Category: பெரியார் முழக்கம்

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

¨        தில்லை நடராசன் கோயிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. நந்தன் கனவில் நடராஜன் வந்து சொன்னது போல் தமிழக முதல்வரிடம் கனவில் வந்து சொன்னால் பரிசீலிக்கலாம். ¨        புதுச்சேரி கோயில் யானை மாரடைப்பால் மடிந்தது பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சோகம் தான். காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகளை கோயிலுக்குள் கொண்டு வந்து மதச்சாயம் பூசி மாரடைப்பால் மரணிக்க வைப்பது கொடுமை அல்லவா? எந்த ஆகமத்தில் யானையைக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. விலங்குகளை இயற்கையாக மதம் இன்றி வாழ விடுங்கள். ¨        கோயில்களில் செல்போன் கொண்டு வர உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பது நியாயம்தான். சமஸ்கிருத மந்திரங்களை கருவறைக் கடவுள்கள் நெட் வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        உறுப்புகளோடும் உயிரோடும் பிறக்கும் குழந்தைகள், மத அடையாளங்களை சுமந்து வரவில்லை. அவர்களை மதத்துக்குள் இழுப்பதே கட்டாய மதமாற்றம் தான்!...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாநகர மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.12.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா. இராமச்சந்திரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: பெரியார் முழக்கம் சந்தா சேர்த்து டிசம்பர் இறுதிக்குள் தலைவரிடம் ஒப்படைப்பது. டிசம்பர் 6 / டிசம்பர் 24இல் அம்பேத்கர்/பெரியார் நினைவு நாட்களில் வீரவணக்கம் செலுத்துவது. கோவையில் கழகத் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது கோவை மாநகரப் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. கோவை மாநகர. தற்காலிக அமைப்பாளராக நா.வே.நிர்மல் குமார் நியமிக்கப்படுகிறார். கோவை மாநகரில் தோழமை இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் மாநகரத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்து கொள்வதாக இருந்தால் அமைப்பாளரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றே கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது. முதற்கட்டப் பயணம்: 16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம் 16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம். 17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம் (இரவு தங்கல் வேலூர் மாவட்டம்) 18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம் 18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம் இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்: 26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம் 26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம் 26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம் (இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் ) 27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம் 27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம் (இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம்...

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

பெரியார் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கமே ஆர்.எஸ்.எஸ். உருவாகத் தூண்டியது ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லை என்பதும் அப்பட்டமான பொய். இந்து மகாசபையிலும் காங்கிரசிலும் இரட்டை உறுப்பினராக இருக்க காங்கிரஸ் தடை விதித்தது. கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகத்தை நாம் படித்தால், இந்துத்துவா பற்றிய பார்வை நமக்கு சரியானதாக மாறும். தமிழ்நாட்டில் ஒரு கதை கூறுவார்கள், கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு பெரிய யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டு இது ‘தூண் போல இருக்கிறது’, ‘இது முறம் போல் இருக்கிறது’ என்று கூறுவார்கள். அதே...

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம்.  அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரசாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையைக் கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து. பெரியார்...

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (ளுஊ, ளுகூ, ஆக்ஷஏ, டீஊ) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த  சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும்,  2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்....

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும்  அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும் அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

சென்னை ‘அய்.அய்.டி.’ பார்ப்பனர் கோட்டை யாகவே இருந்து வருகிறது என்பதற்கு மேலும் சான்றுகள் குவிந்து வரு கின்றன. 577 பேராசிரியர் களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 19 பேர் மட்டுமே (மூன்று சதவீதம்) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. 2021 மார்ச் 31 நிலவரப் படி திறந்த போட்டிக்கான இடங் களில் 515 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் இருந்தனர். இதில் பிற்படுத்தப் பட்டோர் 62 பேர் மட்டுமே. பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர் 16 பேர் தான். ஆய்வுப் பட்டப் படிப்பைப் பொறுத்த வரை 2018-2019, 2019-2020இல் 196பேர் மட்டுமே பெண்கள்; பிற்படுத் தப்பட்டோர் 74; பொருளா தாரப் பின்தங்கிய பிரிவினர் 74; எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் முறையே 27 மற்றும் 5 பேர் மட்டுமே. பெண்களும் முற்றாக புறக்கணிக்கப்படு கின்றனர். 2021-2022ஆம் ஆண்டு துறைரீதியாக விவரங்களைத் தர, தகவல்...

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

அயோத்தி ‘இராமனு’க்கு அடிக்குது ‘லாட்டரி’; சர்வதேச சுற்றுலா கதாநாயகனாக மாறப் போகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, உ.பி. காவிச் சட்டை ஆதித்யநாத் என்பவருக்கு முதலமைச்சர் என்ற பெயரும் உண்டு. இராமன் தரிசனத்துக்கு கோயிலைச் சுற்றி அமையப் போகும் சாலைக்கு அவரது இராமராஜ்ய உ.பி. ஆட்சி ஒதுக்கியுள்ள தொகை 2000  கோடி ரூபாய். மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, 2000 கோடியை கோயிலுக்கு சாலை போட கொட்டி அழும் ஆட்சியை உலகில் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? இது அந்த இராமனுக்கே அடுக்காது” என்று எதிர்க் கேள்வி கேட்கக் கூடிய மக்கள் அங்கே இல்லை. ‘இந்துத்துவ மாடல்’ இப்படித் தான் சேறு வாரி பூசிக் கொண்டு ஆட்டம்  காட்டும்! உ.பி. மாநிலமே ‘இராமனுக்கு’ பட்டா போட்டாகி விட்டது. இனி அடுத்தடுத்து கீழ்க்கண்ட திட்டங்களும் வரலாம். சர்வதேசப் பயணிகளை கோயிலுக்கு வரவேற்க அனுமார் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். திறமையுள்ள...

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

“2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக இந்த எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் செய்த அட்டூழியங்கள் ஏராளம். டெல்லி பொருளாதாரக் கல்லூரி பேராசிரியர் நந்தினி சுந்தரும், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுஹர் ஃபஸ்லியும் இணைந்து, ஜூன் 2020 வரை நடந்த அதிகார அத்துமீறல்களை, ஆய்வறிக்கையாக வெளி யிட்டனர் . தற்போது அந்த ஆய்வறிக்கையோடு புது தகவல் களை சேர்த்து, செப்டம்பர் 2022 வரை நடந்த சீர்கேடு களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டுள்ளது. வேறு நால்வர் இப்பணியை செய்துள்ளனர். 6 பகுதிகளாக இந்த கொடுங்கோன்மைகள் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம். பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தலையீடு: சிந்தனை யாளர் காஞ்சா அய்லையா எழுதிய ‘நான் ஏன் இந்து அல்ல?’, அருந்ததி ராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’, நாவலாசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’, எழுத்தாளர் பாமா சூசைராஜ் எழுதிய ‘சங்கதி’, சுகிர்த ராணி எழுதிய ‘கைம்மாறு’, ‘என் உடல்’, ராமானுஜன்...

பயப்படாதீங்க; பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்ல…!

பயப்படாதீங்க; பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்ல…!

¨           ஆளுநர் அவர்களே தமிழ்நாடு அரசு ஒப்புதல் கேட்பது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தான், ஏதோ ஆபாச வீடியோ தடைச் சட்டம் என்று நினைத்து அதனால் தமிழக பாஜகவுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படாதீர்கள். ¨           ஆன்லைன் சூதாட்ட தடையை வைத்துக் கொண்டே சூதாட்டம் நடத்துகிறார் ஆளுநர் மசோதா காலாவதியாக கடைசி நாளில் விளக்கம் கேட்டு அனுப்புவது ‘சூப்பர்’ சூதாட்டம். ¨           ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்பா என்று கேட்கிறார் ரவி நியாயம் தான் ஒன்றிய ஆட்சியின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கவே கூடாது இப்போதாவது அவருக்கு புரிந்தது நல்லது – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 01122022 இதழ்

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

தோழர்கள் திவ்யா – மதன் வாழ்க்கை இணைப்பு விழா  20.11.2022, ஞாயிறு காலை 11.00 மணியளவில் திருப்பூர், திருமுருகன்பூண்டி,டே மூன் பார்டி ஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ஆக நடைபெற்ற இத்த திருமண விழாவின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை யாழினி யாழ் இசை கோவை இசைமதி ஆகியோர் பாடினார்கள். ஆத்துப்பாளையம் பகுதி கழகத் தோழர் பரந்தாமன்  வரவேற்புரை யாற்றினார்கள். அடுத்து கழகத் தலைவர் தலைமையில் இணையர்கள்  இல்வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மணமகனின் நண்பர் மற்றும் கழகத்தின் மாநில பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தோழர்களும் பேசினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்தோஷ், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட...

வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

விவேக் அக்னிகோத்ரி இயக்கிய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியானது. இசுலாமிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்த இத்திரைப்படத்தை இந்துத்துவா அமைப்புகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடின. குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரியில் இருந்தும் இத்திரைப்படத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியிருந்தார். ஆனால் இது வெறுப்புணர்வை பரப்பும் படம் என்று சர்வதேச திரைப்பட விழாவில் அதன் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார். 53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 79 நாடுகளை சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன. இதில் இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள், 20 பிற படங்கள் திரையிடப்பட்டன. அதில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் ஒன்று. விழாவில்...

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில், அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களை கருவரைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிராக பார்ப்பன அர்ச்சகரின் மகன் தொடர்ந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை கோரியும், சிம்சன் பெரியார் சிலை அருகில், 23.11.2022 மாலை 3:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேடியளித்த மாவட்ட செயலாளர் இரா.உமாபதி கூறுகையில், “பெரியாரின் நெஞ்சில் தந்தை முள்ளான, அனைத்து  ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு பணி நியமனத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது 2000 ஆண்டு கருவரைத் தீண்டாமையை உடைத்தது. இருந்தாலும், சில இடங்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி அர்ச்சர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பார்ப்பன அர்ச்சகரின் மகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கே நியாமானது இல்லை. நாளை...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

அறிவியலைப் பரப்பும் ‘வானவில் மன்றம்’ – அரசின் வரவேற்கத் தக்க முடிவு

அறிவியலைப் பரப்பும் ‘வானவில் மன்றம்’ – அரசின் வரவேற்கத் தக்க முடிவு

இந்திய அரசியல் சட்டத்தில், அடிப்படைக் கடமையாக 51 ஹா பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவு மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. ஆனால் அந்தப் பிரிவு இதுவரை எவராலும், எந்த ஒரு அரசாலும் அமுல்படுத்தப்படவே இல்லை. முதன்முதலாக அந்த வரலாற்றுச் சிறப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு “வானவில் மன்றம்” என்ற அமைப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதை துவங்கி வைத்திருக்கிறார். மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டுவது இந்த வானவில் மன்றத்தின் நோக்கமாகும். இளம் பருவத்திலேயே மாணவச் செல்வங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும் என்ற மிகச் சிறந்த உன்னத நோக்கத்தோடு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒன்றியத்திற்கே வழி காட்டக்கூடிய ஒரு திட்டம் என்று தான் கூற வேண்டும். ஒன்றியத்தில்...

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழர்களுக்கு 80ரூ வேலை உறுதி :  தங்கம் தென்னரசு விளக்கம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழர்களுக்கு 80ரூ வேலை உறுதி : தங்கம் தென்னரசு விளக்கம்

கிருஷ்ணகிரி டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற் சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ழுஆசு தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. 4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை...

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை போடும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராததோடு, தமிழ்நாடு அரசுக்கு சில சட்ட விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 24 மணி நேரத்தில் அதற்கு சட்ட ரீதியான பதிலை தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. அந்த சட்டப் பிரச்சனைகள் எம்மைப் போன்ற பாமர மக்களுக்குப் புரியாது என்ற கவலையோடு ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத கேள்விகளுக்கும் ‘கோடங்குடி மாரிமுத்து’ இந்த பதில்களை பணிவோடு சமர்ப்பிக்கிறார். ஆளுநர் கேட்காத கேள்வி : சில ஆண்டு காலமாவது கிடப்பில் போடாமல் 24 மணி நேரத்தில் எனக்கு பதிலை அனுப்பி என்னை அவமானப்படுத்துகிறீர்களா ? கோடங்குடி மாரிமுத்து பதில் : அப்படியெல்லாம் இல்லை யுவர் எக்சலென்சி! எங்கே நீங்க மகாபாரதத்தில் சூதாட்டம் நடந்திருக்கிறது. அதுவே நமது பாரத கலாச்சாரம் என்று அடுத்தக் கூட்டத்தில் பேசி விடப் போவீர்களோ என்று பக் பக் என்று பதறியது; உடனே பதிலை அனுப்பி விட்டோம். ஆ....

சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’

சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம்  27.11.22 ஞாயிறு காலை 10:30 மணி அளவில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், பரப்புரைத் திட்டங்கள்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு சந்தா திரட்டல், இயக்கத்திற்கு முழு நேரப் பணியாளரை நியமித்தல், இயக்க வளர்ச்சி நிதி திரட்டல் குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றன. கழகத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) 2023 பிப்ரவரி மாதம் சனாதன எதிர்ப்பு “இளையோர் மாநாடு” சேலத்தில் ஒரு நாள் மாநாடாக மிகச் சிறப்பாக நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கம், பாட்டரங்கம், கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சனாதன எதிர்ப்பு கொள்கை உடைய சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்ட பொது மாநாடு என மாநாட்டு நிகழ்வுகள் தீர்மானிக்கப்பட்டன. 2)           2023 ஜனவரி 30,  காந்தியார் நினைவு நாளை...

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

சென்னை மாவட்டக் கழகத்தின் வட சென்னை மாவட்ட அமைப் பாளர் தட்சிணாமூர்த்தி தாயார் வரதம்மாள் கடந்த 28.10.2022 அன்று முடிவெய்தினார். வரதம்மாள் படத் திறப்பு நிகழ்வு 20.11.2022 அன்று மாலை 6:30 மணியளவில் சேத்துப்பட்டு தட்சிணாமூர்த்தி இல்லத்தில் நடை பெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திமுக மாவட்ட பிரதிநிதி மாதவன், அம்பேத்வளவன் – விசிக மேற்கு மாவட்ட செயலாளர், சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 24112022 இதழ்

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், 15.10.2022, அன்று காலை 10 மணியளவில், கடலூர் மஞ்ச குப்பம்  தலைமை தபால் நிலையம் அருகில்,  “உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அயோத்தி தீர்ப்பு” என்ற தலைப்பில்  உயர்சாதி பிரிவினருக்கு வழங்கிய 10% இடஒதுக்கீட்டை கண்டித்தும்,  ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனத்தின் குரலாக உச்சநீதிமன்ற தீர்ப்பு, பொருளாதர அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது, 10% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டு முறையையே சீர்குலைக்கும், சமூகநீதியை சீர்குலைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்  தொடக்க நிகழ்வாக விடுதலைக் குரல் கலைக்குழுவினர் கொள்கை பிரச்சார பாடல்களை பாடினர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர், ர.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர், அ.மதன்குமார் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆ.சதிசு – மாவட்ட அமைப்பாளர், சிவா – இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், பிரேம் – தமிழ்நாடு மாணவர்க் கழக மாவட்ட அமைப்பாளர்,...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தோழர்களின் ‘இல்லம் தேடி சந்திப்பு’ நிகழ்வின் முதல் நிகழ்வாக 30.10.2022 ஞாயிறு அன்று, கவுந்தாபாடி இளமதி செல்வம் வீட்டிற்கு தோழர்கள் சென்றனர். தோழர்களின் இல்லத்தில்  அவர்களது குடுபத்தினரோடு கலந்துரையாடல் நடைபெற்றது . அந்த பகுதியில் அமைப்பை கட்டமைப்பது, தோழர்களுக்கு அவர்களது வாழ்வியலில் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அனைவருக்கும்  அசைவ விருந்தினை தோழர் செல்வம் குடுபத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இரண்டாவது வார நிகழ்வாக 6.11.2022 அன்று அந்தியூர் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர் வீரா கார்த்திக் இல்லம் சென்றனர். தோழரின் குடும்ப அறிமுகத்திற்குப்  பின் அவர்களின் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருங்கிணைந்த குடும்ப விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெறறது. கலந்து கொண்ட அனைவருக்கும் வீரா...

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை (2) பெரியாரின் சுயமரியாதையும் வள்ளலாரின் ஜீவகாருண்யமும் ‘மனிதத்தை’யே பேசின

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை (2) பெரியாரின் சுயமரியாதையும் வள்ளலாரின் ஜீவகாருண்யமும் ‘மனிதத்தை’யே பேசின

அருட்பெருஞ்ஜோதி பாடலோடு வள்ளலாரின் கட்டுரைகளை மறைத்து விடுகிறார்கள். அந்தக் கட்டுரைகளில் சமயத் தெய்வங் களையும், ஜாதி ஆச்சாரங்களையும் எதிர்த்தவர் வள்ளலார். சென்னை மாவட்டக் கழகம் சார்பாக,    ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். வள்ளலார் முதலில் பாசுரங்களைப் பாடி வந்தவராகவே இருந்திருக்கிறார். வள்ளலாருக்கு  தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் பக்தி மரபைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர். இவர்கள் ஏற்படுத்தியது, தமிழ் பக்தி மரபுகளில் மிக முக்கியமான மரபு. இந்த மரபில் தான் வள்ளலார் ஊறியிருந்தார்....

பிரதமர் மோடி ‘தமிழ் சங்கம’த்தை காசிக்கு மாற்றியது ஏன் ?

பிரதமர் மோடி ‘தமிழ் சங்கம’த்தை காசிக்கு மாற்றியது ஏன் ?

தமிழர்கள் வாழ்க்கையில் பார்ப்பனர்கள் சமஸ்கிருத சடங்குகளைப் புகுத்துவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சி களை ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அம்பலப்படுத்துகிறார். அவரது நூலிலிருந்து: ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர் களுக்கு வடமொழியிற் பற்று மிகுந் திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகி தர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேற விட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதி களையெல்லாம் செய்துதந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின. சிலப்பதிகாரத்தில் காணப்படும்...

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் சிந்தனை

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் சிந்தனை

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்! சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை பெரியார் 1957 இல் இதே நாளில் எரிக்கச் சொன்னார். இந்த சட்டப் பிரிவுகள் சாதியை மட்டும் பாதுகாக்கவில்லை. பார்ப்பன மேலாண்மையையும் இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை; எப்படி? அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) ஆகியவற்றில் ‘பழக்கச் சட்டம்’, ‘வழக்கச் சட்டம்’ (ஊரளவடிஅள யனே ருளயபநள) என்பதற்கு சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மதச் சுதந்திரம் மற்றும் பழக்க வழக்கங்களில் எந்த சட்டமும் தலையிட முடியாது என்ற பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் இணைப்பதற்கு திரைமறைவில் தனது செல்வாக்கை செலுத்தி செயல்பட்டவர், பார்ப்பனர்களின் தலைவரான, இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியான சந்திரசேகரேந்திர சரசுவதி என்பவர்தான்! அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவு மதங்களைப் பற்றிப் பேசுகிறது. மதப் பிரச்சினைகள் எதுவானாலும் அது சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றுதான் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அமைப்பு...

தமிழை மதமாக்கி, தமிழரை ஆரியத்துக்குள் திணிக்கும் முயற்சியே காசி தமிழ்ச் சங்கமம் ம.கி.எட்வின் பிரபாகரன்

தமிழை மதமாக்கி, தமிழரை ஆரியத்துக்குள் திணிக்கும் முயற்சியே காசி தமிழ்ச் சங்கமம் ம.கி.எட்வின் பிரபாகரன்

75ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக, “விடுதலையின் அமுதப் பெருவிழா” என்கிற பெயரில் தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருவது, நாம் அறிந்ததே! அதன் ஒரு பகுதியாக “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதை வலியுறுத்தும் விதமாக, “காசி தமிழ் சங்கமம்” என்கிற பெயரில், ஒரு மாத தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு 19/11/2022இல் இருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. இதன் நோக்கங்களும் தெளிவாக சென்னை அய்.அய்.டி. உருவாக்கிய இணையதளத்தில் விளக்கப்பட் டுள்ளன. வெளிப்படையாகக் கூற வேண்டும் எனில், புதிய கல்விக் கொள்கையை (2020) கலை வடிவத்தின் மூலமாக திணிப்பது முக்கிய நோக்கமாகும். இதை அவர்களே கூறி யிருக்கிறார்கள். வடஇந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஆன்மீக தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சனாதன கொள்கைகளை தமிழ்நாட்டில் தீவிரமாக புகுத்துவது இன்னொரு நோக்கமாகும். “வாஸ்து சாஸ்திரத்தை நவீன அறிவியலோடு இணைப்பது” போன்ற பல நகைச் சுவையான நோக்கங்களும் கூறப்பட் டுள்ளன. சென்னை...

ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட மூன்று நூல்களை வெளியிட்டு ஆ.இராசா முழக்கம் ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்கிறது

ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட மூன்று நூல்களை வெளியிட்டு ஆ.இராசா முழக்கம் ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்கிறது

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணி யளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ கவிஞர் பிரபஞ்சன் எழுதிய “ஈரோடு தமிழர் உயிரோடு”, கவிஞர் நா.காமராசு எழுதிய , ‘ஒரு குயிலின் போர்ப் பாட்டு’ ஆகிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. மருத்துவர் தாயப்பன், வழக்கறிஞர் அஜிதா, மு.செந்திலதிபன் (மதிமுக) ஆகியோர் நூல்களை திறனாய்வு செய்து உரையாற்றினர்.  நிறைவாக திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சிறப்புரை யாற்றினார். கருஞ்சட்டைப் பதிப்பகம் இயக்குனர் பெல். இராசன் நிகழ்விற்கு தலைமையேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா  உரையில் – “ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்தாயுதங்களாக இந்த ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட முன்று...

‘மாவீரர் நாளில்’ கழகத் தலைவர் நூல் விற்பனை

‘மாவீரர் நாளில்’ கழகத் தலைவர் நூல் விற்பனை

கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘பெரியாருக்கு எதிராக முனை மழுங்கும் வாதங்கள்’ என்ற புத்தகம் நன்செய் பதிப்பகத்தின் சார்பில் மக்கள் பதிப்பாக, 80 பக்கங்கள், 40 ரூபாய் விலையில் வரவுள்ளது. நூலின் வெளியீடு நவம்பர் 27 மாவீரர் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நாடாளு மன்ற உறுப்பினர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது. அன்று விற்பனையாகும் புத்தகங்களுக்கான தொகை முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வுள்ளது என்று ‘நன்செய் பதிப்பகம்’ சார்பாக கவிஞர் தம்பி அறிவித்துள்ளார். ‘அறிவுச்சுடர் பதிப்பகம்’ நடத்தி வரும் திருச்சி அரசெழிலன், கழகத் தலைவரின் பிறந்தநாளை ஒட்டி 500 புத்தகங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிற தோழர்கள் இதேபோல வேறு ஏதாவது சிறு நூல்களை வெளியிட்டு கொள்கை பரப்பலாம் என்கிறார் தோழர் அரசெழிலன். பெரியார் முழக்கம் 17112022 இதழ்  

பொழிலன் எழுதிய திருக்குறள் ஒப்பாய்வு: கழகத் தலைவர் உரை

பொழிலன் எழுதிய திருக்குறள் ஒப்பாய்வு: கழகத் தலைவர் உரை

பொழிலன் எழுதியுள்ள “திருக்குறள் ஒப்பாய்வுரை” (அறத்துப்பால்) நூல் அறிமுக நிகழ்ச்சி – 3, பாளையங்கோட்டை, சமாதானபுரம், ஏ.டி.எம்.எஸ். அரங்கில் 11.11.2022 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திருக்குறள் ஒப்பாய் உரை நூல் குறித்து கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர் களும் கலந்து கொண்டு கருத்துரை வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 17112022 இதழ்

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூரில் பெரியாரின் பெருந் தொண்டர்  திராவிடர் கழக மண்டல செயலாளர் பிரகலாதன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி  தலைமை உரை நிகழ்த்தினார். கழகத்தின் அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்பு கூறினார். தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டத்தின் பிரச்சார அணியின் செயலாளர்  வேணுகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, தமிழர் இன உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக  பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மாபேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பெரியநாயகம், கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர்  இராம இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். நிகழ்வில்...

6 பேர் விடுதலை; தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறிப்பு நாள்

6 பேர் விடுதலை; தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறிப்பு நாள்

ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் 11.11.2022 அன்று  உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று தான் கூற வேண்டும். மனித உரிமையாளர்களுக்கு சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் வழியாக பல செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, பேரறிவாளன் விடுதலைக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டதோ அத்தனை காரணங்களும் ஏனைய 6 பேருக்கும் அப்படியே பொருந்தும் என்பது ஒன்றாகும். இரண்டாவது தமிழக அமைச்சரவையின் முடிவு தான் இறுதியானது. அதை ஆளுநர்கள் கிடப்பில் போடுவதால் தடுத்து விட முடியாது, என்று மாநில உரிமையும் இதில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இது ஆளுநர் சண்டித்தனத்திற்கு கிடைத்த சரியான ஒரு பதிலடி. மூன்று, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு விட்டார். எனவே அமைச்சரவையின் முடிவும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்த...

“ரிஷிகள் நேரில் வரவேண்டும்”

“ரிஷிகள் நேரில் வரவேண்டும்”

ழ         ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எல்லாம் பயப்பட மாட்டார். அவருக்கு பாரதத்தை உருவாக்கிய ரிஷிகளும் முனிவர்களும் வந்து கட்டளையிட வேண்டும், அப்போது தான் அவர் பதவி விலகுவார்! ழ         உயர் ஜாதி ஒதுக்கீட்டில் பிராமணர் களுக்கு கிடைக்கும் இடங்கள் குறித்து அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் வானதி சீனிவாசன். அத்துடன் கொட்டும் மழையில் இரவு பகல் பாராது மழைநீரை அகற்றிக் கொண்டிருக்கும் தொழி லாளர்களில் பிராமணர்கள் எவ்வளவு பேர்? என்ற அறிக்கையையும் கேட்டால் நல்லது. ழ         கடவுளுக்கு ஆண்டுதோறும் நடத்தும் திருமணம் போலியானது என்று தீட்சதர்கள் நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்கள். ஆனால் பக்தர்களை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள் ! இதற்குப் பெயர் பக்தி ஆன்மீகம்! – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து   பெரியார் முழக்கம் 17112022 இதழ்  

“பிராமண” வெறுப்பு வாதத்துக்கு பதிலடி உடை-உணவு-வீடு என்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் ‘பிராமணர்’களின் உற்பத்தி பங்கு என்ன?

“பிராமண” வெறுப்பு வாதத்துக்கு பதிலடி உடை-உணவு-வீடு என்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் ‘பிராமணர்’களின் உற்பத்தி பங்கு என்ன?

இட ஒதுக்கீடு என்பதற்கு மாற்றுப் பெயர் சமூக சமத்துவம் ளடிஉயைட னநஅடிஉசயஉல.  அனைவருக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படையான ஒரு கொள்கை. உரிமைகளை, வேலை வாய்ப்புகளை அரசியலை உழைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். 10ரூ இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் அதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘பிராமண வெறுப்பு அரசியல்’ பேசுவதாக இப்போது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து சில கேள்விகளை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. பிராமணர் என்று நீங்கள் சொல்கிற சொல் என்பதே சூத்திரர் என்று  ஏனைய மக்களை வெறுக்கின்ற இழிவு படுத்துகின்ற சொல் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா?  சர்மா இருக்கிறார், சாஸ்திரி இருக்கிறார், அய்யங்கார் இருக்கிறார் ஆனால் பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா? இந்த சர்மா, சாஸ்திரி, அய்யங்கார் இவர்களையெல்லாம் சேர்த்து வர்ண அடிப்படையில் சூட்டப் பட்டது தான் பிராமணர். ஆனால் வர்ணம் என்ற அடிப்படையில் பிராமணர் என்று...

நீதிமன்றத்தில் ஒரு பேச்சு; மக்களை ஏமாற்ற வேறு பேச்சு பாஜகவின் இரட்டை வேடம் ம.கி. எட்வின் பிரபாகரன்

நீதிமன்றத்தில் ஒரு பேச்சு; மக்களை ஏமாற்ற வேறு பேச்சு பாஜகவின் இரட்டை வேடம் ம.கி. எட்வின் பிரபாகரன்

“கிறித்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் சமூக மக்களையும், பட்டியலினத்தவர் களாகவே கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. அந்த பொதுநல மனுக்களுக்கு எதிராக பாஜக அரசு, எதிர் உறுதிச்சான்றை (ஊடிரவேநச ஹககனையஎவை) நீதிமன்றத்தில் (09/11/2022) சமர்ப்பித்துள்ளது. அதில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. பாஜக நீதிமன்றத்தில் கூறியவை என்ன? “பட்டியலின மக்கள் எந்த மதத்துக்கு மாறியிருந்தாலும் அவர்கள் பட்டியலினத்தவராகவே கருதப்பட வேண்டும்” என்கிற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தவறு என்றும், ஹிந்து மதத்தில் இருக்கும் அளவுக்கான தீண்டாமையோ, மற்ற ஒடுக்குமுறைகளோ கிருத்தவ இஸ்லாமிய மதங்களில் பரவலாக இல்லை என்றும், கிறித்தவமும் இஸ்லாமும் அந்நிய நாட்டு மதங்களாக இருப்பதால் ஜாதி அமைப்பை அம்மதங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கிறித்தவ இஸ்லாமிய மதம் மாறியவர்களுக்கு, பட்டியல் இன இடஒதுக்கீட்டை வழங்கினால் அவர்களும் ஹிந்து...

எழுவர் விடுதலை; துணிவுடன் முதலில் களமிறங்கிய வழக்கறிஞர் துரைசாமி

எழுவர் விடுதலை; துணிவுடன் முதலில் களமிறங்கிய வழக்கறிஞர் துரைசாமி

7 பேர் ‘விடுதலை’யில் துணிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடி வந்த பெருமை ‘பெரியாரிஸ்ட்’ மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்களுக்கே உண்டு. இதை வரலாற்றில் பதிவு செய்தாக வேண்டும். இது குறித்து வழக்கறிஞர் துரைசாமியின் பங்களிப்பை அவரது ஜூனியர் இளங்கோ முகநூலில் செய்துள்ள பதிவைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெருமையுடன் பதிவு செய்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்?  குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது. சிபிஐயினர் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திப்படுத்த கைது வேட்டையை தொடங்கி விட்டனர். முதலில் ஓ.சுந்தரம், திமுக பிரமுகர், இவர் தான் முதல் காவல். விடுதலைப் புலிகளை ஆதரித்த அரசியல் வாதிகள் கைதுக்கு பயந்து அங்கங்கே பதுங்கிக் கொண்டனர். அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. நிறைய தீ வைப்பு சம்பவங்கள்.  ஆதரவு அரசியல் கட்சியினர் எவரும் முன்வரவில்லை. சட்டவிரோத காவலில் இருந்த...

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தி ஃபெடரல்.காம் (புதிய தலைமுறையின் ஆங்கில இணைய பதிப்பு) ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களை வளைக்கவும், உயர்ஜாதி இந்துக்களின் ஆதரவைப் பெறவும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2 முக்கியத் தீர்ப்புகள் பயன்படும் என்றே சொல்லலாம். ஒன்று, 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு, மற்றொன்று தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்ஜாதி ஏழை களுக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு. அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவுகள் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கொண்டு வரப்பட்ட போது தென்னிந்தியாவைத் தாண்டி எதிர்ப்புகள் மிகச்சொற்பமே. உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர்களில் நீதிபதி ஜே.பி.பார்திவாலாவும் ஒருவர். இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தீர்ப்பு ஒன்றில் சம்மந்தமே...

சேலம் மாவட்டம் சார்பாக 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்கள் சேர்ப்பதாகத் தீர்மானம்

சேலம் மாவட்டம் சார்பாக 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்கள் சேர்ப்பதாகத் தீர்மானம்

சேலம் மாவட்டக் கழகங்களின் சார்பாக 1.11.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்களை சேர்க்க வேண்டும் என்று கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்டம் : 01.11.2022 செவ்வாய் மாலை 6.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் நகர படிப்பகத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1 )          2023ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தாக்களாக 2023 சந்தாக்களை சேலம் மாவட் டத்தின் சார்பாக   (கிழக்கு – மேற்கு) தலைமைக் கழகத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வழங்குவதென முடிவு செய்யப் பட்டது 2)           அய்ந்தாண்டு சந்தாவாக சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக 100 சந்தாக்களுக்கான தொகையினை நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு நாளில் தலைமைக்கு ஒப்படைப்ப தெனவும் தீர்மானிக்கப் பட்டது. 3)...

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

சைவமோ, வைணவமோ மக்களுக்குப் பசியாற்ற வேண்டும் என்று கூறியதே இல்லை. கிறிஸ்தவம் மக்கள் சேவையையே தனது கொள்கை யாக்கியது. வள்ளலார் அமைப்புக்குள்ளேயே அவருக்கு எதிராக நாச வேலைகள் நடந்தன. சென்னை மாவட்டக் கழகம் சார்பாக,    ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். அதில் ஒரு பகுதி: “சைவம், வைணவம் முதலிய சமயங் களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்”. வள்ளலார், மதம், சமயம் என்று இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். மதம் என்பது, வடமொழி மரபு சார்ந்த,...

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

“நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தா லும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாத வராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை. மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால், ஒரு பிராமணனைக் கொண்டோ, ஒரு பிராமணப் பத்திரிகையைக் கொண்டோ தான் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட் டினருக்குத் தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக் கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை. 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத் தொகையுள்ள கூட்டத்தாருக்கு தங்கள் நாட்டில் தங்களைப் பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?” – ‘குடிஅரசு’ 02.08.1925 பெரியார் முழக்கம் 10112022 இதழ்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

6.11.2022 அன்று காலை 11 மணிக்கு புவனகிரி நகரத்தை அடுத்த கீரபாளயத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்பு கூறினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கடந்த 15.10.2022 அன்று புவனகிரி நகரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1)           15.10.2022 அன்று சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு நடைபெற்ற  நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்திற்கு பெரும் உழைப்பை செலுத்திய, நிதி அளித்து பங்களிப்பை செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படு கிறது. 2)...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

உயர் ஜாதிப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட 2 நீதிபதிகள், “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்றத் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். “இது சமூகநீதிக்கு பின்னடைவு என்றும் இந்திய ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்கு ஆதரவான சக்திகள் ஒருங் கிணைந்து போராட முன் வர வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ் நாட்டின் உணர்வு களைப் பிரதிபலித்து இருக்கிறார். தீர்ப்பை ஆதரித்து வழங்கப்பட்ட கருத்துகள், அரசியல் சட்ட அமைப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கை அந்த சமூகத் திற்கான மக்கள் முன்னேற்றமடைய பயன்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது பச்சைப் பார்ப்பனியக் கருத்துகளை தீர்ப்புகளாக எழுதி வைத்துள்ளனர். பிராமணர் சங்க மாநாடுகளில் பேசப்படும் கருத்துக்கள், அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட...

வந்தே மாதரம் தேச பக்தி பாடலா ?

வந்தே மாதரம் தேச பக்தி பாடலா ?

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், தேசிய கீதத்துக்கும் (ஜன கன மண) தேசிய பாடலுக்கும் (வந்தே மாதரம்) ஒரே அந்தஸ்து வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், “தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. இருப் பினும் மக்கள் இரண்டு பாடல் களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும்” என்று பதில் மனுவில் கூறியுள்ளது. வந்தே மாதரம் தேச பக்தி பாடலா? அது இந்திய ஒன்றியத்தின் பெருமையை கூறுகிறதா ? பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சி யிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம்...

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88%  தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

“தமிழர்களின் நிலையை எடுத்துக்கூற ஒரு பத்திரிக்கை கூட இல்லையே” என்று பெரியார் 1925இல் குடிஅரசு இதழைத் தொடங்கினார். தொடர்ந்து ரிவோல்ட், பகுத்தறிவு, புரட்சி, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களையும் பெரியார் தொடங்கி சமூக இழிவுகளை எளிய மக்களிடம் கடத்தினார். இந்திய ஒன்றியத்தில், அச்சு, தொலைக் காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் (ஆங்கிலம், இந்தி) 88% உயர் பதவிகளில், உயர் ஜாதியினர் மட்டுமே பதவியில் உள்ளனர்.  புள்ளி விவரங்களுடன் கட்டுரை அதை விளக்குகிறது கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் (அதாவது அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்களின்) தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில்தான் இருக்கின்றன. 2021-2022ஆம் ஆண்டின் நிலை இது. 2018-2019ஆம் ஆண்டின் நிலையிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்பாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” என்ற தலைப்பில் ஏப்ரல்...

கோவையை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் அண்ணாமலை மீது கழகம், காவல் துறையில் புகார்

கோவையை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் அண்ணாமலை மீது கழகம், காவல் துறையில் புகார்

கோவையில் கடந்த 23.10.2022 அன்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில்  இருந்த சிலிண்டர் வெடித்து  விபத்து நடந்தது. கோவை மாநகரக் காவல் துறை இந்த விசயத்தில் தொடர்ந்து விசாரித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விசாரணையைக் கெடுக்கும் விதமாகவும், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும் தொடர்ந்து மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசி விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. பொது அமைதியைக் கெடுத்து கோவையை கலவர பூமியாக்கத்  துடிக்கும் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், விசாரணையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர உதவி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்டவர், ‘மாநகர காவல் ஆணையாளரிடம் தகவலை சொல்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்கின்றோம்’ என்று கூறினார்....

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

தோழர்கள் ரூபாஸ்ரீ – சபரிகிரி ஆகியோரின் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி விவாஹா திருமண மண்டபத்தில்  30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகர் கலை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின. முன்னதாக மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்பொழுது கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை ஆனைமலை வினோதினி, திருப்பூர் யாழிசை, யாழினி, கண்ணையா ஆகியோர் பாடினர். இணையேற்பு விழாவிற்கு கோவை மாவட்டக் கழகச் செயலாளர் வே.வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். கழகத் தோழரும் மணமகனுமான  கோ. சபரிகிரி  வரவேற்பு கூறினார்.  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  தலைமையில் மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். மணமக்களை வாழ்த்தி பேராசிரியர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பொறியாளர் தி.பரமசிவம், (திராவிடர் கழகம்), காசு.நாகராசன்...

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூர் மாவட்ட திராவிட விடுதலைக் கழகத் தோழர் பெரியார் வெங்கட்  இல்லத் திறப்பு விழா 30.10.2022 அன்று வேலூர் கன்னிகா புரத்தில், மாவட்டத் தலைவர் திலீபன்  தலைமையில் நடைபெற்றது . திராவிடர் விடுதலை கழகத் தலைமைக் குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார்  இல்லத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். நிகழ்வில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். திறப்பு விழாவிற்கு பின் நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகர  அமைப்பாளராக  பெரியார் வெங்கட்டை  நியமிக்க வேண்டும் என்று தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். தலைமை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர்  திலீபன், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டப் பொருளாளர்  சதீஷ், தலைமைக் கழகச் செயற்குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். பெரியார் முழக்கம்...

அரியூரில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

அரியூரில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

“தமிழர்களை திராவிடர்களை இழிவுபடுத்தும் தீபாவளியை புறக்கணிப்போம்;  பார்ப்பன புராண தீபாவளி நரகாசூரன் கட்டுக்கதை அறிவியலுக்கு பொருந்துமா?” என்ற தலைப்பில்  24-10-2022 அன்று  காலை 10.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட தலைவர் பூஆ. இளையரசன் தலைமையில் அரியூரில் உள்ள கே.வி.ஆர் அரங்கத்தில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடவுள் மறுப்பை  பிரகாஷ் பேசினார். கடலூர் மாவட்ட தி.வி.க செயலாளர் சிவக்குமார் வரவேற்பு கூறினார்.   தொடர்ந்து மக்கள் அதிகாரம் சாந்த குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் – விஜி பகுத்தறிவு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் – அறிவொளி, புரட்சி பாரதம் கட்சி புதுச்சேரி மாநில தலைவர் – ஓவியன், தமிழக வாழ்வுரிமை கட்சி விழுப்புரம் மாவட்டத் தலைவர் –  திராவிட நாகு, தி.வி.க விழுப்புரம் மாவட்ட தலைவர் –  பூஆ.இளையரசன்,  மக்கள் அதிகாரம் – ரூபாவதி ஆகியோர் தீபாவளி புராணக் கதையில் உள்ள...

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

“வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்” என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் ஆற்றிய உரை. இந்து என்ற பெயரில் பிறர் மீது தலைமையும், புனிதம் கொண்டவனாகவும் தன்னை காண்பிப் பதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார் களல்லவா ? அதைத் தான் நாம் மறுக்கின்றோம். வள்ளலார், அந்த பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கு வதற்காகவும், அதுமட்டுமில்லாமல் இந்த மூடத்தனங்கள் நிறைந்துள்ள சடங்குகளை தவிர்த்து ஒரு தெய்வ நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். ஒளி வழிபாடு என்றால் அறிவு வழிபாடு என்று பொருள். ஒளி அறிவைக் குறிக்கும். ஒளி உள்ள இடத்தில் இருள் விலகும். அறிவூட்டுவது ஒளி. இதைத்தான் வள்ளலார் கொண்டு வந்தார். அக்கினி வழிபாடு அல்ல. அது பிராமணர்க்கு உரியது, அழிவுக்குரியது. ஒளி வழிபாடு, அறிவு வழிபாடு; வள்ளலார் காட்டிய வழிபாடு. அப்படியென்றால் இந்த சிலை, கோவில் அனைத்தையும் கடந்து அவர் வருகிறாரல்லவா...

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

பாரதம் (இந்தியா) ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவாக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, 29.10.2022 அன்று சன் நியூஸ் “கேள்விக் களம்” நிகழ்வில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன் வைத்த கருத்துகள். தமிழ்நாட்டின் ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக அரசியலை பேசுபவராகத்தான் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் தமிழ்நாட்டுக் கருத்தியலுக்கு எதிரான மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசி வருகிறார். ‘சனாதன தர்மம்’ என்பதை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிப்பவராகத் தான் ஆளுநர் இருக்கிறார். இப்போது அந்த உரையிலும் சனாதன தர்மத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது, ‘வேதங்களையும், ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படியாகக் கொண்டு அமைக்கப்பட்டது’ என்பதை ‘சனாதன தர்மா’ என்ற நூலே விளக்குகிறது. இது காசி பல்கலைக் கழகத்தில் எழுதப்பட்ட நூல். ஆளுநர் தற்போது...

வேத எதிர்ப்பு

வேத எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்லப் போனால் வேத எதிர்ப்பு சங்கதி தோன்றியது  இன்று நேற்றல்ல, “ஈரோட்டு இராமசாமி”யும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத் திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக் காலத்தே தெரியாது. காரணம் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடையே வாய்மொழியாக உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந்திருக் கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத் தினை முழுவதும் படித்ததினா லேயே அவர்கள் வேதத்திற்கும், யாகத்திற்கும், தேவர்களுக்கும், பிராமணர் களுக்கும் விரோதி களானார்கள் என்பதாகத் தெரிகிறது. எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனி மொழியே இருந்ததில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிய மொழி பல மொழி, மலைவாசி மொழிகள். அப்படிப்பட்ட சகல மொழி களையும் கிரமப்படுத்தி சமஸ்கிருதம் சகலத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கினார்கள்....

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

கொரோனா காலத்திற்குப் பின் அச்சுத்தாள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தாள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக் காரணமாக வேறு வழியின்றி நமது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் சந்தா தொகை உயர்த்தப்படுகிறது. ஆண்டு சந்தா ரூ. 300/- ஆகவும் 5 ஆண்டு சந்தா ரூ. 1500/- ஆகவும் –  உயர்த்தப்பட்டுள்ளது. தோழர்கள், வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். “புரட்சிப் பெரியார்  முழக்கம்” ஆண்டுக்கட்டணம் ரூ.300 தொடர்புக்கு : ஆசிரியர்,  29, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. & 7373684049   பெரியார் முழக்கம் 03112022 இதழ்