Category: பெரியார் முழக்கம்

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

கோயில்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மேலோட்ட மாக பார்க்கும்போது பக்தி நெறி செழித்திருப்பதுபோலத் தெரி கிறது. இது பொய்த் தோற்றம். இந் நாளில் இருக்கும் பக்தி வழுக்கல் நிலத்தில் வடித்த மாளிகை.- ‘தினமலர்-பக்திமலர்’ அக்.24 பெரியார் இயக்கம் தோற்று விட்டது என்போருக்கு ‘அவாள்’களே தரும் ஒப்புதல் வாக்குமூலம்! பெரியார் முழக்கம் 07112013 இதழ்

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால், மீண்டும் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் ஒருவிஷயத்தை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பரவலாக நம்பப்படுவது, கூறப்படுவதைப்போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை. நமக்கும், மனிதக் குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுக்கு முன்னால் இருந்திருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த பொது மூதாதையை யீயn யீசiடிச என்று அழைக்கிறார்கள். அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள். அறிவியல் ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை. நாம் மனிதக் குரங்குகள்தான். அதாவது, சமூகத்தில் வாழும் மனிதக் குரங்குகள். அதே  நேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, பரிணாம வளர்ச்சி அல்லது படிநிலை வளர்ச்சி என்பது தொடர்பற்ற மரபணுக் கலப்பு (ழுநநே அரவயவiடிn), சுற்றுச் சூழல் நெருக்கடிகளால் (நுnஎசைடிnஅநவேயட ஞசநளளரசநள) உருவாகும் இயற்கைத்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காமன்வெல்த் மாநட்டில் பிரதமர் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.                              – ப. சிதம்பரம் ஆமாம்! விமானத்துக்கு ‘டிக்கட்’ உறுதியானால் தான் போவார்! தீபாவளியில் ராக்கெட் பட்டாசு விட்டவர்களால் மட்டும் 157 தீ விபத்துகள் நடந்துள்ளன.   – தினமலர் செய்தி அதற்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் எதையும் காவல்துறை பயன்படுத்திட வேண்டாம்! பூமாதேவியின் பிரார்த்தனையை ஏற்று கண்ணபிரானால் தொடங்கி வைக்கப்பட்ட புனித  நாள், தீபாவளி.    – ‘தினமணி’யில் காஞ்சி ஜெயேந்திரன் அதுமட்டுமா? வரதராஜப் பெருமாளை ‘மோட்சத்துக்கு’ அனுப்பி ஸ்ரீ ஜெயேந்திரர் சிறைவாச°தலத்தில் அவதரித்த புனித நாளும் இதே தீபாவளித் திருநாள் தான்! டில்லியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க ஆட்கள் தேவை.     – மாநகராட்சி பத்திரிகை விளம்பரம் ஸ்ரீராமன் சேனையை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா? இராமபிரான் வரமாட்டான் என்ற துணிச்சல்; தானே? உலகத்திலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடான இந்தியா, அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட...

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

19 ஆம் நூற்றாண்டில் பெரியாருக்கு முன்பு தமிழ் மாகாணத்தில் நாத்திகர் இயக்கம் ஒன்று ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் இதழையும், ‘தி திங்கர்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளனர். இந்நூல் களைத் தேடிக் கண்டுபிடித்து, சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். ‘நியு செஞ்சுரி புக் ஹவு°’ இத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வரங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வரங் கில் அக்.28, 29, 30 தேதிகளில் நடை பெற்றது. பல்வேறு வரலற்று ஆய்வாளர்கள் பங்கேற்று நூலின் உள்ளடக்கங்களை பல்வேறு தலைப்பு களில் ஆய்வு செய்தனர். ‘சென்னை லவுகிக சங்கமும்-பெரியாரும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29 ஆம் தேதியன்றும், ‘தத்துவ விவேசினியில் பெண்கள் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 30 ஆம்...

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வைணவத்தில் வடகலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும், தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதல் இன்றும் தீர்ந்தபாடில்லை. கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக் கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப் படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும் மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும், அந்த உலா தேவநாத சாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாத சாமி கோயில் பார்ப்பனர்கள் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத்...

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிராயுதபாணியாக பிடித்து, சித்திரவதை செய்து, பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்தக் காட்சிகளை லண்டனிலுள்ள ‘சேனல்-4’ தொலைக்காட்சி வெளியிட்டவுடன், வழக்கம்போல, ‘போலி காட்சிகள்’ என்று இலங்கை அரசு மறுத்துள்ளது. இசைப் பிரியா – போரின்போதுதான் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சாதித்தது. இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்ட போரில் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இசைப் பிரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ‘சேனல் 4’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்ரீலங்கா: கொலைக் களம்’ என்ற படத்தைத் தயாரித்த லண்டன் பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான கல்லம் மக்ரே, இதை மறுத்துள்ளார். ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேடு (நவ. 2) அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது இலங்கை அரசுக்கே தெரியும். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வெளிவர இருக் கின்றன என்று அவர் கூறியுள்ளார். இதைப் படம் பிடித்தவர்களே இலங்கை இராணுவத்தினர் தான். அவைகளை...

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் – தமிழுக்காக உழைத்தவர்கள் – தமிழ் எழுத்தாளர்கள் – தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும்  பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம். பெரியாருக்கு சான்றிதழ்களை வழங்கும் உரிமைகளை இவர்களே கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவில் பேசிய மருத்துவர் இனியன் இளங்கோ, தனது உரையிலேயே பெரியார் புறக்கணிப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியார் பேச்சு-எழுத்து பற்றி ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ வ.ரா. என்று அழைக்கப்படும் ராகவ அய்யங்கார், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, திரு.வி.க. ஆகியோரின் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறோம். வ.ரா. எழுதுகிறார் “தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது....

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை. போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு...

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசே! நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம் பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று! வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப் பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு! ஜாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜாதியக் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு! வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்க...

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...

மோடியின் வரலாற்று உளறல்கள்

மோடியின் வரலாற்று உளறல்கள்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக வலம் வரும் மோடி – அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு: தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.            – திருச்சிக் கூட்டத்தில் மோடி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜ கோபாலாச்சாரி. குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.   – பாட்னா கூட்டத்தில் மோடி சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர். மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றிக் கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரி களால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.     – மோடி பாட்னா பேச்சு அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது...

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

தமிழர் சமுதாயத்தின் விடிவெள்ளியாம் பெரியார் கொள்கைகளுக்காக கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். திராவிடர் விடுதலைக் கழகம் – ஜாதி-தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது. மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் தொழில்துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக இயக்கங்களை நடத்துகிறது. அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றதாய் செயல்பட போராடுகிறது. இராஜபக்சேயின் இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்கு எதிராய் நீதி கேட்டு நிற்கிறது. மரணதண்டனைக்கு எதிராகவும் மக்கள் விரோத கூடங்குளம் அணுமின் திட்டங்களுக்கு எதிராகவும், பறிக்கப்படும் தமிழர் வாழ்வுரிமைகளுக்காகவும் தோழமை அமைப்புகளோடு களமிறங்கி செயலாற்றுகிறது. பெண்ணடிமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மக்களைச் சந்தித்து கருத்துகளை பரப்புகிறது. மனித உரிமைகளுக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டை 12 ஆண்டுகளாக நடத்து வதோடு, பெரியாரிய சிந்தனைகளை நூல்களாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறது. தொய்வில்லா களப்பணியில் தொடர்ச்சியாக நிற்கும் திராவிடர் விடுதலைக்...

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

  திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை (81), 9.11.2013 அன்று சென்னையில் முடிவெய்தினார். தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடல், சொந்த ஊரான கல்லக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடந்தன. தி.க. தலைவர் கி.வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். வழக்கறிஞரான கோ. சாமிதுரை, வழக்கறிஞர் தொழிலைவிட்டு, முழு நேரம் திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 14112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

கட்சியின் சின்னத்தை – அரசின் சின்னமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.                – மினி பேருந்தில் இரட்டை இலை இடம் பெற்றிருப்பதை        எதிர்த்து மு.க. °டாலின் வழக்கு! நியாயமான கோரிக்கை! அப்படியே, கட்சியின் கொடியைப் போலவே தேசியக் கொடியையும் உருவாக்கியிருக்கும் காங்கிர° கட்சியையும் இந்த வழக்கில் சேர்க்கலாமே! சி.பி.அய். அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.- செய்தி நல்லதாப் போச்சு! தடைவிதிக்காதிருந்தால் கவுகாத்தி உயர்நீதிமன்றமே சட்டபூர்வமானது அல்ல என்று சி.பி.அய். வழக்குப் பதிவு செய்திருக்கும்! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்று வருத்தம் தெரிவித்து, ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் சுருக்கமான கடிதம். விளக்கம் எதுவும் எழுதவில்லை.             – செய்தி அதுவரை நல்லது. இலங்கை அரசு மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நல்லாட்சி நடத்துவதற்கு வாழ்த்துகிறேன் என்று எழுதிவிட்டால் வீண் வம்பு! இலங்கை இராணுவத்தின் ‘கொலைக் களங் களை’ அம்பலப்படுத்திவரும் சேனல்-4 தொலைக்...

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது. நாளை நான் சாகும்போது...

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன்...

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

கழக நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிப்பதை தோழர்கள் தவிர்க்கக் கோருகிறோம். ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல் அடங்கியிருக்கிறது. பெரியார் முழக்கம் 28112013 இதழ்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.ன்.ஆர். ராவ், பெங்களூரில் நவம்பர் 24 அன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் “இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், “அது மூட நம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். அறிவியல்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு மனுக்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்துள்ளன. தமிழ்நாடு அறிவுரைக் குழுமம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உள்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் நவம்பர் 25 அன்று தாக்கல் செய்யப் பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் உடனிருந்து உதவி வருகிறார். காவல்துறையினரால் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தபசி. குமரன், சேலம் டேவிட், சென்னை ஜான் ஆகிய தோழர் களுக்கு முன் பிணையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. தோழர் கொளத்தூர் மணியை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். பெரியார் முழக்கம்...

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன்,...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோயில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.  – செய்தி கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய ஒரே கோயில் இதுவாகத்தான் இருக்கும்! மது பாட்டில்களில் – இந்து கடவுள்களின் படங்களை அச்சிடும் ஆஸ்திரேலியா நாட்டைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணி போராட்டம். – செய்தி நியாயம்தாங்க… இதேபோல் இந்துமதச் சின்னங்களை நெற்றியிலும் கழுத்திலும் போட்டுக் கொண்டு மதுபாட்டில்களை உடைக்கும் இந்து குடிமகன்களை எதிர்த்தும் ஒரு போராட்டம் நடத்துங்க! தமிழக மீனவர்களை நாங்கள் தாக்கவில்லை என் கிறது இலங்கைக் கடற்படை. அப்படியானால் தாக்குவது யார் என்று அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.   – இந்திய கடற்படை துணை தளபதி பேட்டி திமிங்கிலங்களும் முதலைகளும் தமிழக மீனவர்களை மட்டும் குறி பார்த்து தாக்கிவிட்டு பிறகு கடலுக்குள் ஓடி விடுகின்றன என்று இலங்கை கடற்படை விளக்கம் கூறலாம். அந்த விளக்கத்தை இந்தியக் கடற்படையும் ஏற்கலாம். காதுல பூ சுத்தாதீங்கய்யா… 60...

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

“இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா? அவர்கள் பிறந்த நாடா? என் நாட்டில் உனக்கு என்ன வேலை? வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான். அட முட்டாள்களா! உங்களுக்கும் சேர்த்துத்தானே பாடுபடுகிறேன். விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே! தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன். மானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள். – தந்தை பெரியார் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

மதுரை மண்டலம் மதுரை மண்டலத்திலுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் திண்டுக்கல் கருந்திணையில் நடைபெறும். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டத்திலுள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர் களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும். தொடர்புக்கு :              அ. சக்திவேல் பேசி: 94425 13177 கோவை மண்டலம் கோவை மண்டலத்திலுள்ள கோவை மாநகரம், புற நகரம், திருப்பூர் மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப் பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 14, 15 ஆகிய நாட்களில் உடுமலையில் நடைபெறும். அனைத்துப் பயிற்சிகளிலும் கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தின் முன்னணி அமைப்புகளின்...

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத் தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையானதாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக்கும் உரிமையில்லையோ, அதே போல, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன் படிக்கும் மாணவர்களைச் சுடுவதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியாவில் பிரித் தானிய ஆட்சியில் 1860இல் உருவாக்கப் பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப் பட்டது. உலகில் போர்ச்சுக்கல் நாடுதான் 1976இல் முதன்முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை...

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் பழகு முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திண்டுக்கல்லில் முகாம் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.750. டிசம்பர் 24 இரவே பெற்றோர்கள் குழந்தைகளை திண்டுக்கல் பயிற்சி மய்யத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும். பெற்றோர்கள் மய்யத்தில் தங்க இயலாது. நகைகள், செல்போன்கள் அனுமதிக்க இயலாது. – ஆசிரியர் சிவகாமி / பேசி: 9842448175 மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

“சிலர் புகழ் வேண்டாம், எனக்கு அதில் ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள். இது பகட்டுப் பேச்சேயன்றி நடைமுறையில் சாத்தியமானதல்ல; அது மட்டுமல்ல, புகழை விரும்பாதவன் மனித உணர்ச்சியோடு இருப்பவன் என்று கூறிவிட முடியாது. புகழ் நிலைத்திருக்க முடியும் என்றால் ஒரு நல்ல பாடகன் என்பவனின் புகழ் அவனோடு மறைந்துவிடும். அல்லது அவனைவிடப் பாடுபவன் தோன்றினால் அவன் உயிர் நாளிலேயே அவன் புகழ் அழிபட்டுவிடும். அதே போன்றுதான் ஒவ்வொரு தனிப்பட்ட புகழும். ஆனால், பொதுக் காரியத்துக்காக அதனால் மக்களுக்கு என்றும் நன்மையைப் பயக்கக் கூடியதாகச் செய்யப்படும் காரியங்களையும் அக்காரியவாதிகளின் புகழையும் என்றும் மறைக்க முடியாது. அவ்விதமான பெரியோர்கள் முதலில் ஏச்சுக்கும், தொல்லைக்கும் ஆளவார்கள். பின்னர்தான் நிலையாக விளங்கும். – காயல் பட்டினத்தில் ‘சீதக்காதி’ நினைவுநாள் விழாவில் பெரியார் பேருரை – 24.4.47 பெரியார் முழக்கம் 21112013 இதழ்

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தைச்சார்ந்த தோழர் ந. விஜயராகவன், ‘புத்தகச் சோலை’ என்ற புதிய புத்தக விற்பனை நிலையத்தை மயிலாடுதுறையில் தொடங்கியுள்ளார். புத்தகச் சோலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா 17.11.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். நாகை மண்டல கழக அமைப்புச் செயலாளர் நா. இளையராசா வரவேற்புரையாற்ற, பெரு வணிகரும் பெரியாரியலாளருமான சா.மீ.சு. முத்துச் செல்வன், வே. மோகன்தாசு, நா.க. உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். “ஒரு பெரியாரியல்வாதியாக நான் இருந்ததால்தான் கடும் நெருக்கடிகளை துணிவாக எதிர்கொண்டு இந்த நிறுவனத்தை என்னால் தொடங்க முடிந்தது” என்று உரிமையாளர் ந. விஜயராகவன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். மோ.சுகந்தி விஜயராகவன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தகச் சோலைக் கட்டிடம் கம்பீரமாக முகப்பில் பெரியார் படத்துடன் தோற்றமளிக்கிறது. இரண்டடுக்கு மாளிகையாக எழுந்து நிற்கும் இந்த...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன?...

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் – கோயில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பது கவனத்துக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. “அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து காவல்துறை பிரிவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என்ற சுற்றறிக்கை 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அனைத்து காவல்துறை நிர்வாக அலு வலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை இயக்குநர் அலுவலகத்தி லிருந்து அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கை யில் இயக்குனர் கே. இராமானுஜம் கையெழுத்திட்டுள்ளனர். காவல்துறை வளாகத்தில் இடம் பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வழிபாடுகள் எதுவும் நடக்கக்கூடாது என்பது காவல் நிலையங் களில் நடக்கும் ஆயுத பூஜைகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் காவல் நிலையங்களில் பூஜைகள் போடுவதை தடைசெய்து தீர்ப் பளித்துள்ளது. இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் 7 மாதங்களுக்கு முன்பு காவல்துறை இயக் குனராலேயே சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 21112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும். – ராஜபக்சே பேட்டி அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை! இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது! கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°….. பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது...

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீரவேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.                                               (பெரியார், ‘குடிஅரசு’ – 24.11.1940 பெரியார் முழக்கம் இதழ் 26122013

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 அன்று பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகில் தலைவர் கொளத்தூர் மணியையும், தோழர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் கி. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் க.சொ. சிவசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட கழக அமைப்பாளர்இரா. காளிதாசு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கு.பாரி, நல்லக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெ. முருகன், வடசேரி கழகத் தோழர் அ.மா. பிரபாகரன், மன்னார்குடி கழகத் தோழர் செந்தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் இதழ் 26122013

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வா°து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து – கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் – விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன. ‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத்...

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

வசதி வாய்ப்புப் படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற ‘உயிர்வலி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசினார். மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவு ‘உயிர்வலி’ (சக்கியடிக்கும் சத்தம்) ஆவணப்பட வெளியீட்டு விழா மன்னார்குடி தமிழ் இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண அரங்கத்தில் தமிழின உணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் இரயில் பா°கர் வெளியிட, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக் கொண்டார். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்குதண்டனை கைதியாக சிறையில் வாடும் பேரறிவாளனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘உயிர்வலி’ ஆவணப்படம் குறித்து பொங்கு தமிழ் இயக்க செயலாளர் மருத்துவர் பாரதிச் செல்வன், தமிழக தலித்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம். ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை...

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு! தமிழக அரசு பதிப்பித்த 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில், “தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: “தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்தனையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்து கிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.” பாடத்தில் தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய பாடங்கள் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியவை. அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்°பெரிமெண்ட்), கண்டறிதல் (ஃபைண்டிங்°) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இயற்கையில் இருப்பதை, நடப்பதைப் பதிவு செய்வது மட்டும் அறிவியல் ஆகி விடாது. உதாரணமாக, ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்று செம்மண்ணைப் பற்றிப் புலவர் எழுதிவிட்டதால், அவர் மண்ணியல் அறிஞர்...

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ‘டீம்லீ°’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதோடு நாடு முழுதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகமாக இருந்தாலும், தமிழகம் மட்டும் பின்னடைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. தென்னக நகரங்களிலேயே வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பது சென்னைதான் என்றும் ஆய்வு கூறுகிறது. மிகவும் கவலையளிக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்தான் அழுத்தமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை இறக்குமதி செய்தபோது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதிமொழியை மத்திய மாநில ஆட்சிகளின் தமிழக அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி வேலைவாய்ப்பு ஏதும் அதிகரித்து விடவில்லை. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்க்காமல், குறைந்த ஊதியத்தில்...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

குரல் உள்ளவரை பேசுவேன்!

குரல் உள்ளவரை பேசுவேன்!

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை யில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நிர்வாகிகள் ஒருபுறமும், தலைவர்கள் ஒருபுறமும் வேட் பாளர்கள் மறுபுறமும் ஒருங்கிணைப்பின்றிச் செயல்பட்டதால் தான் காங்கிர° தோற்றது.  – சோனியா அப்படி, விளக்கமாக சொல்லுங்க. நாங்ககூட, ஏதோ, வாக் காளர்கள்தான் தோற்கடிச்சுட்டதா தப்பாகவே புரிஞ்சுகிட் டோம்! நாடாளுமன்ற தேர்தல் கூட்டடணி பற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுக்குழு ஜெயலலிதாவுக்கு அதிகாரம்.   – செய்தி அதிகாரத்தை அம்மா முறையாகப் பயன்படுத்தி, வெற்றிக் கூட்டணியை அமைக்காவிட்டால், எந்த நேரத்திலும் பொதுக் குழு அதிகாரத்தைப் பறித்துவிடும், எச்சரிக்கை! அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் கைது பிரச்சினையை – பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி போடுகிறதே! – ஒரு வாசகரின் வியப்பு அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் பெண் தூதர் படத்தை வெளியிடத் தடைபோட்டுவிட்டால் செய்தியும் நின்று விடும். தூதர் தேவயானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாடு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய முக்கிய கோரிக்கை.   – அமைச்சர் கமல்நாத் விடாதீங்க…. வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அவசரமாக...

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலை மீது ‘சூத்திரர்கள்’ உருண்டு வழிபாடு செய்தால், நோய் தீர்ந்து, புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை , இப்போதும் கருநாடகத்தில் தொடருகிறது. மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் ‘மடே° நானா’ என்ற பெயரில் நடக்கும் இழிவை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட ‘இந்து’ மடாதிபதிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அவமானத்தை தலைகுனிய வைக்கும் இழிவை நிறுத்தக்கோரி மங்களூர் துணை ஆளுநர் அலுவலகம் எதிரில் கடந்த சனிக்கிழமை டிசம்பர் 7 ஆம் தேதி ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடந்தது. கருநாடகாவைச் சார்ந்த வேதிக் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு, பார்ப்பன இழிவுக்கெதிராக நடத்திய இந்தப் போராட்டத்தில், சித்தே°வர மடாதிபதி பசவராஜா தேவாரூ, மைசூர் பேட்டாட புரா மடாதிபதி சிரச்ரேட்டி சிவாச்சார்ய சுவாமி, கருநாடகா சமூகநலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டித்துப் பேசினர். கடந்த பல ஆண்டுகளாகவே இதை எதிர்த்து இயக்கங்கள்...

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக – இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது. மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வா°து சா°திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய...

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்: சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்: “பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான்...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு...