சுயமரியாதைப் பேரவை எடுத்த பெரியார் பிறந்த நாள் விழா

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, சென்னை திருவான்மியூரில் குத்தூசி சா. குருசாமி, குருவிக்கரம்பி சு. வேலு, சுயமரியாதைப் பேரவை சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்மீகி தெருவில் 29.9.13 ஞாயிறு காலை நடைபெற்ற இவ்விழாவிற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரை யாற்றினார். மறைந்த சுயமரியாதை வீரர் கழஞ்சூர் சொ. செல்வராஜியின் படத்தை வாலாசா வல்லவன் திறந்து வைப்பதாக இருந்தது. அவர் வர இயலாது போகவே, அவரது உரை வாசிக்கப்பட்டது. செயல்வீரர் திருச்சி வீ.அ.பழனி, திருவுருவப் படத்தை ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ம.பொன்னிறைவன் திறந்து வைத்தார். மதுரை தோல் மருத்துவர் அ.சவுந்தரபாண்டியன், ‘சாப்பாட்டிலும் சாதி’ என்ற தலைப்பில் உரையாற்ற, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பெரியாரின் பிறந்த நாள் கவிதையை அரங்கேற்றினார். அனைவருக்கும் மறைந்த வீ.அ.பழனியின் இளையமகன் வணங்காமுடி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.

இக்கூட்டத்தில் மறைந்த பகுத்தறிவாளர்கள் திருச்சி து.மா. பெரியசாமி, வீ.அ.பழனி, இயக்குநர் மணிவண்ணன், கவிஞர் சாமி. பழனியப்பன், கழஞ்சூர் சொ.செல்வராஜி, பேராசிரியர் பெரியார் தாசன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் ஆகியோர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 30102013 இதழ்

You may also like...