவை சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்மீகி தெருவில் 29.9.13 ஞாயிறு காலை நடைபெற்ற இவ்விழாவிற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரை யாற்றினார். மறைந்த சுயமரியாதை வீரர் கழஞ்சூர் சொ. செல்வராஜியின் படத்தை வாலாசா வல்லவன் திறந்து வைப்பதாக இருந்தது. அவர் வர இயலாது போகவே, அவரது உரை வாசிக்கப்பட்டது. செயல்வீரர் திருச்சி வீ.அ.பழனி, திருவுருவப் படத்தை ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ம.பொன்னிறைவன் திறந்து வைத்தார். மதுரை தோல் மருத்துவர் அ.சவுந்தரபாண்டியன், ‘சாப்பாட்டிலும் சாதி’ என்ற தலைப்பில் உரையாற்ற, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பெரியாரின் பிறந்த நாள் கவிதையை அரங்கேற்றினார். அனைவருக்கும் மறைந்த வீ.அ.பழனியின் இளையமகன் வணங்காமுடி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். இக்கூட்டத்தில் மறைந்த...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ஏழுமலையான் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமிரா நிறுவ முடிவு. – செய்தி அருமையான யோசனை. அப்படியே அர்ச்சர் களுக்கும் ஒரு துப்பாக்கியை குடுத்துடுங்க. இடுப்புல செருகிக் கொண்டே அர்ச்சனை செய்வாங்கல்ல! திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி கிராம மக்கள் மழை வருவதற்காக இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து, மணமக்கள் ஊர்வலத்தை நடத்தி தடபுடலாக விருந்து வைத்தார்கள்.    – செய்தி எப்படியோ ‘மங்கள’ காரியம் நல்லவிதமா முடிஞ்சுடுச்சு’ கழுதை குடும்பத்துக்குள்ள ஜாதிப் பிரச்சினை வந்து தகப்பன் கழுதை மண்டையப் போடாம பாத்துக்குங்க. புனே சிறையில் காந்தி பயன்படுத்திய இராட்டை லண்டனில் அடுத்த மாதம் ஏலம்.  – செய்தி இராட்டையை ஏலம் விட்டது சரி; ஆனா, காந்தி உடம்பில் பாய்ந்த கோட்சேயின் துப்பாக்கிக் குண்டு இருந்தா, அதையும் ஏலம் விட்டுடாதீங்க; ஆர்.எஸ் .எஸ் . சொத்தை அவர்களிடமே திருப்பித் தந்துருங்க. அதுதான் கவுரவம். சென்னை...

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பார்ப்பனியம் – சமூகத்தில் திணித்த பல்வேறு கொடுமைகளில் ஒன்று ‘பால்ய விவாகம்’ அதாவது குழந்தைத் திருமணம். பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் குடும்பங்களில் பிற ஜாதியினருடன் ஜாதிக் கலப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற் காகவே இந்தக் கொடூரமான முறையைத் திணித்தனர். இந்த சமூகக் கொடுமை பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும் எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 107 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. உலகம் முழுதும் நடக்கும் 6 கோடி குழந்தை திருமணங்களில் 40 சதவீதம், அதாவது 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவில் இந்த பால்ய விவாகம் சட்டத்தை மீறி பரவலாக நடந்து வருகிறது. அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியா,...

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

காந்தி, கோட்சே எனும் ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட வுடன், இந்திய அரசால் ஆர்.எஸ் .எஸ் . தடை செய்யப்பட்டது. தடையை நீக்க, ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர்கள், நேரு, பட்டேலுடன் பேரம் பேசினார்கள். இந்திய அரசு பல நிபந் தனைகளை முன் வைத்தது. ஆர்.எஸ் .எஸ் . ஒரு ரகசிய அமைப்பாக செயல்படக் கூடாது; அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதெல்லாம் விதிக்கப்பட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையை ஆர்.எஸ் .எஸ் . ஏற்றுக் கெண்டு தனது அமைப்புக்கு சட்ட திட்டங்களை உருவாக்கியதோடு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கும் என்றும், (ஆர்.எஸ் .எஸ் . ஸின் சட்ட திட்டப் பிரிவு 4(பி)) உறுதியளித்தது. அரசியலில் ஒதுங்கியிருப்பதாக உறுதி கூறிய அதே ஆர்.எஸ் .எஸ் . தான் இப்போது பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தி யிருக்கிறது. இந்த விவரங்களை...

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார்.

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார்.

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார். பார்ப்பனிய வாதிகள் மதத்தின் தீண்டாமையையும் வழி பாட்டின் தீண்டாமையையும் சமூகத்தில் ‘மேல்-கீழ்’ தன்மையையும், சாஸ் திரம், ஆகமம், சடங்கு, வாழ்க்கை முறைகளில் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டிலிருந்து அய்ரோப்பிய நாடுகளுக்குப் போன பார்ப்பனர்கள், ஜாதியவாதிகள் தங்களுடன் ஜாதியையும் கொண்டுச் சென்றனர். அய்ரோப்பிய நவீன வாழ்க்கை ஒரு பக்கம்; பார்ப்பனிய ஜாதி வேற்றுமைகளைக் கட்டிக் காப்பது மற்றொருபுறம் என்ற இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பார்ப்பன இந்தியாவைப் போல், ஜாதியைப் பாதுகாக்க அய்ரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. 28 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய ஒன்றியம், ஜாதிக்கு எதிராக இப்போது போர்க்கொடி உயர்த்தி விட்டது. ஜாதி அடிப்படையில் காட்டப்படும் பாகு பாடுகள் மனித உரிமை மீறல்கள்; சர்வதேசக் கேடு (ழுடடியெட நுஎடை) என்று அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்துள்ளது. கடந்த அக்டோபர் 10 ஆம்...

ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்

ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்

மத்திய ஊரகத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். “தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு வலுவாக உள்ளதால், வளர்ச்சிப் பாதையில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது மாநிலங்கள் வரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சுதந்திரம் அடைந்தபோது 2 ஆவது இடத்தில் இருந்த மேற்கு வங்கம், தற்போது 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த போது கடைசி இடத்தில் இருந்த பீகார் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆட்சிகள் மாறலாம்; அரசியல்வாதிகள் வந்து போகலாம். ஆனால், நிர்வாக முறையை வலுவாக உருவாக்க வேண்டும். அதைத் தமிழக நிர்வாகக் கட்டமைப்பு செய்துள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார். தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, இடஒதுக்கீடு என்ற சமூக நீதித் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது, அமைச்சர் குறிப்பிட மறந்த செய்தி. பெரியார்...

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....

அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்

அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்

[பல்வேறு செய்தி ஏடுகளில் புதைந்து கிடக்கும் செய்திகள், சிந்தனைகளைத் தேடிப் பிடித்து வாசகர்களின் சிந்தனைக்கு தொகுப்பாக முன் வைக்கப்படுகிறது.] ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் ஒன்றிரண்டு ஆங்கில இதழ்களோடு நின்று போன ஒரு முக்கிய செய்தி இது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அய்.நா. எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வந்தது என்ற குற்றச்சாட்டை இப்போது அய்.நா.வே ஒப்புக் கொண்டுள்ளது. அய்.நா.வில் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன், அவரது ஆலாசகர் என்ற பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார் என்ற இந்தியாவைச் சார்ந்த மலையாள அதிகாரி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அய்.நா.வின் பல்வேறு பிரிவுகள் இனப் படுகொலையின்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய விடாமல் முடக்கினார். இது குறித்த விரிவான தகவலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருக்கிறது. அவ்வளவும் உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் அய்.நா.வின் அமைப்புகள் தங்கள்...

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...

கலை நிகழ்வுகள்-மலர் வெளியீடு-சுவையான திராவிடர் உணவுகளுடன் களை கட்டியது திராவிடர் வாழ்வியல் விழா

கலை நிகழ்வுகள்-மலர் வெளியீடு-சுவையான திராவிடர் உணவுகளுடன் களை கட்டியது திராவிடர் வாழ்வியல் விழா

இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் விழா, ‘திராவிடர் வாழ்வியல் விழா’ என திருப்பூரில் சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில், திராவிடர் வாழ்வியல் விழா- திராவிடர் உணவு விழா-கருந்திணை 2013 நிகழ்ச்சியில் திராவிடர் பண்பாட்டு மலரினை வெளியிட்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காவேரி அம்மன் திருமண அரங்கத்தில் கருந்திணை 2013 என்ற பெயரில், திராவிடர் வாழ்வியல் விழாவும் திராவிடர் உணவு விழாவும் எழுச்சியோடு நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் பறை முழக்கம் அரங்கத்தை அதிர வைத்தது. தொடர்ந்து சுயமரியாதைக் கலைப் பண்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப. சிவா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகச் செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,...

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

இ°ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் – ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவும்போதும் திருப்பதி ஏழுமலையான் ஆசி பெறுகிறார் இ°ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று இ°ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐ.ஏ.என்.எ°. செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.   அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இதுவரை செவ்வாய்கிழமையன்று ஒரு ஏவுகணைகூட ஏவப்பட்ட தில்லை. அது ஒரு ராசியில்லா நாள் என்பதுதான் காரணமாகும். செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன்ஆராய்ச்சி செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இ°ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி தான் செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். விண்வெளிக்கலம் 12அய் ஏவிய பிறகு, 13 அய் தவிர்த்துவிட்டு, 14 அய் ஏவியது ஏன்? 13 ராசியில்லாத...

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்! மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’...

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

ஈழத்தின் இறுதிப் போரில் உயிர்துறந்த பல்லா யிரம் மக்களின் நினைவாக தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில்  எழுப்பப்பட்டுள்ளது. நெஞ்சை உலுக்கும் படுகொலை காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட் டுள்ளன. ஈழத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 தமிழினப் போராளிகளின் சிலைகளும், தமிழ் வளர்த்த அறிஞர், பேராசிரியர் படங்களும் இடம் பெற்றுள்ளன. காவல்துறை கெடு பிடிகளால் நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்னதாக முற்றம் திறக்கப்பட்டது. 7, 8, 9 தேதிகளில் தமிழக முன்னணித் தலைவர்கள், கலைத் துறையைச் சார்ந்தவர்கள், உணர்வாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தன. உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பழ. நெடுமாறன், இந்த முற்றத்தை தமிழர்களுக்கு சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் விழாவில் திரண்டிருந்தனர். கலைநயத் துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், ஓவியங் களும் உணர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது என பலரும் தெரிவித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர்...

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என முக்கியக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதா°, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ராமதா° : “நாட்டின் பாதுகாப்புக்காக அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணியை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து பா.ம.க. தொண்டர்கள் 134 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்திருந்தால் இப்போது கொளத்தூர் மணி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்காது. தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக கொளத்தூர்...

சேலம் கழகச் செயலவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : வன்முறை போராட்ட வடிவம் உடன்பாடானதல்ல!

சேலம் கழகச் செயலவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : வன்முறை போராட்ட வடிவம் உடன்பாடானதல்ல!

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 5.10.2013 அன்று சேலத்தில் செயலவைத் தலைவர் க. துரைசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் கூடியது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன: பெரியார் கொள்கைகளை பெரியார் வழியில் மக்களிடம் கொண்டு செல்வதையே இலட்சிய மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். அந்த அடிப்படையில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஈழ விடுதலை, தமிழின உரிமைகளுக்காக தொடர்ந்து இயக்கங்களையும் பரப்புரைகளையும் நடத்தி வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறைக்கு எதிரான, வன்முறை சார்ந்த போராட்ட வடிவங்கள் கழகத்திற்கு உடன்பாடானது  அல்ல. இத்தகைய, கழகத்தின் உடன்பாடு இல்லாத, போராட்ட முறைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சென்னை, சேலத்தைச் சார்ந்த 7 தோழர்களும் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் மீது கழக சார்பில் விசாரணை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும். சேலம் வழக்கில் கழகத்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குகளில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை நனைத்து கொளுத்தி வீசிய குற்றச்சாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இதே வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவல்துறை இணைத்து கைது செய்தது. 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ), 120(பி), 307, 285 உடன் தமிழ்நாடு பொதுச் சொத்து பாதிப்புச் சட்டப் பிரிவு 3(1), 1908 ஆம்ஆண்டின் எரிபொருளால் ஆபத்து களை உண்டாக்கக்கூடிய சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் அயராது செயலாற்றுகின்றனர். சென்னையில் மயிலை, மந்தைவெளி அஞ்சலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டில்  கைது...

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

கோயில்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மேலோட்ட மாக பார்க்கும்போது பக்தி நெறி செழித்திருப்பதுபோலத் தெரி கிறது. இது பொய்த் தோற்றம். இந் நாளில் இருக்கும் பக்தி வழுக்கல் நிலத்தில் வடித்த மாளிகை.- ‘தினமலர்-பக்திமலர்’ அக்.24 பெரியார் இயக்கம் தோற்று விட்டது என்போருக்கு ‘அவாள்’களே தரும் ஒப்புதல் வாக்குமூலம்! பெரியார் முழக்கம் 07112013 இதழ்

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால், மீண்டும் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் ஒருவிஷயத்தை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பரவலாக நம்பப்படுவது, கூறப்படுவதைப்போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை. நமக்கும், மனிதக் குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுக்கு முன்னால் இருந்திருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த பொது மூதாதையை யீயn யீசiடிச என்று அழைக்கிறார்கள். அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள். அறிவியல் ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை. நாம் மனிதக் குரங்குகள்தான். அதாவது, சமூகத்தில் வாழும் மனிதக் குரங்குகள். அதே  நேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, பரிணாம வளர்ச்சி அல்லது படிநிலை வளர்ச்சி என்பது தொடர்பற்ற மரபணுக் கலப்பு (ழுநநே அரவயவiடிn), சுற்றுச் சூழல் நெருக்கடிகளால் (நுnஎசைடிnஅநவேயட ஞசநளளரசநள) உருவாகும் இயற்கைத்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காமன்வெல்த் மாநட்டில் பிரதமர் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.                              – ப. சிதம்பரம் ஆமாம்! விமானத்துக்கு ‘டிக்கட்’ உறுதியானால் தான் போவார்! தீபாவளியில் ராக்கெட் பட்டாசு விட்டவர்களால் மட்டும் 157 தீ விபத்துகள் நடந்துள்ளன.   – தினமலர் செய்தி அதற்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் எதையும் காவல்துறை பயன்படுத்திட வேண்டாம்! பூமாதேவியின் பிரார்த்தனையை ஏற்று கண்ணபிரானால் தொடங்கி வைக்கப்பட்ட புனித  நாள், தீபாவளி.    – ‘தினமணி’யில் காஞ்சி ஜெயேந்திரன் அதுமட்டுமா? வரதராஜப் பெருமாளை ‘மோட்சத்துக்கு’ அனுப்பி ஸ்ரீ ஜெயேந்திரர் சிறைவாச°தலத்தில் அவதரித்த புனித நாளும் இதே தீபாவளித் திருநாள் தான்! டில்லியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க ஆட்கள் தேவை.     – மாநகராட்சி பத்திரிகை விளம்பரம் ஸ்ரீராமன் சேனையை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா? இராமபிரான் வரமாட்டான் என்ற துணிச்சல்; தானே? உலகத்திலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடான இந்தியா, அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட...

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

19 ஆம் நூற்றாண்டில் பெரியாருக்கு முன்பு தமிழ் மாகாணத்தில் நாத்திகர் இயக்கம் ஒன்று ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் இதழையும், ‘தி திங்கர்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளனர். இந்நூல் களைத் தேடிக் கண்டுபிடித்து, சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். ‘நியு செஞ்சுரி புக் ஹவு°’ இத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வரங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வரங் கில் அக்.28, 29, 30 தேதிகளில் நடை பெற்றது. பல்வேறு வரலற்று ஆய்வாளர்கள் பங்கேற்று நூலின் உள்ளடக்கங்களை பல்வேறு தலைப்பு களில் ஆய்வு செய்தனர். ‘சென்னை லவுகிக சங்கமும்-பெரியாரும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29 ஆம் தேதியன்றும், ‘தத்துவ விவேசினியில் பெண்கள் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 30 ஆம்...

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வைணவத்தில் வடகலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும், தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதல் இன்றும் தீர்ந்தபாடில்லை. கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக் கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப் படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும் மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும், அந்த உலா தேவநாத சாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாத சாமி கோயில் பார்ப்பனர்கள் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத்...

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிராயுதபாணியாக பிடித்து, சித்திரவதை செய்து, பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்தக் காட்சிகளை லண்டனிலுள்ள ‘சேனல்-4’ தொலைக்காட்சி வெளியிட்டவுடன், வழக்கம்போல, ‘போலி காட்சிகள்’ என்று இலங்கை அரசு மறுத்துள்ளது. இசைப் பிரியா – போரின்போதுதான் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சாதித்தது. இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்ட போரில் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இசைப் பிரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ‘சேனல் 4’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்ரீலங்கா: கொலைக் களம்’ என்ற படத்தைத் தயாரித்த லண்டன் பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான கல்லம் மக்ரே, இதை மறுத்துள்ளார். ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேடு (நவ. 2) அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது இலங்கை அரசுக்கே தெரியும். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வெளிவர இருக் கின்றன என்று அவர் கூறியுள்ளார். இதைப் படம் பிடித்தவர்களே இலங்கை இராணுவத்தினர் தான். அவைகளை...

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை. போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு...

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசே! நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம் பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று! வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப் பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு! ஜாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜாதியக் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு! வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்க...

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...

மோடியின் வரலாற்று உளறல்கள்

மோடியின் வரலாற்று உளறல்கள்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக வலம் வரும் மோடி – அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு: தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.            – திருச்சிக் கூட்டத்தில் மோடி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜ கோபாலாச்சாரி. குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.   – பாட்னா கூட்டத்தில் மோடி சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர். மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றிக் கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரி களால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.     – மோடி பாட்னா பேச்சு அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது...

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

தமிழர் சமுதாயத்தின் விடிவெள்ளியாம் பெரியார் கொள்கைகளுக்காக கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். திராவிடர் விடுதலைக் கழகம் – ஜாதி-தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது. மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் தொழில்துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக இயக்கங்களை நடத்துகிறது. அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றதாய் செயல்பட போராடுகிறது. இராஜபக்சேயின் இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்கு எதிராய் நீதி கேட்டு நிற்கிறது. மரணதண்டனைக்கு எதிராகவும் மக்கள் விரோத கூடங்குளம் அணுமின் திட்டங்களுக்கு எதிராகவும், பறிக்கப்படும் தமிழர் வாழ்வுரிமைகளுக்காகவும் தோழமை அமைப்புகளோடு களமிறங்கி செயலாற்றுகிறது. பெண்ணடிமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மக்களைச் சந்தித்து கருத்துகளை பரப்புகிறது. மனித உரிமைகளுக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டை 12 ஆண்டுகளாக நடத்து வதோடு, பெரியாரிய சிந்தனைகளை நூல்களாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறது. தொய்வில்லா களப்பணியில் தொடர்ச்சியாக நிற்கும் திராவிடர் விடுதலைக்...

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

  திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை (81), 9.11.2013 அன்று சென்னையில் முடிவெய்தினார். தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடல், சொந்த ஊரான கல்லக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடந்தன. தி.க. தலைவர் கி.வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். வழக்கறிஞரான கோ. சாமிதுரை, வழக்கறிஞர் தொழிலைவிட்டு, முழு நேரம் திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 14112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

கட்சியின் சின்னத்தை – அரசின் சின்னமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.                – மினி பேருந்தில் இரட்டை இலை இடம் பெற்றிருப்பதை        எதிர்த்து மு.க. °டாலின் வழக்கு! நியாயமான கோரிக்கை! அப்படியே, கட்சியின் கொடியைப் போலவே தேசியக் கொடியையும் உருவாக்கியிருக்கும் காங்கிர° கட்சியையும் இந்த வழக்கில் சேர்க்கலாமே! சி.பி.அய். அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.- செய்தி நல்லதாப் போச்சு! தடைவிதிக்காதிருந்தால் கவுகாத்தி உயர்நீதிமன்றமே சட்டபூர்வமானது அல்ல என்று சி.பி.அய். வழக்குப் பதிவு செய்திருக்கும்! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்று வருத்தம் தெரிவித்து, ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் சுருக்கமான கடிதம். விளக்கம் எதுவும் எழுதவில்லை.             – செய்தி அதுவரை நல்லது. இலங்கை அரசு மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நல்லாட்சி நடத்துவதற்கு வாழ்த்துகிறேன் என்று எழுதிவிட்டால் வீண் வம்பு! இலங்கை இராணுவத்தின் ‘கொலைக் களங் களை’ அம்பலப்படுத்திவரும் சேனல்-4 தொலைக்...

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது. நாளை நான் சாகும்போது...

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன்...

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

கழக நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிப்பதை தோழர்கள் தவிர்க்கக் கோருகிறோம். ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல் அடங்கியிருக்கிறது. பெரியார் முழக்கம் 28112013 இதழ்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.ன்.ஆர். ராவ், பெங்களூரில் நவம்பர் 24 அன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் “இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், “அது மூட நம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். அறிவியல்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார். காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். பெரியார் முழக்கம்...

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன்,...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோயில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.  – செய்தி கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய ஒரே கோயில் இதுவாகத்தான் இருக்கும்! மது பாட்டில்களில் – இந்து கடவுள்களின் படங்களை அச்சிடும் ஆஸ்திரேலியா நாட்டைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணி போராட்டம். – செய்தி நியாயம்தாங்க… இதேபோல் இந்துமதச் சின்னங்களை நெற்றியிலும் கழுத்திலும் போட்டுக் கொண்டு மதுபாட்டில்களை உடைக்கும் இந்து குடிமகன்களை எதிர்த்தும் ஒரு போராட்டம் நடத்துங்க! தமிழக மீனவர்களை நாங்கள் தாக்கவில்லை என் கிறது இலங்கைக் கடற்படை. அப்படியானால் தாக்குவது யார் என்று அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.   – இந்திய கடற்படை துணை தளபதி பேட்டி திமிங்கிலங்களும் முதலைகளும் தமிழக மீனவர்களை மட்டும் குறி பார்த்து தாக்கிவிட்டு பிறகு கடலுக்குள் ஓடி விடுகின்றன என்று இலங்கை கடற்படை விளக்கம் கூறலாம். அந்த விளக்கத்தை இந்தியக் கடற்படையும் ஏற்கலாம். காதுல பூ சுத்தாதீங்கய்யா… 60...

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

“இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா? அவர்கள் பிறந்த நாடா? என் நாட்டில் உனக்கு என்ன வேலை? வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான். அட முட்டாள்களா! உங்களுக்கும் சேர்த்துத்தானே பாடுபடுகிறேன். விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே! தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன். மானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள். – தந்தை பெரியார் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

மதுரை மண்டலம் மதுரை மண்டலத்திலுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் திண்டுக்கல் கருந்திணையில் நடைபெறும். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டத்திலுள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர் களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும். தொடர்புக்கு :              அ. சக்திவேல் பேசி: 94425 13177 கோவை மண்டலம் கோவை மண்டலத்திலுள்ள கோவை மாநகரம், புற நகரம், திருப்பூர் மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப் பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 14, 15 ஆகிய நாட்களில் உடுமலையில் நடைபெறும். அனைத்துப் பயிற்சிகளிலும் கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தின் முன்னணி அமைப்புகளின்...

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத் தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையானதாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக்கும் உரிமையில்லையோ, அதே போல, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன் படிக்கும் மாணவர்களைச் சுடுவதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியாவில் பிரித் தானிய ஆட்சியில் 1860இல் உருவாக்கப் பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப் பட்டது. உலகில் போர்ச்சுக்கல் நாடுதான் 1976இல் முதன்முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை...