பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு,

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர் சக்திவேல் மற்றும் மேட்டூர்,ஆத்தூர்,சேலம்,ஈரோடு பகுதி கழக தோழர்கள்,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வீரமோகன், புதுச்சேரி,பெரியார் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வுகளின் ஏற்பாடுகளை கழக தோழர் மன்னை காளிதாசு,திருவேங்கடம், பட்டுக்கோட்டை பாரி,கரம்ப குடி கார்த்திகேயன் ஆகியோர் கவனித்துக்கொண்டனர்.

இறுதி நிகழ்வில் நடந்த இரங்கல் கூட்டத்தில் சிற்றரசு, பசு,கவுதமன்,மேட்டூர் கோவிந்தராஜ்,ஈஸ்வரன் ஆகியோரும்
இறுதியாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் இரங்கல் உரையாற்றினார்கள்.

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

 

20160120_142722

You may also like...